புதன், 29 பிப்ரவரி, 2012

பிராமணர்களை இழிவுபடுத்தும் கருணாநிதியை கைது செய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை

ஏனையவர்களை இழிவு படுத்தும் பிராமணர்களை எப்போது கைது  செய்ய வேண்டும்?
திண்டுக்கல்:  பிராமணவர்களை இழிவுபடுத்தும் திமுக தலைவர் கருணாநிதியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இகு குறித்து இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் தர்மராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது, பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது சாதியை சொல்லி இழிவுபடுத்தும் செயல். அதே போல அச்சுறுத்தும் செயலாகும்.
இவர் ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் பிராமணர் சமூகம் குறித்து இழிவாகவும், அவதூறாகவும் பேசியும், எழுதியும், அறிக்கை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்படி மத உணர்வை புண்படுத்துவது, குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவது ஆகியவை தண்டனைக்குரியதாகும். சாதிக்கு எதிராக பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: