மதுரை ஆதீனத்தின் இளம்பெண் உதவியாளர் மாயம் :
போலீசுக்கு தெரிவிக்காமல் தேடுதல் வேட்டைதஞ்சாவூர் மாவட்டம் கச்சனத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி( திருமணமகாதவர்). இவர் கடந்த 6 மாதங்களாக மதுரை ஆதீனம் மடத்தில் தங்கி ஆதீனத்தின் உதவியாளராக இருந்து வந்தார். அவருடன் அவரது தங்கையும் கஸ்தூரியும் (திருமணமாகாதவர்) மடத்தில் தங்கியிருந்தார்.
நித்தியானந்தா மதுரை வந்தபோது சகோதரிகள் உடன் இருந்தனர். பின்னர் கடந்த வாரம் நித்தியானந்தாவின் பெங்களூர் மடத்திற்கு ஆதீனம் சென்றபோது, வைஷ்ணவி மற்றும் அவரது தங்கை கஸ்தூரியும் சென்றிருந்தனர்.
வைஷ்ணவி மடத்திலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று ( 1.5.2012) காலை 6 மணி முதல் வைஷ்ணவியை மடத்தில் காணவில்லை. போலீசுக்கு தகவல் தெரிவிக்காமலேயே மடத்தினர் தேடி வருகின்றனர்.

ஆதீனம் ,நித்தியானந்தாவுடன் இவர்கள் நேற்று முன் தினம் மதுரை திரும்பினர். நித்தியானந்தா பதவியேற் றபோது சகோதரிகள் இருவரும் அருகிலேயே இருந்தனர். நித்தியானந்தா பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்தபிறகு, தங்கை கஸ்தூரியை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் வைஷ்ணவி. கஸ்தூரியிடம் நிறைய நகைகள் மற்றும் பணத்தையும் கொடுத்தனுப்பினார்.
வைஷ்ணவி மடத்திலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று ( 1.5.2012) காலை 6 மணி முதல் வைஷ்ணவியை மடத்தில் காணவில்லை. போலீசுக்கு தகவல் தெரிவிக்காமலேயே மடத்தினர் தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக