வியாழன், 3 மே, 2018

இமாச்சல் பிரதேசத்தில் பெண் அதிகாரி சுட்டுகொலை ..... பாஜக ஆளும் மாநிலத்தில்

Officer Supervising Demolition In Himachal Shot Dead By Hotel Owner
Special Correspondent FB Wing : பாஜக ஆளும் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றச் சொன்ன பெண் அதிகாரி சுட்டுக்கொலை
இமாச்சலப்பிரதேச மாநிலம் சோலான் மாவட்டத்தில் உள்ள கசவுலி என்ற மலைப்பாங்கான பகுதியில் பலர் விதிமுறைகளை மீறி உணவு விடுதிகள் கட்டியுள்ளனர். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகள் உடனே அகற்ற வேண்டும் என கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது< உச்ச நீதிமன்ற உத்தரவு நகலுடன் விதிமுறைகளுக்கு புறம்பாக உணவு விடுதிகளை கட்டியுள்ளவர்களை எச்சரிப்பதற்காக நகர திட்டமிடல் துறை பெண் அதிகாரி ஷாலி பால சர்மா என்பவர் சக அதிகாரிகளுடன் நேற்று செவ்வாய்கிழமை அப்பகுதிக்கு சென்று உணவு விடுதி கட்டியுள்ளவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்.
அப்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பெண் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர், ஒரு வாரத்திற்குள் விதிமுறையை மீறி கட்டியுள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரி ..இரண்டு வார அவகாசம் .. மத்திய அரசு முடிவு ... மே 16 வரை .. பின்பு கோடை விடுமுறை நீதிமன்ற விடுமுறை

காவிரி வழக்குகள்:  இன்று விசாரணை!மின்னம்பலம்: உச்ச நீதிமன்றத்தில் காவிரி தொடர்பான வழக்கு இன்று காலை 10.45 மணிக்கு மூன்றாவது வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.
ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அவகாசம் முடிந்த நிலையில் கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டி மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டது மத்திய அரசு. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மே 3ஆம் தேதிக்குள் காவிரி தொடர்பான வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
காவிரி வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்டு மத்திய அரசு இடைக்கால மனு ஒன்றை நேற்று (மே 2) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. வரும் 16ஆம் தேதி வரை அவகாசம் கோரிய இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரணை செய்யும்படியும் தலைமை நீதிபதி அமர்வின் முன்பு மத்திய அரசு முறையிட்டது. ஆனால், அவசர வழக்காக ஏற்று விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நாளை காவிரி தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் தற்கொலை: உருக்கமான கடிதம்

deneshdinamani :டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலியில் பிளஸ் 2 மாணவர் ரயில்வே மேம்பாலத்தில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மதுக்கடைகளை மூட முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அந்த மாணவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர்.
திருநெல்வேலி வண்ணாரபேட்டை தெற்கு புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பாலத்தில் ஆண் சடலம் தூக்கிட்ட நிலையில் இருப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. பாளையங்கோட்டை போலீஸார் உடனே அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர், சங்கரன்கோவில் வட்டம், குருக்கள்பட்டி அருகேயுள்ள கே.ரெட்டியபட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் தினேஷ் நல்லசிவம் (17) என்பது தெரியவந்தது.

பாஜகவுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் .ஜிக்னேஷ் மேவானி பிரசாரம் .. கர்நாடக satt

தீக்கதிர் :  கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், குஜராத் சுயேட்சை எம்எல்ஏ
ஜிக்னேஷ் மேவானி மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ்ஆகியோர், பாஜக-வுக்கு எதிராக பிரச்சாரம்செய்து வருகின்றனர். பாஜக-வின் மதவெறி அரசியலை, மக்களுக்குப் புரியும் விதமாக, இவர்கள் எடுத்துரைப்பதால், இந்த இருவரின் பிரச்சாரத்திற்கும் மக்கள் மிகுந்த மதிப்பளிக்கின்றனர். நல்ல கூட்டமும் கூடுகிறது. அண்மையில் ஓரிடத்தில் பேசுகையில், “அதானி, அம்பானியிடம் இருந்து 80 சதவிகிதம் கமிஷன் வாங்கும் பிரதமர்மோடி, கமிஷன்- ஊழல் பற்றி பேசலாமா?என்று ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பிஇருந்தார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்குவேலை தருவதாக கூறி மோடி ஏமாற்றியது உட்பட பல்வேறு மோசடி வாக்குறுதிகளை பட்டியலிட்ட அவர், தென்னிந்தியாவுக்குள் பாஜக நுழைவதைத் தடுக்கும் வாய்ப்பு கர்நாடக மக்களிடம்தான் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

திருநாவுகரசர் என்ன பேசுகிறார், எப்படிப் பேசுகிறார் ... எல்லா பக்கமும் பேசிக்கொண்டே திமுக கூட்டணியிலும் ,,,,

Narain Rajagopalan : தமிழக காங்கிரஸ் நண்பர்கள் கோவப்படுவதில் அர்த்தமே இல்லை. யதார்த்தத்தினைப் புரிந்துக் கொள்ளுங்கள்.
போன முறை ஒதுக்கீடான 41 தொகுதிகளில் 8 தொகுதிகளில் தமிழக காங்கிரஸ் வென்று இருக்கிறது. அதில் பாதி தொகுதிகள், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், இல்லை என்றாலுமே கூட, காங்கிரஸுக்கு என்றே எழுதி வைக்கப்பட்ட தொகுதிகள். மொத்த வாக்களிப்பில் தமிழக காங்கிரஸ் 6% மேல் வைத்திருக்கிறது. இதில் வாசன் செய்து கொண்டிருக்கும் காமெடிகள் தனி.
பரம்பரை காங்கிரஸ்காரர்கள் ஒரு நாளும் திமுகவிற்கு வாக்களிக்கப் போவதில்லை. பரம்பரை திமுககாரர்கள் ஒரு நாளும் காங்கிரஸிற்கு வாக்களிக்கப் போவதில்லை. இது இங்கே இப்படி தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதில் மாற்றங்கள் இல்லை.
ஆனால் தமிழக காங்கிரஸின் தலைவர் என்ன பேசுகிறார், எப்படிப் பேசுகிறார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 'அதிமுகவில் இருந்து இருந்தால் இந்நேரம் கட்சியின் பொது செயலாளர் ஆகி இருப்பேன்’ என்று காங்கிரஸில் இருந்துக் கொண்டு பேசுவதெல்லாம் எந்த கணக்கில் வரும்? ம.ந-வில் ஆரம்பித்து அதிமுகவின் இன்றைய பல்வேறு பிரிவுகளோடும் தொடர்ச்சியாக ஒரு பக்கம் உரையாடிக் கொண்டே, இன்னொரு பக்கம் திமுக கூட்டணியில் பெரும்பங்கு எப்படி சாத்தியம்?

வைகோ சீமான் எதிரிகளா ? விஜயகாந்த்தின் தெ.மு.தி க ....?

Raj Dev : சீமானை முதல் எதிரியாக பாவித்து வைகோ எதிர்ப்பது
தேவையற்றது. தன்னுடைய சமீபத்திய எல்லா உரையாடல்களிலும் சீமான் குறித்து ஏதாவது ஒன்றை பதிய வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சீமான் குறித்து வைகோ மனம் பாதிப்படைய காரணம் இருக்கிறது. வைகோவின் அடிப்படை அரசியல் தகுதியையே சீமான் வளர்க்கும் அரசியல் கேள்விக்குள்ளாக்குகிறது. சீமானின் அரசியலின்படி எத்தனை காலம் வாழ்ந்து வந்தாலும் பிற மாநிலத்தில் இருப்புள்ள சாதியினர் தமிழ்நாட்டில் அந்நியராக தான் கருதப்படுவர். வைகோ தெலுங்கு பேசும் ஒரு சாதியை சேர்ந்தவர் என்றாலும் அவருடையது தெலுங்கர் நலன் காக்கும் கட்சி என்றோ, தெலுங்கர்கள் ஆதரிக்கும் கட்சி என்றோ கூட சொல்ல முடியாது. ஆனால் விஜயகாந்தின் தேமுதிகவில் கணிசமாக தெலுங்கர்கள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் ஒரு ஜெராக்ஸ் கடைக்கு ஒருமுறை சென்ற போது அந்த கடையின் உரிமையாளரும், அவரது நண்பரும் தெலுங்கில் தேமுதிகவின் ஒரு படிவத்தை வைத்து கொண்டு பேசி கொண்டிருந்தனர். அதே போன்று ஒரு முறை ஸ்டுடியோவுக்கு சென்றிருந்தேன். அங்கு தொங்கவிடப்பட்ட ஒரு ஃபோட்டோவில் அந்த கடையின் உரிமையாளரும், விஜயகாந்தும் இணைந்து நின்றிருந்தார்கள். ஒரு சிறு உந்துதலில் நீங்கள் தெலுங்கு பேசுபவரா என்று கேட்டேன். அவர் தனது தெலுங்கு பின்புலத்தை உரைக்க தொடங்கினார். அதே போன்று விஜயகாந்தை ஆதரிக்கும் வேறு சிலரையும் பார்த்துள்ளேன். அவர்கள் தெலுங்கு பேசியது வியப்பாக இருந்தது.

ஆந்திரா பியுனுக்கு 10 கோடிக்கு மேல் சொத்து சேர்ந்தது எப்படி? பதவி உயர்வு வேண்டாம் என்றதன் மர்மம் ,,

narasimha reddy andhra narasimha reddy andhra நக்கீரன் :ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்ட போக்குவரத்து கழக துணை கண்காணிப்பளர் அலுவலகத்தில் பியூனாக பணியாற்றி வருபவர் நரசிம்ம ரெட்டி (53). மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நரசிம்மரெட்டி, தனக்கு பதவி உயர்வு வேண்டாம் என்று மறுத்து 34 ஆண்டுகளாக உதவியாளராகவே பணியாற்றி வந்துள்ளார். ஆனால் இவர் மீது, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று இவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.7 லட்சம் ரொக்கப்பணம், 2 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.20 லட்சம் வங்கி கணக்குகள் மற்றும் பிளாட் வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். அவர் வாங்கிய அனைத்து குடியிருப்புகளும் 250 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்தன. இவ்வாறு அவருக்கு 18 வீடுகள் உள்ளன. narasimha reddy andhra ரூ.1 கோடி மேலான எல்ஐசி எடுத்து உள்ளார். மற்றும் 50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

புதன், 2 மே, 2018

உலகின் அசுத்தமான நகரங்கள் முதல் 15 இடங்களில் 14 இடங்களை பிடித்த வட இந்திய நகரங்கள்.

Swathi K : இந்தியாவை குப்பையாக்கிய மோடி & கோ. உலகின் அசுத்தமான
நகரங்கள் பட்டியலில் முதல் 15 இடங்களில் 14 இடங்களை பிடித்த வட இந்திய நகரங்கள். மோடியின் தொகுதியான வாரணாசி உலகத்தின் மூன்றாவது அசுத்தமான நகரம் (check the image 1 & link 1).
முக்கியமான மேட்டர்.. ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணினேன்.. கிடைத்த தகவல்கள் கீழே..
1. 2015ல் உலகின் முதன்மையான 15 குப்பை நகரங்களில் 10 நகரங்கள் இந்திய நகரங்கள் (check the image 2 & link 2). அதுவே 2018ல் 14 இந்திய நகரங்கள் (அனைத்தும் வட இந்திய நகரங்கள்).. So நம்ம தூய்மையில் 2015ல் இருந்ததை விட மிக மோசமாக நிலையை நோக்கி நகர்ந்து இருக்கிறோம்.
2. மோடி தொகுதி வாரணாசி 2015 வரைக்கும் டாப் 20க்குள் இருந்தது இல்லை.. ஆனால் 2018ல் உலகத்தில் 3வது குப்பை நகரம் அது.. மறுபடி சொல்கிறேன் உலகத்தின் 3வது குப்பை நகரம் மோடியின் வாரணாசி.. ஆய்வுகள் என்ன செல்லுதுன்னா.. கங்கை முன்பு இருந்ததை விட அதிகமான அளவுக்கு குப்பை ஆறாக மாறி இருக்கிறது..

செய்திகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசு ஒரு கமிட்டியை எதிர்த்து பத்திரிகையாளர்கள் கடிதம்

டிஜிட்டல் ஊடகம் : அமைச்சருக்கு கடிதம்!மின்னம்பலம்: இணையதள ஊடகம் மற்றும் இணையதள செய்தி இதழ்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய அரசு ஒரு கமிட்டி அமைப்பதை எதிர்த்து தகவல் மற்றும் ஒலி பரப்பு அமைச்சர் ஸ்மிருதா இராணிக்கு பத்திரிகையாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த கடிதமானது 100 பத்திரிகையாளர்களால் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதில் நியூஸ்லாண்டிரியைச்சேர்ந்த மது திரெஹன் ,மூத்த பத்திரிகை ஆசிரியர் பரஞ்சாய் குஹா தாக்கூர்த்தா,ஸ்குரோல் இதழின் ஆசிரியர் நரேஷ் பொ்னான்டஸ் தி வயா் இதழைச்சேர்ந்த எம்கே வேணு, நியூஸ்மினிட் ஆசிரியர் தான்யா ராஜேந்திரன் , சிட்டிசன் ஆசிரியர் சீமா முஸ்தபா மற்றும் குயின்ட் இதழைச் சேர்ந்த ரீத்து குமார் ஆகிய முக்கிய பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களும் கையெழுத்திட்டுள்ளனா்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதள ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் கமிட்டியை நியமிக்கும் நடவடிக்கையை எதிர்த்து பிரபலமான பத்திரிகையாளர்களும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

தினகரன் பெண்ணுக்கும் திவாகரன் மகனுக்கும் திருமண பேச்சு முறிந்ததால் தனி தனி கட்சிகள்

டிஜிட்டல் திண்ணை: பெண் தர மறுத்ததால் புது கட்சி!

மின்னம்பலம்: திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை அழைத்துப் பேசினார். ‘தினகரன் அதிமுகவை வழிநடத்த சரியான தலைவராக இருப்பார் என நினைத்து ஏமாந்துவிட்டோம். அவர் சரியான தலைவர் இல்லை. இன்னும் இரட்டை இலையை மீட்போம் என சொல்லிக்கொண்டிருப்பது எல்லாம் முட்டாள்தனம். சின்னம்மா சிறைக்குப் போகும்போது எடப்பாடியைத்தான் முதல்வராக நியமித்துவிட்டுப் போனார். அவரை எதற்காக எதிர்க்க வேண்டும்?’ எனப் போட்டு உடைத்தார் ஜெய் ஆனந்த்.
இது ஒரு பக்கம் அப்படியே இருக்கட்டும். சசிகலாவின் உடன் பிறந்தவர்கள் சுந்தரவதனம், ஜெயராமன், வினோதகன், வனிதாமணி, திவாகரன் என மொத்தம் சசிகலாவுடன் சேர்த்து 6 பேர். சுந்தரவதனத்தின் வாரிசுகள்தான் அனுராதாவும், டாக்டர் வெங்கடேஷும். வனிதாமணியின் மகன்தான் டிடிவி தினகரன். சொந்த மாமா மகளான அனுராதாவைத்தான் திருமணம் செய்திருக்கிறார் தினகரன். தினகரனுக்கு சின்ன மாமனார் திவாகரன். ஆனாலும், திவாகரனையோ அவரது குடும்பத்தையோ கட்சிக்குள் சேர்க்காமல் தள்ளியே வைத்திருந்தார் தினகரன்.

லட்சுமி மிட்டல் ஆ.ராசாவிடம் கார்த்திக் சிதம்பரம் சொலித்தான் பேசினார் ... 2ஜி அவிழும் உண்மைகள்

இந்தப் புத்தகத்தின் சிறப்பே இதில் ராசா உதாரணம் காட்டும், மேற்கோள் காட்டும் ஆளுமைகள் அனைவரும் இப்போது உயிரோடு இருப்பவர்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார், 100 ஆண்டுகளுக்கு முன் அவர் சொன்னார் என்று சொல்லாமல் லட்சுமி மிட்டல் என்னிடம் பேசினார், நிதிஅமைச்சரின் மகன் சொல்லிதான் என்னிடம் பேசினார். ‘காற்றுக்கு எதற்கு விலை வைக்கிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நான் பார்த்துக் கொள்கிறேன், பிரச்னை பண்ணாதீர்கள்’ என்று லட்சுமி மிட்டல் தன்னிடம் பேசியதாக ராசா பதிவு
மின்னம்பலம் : 2ஜி வழக்கில் விடுதலையான திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான ஆ.ராசா 2ஜி வழக்கு பற்றிய உண்மைகளை ‘2ஜி சாகா அன்ஃபோல்டு’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகமாக எழுதி டெல்லியில் வெளியிட்டார். பின் இப்புத்தகத்தின் தமிழ் வடிவம், ‘2ஜி அவிழும் உண்மைகள்’ என்ற தலைப்பில் சென்னையில் வெளியிடப்பட்டது.
இதன் பின் இப்புத்தகத்தைப் பற்றிய ஆய்வங்கரத்தை தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்த முடிவு செய்து முதல் ஆய்வரங்கம் திருச்சியில் நேற்று (மே 1) நடந்தது. கவிஞர் நந்தலாலா தலைமையிலான வானம் அமைப்புதான் இந்த நிகழ்வை நடத்தியது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த ஆய்வரங்கத்தில் இப்புத்தகத்தை வாசித்து முடித்த ஆளுமைகள் அதுபற்றி தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

உத்தர பிரதேசம் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை

வெப்துனியா:  உத்திர பிரதேசதில் 10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாதது நல்ல முன்னேற்றம் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார். கடந்தாண்டு உ.பியில் பொதுத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதனைத் தடுக்க இந்த ஆண்டு தேர்வு எழுதும் மையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் சிறப்புப் படையினரை நியமித்து, முறைகேடுளை குறைத்ததாகவும் தெரிவித்தார்.
யோகியின் இந்த அதிரடி நடவடிக்கையால், உ.பியில் கடந்தாண்டு 10 ஆம் வகுப்பில் 81.2 ஆக இருந்த தேர்ச்சி விகிதம், தற்பொழுது 75.16 ஆக குறைந்துள்ளது

யாருடைய கார்டை பயன்படுத்தி ரூ.13 லட்சம் கோட் வாங்கினீர்கள் மோடி?: ட்விட்டரில் நடிகை ரம்யா கேள்வி

tamilthehindu :இரா.வினோத் கடந்த 2015 ஏப்ரலில் பிரதமர்
நரேந்திர மோடி
ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு சென்றபோது எடுக்கப்பட்ட படம். -கோப்புப் படம் ரம்யா - K_MURALI_KUMAR
 கர்நாடகாவில் வருகிற 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் பிரச்சார களத்தில் காங்கிரஸ், பாஜகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதேபோல ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களிலும் காங்கிரஸ் சமூக வலைதள குழுவினருக்கும், பாஜக சமூக வலைதள குழுவினருக்கும் இடையே வார்த்தை போர் நடக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள தலைவரும், நடிகையுமான ரம்யா (எ) திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி- செருப்பு, கல் வீச்சு .. காவிரி மேலாண்மை வாரியும்.. அலட்சியமாக பதிலளித்த மத்திய அமைச்சர் ..

செய்தியாளர் சந்திப்பில் காவிரி விவாகரம் குறித்த கேள்விக்கு வழக்கம் போல அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.அதை தொடர்ந்து தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
tamiloneindia: ராமநாதபுரம்: காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையில் அலட்சியமாக பதில் கூறியதாக ராமநாதபுரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். மேலும் நிர்மலா சீதாராமன் கார் மீது செருப்புகளும் கற்களும் சரமாரியாக வீசப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க முயன்ற போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
விகடன் :அருண் சின்னதுரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்பட முடியாது'' என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ராமநாதபுரம் செல்வதற்காக விமானம்மூலம் இன்று மதுரை விமான நிலையம் வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "115 மாவட்டங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லத் தேவையான மத்திய அரசின் திட்டங்களான குடிநீர், சுகாதாரம், சாலை மற்றும் மின்சார வசதி உள்ளிட்டவை அந்த மாவட்டங்களுக்கு சென்று சேர்ந்திருக்கிறதா என்று ஆய்வுசெய்ய, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு வந்துள்ளேன்.
ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் 75 சதவிகிதம், பட்டியலின மக்கள் வசிக்கும் 36 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு மத்திய அரசு திட்டங்கள் சென்று சேர்ந்திருக்கிறதா? என்று ஆய்வுசெய்ய வந்திருக்கிறேன்.

அந்த கூட்டணியால் திமுகவிற்கு பயன் இல்லை: திருநாவுக்கரசர் காட்டம்!

வெப்துனியா ::கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்தார். இதனால், காங்கிரஸ் திமுக கூட்டணி நிலைக்காது என பரவலாக பேசப்பட்டு வருகிறது. சந்திரசேகரராவ் மூன்றாவது பெரிய தேசிய கட்சியை உருவாக்க முயற்சித்து வருகிறார். இவரோடு சேர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால், இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க பல அரசியல் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். எனவே, அதன் படி தமிழகத்திற்கு வந்து ஆதரவு கோரியதாக கூறப்பட்டு வரும் நிலையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என திமுக தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது, சந்திரசேகரராவ், மம்தா பானர்ஜியுடன் கூட்டணி சேருவதால் திமுகவுக்கு ஒரு பயனும் இல்லை. நாட்டில் மூன்றாவது அல்லது நான்காவது அணி ஆட்சியே அமைக்க முடியாது. ...  (இவரையே எந்த பயனும் இல்லாமல் காங்கிரஸ் வைத்திருக்கிறதே)

நீதிபதி ஜோசப் நியமனத்தை சட்ட அமைச்சு ஒப்புதல் அளிக்கவில்லை .. கொலீஜியம் இன்று கூடுகிறது

தினமலர் :"நீதிபதி, ஜோசப், நியமன, விவகாரம், கொலீஜியம், இன்று, கூடுகிறது" புதுடில்லி : உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்ச நீதி மன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான, மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் தேர்வு செய்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கும். இதை மத்திய அரசு பரிசீலித்து, ஒப்புதல் அளிப்பது, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஜன 10-ம் தேதி ஐந்து நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப், மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இரண்டு பேரை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதில் , இந்து மல்ஹோத்ராவை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, மத்திய சட்ட அமைச்ச கம், ஏற்கனவே ஒப்புதல் அளித்தது; ஜோசப்பை நியமிக்க ஒப்புதல் அளிக்கவில்லை; இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக இன்று கொலீஜியம் கூடி ஜோசப் நியமனம் தொடர்பாக முடிவு எடுக்க உள்ளது.

செவ்வாய், 1 மே, 2018

2 ஜி அவிழும் உண்மைகள் ... சட்டமும் அரசும் ஊடகமும் ஒரே நேரத்தில் சதிசெய்தால் ... உடைத்த மாவீரன் ராசா

Sivasankaran Saravanan : 2ஜி_அவிழும்_உண்மைகள் என்ற புத்தகத்தின்
முன்னுரையை படிக்கும்போதே ஆ.ராசா என்ற மனிதரின் நெஞ்சுரமும், போராட்டக்குணமும், உண்மை மீது அவருக்கு இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையும், அதே சமயம் நிறுவனங்கள் நினைத்தால் எப்படி ஒரு தனி மனிதன் மீது தொடர் தாக்குதல் நடத்தமுடியும் என்பதையும்
தெரிந்துகொள்ளமுடிகிறது!
தன்னைப்பற்றிய அறிமுகமாக இப்படித் தொடங்குகிறார் :
பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட சமூக பின்னணியைக் கொண்ட ஓர் இந்திய கிராமத்து இளைஞனாக, ஆனாலும், என் மீதான மரபுத்தளைகளை அறுத்துக்கொண்டு, காலம் போற்றும் நல்ல விழுமியங்கள், நம்பிக்கைகள், எளிமை ஆகிய அனைத்தையும் பெற்று அமைந்ததே என் வாழ்க்கை!
என்னோடு அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பல பெரிய மனிதர்களும் கூட அவர்கள் வரிசையில் நானும் அமர்ந்ததை ஒரு புதிய கண்ணோட்டத்திற்கான வாயில் என்றே ஏற்கத்தயாராக இருப்பார்கள். என் மூச்சுக்காற்றாக இருந்த என் அலுவல் பண்புமுறை, முழுமையான ஈடுபாடு ஆகியவற்றால் அத்தகைய சூழல் ஏற்பட்டிருக்கவேண்டும்!
2ஜி வழக்கின் குற்றச்சாட்டை ஆ.ராசா இரு வேறு உதாரணங்களை சொல்லி விளக்குகிறார்!
காந்தியும் திலகரும் ஒரே நோக்கத்திற்காக போராடினாலும் திலகர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது! திலகர் தான் பேசியதும் எழுதியதும் சட்டப்படி தவறல்ல என வாதாடினார்! ஆனாலும் சட்ட விதிகளின் படி (Rule of law) அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது!
காந்தி தான் சட்டப்படி செய்வது தவறு தான் என்பதை உணர்ந்தாலும் இயற்கை சட்டப்படி (Natural law) தான் சரியானதையே செய்வதாக நம்பினார்!
ஆனால் 2ஜி குற்றச்சாட்டின் ஆரம்ப கட்டத்தில் சட்டத்தின் ஆட்சியும் இல்லாமல், இயற்கை சட்டப்படியும் இல்லாமல் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல சட்ட நிறுவனங்களே முடிவுகளை எடுக்க முற்பட்டது, நாகரிகமான ஆரோக்கிய சட்ட முறைக்கு (Civilized or healthy jurisprudence) முற்றிலும் எதிரானது என்கிறார்!

டெல்லியில் .திருமாவளவன் ராகுல் காந்தி , சீதாராம் யெச்சூரி ஆகியோருடன் சந்திப்பு ...

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்
காந்தியுடன் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். துக்ளக் சாலையில் உள்ள ராகுலின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.
Mathi tamiloneindia; டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து பேசினார்.
தேசிய அளவில் மாநில கட்சிகள் இணைந்த அணியை உருவாக்குவதில் பல கட்சிகள் தீவிரமாக உள்ளன. திமுக, தெலுங்கான்னா ராஷ்டிரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ் இணைந்து இம்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் மார்க்சிஸ்ட் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரியை இன்று காலை திருமாவளவன் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் திருமாவளவன் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்புகளில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது

உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது தி.மு.க... குட்கா ஊழல் விவகாரம் -

மாலைமலர் :குட்கா ஊழல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த
விவகாரம் தொடர்பாக தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கு விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஊழலில் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளதால் அவர்கள் பதவி விலகவேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சிபிஐ விசாரணை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், அரசு மேல்முறையீடுசெய்யாது என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

சாருகாசன் :கர்நாடகாவை சேர்ந்தவர்தான் அடுத்த தமிழக முதலமைச்சர் ! கமலஹாசன் ரஜினிகாந்த இருவருமே கர்நாடகாதான் இவர் எவரை கூறுகிறார்?

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட கமல்ஹாசனுக்காக? அல்லது மகாராஷ்டிராவில் இருந்து கிளம்பி கர்நாடகாவில் குடியேறி தமிழகத்தின் முதல்வர் கனவில் மிதக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு முட்டுக் கொடுக்கவா? இப்படியான முட்டுக் கொடுத்தல்  பாட்சாக்கள் தமிழர்களிடம் ஒருபோதும் எடுபடப் போவது இல்லை. 
Mathi - Oneindia Tamil : தமிழர்கள் எவ்வளவு முட்டாள்கள்?.. சாருஹாசன் கருத்துக்கு வாசகர்கள் வேதனை! அடுத்த தமிழக முதல்வர் கர்நாடகத்தைச் சேர்ந்தவரா?..
தமிழர்களே நீங்க என்ன நினைக்கிறீங்க??  தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகாவை சேர்ந்தவராம்-கொளுத்திப் போட்ட சாருஹாசன் தொடர்ந்து சர்ச்சை பேச்சு.. 
காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவுக்கும் மத்திய அரசுக்கும் எதிராகவும் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என நடிகர் சாருஹாசன் பேசியிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழக அரசியலில் இப்போது தடியெடுத்தவர்கள் எல்லாம் பெருந்தனக்காரர்களாகிவிட்டனர். இதுநாள் வரை வாய் மூடி மவுனிகளாக இருந்தவர்கள் திடீரென அரசியல் ஞானியாகிவிடுகிறார்கள். 
இந்த புதிய புத்தர்களுக்கு எந்த போதி மரம் ஞானத்தைத் தருகிறது என்பதுதான் புரிபடாத ஒன்றாக இருக்கிறது. இந்த திடீர் அரசியல் மேதாவிகளில் ஒருவர் நடிகர் சாருஹாசன். கடந்த சில மாதங்களாக கருத்து கந்தசாமியாகத்தான் பேசி வருகிறார் சாருஹாசன்.

பேரா.நிர்மலாதேவி ... ஆளுநர் பன்வாரிலால் பதவியை விட்டு விலகுவதாக கடிதம் .... உள்துறை ..

Raj - Oneindia Tamil : சென்னை: மாணவிகளுக்கு செக்ஸ் வலை வீசிய நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரத்தால் அதிர்ச்சியடைந்த தமிழக ராஜ்பவன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் . அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை கமிசன் அமைத்த பிறகும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லையாம். 
கமிசனுக்கு மேலும் 2 வார கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், தமிழக அரசு உத்தரவிட்ட சி.பி.சி.ஐ.டி.விசாரணையில், நிர்மலாதேவி பல விசயங்களை அம்பலப்படுத்தியிருக்கிறாராம். அவருடைய ஒப்புதல் வாக்குமூலம், ஆளுநரையும், அவரது செக்ரட்டரியான கூடுதல் தலைமைச்செயலாளர்  ராஜகோபாலையும் சிக்கவைப்பதாக இருக்கிறது என்கிறார்கள். 
சிபிசிஐடியின் ஏடிஜிபி அம்ரேஷ்பூஜாரியும் ராஜகோபாலும் நெருங்கிய நண்பர்கள். ஜெ. ஆட்சி காலத்தில் பூஜாரியும் ராஜகோபாலும் சசிகலாவால் பழிவாங்கப்பட்டவர்கள். 
உள்துறை செயலாளராக ராஜகோபால் இருந்தபோது, உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் அம்ரேஷ்பூஜாரி. தங்களை சிக்க வைக்கத்தான் நிர்மலா விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டதாக கருதியது ராஜ்பவன். 
அதனால்தான், கடுமையான நெருக்கடி கொடுத்து சிபிசிஐடி ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளியை மாற்றிவிட்டு அந்த இடத்தில் பூஜாரியை கொண்டு வந்தார் ராஜகோபால். 
அந்த வகையில், சிபிசிஐடி விசாரணை அதிகாரியிடம் நிர்மலா கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை அம்ரேஷ்பூஜாரி மூலம் அறிந்துதான் அதிர்ச்சியடைந்துள்ளது ராஜ்பவன் என்கிறார்கள். 
சிபிசிஐடி விசாரணையில் ராஜ்பவன் தொடர்பாக பொதுவான விவகாரங்கள் எதுவும் இருக்கக்கூடாது; இருந்தால் அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தத்தான் நேற்று முதல்வர் எடப்பாடியை ராஜ்பவனுக்கு அழைத்து ஆலோசித்துள்ளனர் பன்வாரிலாலும் ராஜகோபாலும் என்கின்றன அதிகாரிகள் தரப்பு. 
இந்த நிலையில், தமிழக கவர்னர் பதவியிலிருந்து விலகுவதாக ஒரு கடிதத்தை கவர்னரிடமிருந்து எழுதி வாங்கியிருக்கிறதாம் மத்திய உள்துறை அமைச்சகம்.

வட கொரியா எல்லையில் பிரசார ஒலிப்பெருக்கியை அகற்றுகிறது தென் கொரியா

BBC : வடகொரியாவுடனான தனது எல்லைப் பகுதியில் தான் வைத்த பிரசார ஒலி
பெருக்கிகளை அகற்றத் துவங்கியிருக்கிறது தென் கொரியா. வடகொரியாவும் இதே போல தம் தரப்பில் வைத்த பிரசார ஒலி பெருக்கிகளை வட கொரியாவும் அகற்றிக் கொண்டிருப்பதாக தாம் நினைப்பதாக தென் கொரியா கூறியுள்ளது."> >பகைமையில் இருந்த இந்த இரு நாடுகளும் பரஸ்பரம் இன்னொரு நாட்டு மக்களிடையே தம் கருத்தைப் பரப்பும் நோக்கில் தங்கள் எல்லைப் புறத்தில் பெரிய ஒலிபெருக்கிகளை நிறுவி பிரசாரம் செய்துவந்தன.
கடந்த வாரம் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொரிய உச்சி மாநாட்டுக்கு பிறகு உறவு வலுப்பெறுவதன் குறியீடாக இந்த ஒலிபெருக்கிகளை அகற்றத் துவங்கியுள்ளது தென்கொரியா.
வெள்ளிக்கிழமையன்று இரு நாடுகளும் போரை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. மேலும் கொரிய தீபகற்பத்தை அணுசக்தியற்ற இடமாக மாற்றுவதற்கான பணியில் ஈடுபட ஒப்புக்கொண்டுள்ளன.

காவிரி நதி நீர் பங்கீடு - மத்திய அரசின் வரைவு செயல்திட்டம் தயார்?

மாலைமலர் :காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு தயார் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி:>காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் அறிவித்தனர். அத்துடன் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை (ஸ்கீம்) வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்காக 6 வாரம் கெடுவும் விதித்திருந்தது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து கால தாமதம் செய்து வந்த நிலையில், மே 3-ம் தேதிக்குள் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி காவிரி நீர் பங்கீட்டுக்கு வரைவு செயல் திட்டம் ஒன்றை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஓசையின்றி தயாரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம் வசனத்தை பேசிவிட்டு நாட்டை ஆளுகிறேன் என்கிறார் - ரஜினியை விளாசிய பாரதிராஜா

சந்தோஷ்- bharathirajanakkheeran.in-  : 'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படத்தையடுத்து பாடலாசிரியர் யுரேகா தற்போது இயக்கியுள்ள படம் 'காட்டுப்பய சார் இந்த காளி'. இப்படத்தில் ஜெய்வந்த், ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, அபிஷேக், புதுமுகம் ஐரா உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்துகொண்டு பேசுகையில்..."பொதுவாக படத்தின் தலைப்பு வைப்பதில் எனக்கு உடன் பாடில்லை. குறிப்பாக இந்த படத்தின் தலைப்பு ‘கெட்டப்பய சார் இந்த காளி’ என்று வைத்திருக்கிறார்கள்.
இப்படி எல்லாம் தலைப்பு வைத்து நடிகர்களை நாம் தூக்கி விடுகிறோம். அப்படி பண்ணு, இப்படி பண்ணு என்று சொல்லி விடுகிறோம். நாம் எழுதி கொடுத்த வசனத்தை படித்து, பாடல்களை பாடி, நாளை நாட்டை ஆளுகிறேன் என்று வந்து நிக்கிறான். அவர்களை எல்லாம் அப்போவே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். ரசிகர்களையும் முட்டாளாக்கி இருக்கிறார்கள். அவன் வெவரங்கெட்டவன், கட் அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என அவர்களையும் அப்போதே தடுத்திருக்க வேண்டும். அவர்களை தடுக்காததால் ஒரு கூட்டத்தை கூட்டிக் கொண்டு நாட்டை ஆளப்போவதாக சொல்லி வருகிறான். எல்லாம் நாம் செய்த தவறுதான்" என்று நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக சாடியுள்ளார்.

மத்திய அரசு விருதுகளில் தமிழ் மொழி அடியோடு புறக்கணிப்பு .. ஸ்டாலின் கண்டனம்

ஜனாதிபதி விருது வழங்குவதில் தமிழ் மொழியை புறக்கணிப்பதா? மு.க.ஸ்டாலின் கண்டனம் தினத்தந்தி : ஜனாதிபதி விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்குவதில், தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 2018-ம் ஆண்டுக்கான, ஜனாதிபதி விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்குவதில், இந்திய திருநாட்டின் மூத்த மொழியும், திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழியும், உயர்தனிச் செம்மொழியுமான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இந்த விருதுகளுக்கான பெயர்களை பரிந்துரைக்கும்படி கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் சமஸ்கிருதம், பாலி/பிராகிருதம், அரபி, பாரசீகம், செம்மொழி அந்தஸ்து பெற்ற ஒடியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும்,
அதில் செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் இடம்பெறவில்லை என்பது, மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்மொழி மீது கொண்டுள்ள ஆழமான வெறுப்பையும், பாகுபாட்டு உணர்வையும் காட்டுகிறது.