வியாழன், 31 மார்ச், 2011

Congress 'கை'யெழுத்து போட தெரியாதவர் எப்படிக் கை சின்னத்தில் நிற்கத் துணிந்தார்


சம்மர் சூடு தகிக்குமுன் சும்மாத் தமிழ்நாட்டில் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. நீ எஸ்.வி.சேகர் பேட்டி எடுத்துப் போட்ட வேளை அவருக்கு சீட் கிடைக்காமல் தங்கபாலுவின் மனைவிக்குக் கிடைத்தது. ஆனால் 2B மனுக்களில் அந்தம்மா கையெழுத்துப் போடவில்லையாம். 'கை'யெழுத்து போட தெரியாதவர் எப்படிக் கை சின்னத்தில் நிற்கத் துணிந்தார் என்று தெரியல. அதனால் இப்போ அந்த தொகுதியில் தலையெழுத்தே என தங்கபாலுவே போட்டி போடுகிறாராம். என்னாமாப் பிளான் பண்ணி இருக்காரு! இந்த நேரத்தில் இளங்கோவன் எங்கே போனார் என்று தெரியவில்லை. திமுக முக்கிய தலைவர்களே பயந்துக்கொண்டு சென்னையை விட்டு ஓடி போய் படிக்க தெரியாத கிராம மக்கள் இருக்கும் இடத்தில் நிற்கிறார்கள். இதற்கு தான் நாலு எழுத்து படிக்க தெரிந்திருக்க வேண்டும். நாலு எழுத்து வேண்டாம் அட்லீஸ்ட் இரண்டு எழுத்து அதும் 2G இது படிக்க தெரிந்தால் போறும் மக்கள் புத்திசாலியாகிவிடலாம்.

கருத்துகள் இல்லை: