வியாழன், 31 மார்ச், 2011

லண்டன்: வைன் விற்பனை நிலையத்தில் துப்பாக்கிசூடு!

கடந்த செவ்வாய்கிழமை (29ம் திகதி) இரவு 9:15 மணியளவில் லண்டனில் “ஸ்ரொக்வெல் ப+ட் மற்றும் வைன்” விற்பனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 36வயதுடைய இலங்கையர் ஒருவரும், 5வயதுடைய பெண் குழந்தை ஒன்றும் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகின்றது. இந்த துப்பாக்கி பிரயோகத்தை கறுப்பு இனத்தவர் ஒருவரே மேற்கொண்டதாக தெரியவருவதுடன், சம்பவம் குறித்து லண்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: