திங்கள், 27 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவிலுக்கு மின்வெட்டு சலுகை தருவதா? தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், சங்கரன்கோவில் தொகுதிக்கு மின்வெட்டு சலுகை தரப்படுகிறதா என, விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் சார்பில், மின்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில், மார்ச் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் இங்கு அமலுக்கு வந்துள்ளதால், அரசின் சார்பிலோ அல்லது அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் சார்பிலோ, எந்த விதமான சலுகையும், அந்த தொகுதிக்கு அளிக்கப்பட கூடாது என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி புகார் இந்நிலையில், சங்கரன்கோவில் தொகுதிக்கு மட்டும், மின்வெட்டில் சலுகை அளிக்கப்படுவதாக, அரசியல் கட்சிகள் புகார் கூறியுள்ளன. மற்ற மாவட்டங்களில், 8 மணிநேரம் முதல், 10 மணி நேரம் வரை, ின்வெட்டுஅமலாகும்நிலையில், சங்கரன்கோவில் தொகுதியில் மட்டும், மூன்று மணி நேர மின்வெட்டு அமலாவதாகவும், ஓட்டு வங்கிக்காக, ஆளுங்கட்சி சார்பில் இச்சலுகை அளிப்பதாகவும், புகார்கள் எழுந்தன.இதுதொடர்பாக, சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் அதிகாரியிடமும், மாவட்ட கலெக்டரிடமும், எதிர்க்கட்சினர் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து, தேர்தல் கமிஷன் சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், தமிழக மின்துறைக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளார்.
>உடனடியாக பதில்... :அதில், "சங்கரன்கோவில் தொகுதிக்கு சலுகை காட்டுவது, தேர்தல் நடத்தைவிதிமீறல். எனவே, சங்கரன்கோவில் தொகுதியில், எத்தனை மணி நேரம் மின்வெட்டு அமலாகிறது

கருத்துகள் இல்லை: