

இதற்கான பூமி பூஜை நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “இன்னும் இரண்டு ஆண்டுகளில் வேங்கடேசப் பெருமாள் கோயில் பொதுமக்கள் பிரார்த்தனைக்குத் திறக்கப்படும்’’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து விழாவின் ஒரு பகுதியாக சீனிவாச கல்யாண மகோத்ஸவமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், திருப்பதி சேவகர்கள், எனப் பல்லாயிரக்கணக்கான பேர்கள் கலந்து கொண்டனர். இதைத் திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார்
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக