திங்கள், 19 மார்ச், 2012

IPL பிரபு தேவா, சல்மான், ப்ரியங்கா நடனத்துடன் தொடங்குகிறது

2012-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நடிகர் / இயக்குநர் பிரபு தேவாவின் அட்டகாச நடனத்துடன் ஆரம்பிக்கிறது.
ஏப்ரல் 3-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கோலாகலத்துடன் தொடங்குகிறது போட்டி.
அன்றைக்கு பிரபலமான தமிழ் மற்றும் இந்திப் பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார் பிரபுதேவா.
அவருடன் பிரபல இந்தி நடிகர்கள் சல்மான்கான், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்து கொண்டு நடனமாடுகிறார்கள். மிகப் பிரமாண்டமான நிகழ்வாக இதனை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறவர்... இந்தியின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன்.
ஏப்ரல் 3-ம் தேதி பிரபு தேவாவுக்கு இன்னொரு விசேஷமான நாள். அன்றுதான் அவரது பிறந்த நாள். இந்த நாளில் இப்படியொரு பிரமாண்ட ஷோவில் அவர் ஆடுவது இதுதான் முதல்முறை!

கருத்துகள் இல்லை: