சனி, 5 டிசம்பர், 2020

தோட்டக்காரி .. இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்.. 1963 இல் திரையிடப்பட்டது.


Sri Sritharan : இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெளியான முதலாவது முழுநீளத் தமிழ்த் திரைப்படம் தோட்டக்காரி. 1963 இல் திரையிடப்பட்டது. இலங்கையின் மலையகச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. பி. எஸ். கிருஷ்ணகுமார் இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அவரே திரைக்கதை, வசனம், மற்றும் பாடல்களையும் எழுதியிருந்தார். கே. எம். சவாகிர் இசையமைத்திருந்தார். வி. தங்கவேலு இப்படத்தைத் தயாரித்தார். கதாநாயகியாக நடித்தவர் ஜெயஸ்ரீ என்ற சேபாலிக்கா குரூஸ். செல்வம் பெர்னாண்டோ கதாநாயகிக்காகப் பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.
பாடல்களை பி. எஸ். கிருஷ்ணகுமார், கணேசாள் (அங்கவை) ஆகியோர் இயற்றியிருந்தனர். கே. எம். சவாகிர் இசையமைத்தார். கௌரீஸ்வரி இராஜப்பன், ஜி. எஸ். பி. ராணி, ஜி. வரதராஜா, ஹருண் லந்தரா, கே. குமாரவேல் ஆகியோர் பின்னணி பாடினார்கள்.
தோட்டக்காரி 1963 செப்டம்பர் 27 இல் கொழும்பில் கிங்சுலி, பிளாசா ஆகிய திரையரங்குகளிலும், யாழ்ப்பாணத்தில் வெலிங்டனிலும், மற்றும் நாடெங்கிலும் உள்ள பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
முதலாவது தமிழ்த் திரைப்படம் என்ற வகையில் எதிர்பார்ப்பு இதற்கு இருந்தது. கொழும்பில் இரண்டு திரையரங்குகளில் 2 வாரங்களும், ஏனைய இடங்களில் ஒரு வாரமும், அல்லது அதற்குக் குறைந்த நாட்களும் ஓடியிருந்தது.  ..படத்தின் ஆரம்பத்தில் எஸ். தொண்டமான், ஏ. அசீஸ் ஆகியோரின் உரைகள் இணைக்கப்பட்டிருந்தன.

.


........ தோட்டக்காரி 1963 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட ஒரு ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். வி. தங்கவேலு இப்படத்தைத் தயாரித்தார்.[1] இலங்கையில் வெளியான முதலாவது 35மிமீ முழுநீளத் தமிழ்த் திரைப்படம் இதுவாகும். 

இலங்கையின் மலையகச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

 பி. எஸ். கிருஷ்ணகுமார் இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அவரே திரைக்கதை, வசனம், மற்றும் பாடல்களையும் எழுதியிருந்தார்.    கே. எம். சவாகிர் இசையமைத்திருந்தார். படப்பிடிப்பு 1960 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இத்திரைப்படத்துக்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகின   கம்பளையில் ‘ரெவன்ஸ்கிறே’ தோட்டத்தில் முதலாவது படப்பிடிப்பு ஆரம்பமாகியது. தொழிற்சங்கத் தலைவர் கே. ராஜலிங்கம் படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார்.


 ‘கொழும்பு முன்னேற்ற நாடக மன்ற’க் கலைஞர்களான வீ. மோகன்ராஜ், ஆர். வரதராஜன் போன்றோரும் நடித்தனர். கதாநாயகியாக நடித்தவர் ஜெயஸ்ரீ என்ற சேபாலிக்கா குரூஸ். செல்வம் பெர்னாண்டோ கதாநாயகிக்காகப் பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள்,: 

 தேயிலைத் தோட்ட முதலாளி சிறீவேலு முதலியாருக்கும் (மோகன்ராஜ்), அவரது வேலைக்காரி லட்சுமிக்கும் பிறந்தவள் வள்ளி (ஜெயஸ்ரீ). தன் அண்ணனின் சொத்துக்களை அடைய அவரது தம்பி சிறீரங்கம், முதலியாரைக் கொலை செய்கிறான். முதலியாரின் மகன் சிறீதரைப் கிறித்தவப் பாதிரியார் ஒருவர் பாதுகாப்பாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கிறார். தோட்ட உரிமையைப் பெற்ர சிறீரங்கம் தோட்ட மக்களைத் துன்புறுத்துகிறான். 


இதே வேளை, தோட்டத்தின் கணக்குப்பிள்ளையின் மகன் சுந்தருக்கும் (கிருஷ்ணகுமார்) வள்ளிக்கும் இடையே காதல் எழுகிறது. சுந்தர் கொழும்பு செல்கிறான். அவனைத் தேடிக் கொழும்பு சென்ற வள்ளி அங்கு சுந்தரைத் தேடி அலைகிறாள். அங்கு சிங்கப்பூரிலிருந்து திரும்பிய சிறீதரால் காப்பாற்றப்படுகிறாள். சிறீதர் சுந்தரைக் கன்டுபிடித்து தங்கையை அவனிடம் சேர்ப்பிக்கிறான். சிறீரங்கம் காவல்துறையினரிடம் அகப்படுகிறான் 

தோட்டக்காரி திரைப்படம் 1963 செப்டம்பர் 27 இல் நாடெங்கும் வெளியிடப்பட்டது. முதலாவது தமிழ்த் திரைப்படம் என்ற வகையில் எதிர்பார்ப்பு இதற்கு இருந்தது. கொழும்பில் இரண்டு திரையரங்குகளில் 2 வாரங்களும், ஏனைய இடங்களில் ஒரு வாரமும், அல்லது அதற்குக் குறைந்த நாட்களும் ஓடியிருந்தது

கருத்துகள் இல்லை: