Arul Doss Borntowin · 2240 ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளை வைத்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 2.44 லட்சம் வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினேன். அதில் 41 சதவீதம் வாக்குகள் த.வெ.கவிற்கு செல்லும் என முன்னாள் போலீஸ் கமிஷனர் Ravi Muthusamy Ips ஊடகங்களில் சொல்லி இருந்தார். அவர் சொன்ன கருத்து தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் ஏறக்குறைய உண்மை ஆயிருக்கிறது.
ஏறக்குறைய 35 சதவீதம் வாக்குகளை
த.வெ.க வாங்கி ஆட்சி அமைக்கவிருக்கிறது.. அவர் சொன்ன படி நடந்திருக்கு. அவரின் கடின முயற்சிக்கு வாழ்த்துக்கள் ரவி அவர்களே ! அதில் ஒரு வார்த்தையை இன்று உங்களின் முகநூல் பக்க வீடியோவில் பார்க்க நேர்ந்தது. அதில் உங்கள் தந்தை சமூக நீதியை சொல்லிக் கொடுத்தார் என்றும் , அதன் அடிப்படையில் மக்கள் பணியையும் , காவல் பணியையும் செய்ததாக சொல்லி உள்ளீர்கள். மகிழ்ச்சி.
நேர்மைக்கு பெயர் போன நீங்கள் நேர்மையாக பதில் சொல்வீர்கள் என நம்புகிறேன். 2.44 லட்சம் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்த உங்களுக்கு எவ்வளவு தொகை செலவானது?
2240 ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு எவ்வளவு தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது ? இந்த தொகையை யார் கொடுத்தது? இல்லை உங்களின் சொந்த பணத்தில் இந்த கருத்துக் கணிப்பை நடத்தினீர்களா? ஒரு தொகுதிக்கு எவ்வளவு ரூபாய் செலவு செய்தீர்கள் ? 234 தொகுதிக்கு மொத்தமாக செலவு செய்த தொகை எவ்வளவு ? ஒரு தொகுதிக்கு 1 லட்சம் என்றால் பல கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்பதையும் நீங்கள் தமிழ்நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். See less
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக