வெள்ளி, 8 மார்ச், 2013

டெல்லியில் மீண்டும் ஓடும் ஆட்டோவில் 3 பேரால் மாணவி பாலியல் பலாத்காரம்

டெல்லி புறநகர்ப்பகுதியான காசியாபாத்தில்,  ஷேர் ஆட்டோவில் பயணித்த மாணவி ஒருவரை, அந்த ஆட்டோ டிரைவர் மற்றும் பயணித்த 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் நிற்காமல் சென்ற ஆட்டோ, 6 போலீஸ் செக் போஸ்ட்களை தாண்டியுள்ளது. ஆனால் எங்குமே போலீசார் அந்த ஆட்டோவை சோதிக்க வில்லை. தன்னை காப்பாற்றும்படி கதறிய மாணவியின் குரலும் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் மாணவியை ரோட்டோர தாபா ஒன்றில் இறக்கி விட்டு சென்றனர். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: