
இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலும் நெல் திருவிழா நடத்தும் பேரியக்கத்தை உருவாக்கியவர் இரா.ஜெயராமன். இவரது சேவையை பாராட்டி குடியரசு தலைவர் விருது, தமிழக அரசின் விருது, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் விருது உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடிகர் கார்த்தி, சூரி ஆகியோர் நெல் ஜெயராமனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், இவரின் முழு மருத்துவ செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறி அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்.
இந்நிலையில், ஜெயராமனின் உடல்நலம் மிகவும் மோசமடைந்ததால் இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரின் மறைவு பலருக்கு ஆழ்ந்த துக்கத்தை அளித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக