ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அவுட் லுக் நோட்டீஸ்

 Chinniah Kasi  : - தீக்கதிர்  : இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியாரிடம் கேட்டு பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்த  தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அவுட்லுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள தேசிய பங்குச்சந்தையின் தலைமை அலுவலகத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணா.
அப்போது தேசிய பங்குச்சந்தையில் முறைகேடாக பதவி உயர்வு, சம்பள உயர்வு  மற்றும் பல இடைத்தரகர்கள் பயனடையும் வகையில் பங்குச்சந்தையின் விதிமுறைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதுமட்டும் இல்லாமல் இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியார் ஒருவரிடம் ஆலோசித்து பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்ததாக சித்ரா மீது புகார் எழுந்தது.


சுமார் 20 வருடங்களாக முகம் தெரியாத ஒரு இமயமலை சாமியார் ஒருவருக்கு மின் அஞ்சல் மூலம் பல்வேறு முக்கியமான தரவுகளைப் பகிர்ந்து, அவர் கூறும் முடிவுகளை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நிறைவேற்றி வந்துள்ளது செபி அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில்  பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, சித்ரா ராமகிருஷ்ணாக்கு அபராதம் விதித்தது.
அதுமட்டும் இல்லாமல் விதிமுறைகளை மீறி ஆனந்த் சுப்பிரமணியத்தை நிர்வாக அதிகாரியாகவும், மேலாண் இயக்குநரின் உதவியாளராகவும் நியமித்தாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் நேற்று மும்பையிலுள்ள சித்ரா ராமகிருஷ்ணாவின் இல்லத்திலும் சென்னை சோலையூர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் இன்று சிபிஐ தேசிய பங்கு சந்தையில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உள்ளது.
மேலும் சித்ரா ராமகிருஷ்ணா மற்றொரு என்எஸ்இ முன்னாள் மேலாண் இயக்குநர் ரவி நரைன் என்எஸ்இயின் நிர்வாக அதிகாரியாகவும் மேலாண் இயக்குநரின் உதவியாளராகவும் இருந்த ஆனந்த் சுப்ரமணியன் அகியோர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாத வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: