வெள்ளி, 4 டிசம்பர், 2020

மகாராஷ்டிராவில் ஊர்களின் ஜாதிப்பெயர்கள் அகற்ற முதல்வர் உத்தம் தாக்கரே உத்தரவு .. சமத்துவபுரம் பாணியில் சமதா புரம்?

Karunanidhi G - திராவிட ஆய்வு : · சமூக மாற்றத்திற்கான முதல் முயற்சி மராட்டிய மாநிலம் முழுமையும் பிராமணர்கள், மகர்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) என சாதிகளின் பெயர்களில் உள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் புதிய பெயர் சூட்டப்படும் என மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து இருக்கின்றார். இது சமூக மாற்றத்திற்கான முதல் முயற்சி தந்தை பெரியார் காட்டிய வழியில் திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் நிகழ்த்திய சமூக மாற்றத்தை மராட்டியம் பின்பற்றத் தொடங்கி விட்டது. 

மகர் வாதா, பிராமண் வாதா, மங் வாதா, தோர் வஸ்தி, பெளத் வாதா, மல்லி கல்லி போன்ற சாதிப் பெயர்கள் ஒழிக்கப்படுகின்றன. மாற்றாக, சமதா நகர், பீம் நகர், ஜோதி நகர், சாகு நகர், கிராந்தி(புரட்சி) நகர்  போன்ற பெயர்கள் சூட்டப்படும்.அம்பேத்கர் பெயரில் வழங்கப்படுகின்ற தலித் விருது அம்பேத்கர் சமஜ் பூசண் விருது என மாற்றப்படும்.  Maharashtra to rechristen all localities with caste-based names CM Uddhav Thackeray, who chaired the cabinet meeting on Wednesday, said the decision would help to create social harmony and increase national unity among all caste and creed.

கருத்துகள் இல்லை: