
இதுவும் நேற்று முன்தினம் தள்ளுபடியானது.இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் மும்பை சிறப்பு தடா நீதிமன்றத்தில் சஞ்சய் தத் தாக்கல் செய்த புதிய மனுவில், தனது உயிருக்கு பழமைவாத அமைப்புகளால் ஆபத்து இருப்பதால், நீதிமன்றத்தில் சரணடைவதற்கு பதிலாக எரவாடா சிறையில் சரணடைய அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு நீதிபதி கோவிந்த் சனாப் உத்தரவிட்டார்.இந்நிலையில், தனது மனுவை சஞ்சய் தத் நேற்று திடீரென வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து, தடா சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் சரணடைகிறார். பின்னர், புனேயில் உள்ள எரவாடா மத்திய சிறைக்கு அவர் கொண்டு செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்டுகிறது
விதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் இன்று தடா நீதிமன்றத்தில் சரணடைகிறார். மும்பை தொடர்பு குண்டுவெடிப்பு வழக்கில் பிரபல நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த மார்ச் 21ம் தேதி உச்ச நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதில், ஒன்றரை ஆண்டுகளை ஏற்கனவே சிறையில் அவர் கழித்து விட்டதால், மீதமுள்ள மூன்றரை ஆண்டு தண்டனையை அனுபவிப்பதற்காக நீதிமன்றத்தில் 4 வாரத்தில் சரணடையும்படி உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக