பாகிஸ்தானில் கடந்த 1999–ம் ஆண்டு நவாஸ்
செரீப் பிரதமராக வந்த போது பர்வேஸ் முஷ்ரப் ராணுவ தலைமை தளபதி ஆக
இருந்தார். அப்போது அக்டோபர் 12–ந் தேதி ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீப் ஆட்சியை கவிழ்த்து முஷ்ரப் அதிகாரத்தை கைப்பற்றி சர்வதிகாரி ஆனார்.
பின்னர் தன்னை பாகிஸ்தானின் அதிபராக அறிவித்து கொண்டார். நவாஸ் செரீப் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவ புரட்சி நடத்த முஷ்ரப் முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தார்.
அதை ராணுவ முன்னாள் தளபதி ஷாகித் அஷீஷ் தற்போது அம்பலபடுத்தியுள்ளார். இவர் எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியானது. அதில், இந்த தகவலை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.






















