சனி, 9 மார்ச், 2013

மகளிர் தின விழாவில் தென்னை மரத்தில் ஏறி மாணவிகள் சாதனை

நாகர்கோவில்: உலக மகளிர் தினத்தையொட்டி நாகர்கோவில் நேசமணிநகர் பகுதியில் உள்ள தனியார் இன்ஸ்டியூட் சார்பில், உலக மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவின் ஒரு கட்டமாக பெண்கள் தென்னை மரம் ஏறும் சாகச நிகழ்ச்சி நடந்தது. 40 பேர் அடுத்தடுத்து சுமார் 50 அடி உயரம் உள்ள தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களை பறித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். தென்னை மரம் ஏற பயன்படும் கருவி மூலம் மாணவிகள் வேக, வேகமாக மரத்தில் ஏறியது அனைவரையும் ஆச்சரிய பட வைத்தது. 4 நிமிடத்தில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தனர்.dinakaran.com

கருத்துகள் இல்லை: