செவ்வாய், 12 ஜனவரி, 2016

தூத்துக்குடி அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் 35 பேருக்கு 5 ஆண்டு சிறை தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினர், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். | படம்: என்.ராஜேஷ்.
அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினர், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். | படம்: என்.ராஜேஷ்.
அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் வெளிநாட்டினர் 23 பேர் உட்பட 35 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ‘சீமேன் கார்டு ஓகியோ’ என்ற ஆயுத கப்பலை, கடந்த 2013 அக்டோபர் 12-ம் தேதி இந்திய கடலோர காவல் படையினர் சிறைபிடித்தனர்.

ஜெயலலிதாவால் முடக்கமுயன்று நீதிமன்ற அல்டிமேட்டத்தல் தப்பி பிழைத்த அண்ணா நூலகம்.

நெஞ்சு பொறுக்குதில்லையே?: கலைஞர் திமுக தலைவர் கலைஞர் கடிதம்
உடன்பிறப்புகளூக்கு எழுதிய கடிதம்: ’’அன்பு - அறிவு - ஆற்றல் ஆகியவற்றின் திருவுருவாம் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ்ப்பெயரை இணைத்துக் கொண்டிருக்கும் கட்சியின் இன்றைய தலைவி ஜெயலலிதா, ஆட்சி அதிகாரத்தைத் தமிழக மக்கள் கொடுத்திருக் கிறார்கள் என்ற ஆணவ எண்ணத்தால், அவர் இந்த ஐந்தாண்டுகளில் அரங்கேற்றியிருக்கும்
அட்டூழியங்கள் ஒன்றா, இரண்டா? எத்த னையோ? அவற்றில் ஒன்று தான் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைத் திட்டமிட்டு அலங் கோலப்படுத்தியது. நல்வாய்ப்பாக, சென்னை உயர் நீதிமன்றத் தலையீட்டினால் நூலகம் உயிர் பிழைத்திருக்கிறது; எனினும் உருக் குலைந்திருக்கிறது என்ற உண்மையினை மறைப் பதற்கில்லை. ஒவ்வொரு முறையும் உயர் நீதிமன்றம் தலையிட்டும்கூட, அதன் உத்தரவுகளை உதாசீனப்படுத்தி, தொடர்ந்து அலட்சியம் செய்து வந்ததால், ஜெயலலிதா அரசுக்கு இறுதி எச்சரிக்கை அதாவது “அல்ட்டிமேட்டம்” என்பார்களே, அதைப் போல கடும் இடித்துரை வழங்கியுள்ளது.  அடிமைகூட்டம் அறியுமா அறிவின் பெருமை? நூலகத்தின் மேல் கைவைத்தவர்களை சரித்திரம் எப்படி பார்க்கும்?

oxymoron..காலில் விழுந்து...போட்டுக் கொடுத்து..அள்ளி வைத்து..அண்டிப் பிழைக்கும் கூட்டம்

thayagam.com: எம்.ஜி.ஆர் முன்பு அடிக்கடி அமைச்சரவையை மாற்றுவார்.
பத்திரிகைகள் எல்லாம் (அப்போது இந்த ஊடகங்கள் எனப்படும் டி.வி முதல் முகப்புத்தகம் வரை கிடையாது) அதன் பின்னாலுள்ள அரசியல் சாணக்கியம் பற்றி பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும்.
அங்கே அப்படி எந்த சாணக்கியமும் இருக்காது.
சுற்றியுள்ள அண்டிப் பிழைக்கும் கூட்டம் அள்ளி வைத்துப், போட்டுக் கொடுத்திருக்கும். அதைக் கேட்டு அவர் பதவிகளைப் பறித்திருப்பார்.
பறிக்கப்பட்டவர்கள் கருணாநிதிக்கு துண்டு போர்த்தி, தாய்க்கழகத்துடன் இணைவார்கள். கலைஞரின் போர்வாள் நான் என்று சூளுரைப்பார்கள்.
சீமானின் மாமா காளிமுத்து அடிக்கடி இப்படி பல்டி அடிப்பார்.
அல்லது அடுத்த தடவை கருணைக்கண் கிடைக்கும் வரை காய்ந்து கொண்டு ஓரமாய் கவனிப்பாரற்றுக் கிடப்பார்கள். யாருமே முதுகெலும்பு உள்ளவர்களாக, எதிர்த்துப் போராடத் துணியாதவர்கள். காரணம், அவர்களின் அரசியலே எம்.ஜி.ஆர் என்ற விருட்சத்தில் ஒட்டுண்ணி குருவிச்சைகளாக வாழ்வது தான்.
பிறகு அடுத்த சுற்றில், பாவம் கழுவப்பட்டு ஞானஸ்நானம் பெற்று, அண்ணனின் போர் வாள் ஆவார்கள்… எதுவுமே நடக்காதது போல!
காலில் விழும் கலாசாரத்தின் முதல் பிதாமகன் அவர். அன்று தொடங்கிய தலைகுனிவு, இன்று அம்மாவின் காலில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பது வரைக்கும் தொடர்கிறது.
இந்த எம்.ஜி.ஆருக்கும் ஒரு கொள்கை இருந்தது.
அண்ணாயிசம் என்று!
அது அவருக்கும் கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சமான கொள்கை.

ISIS: பயங்கரவாதிகள் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தல் British Jihadist On 60 Minutes. (CBSN)



சொத்துகுவிப்பு வழக்கும் சட்டமன்ற தேர்தலும்....நக்கீரன் விபரம்

ஜனவரியில் முடியும் என நக்கீரன்
கணித்து சொன்ன சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு மாதம் தள்ளி பிப்ரவரியில் இறுதி கட்டத்தை எட்டிவிடும் என்கிறது சுப்ரீம் கோர்ட் வட்டாரம்.சுப்ரீம்கோர்ட்டின் வேலைப்பளு சுமையால் கொஞ்சம் தாமதமானால் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் அதிக சூடுபிடிக்கும்; மார்ச் மாதத்தில் இறுதி தீர்ப்பு வந்துவிடும். எனவே என்ன தீர்ப்பு வரும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.வுக்கு சாதகமாக குமாரசாமி தீர்ப்பளித்ததும் அ.தி.மு.க. வினர் இந்த வழக்கை பற்றி அதிகம் கவலைப்பட வில்லை. இந்த வழக்கை மிகவும் சீரியஸாக, கர்நாடக அரசின் சார்பாக ஆச்சார்யாவும், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் சங்க தலைவர் துஷ்யந்த் தவேயும் கொண்டு சென்றபோதும் அ.தி.மு.க. வட்டாரங்கள் அலட்டிக் கொள்ளவில்லை.

திங்கள், 11 ஜனவரி, 2016

தூமை ...விதைகளை கேவலப்படுத்தும் கலாசார காவலர்கள்


thoomai.wordpress.com 1.   ‘தூமைவெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் பிறப்பு நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால் தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்களுக்கு அதற்கான வேறு இடங்களைத் தேடிச் செல்ல உரிமை உண்டு.

ஒளிப்பதிவாளர் சங்க தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான அணி வெற்றி

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக பி.சி.ஸ்ரீராம் தேர்வு செய்யப்பட்டார். தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சங்கத்துக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(ஜன.10) நடைபெற்றது. இதில் ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், ஏ.கன்னியப்பன், ஜி.சிவா ஆகியோர் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.

சபரிமலை கோயிலில் பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது ? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கேரள மாநிலம் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது மனுதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புதிய மனு ஒன்றையும் மனுதாரர் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. women be Why can't allowed to enter Sabarimala asks Supreme Court வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு சபரிமலைக்கு பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கபடுகிறது? என்றும், பெண்களுக்கு கோவிலுக்கு செல்ல அரசியல் சாசனத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதத்தின் பெயரால் அவர்களுக்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

பழனி கோவிலுக்குள் மது அருந்தும் காவலாளிகள் : அதிர்ச்சி வீடியோ


திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் உள்ள முருகன் கோவில் ராஜகோபுரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து இரண்டு தினங்கள் ஆகிறது. அதற்குள் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ள வீடியோ வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. பழனி மலை முருகன் கோவிலில் 200க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் பணிபுரிந்து வருகின்றனர். பழனி மலைப்பாதையில் உள்ள மங்கம்மாள் மண்டபத்தில், இரவு நேரத்தில் காவலர்கள் மது அருந்திவிட்டு, அசைவம் சாப்பிடும் வீடியோ பக்தர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. nakkheeran,in

தமிழ்நாட்டை கொள்ளை அடித்து பார்பனர்களை குடியேற்றிய திருமலை நாயகனுக்கு ஜெயலலிதா அரசு விழா?

சென்னை: தமிழர்களுக்கு எதிராக ஆட்சி புரிந்தவர் திருமலை நாயக்கர். அவருக்கு தமிழக அரசு சார்பில் விழா எடுப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று மக்கள் மாநாடு கட்சி என்ற கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவரான சக்திவேல் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் தமிழருக்கு எதிரான கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் மன்னர் திருமலை நாயக்கர் என்பதை தமிழக அரசு மறந்துவிட்டது. திருமலை நாயக்கர் ஆட்சியிலே தான் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தெலுங்கர்கள் தமிழ்ப் பகுதிகளில் குடியேற்றப்பட்டார்கள்.
ஆட்சி நிர்வாகம் முழுமையாக தெலுங்கர் மயமாக்கப்பட்டு, தெலுங்கு ஆட்சிமொழியாக தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது. சமஸ்கிருத, தெலுங்கு மொழிகள் வளர்க்கப்பட்டதும் தமிழ் மொழி பின்னுக்கு தள்ள‌ப்பட்டதும் இவரின் ஆட்சியிலே தான். தமிழரின் பண்பாடுகளை சிதைத்து, சமஸ்கிருத வழிமுறைகளை கோயில்களில் புகுத்தியவர் திருமலை நாயக்கர். இவரின் ஆட்சியிலே தான், கோயில்களில் தமிழ் வள்ளுவர்கள் பூசாரிகளாக இருந்ததை மாற்றி பார்ப்பனர்களை அர்ச்சர்களாக மாற்றி, தமிழையும் தமிழர்களையும் தமிழ்க் கோவில்களில் இருந்து விரட்டிய பெருமைக்குச் சொந்தக்காரர்.

இந்தியா உலகுக்கு வாரி வழங்கியது ஆன்மிகம்; மதவாதம் அல்ல,'' பிரதமர் நரேந்திர மோடி

மும்பை,இந்தியா, உலகுக்கு வாரி வழங்கியது ஆன்மிகம்; மதவாதம் அல்ல,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.மும்பையில் நேற்று நடந்த, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:பண்டைய காலத்தில், நம் நாட்டின் துறவிகளும்,முனிவர்களும், உலகுக்கு வாரி வழங்கியது, ஆன்மிகத்தை; மதவாதத்தை அல்ல. இனப் பிரிவுகள், சில சமயம் பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். மாறாக ஆன்மிகம், அப்பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும். மறைந்த முன்னாள் ஜனாதிபதிஅப்துல் கலாம், இந்தியாவின் ஆன்மிகத் தன்மையில், நம்பிக்கை உள்ளவர். 'மனித இனத்தை, ஆன்மிகப்படுத்துவ தால், மனிதர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்' என, அப்துல் கலாம் கூறினார். எல்லா மதங்களையும் விட, தேசிய மதமே சிறந்தது. இந்தியாவின் பாரம்பரியம், உலகில் சிறப்புத் தன்மை வாய்ந்தது. இவ்வாறு மோடி பேசினார். தினமலர்.com

சவுக்கு : குற்றவாளி ஜெயலலிதா அல்ல

c30ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி விசாரணை, பிப்ரவரி 2 முதல் தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.     இந்த வழக்கை இது வரை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.  இந்த அமர்வுதான் வழக்கு விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளி வைத்தது.  ஆனால் என்ன காரணத்தினாலோ,  நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்கு பதிலாக, நீதிபதி அமித்தவ ராய் இவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.   இந்த மாற்றம் எதனால் நிகழ்ந்தது என்பதற்கு எவ்வித விளக்கமும் இல்லை.  ஆர்.கே. அகர்வால் இவ்வழக்கை விசாரிப்பார் என்றதும் ஒரு நம்பிக்கை இருந்தது.   ஏனென்றால், நீதிபதி ஆர்.கே.அகர்வால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்.   அவர் அவ்வாறு பணியாற்றியபோது, பல்வேறு வழக்குகளில் இப்படித்தான் தீர்ப்பு வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஏ.எல்.சோமயாஜி மூலமாக ஜெயலலிதா அழுத்தம் கொடுத்தார்.

கும்பமேளாவாகிவிட்ட இந்திய விஞ்ஞான காங்கிரஸ் மாநாட்டால் எந்த பலனும் இல்லை

இந்தியாவின் 103 ஆவது விஞ்ஞான காங்கிரஸ் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி
துவங்கி ஏழாம் தேதி முடிவடைந்திருக்கிறது.
கர்நாடகாவில் இருக்கும் மைசூரில் நடந்த இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவின் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.
அதேசமயம் நோபெல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் இந்த மாநாடு வெறும் கூடிக்கலையும் திருவிழா என்றும் இதனால் இந்திய விஞ்ஞானத்துறையில் பெரிய முன்னேற்றம் ஏற்படாது என்றும் கடுமையாக விமர்சித்திருந்தனர். பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துக் கொண்டனர். இந்துத்வாக்களின் யானைத்தலை பிளாஸ்டிக் சேர்ஜரி மற்றும் பிரம்மாவின் ஸ்டெம்செல் ஆராய்ச்சி...

இந்திய சிறுமிக்கு உலகபுகழ் .. Kashmea wahi. Cattell III B Mensa test

The Cattell III B Mensa test is a well-known international evaluation process and Kashmea stumbled upon it while browsing her iPad.
லண்டன் : மென்சா அமைப்பு நடத்திய 'காட்டெல்-3பி' அறிவுத்திறன் போட்டியில், மும்பையில் பிறந்த இந்திய வம்சாவளி சிறுமி கஷ்மியா வாஹி(11) போட்டியின் அதிகபட்ச மதிப்பெண்ணான 162 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவுத் திறனை சோதிக்கும் 150 கேள்விகளுக்கு பதிலளித்து 162 மதிப்பெண்கள் எடுத்துள்ள வாஹி, பிரபல அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இரு மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. nakkheera,in

ஏசி சண்முகத்தின் எம்ஜியார் கல்வி நிறுவனம் கூவத்தை ஆக்கிரமித்து கட்டிடம்....மகஇக போராட்டம்

எம்.ஜி.ஆர். கல்வி நிறுவனம் என்ற பெயரில் செயல்படும் தனியார்
நிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி சென்னை மதுரவாயலில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மகஇக அமைப்புகள் இன்று மருத்துவக் கல்லூரி முன்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனால் கல்லூரி முன்பு போலீசார் குவிக்கப்பட்டு, தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி இன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே அக்கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது மருத்துவக் கல்லூரியின் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டுவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவள்ளுர் ஆட்சியரே பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

ஜெயலலிதா : சாலை பாதுகாப்பு வார விழா வாழ்த்துச் செய்தி: சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாத வாழ்க்கை....

ஒவ்வொருவரும் சாலை விதி களைப் பின்பற்றி பயணத்தை விபத்
தில்லாததாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டு உள்ளார்.
27-வது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
இந்தாண்டு ‘சாலைப் பாது காப்பு செயல்பாட்டுக்கான தரு ணம்’ என்ற கருப்பொருளை மையப் படுத்தி 27-வது சாலைப் பாது காப்பு வார விழா இன்றுமுதல் வரும் 16-ம் தேதி வரை கடைபிடிக்கப் படுகிறது. தமிழகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 2015-16-ம் நிதியாண்டில் சாலைப் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.65 கோடியை அரசு ஒதுக்கியது.    தமிழ்நாட்டின் மிகப்பெரிய விபத்தே இவகதாய்ன்..அது ஜனங்களுக்கு இன்னும் புரியல்ல...திரும்ப திரும்ப இந்த விபத்து நாட்டுக்கு இருந்து கொண்டே இருக்கும்...அவ்வளவு அடிமைங்க இருக்காங்க 

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவது
குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். தில்லியில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தை வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சகம் நடத்தி வந்தது. இப்போது அந்த அமைச்சகத்தை மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியை வெளியுறவுத் துறை அமைச்சகம் நடத்தியது.

சரத்குமார்: அ.தி.மு.க. கூட்டணியில் தான் சமத்துவ மக்கள் கட்சி நீடிக்கிறது...டிக்கெட் கொடுப்பாங்கல?

‘ஜெயலலிதா மீது மக்கள் கொண்ட நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது’
என்றும் ‘அ.தி.மு.க. கூட்டணியில் தான் சமத்துவ மக்கள் கட்சி நீடிக்கிறது’ என்றும் சரத்குமார் கூறினார்.
சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனர்–தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  நடிகர்களை வித்து கிடைச்சது எவ்வளவுன்னு அவுக இன்னும் கணக்கு பார்க்கிறாய்ங்க...அப்புறம்   நாடார்களை வித்து எதனாச்சும் கிடைச்சுதா?  இரண்டு கணக்கையும் ஒழுங்கா காட்டுங்க? 

ஜெர்மனி :1,000 அரபி அகதிகள் ஜேர்மனிய பெண்கள் மீது பாலியல் பயங்கரவாதம்...புத்தாண்டு தினத்தில் அரங்கேறிய திட்டமிடப்பட்ட வன்முறை.....


refugee_newyear_002  புத்தாண்டு தினத்தில் பெண்களிடம் அத்துமீறிய புலம்பெயர்ந்தவர்களின் பட்டியல்: அகதிகளுக்கு புது சிக்கல் (வீடியோ இணைப்பு) refugee newyear 002ஜேர்மனியில் புத்தாண்டு தினத்தில் பெண்கள் மீது பாலியல் வன்முறையை பிரயோகித்த புலம்பெயர்ந்தவர்களின் பட்டியலை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Cologne நகர ரயில் நிலையத்தில் புத்தாண்டு தினத்திற்கு முந்திய இரவில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் புத்தாண்டை கொண்டாட கூடியுள்ளனர்.
இந்நிலையில், இந்த கூட்டத்திற்குள் புகுந்த சுமார் 1,000 பேர் அடங்கிய கும்பல் ஒன்று நூற்றுக்கணக்கான பெண்கள் மீது பாலியல் வன்முறையை பிரயோகித்துள்ளனர்.

வடகொரியா...அமேரிக்கா பதட்டம்...தாழப்பறந்த அமெரிக்க போர் விமானம்

Al Jazeera‎ - 10 hours ago The US has deployed a B-52 bomber on a low-level flight over its ally ... North Korea's fourth nuclear test angered both the United States ... it was a self-defensive step against a US threat of nuclear war.
சியோல்:ஹைட்ரஜன் குண்டு சோதனையில், வடகொரியா ஈடுபட்டதை தொடர்ந்து, அதன் அண்டை நாடான, தென் கொரியாவில், அமெரிக்காவின் சக்திவாய்ந்த குண்டுகளை ஏந்திச்செல்லும் வல்லமை பெற்ற, பி - 52 ரக போர் விமானம், தாழ்வாக பறந்து, ஒத்திகையில் ஈடுபட்டது, அப்பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளை ஆத்திரமூட்டும் வகையில் நடந்து வரும், ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, கடந்த வாரம், அணுகுண்டை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து, சோதனை நடத்தியது; இது, உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு, அண்டை நாடுகளான, தென் கொரியா, ஜப்பான் ஆகியவை, கவலையை வெளிப்படுத்தி கருத்து தெரிவித்திருந்தன.

கே.என்.நேருவுக்கு எதிராக திருச்சி சிவா ஆதரவாளர்கள் போர்க்கொடி...சமாதானம் செய்த நேரு

திருச்சியில் திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் முன்னாள்
அமைச்சர் கே.என்.நேரு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கே.என்.நேருவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். திமுக பொதுக்கூட்டங்களில் திருச்சி சிவா புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். உடனே கே.என்.நேரு, சரி.. சரி.. இனி வரும் அழைப்பிதழில் போட சொல்கிறேன் என்று சொல்லவும் அனைவரும் கலைந்து சென்றிருக்கிறார்கள். இதற்கு இடையில் தீடீர் என்று கட்சி அலுவலகத்தை வந்து முற்றுகையிட்ட சம்பவம் நேருவின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

விஜயகாந்த்....திமுக ,அதிமுக ரெண்டுமே பிடிக்காது...அவிங்களோட தொகுதி உடன்பாடு மட்டும்தாய்ன்..தேர்தலுக்கு பிறகு அப்புறம் யோசிப்போம்ல....

அதிமுக மற்றும் கட்சிகள் எனக்குப் பிடிக்காது என்றும், யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை அடுத்த மாதம் சொல்கிறேன் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று பெரம்பலூரில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் எப்படி செயல்படுவது மற்றும் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.அந்த கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக முடுவு எடுக்க கூடிய முழு அதிகாரம் விஜயகாந்திற்கு வழங்குவது உட்பட மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.திரைப்படம் விநியோகம் செய்து துட்டு அள்ளின ஸ்கில் எல்லாம் வீணா போகுமான்னேன்....மக்சிமம் காசு பதவி அல்லாம் புடுங்கிடுவோம்ல ...பிரேமான்னா சும்மாவா?

திமுக கூட்டணியில் நீடிப்போம் : முஸ்லீம் லீக் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் மாநிலத்தலைவர்  பேராசிரிய கே.எம். காதர் மொய்தீன் நேற்று,  திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அதன் பின் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:கலைஞர் கருணாநிதிக்கும் எங்களுக்கும் 32 வருட பழக்கம் உண்டு. கடந்த மூன்று மாதங்களாக அவரை சந்திக்கவில்லை. எனவே இப்போது சந்தித்தேன். வரும் மார்ச் 10ம் தேதி எங்கள் கட்சியின் 69வது நிறுவன தினத்தை கொண்டாட உள்ளோம். அதனால் விழுப்புரத்தில் மாநாடு நடத்த உள்ளோம். அதற்கு அவருக்கு அழைப்பு விடுத்தோம்.

எழுத்தாளர் ம.வே.சிவகுமார் (61) காலமானார்...திறமையில் வாடிய கலைஞன்

எழுத்தாளர் ம.வே.சிவகுமார் (61) மாரடைப்பு காரணமாக சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (ஜன. 9) காலமானார்.
அவருக்கு இந்துமதி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
மறைந்த எழுத்தாளர் சிவகுமார் பரோடா வங்கியில் தலைமைக் காசாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.
இவர் "வேடந்தாங்கல்', "பாப்கார்ன் கனவுகள்', "வாத்தியார்', "நாயகன்', "அப்பாவும் 2 ரிக்ஷாகாரர்களும்', "அக்மார்க் சிறுகதைகள்' உள்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
மறைந்த சிவகுமாரின் இறுதிச் சடங்குகள் சிட்லபாக்கம் மின் மயானத்தில் சனிக்கிழமை நடைபெற்றன. தொடர்புக்கு: 9884243002.
சிவகுமார் பெரிய அளவில் எழுத்தில் சாதித்திருக்க வேண்டியவர். சினிமா அவரைச் சாப்பிட்டது. கமல் கூப்பிட்டார் என்று தேவர் மகனில் வேலை பார்க்கப் போய் சில லட்சங்கள் செலவழித்து சொந்தப் படம் (பாப்கார்ன் கனவுகள்) எடுப்பதுவரை ஒரு பேயாட்டம் ஆடிப் பார்த்து பலவற்றை இழந்தவர் – வங்கி வேலை உள்பட. கடைசி வரை அவரது சினிமாக் கனவுகள் நனவாகவில்லை. அவ்வப்போது சந்திக்க நேர்ந்தால் ஏதாவது ஒரு திட்டத்தை விவரிப்பார். writerpara.com :மணிக்கொடி ரைட்டர்ஸ மொத்தமா ஒரு தடவ படிச்சிரு. அசோகமித்திரன மனப்பாடம் பண்ணு. சுந்தர ராமசாமிய படிச்சிண்டே இரு. அடுத்த ஜெனரேஷன்ல நாஞ்சில்நாடன் முக்கியம். லவ் பண்ற ஐடியா இருந்தா மட்டும் வண்ணதாசன படி. தோப்பில் மீரான்னு ஒருத்தர் எழுதறாரு. முடிஞ்சா படிச்சிப் பாரு. லேங்குவேஜ் கொஞ்சம் டஃப். ஆனா செம மண்டை அது. நமக்குத் தெரியாத வேற ஒரு லைஃப போர்ட்ரெய்ட் பண்றாரு. மாமல்லன் ஒரு காலத்துல என் ஃப்ரெண்டுதான்.

ராஜபாளையத்தில் உயர் ரக பேரீச்சை சாகுபடி: சாதிக்கும் பி.டெக்., பட்டதாரி

ராஜபாளையம்: அரேபிய நாடுகளில் மட்டுமே விளையும் 'கனேஷில்' எனும்
உயர் ரக பேரீச்சம்பழம், ராஜபாளையம் தரிசு காட்டில் அமோகமாக விளைவித்து அசத்துகிறார், பி.டெக்., பட்டதாரி அழகர் பெருமாள். தமிழகத்தில் வறட்சி மாவட்டங்களில் ராமநாதபுரம் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக சிவகங்கை, விருது நகர் மாவட்டங்கள். இங்கு மானாவரி சாகுபடியை மட்டுமே விவசாயிகள் நம்பி உள்ளனர். 2011ல் இருந்து, 2015 ஜூலை வரை மழையில்லாமல் வறட்சி
நிலவியது. மானாவரி சாகுபடிக்கும் வழியில்லாமல் போனது. பேரீச்சை தோட்டம் இக்கட்டான நிலையில் தரிசு நிலங்களை வளமிக்க பூமியாக மாற்றும் முயற்சியில் ராஜபாளையத்தை சேர்ந்த அழகர்பெருமாள், 33, ஈடுபட்டார்.