வியாழன், 15 பிப்ரவரி, 2018

லைகா நிறுவன ராஜு மகாலிங்கம் ரஜினி மன்ற மாநிலச் செயலாளராக நியமனம்! ஒரே கல்லில் இரண்டு வியாபாரம்!

விகடன் :நடிகர் ரஜினிகாந்த் மாநிலம் முழுவதும் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதற்காக ஏற்கனவே லைகா நிறுவன முன்னாள் ஊழியரான ராஜு மகாலிங்கத்தை அனுப்பி வைத்த நிலையில் தற்போது மன்றத்தில் முக்கியப் பதவியை அவருக்கு ரஜினி அளித்துள்ளார். முன்னதாக இன்று ரஜினிகாந்தை தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். அப்போது இது வழக்கமான சந்திப்புதான் எனத் தமிழருவி மணியன் தெரிவித்தார்

தினத்தந்தி :கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் சூறாவளி பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், திருச்சியில் மாநாடு நடத்தவும் ஆலோசனை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

தெருவோரம் சிறுநீர் கழித்த பாஜக சுகாதார அமைச்சர் ... ராஜஸ்தான் ஜெய்பூர் மாநகராட்சி 200 ரூபாய்

திறந்தவெளியில் சிறுநீர் கழித்த சுகாதாரத்துறை மந்திரி வெட்கப்பட வேண்டும்  காங்கிரஸ் கண்டனம்தினத்தந்தி: திறந்த வெளியில் சிறுநீர் கழித்த சுகாதாரத்துறை மந்திரி வெட்கப்பட வேண்டும் காங்கிரஸ் கண்டனம் ராஜஸ்தானில் திறந்தவெளியில் சிறுநீர் கழித்த சுகாதாரத்துறை மந்திரியின் செயலுக்கு அரசு வெட்கபட வேண்டும் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. ராஜஸ்தானில் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானின் பிங் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய்பூர் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி காளிச்சரண் சாரப் டோல்பூர் இடைத்தேர்தல் பணிக்காக சென்று கொண்டிருக்கும் போது திடீரென காரை நிறுத்தி விட்டு அருகே உள்ள கட்டடம் ஒன்றின் சுவரில் மீது சிறுநீர் கழித்தார்.

11400 கோடியை அமுக்கிய மோடியின் கூட்டாளி தப்பி ஓடிவிட்டார் .. நிரவ் மோடி என்ற பஞ்சாப் வைரவியாபாரி ..

இந்த "நிரவ் மோடி" நமது பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்.. பிஜேபி தேர்தல் பிரச்சாரத்திற்கு நூற்றுக்கணக்கான கோடிகள் வழங்கியவர்.
Swathi.K :"நிரவ் மோடி" என்ற தொழிலதிபர் பஞ்சாப் நேஷனல் பேங்க்'யில் 11400 கோடி "ஆட்டய" போட்டார் என்ற செய்தி நேற்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். இப்போது அவர் வெளிநாடு தப்பிவிட்டார் என்று அரசு தெரிவித்துள்ளது👿👿👿.
இந்தியாவை விட்டு "நிரவ் மோடி" & குடும்பத்தினர் வெளியேறிய நாட்கள்:
1-Jan-2018: "நிரவ் மோடி" & அவர் சகோதரர் "நிஷால் மோடி".
4-Jan-2018: "நிரவ் மோடி" மாமா "மெகுல்".
6-Jan-2018: "நிரவ் மோடி" மனைவி "அமி".
23-Jan-2018: சுவிஸ் நாட்டில் நமது பிரதமருடன் உலக பொருளாதார மீட்டிங்கில் "நிரவ் மோடி" கலந்து கொள்கிறார்.
29-Jan-2018: 280 கோடிகள் "நிரவ் மோடி" ஆட்டய போட்டதாக PNB பேங்க் CBI கிட்ட புகார்.
13-Feb-2018: 280 கோடிகள் இல்ல.. 11400 கோடிகள் (11400000000000 ரூபாய்) "நிரவ் மோடி" ஆட்டய போட்டதாக PNB பேங்க் CBI கிட்ட புகார்.
14-Feb-2018: PNB பேங்க் திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல்.
15-Feb-2018: "நிரவ் மோடி" நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாக அரசாங்கம் தகவல்.
இது ஒன்றும் இந்த அரசுக்கு புதுசு இல்லை.. இப்படி தான் விஜய் மல்லையா தப்பினார்.. இரண்டும் ஒரே மாதிரி நாடகம்.. எழுதி, இயக்கியது நமது அரசாங்கம். இந்த அரசாங்கம் ஒரு பொய், போலி, பித்தலாட்டம் நிறைந்த டுபாக்கூர் அரசாங்கம் என்று இனியாவது ஒத்துக்கொள்ளுங்கள் மோடி பக்தாள்ஸ்..

முன்னாள் எம் எல் ஏ கொலை ! வேடஞ்சத்தூர் அதிமுக ... நடைபயிற்சியின் போது வெட்டி..

mlaநக்கீரன் :திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசெந்தூர் சட்டமன்ற முன்னால் அதிமுக உறுப்பினர் ஆண்டிவேல்.  இவர் எரியோடு அருகே உள்ள புதூரில் குடியிருந்து வருகிறார். இவரது தோட்டம்  தண்ணீயர் பந்தல் பட்டியில் உள்ளது. தனது தோட்டத்துக்கு தினசரி மாலையில் வாங்கிங் போய் வருவது வழக்கம்.  அதுபோல் இன்று மாலை வாங்கிங் போய்இருக்கிறார்.  அப்போழுது அவர் தோட்டத்திற்கு அருகே இருக்கும் பக்கத்து தோட்டக்கார் வெகு நேரம் ஆகியும் ஆண்டிவேலை காணவில்லை என்பதால் அவரை தேடி தோட்டத்திற்கு போய் பார்த்து இருக்கிறார். அப்போழுது ஆண்டிவேல் தோட்டத்தில் உள்ள மோட்டார் ரூம் அருகே மர்மாக தாவங் கோட்டையில் வெட்டு பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தரார். உடனே அவர் போலீஸ்க்கு தகவல் கொடுத்ததின் பேரில் எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று முன்னால் எம்எல் ஏ உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ரஜினி கட்சி நியுமராலோஜி ஆய்வு .... படை என்று இருக்கவேண்டுமாம் ... பிரஜை படை மக்கள் படை சொறிப்படை ....


யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை!மின்னம்பலம்: ரஜினி அரசியலுக்கு வருவதற்கான ஆயத்தங்களில் ஆறு மாதங்களுக்கு முன் ஈடுபட்டிருக்கும்போதே, ‘ரஜினி தன் கட்சியின் பெயரில் படை என்ற வார்த்தை இருக்க வேண்டும் என விரும்புகிறார்’ என்று மின்னம்பலம் மொபைல் பத்திரிகையில் முதன்முதலாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்தச் செய்தியின் உறுதித் தன்மை தற்போது நடந்துவரும் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட ரீதியான ஆலோசனைக் கூட்டங்களில் எதிரொலிக்கிறது.
தற்போது தமிழகம் முழுமைக்கும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாவட்ட ரீதியாக நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. நெல்லை, வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது இந்த மாவட்டங்களுக்கு அடுத்த நிலை நிர்வாகிகள் அதாவது நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அதற்கான ஆலோசனைக் கூட்டம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மன்ற அகில இந்திய நிர்வாகிகள் தலைமையில் நடந்து வருகிறது.

அமெரிக்கா பள்ளி கூடம் துப்பாக்கி சூடு; 17 பேர் உயிரழப்பு !

49394AE000000578-5392559-image-m-8_1518656671204 அமெரிக்காவின் புளோரிடாவில் பள்ளி கூடம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு; 17 பேர் பலி!! - (வீடியோ) அமெரிக்காவின் புளோரிடாவில் பள்ளி கூடம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு; 17 பேர் பலி!! - (வீடியோ) 49394AE000000578 5392559 image m 8 1518656671204அமெரிக்காவின் புளோரிடாவில் பள்ளி கூடம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு; 17 பேர் பலி!! – (வீடியோ)மாலைமலர்: அமெரிக்காவின் புளோரிடாவில் பார்க்லேண்ட் நகரில் உயர்நிலை பள்ளி கூடம் ஒன்றில் முன்னாள் மாணவர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 17 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நிகோலஸ் கிரஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். எப்.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணைக்கு உதவியாக உள்ளனர். நிகோலஸ் ஒழுங்கீன காரணங்களுக்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். இதுபற்றி புரோவார்டு நகர ஷெரீப் ஸ்காட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்பொழுது, நிகோலஸ் கொலைகாரன். அவன் போலீசாரின் காவலில் உள்ளான். அவனது இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல்


tamilthehindu :பிரான்ஸில் இருந்து வாங்கப்படவுள்ள ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதற்கு அதில் ஊழல் நடந்துள்ளதே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரான்ஸ் நாட்டின் டிசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர்விமானம் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபின், கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டுக்கு சென்று இருந்தார்.
அப்போது, பிரான்ஸ் அரசுடன் பிரதமர் மோடி புதிதாக ஒரு ஒப்பந்தம் செய்தார். உடனடியாக இயக்கும் வகையில் 36 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தார்.

சசிகலாவை தண்டிக்கலாம் ஜெயலலிதாவை தண்டிக்க முடியாது ! பார்பனர்களை எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்க முடியாது ...

சசிகலா என்ற கள்ளரை தண்டிக்கமுடியும் ஆனால் ஜெயலலிதா எனும் பாப்பாத்தியை ஒரு மயிரும் புடுங்கமுடியாதென்ற மமதையில்  பாண்டே
ஆலஞ்சியார் : உயிரோட இருந்திருந்தால் செல்வி.ஜெயலலிதா மேல் முறையிடு செய்து குற்றவாளி இல்லை என நிருபித்து இருப்பார் ..ரங்கராஜ் பாண்டே..
சிலநேரம் உண்மை வெளிவந்துவிடும் அவர்களை அறியாமல் விசாரணை முடிந்து தீர்ப்பு காலந்தாழ்த்தும்போதே சிலர் வெளிப்படையாக சொன்னார்கள் ஜெயலலிதாவிற்காக தீர்ப்பு தாமதமாகுவதாகவும் எதேனும் வழிகளில் அவரை மட்டுமாவது விடுவிக்க மார்க்கம் இருக்கிறதா என மத்திய அரசு முயற்சிப்பதாகவும் சொல்லபட்டது.. பார்பனர் தண்டிக்கபட்டால் என்னாவது என்றெல்லாம் சொன்னார்கள்.. உச்சநீதிமன்றத்தில் டைகர்மேனன் வழக்கில் அவசரமாக இரவில் கூடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன் வாதாடிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் attorney general.. மநுநீதியை எடுத்துகாட்டி வாதாடியது அப்போது பேசபட்டது.. அதை தான் ரங்கராஜ் பாண்டே சொல்லியிருக்கிறார்..
சசிகலா என்ற கள்ளரை தண்டிக்கமுடியும் ஆனால் ஜெயலலிதா எனும் பாப்பாத்தியை ஒரு மயிரும் புடுங்கமுடியாதென்ற மமதையில் வந்த வார்த்தை அது.. இந்திய நீதிகளின் லட்சணத்தை மிக தெளிவாக படம்பிடித்து காட்டிருக்கிறது இவரின் பேச்சு ..தொடர்ந்து ஜெயலலிதாவிற்கு வழங்கபட்டுவந்த சலுகைகளும் ஒரு வழக்கை நடத்த எவ்வளவு சிரமபட வேண்டியிருந்ததும் நாம் கண்டதுதான்.. யார் விசாரிக்கவேண்டும் ஏன் இவர் விசாரிக்கிறார் இவர் மீது நம்பிக்கையில்லை என்றெல்லாம் ஜெயலலிதா மனுவாக போட்டது அனைவரும் அறிந்தது..

கமலஹாசன் Qualities க்கும் Ideologies க்கும் வித்தியாசம் தெரியாமல் கூவுவது பிராடுத்தனம் தான்!

 Sivasankaran Saravanan  :நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு நடிப்புத்துறையை தாண்டி கொஞ்சமேனும் அரசியல் அறிவு இருக்கும் என நினைத்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது!
அவர் அரசியலுக்கு வருகிறார், தாராளமாக வரட்டும். சரி கட்சியை எங்கிருந்து தொடங்கப்போகிறார் என்றால் ராமேஸ்வரத்திலிருந்தாம். காரணம் அது அப்துல்கலாம் பிறந்த ஊராம். இதன்மூலம் கமல் உணர்த்த விரும்புவது தான் என்ன என்று சத்தியமா புரியவில்லை.
பொன்ராஜ் என்பவர் கட்சி ஆரம்பித்தது போல இவரும் கலாம் பெயரை வைக்கப்போகிறாரா! கலாம் என்பவர் ஒரு நேர்மையான மனிதர், அரசுப்பதவியை துஷ்பிரயோகம் செய்யாதவர். சரி அதற்காக அவருக்கும் அரசியல் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? கலாம் தன்னுடைய சித்தாந்தம் என எதையாவது தந்துள்ளாரா?! இல்லை எந்த அரசியல் சார்பு கருத்தையாவது பேசிச் சென்றுள்ளாரா? தன் வாழ்நாள் முழுவதும் முழுக்க Pro Govt, Pro State ஆக இருந்த ஒருவரை அவர் மறைந்த பிறகு அவரை வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்படுவது அவலம். சரி அதே லாஜிக் படி , கே ஆர் நாராயணன் கூட நேர்மையான, அதிகார துஷ்பிரயோகம் செய்யாதவர் தான். ஆனால் அவரை ஏன் இன்ஸ்பிரேசனாக யாரும் கொள்வதில்லை? ஏனென்றால் சினிமாவுக்கு ஒரு அஜீத் போல, கிரிக்கெட்டுக்கு ஒரு டிராவிட் போல

நேர்பட பேசு : தி க அருள்மொழிடம் திராவிடம் படித்த பாஜக ராகவன்


Ganesh Babu :நேற்றைய 'நேர்பட பேசு' விவாதத்தின் ஒரு பகுதி இது. அப்பழுக்கற்ற திராவிட அறிவுக்கு முன்னால் ஆரியப் பொய்கள் எப்படி மண்டியிடும் என்பதை அறிந்துக்கொள்ள முழுவதும் படியுங்கள்.. 🔥🔥
பி.ஜே.பி ராகவன்: "பிறப்பினால யாருமே பிராமணன் கிடையாது. அதை புரிஞ்சிக்கோங்க"
வழக்கறிஞர் தோழர் Arulmozhi: "அப்ப நீங்க எனக்கு பதில் சொல்லுங்க.. பகவத் கீதையில கண்ணன் சொல்றாரு, 'சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்'(நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்). அதுக்கு அடுத்த வரியை படிச்சு பாருங்க. குணத்தினால்தான் ஒருவனுடைய குலம் அமைகிறது அப்படின்னா 'நான் வேறு தொழில் செய்யலாமா?' என்றுக் கேட்டால், 'செய்யக்கூடாது..நீ விரும்பினாலும் வேறு தொழில் செய்யக்கூடாது. பிறப்பினால் உனக்கு எந்தத் தொழில் சொல்லப்பட்டதோ, அதைத்தான் நீ செய்யவேண்டும்' என்கிறதுதானே பகவத் கீதை? நாங்க என்ன இனிமேலும் படிக்காமலேயே இருப்போம் அப்படின்னு நெனைச்சிக்கிட்டு இதையெல்லாம் சொல்றீங்களா?
ராகவன்: "தப..ப..ப.. ஹான்.. உங்க yardstickல போன கண்ணன் எந்தக் குலம்? எங்க நீங்க வேற?"
வழக்கறிஞர் அருள்மொழி: "பிரதமர் மோடி யார்? டாக்டர் தமிழிசை யார்?

கனிமொழி தூத்துக்குடி ,திருச்சி ,கடலூர்,விழுப்புரம் தொகுதிகளை குறிவைக்கிறார் ?

Raj - Oneindia Tami  :  லோக்சபா தேர்தலில் போட்டியிட கனிமொழி திட்டம் ? சென்னை: திமுக ராஜ்யசபா எம்.பி.யான கனிமொழி வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனிமொழியின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.
அதற்கு முன்னதாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வியூகங்களை தீவிரமாக கனிமொழி வகுத்து வருகிறாராம்.
நாடார்கள், ரெட்டியார்கள், முத்தரையர்கள், வன்னியர்கள் சமூகத்தினர் கனிமொழிக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
கனிமொழி குறிவைக்கும் தொகுதிகள் இதனை கனிமொழியின் பிறந்த நாளன்று விதவிதமான போஸ்டர்கள் ஒட்டி அதகளப்படுத்தியிருந்தனர் இந்த சமூகத்தினர்.
இவர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தூத்துக்குடி, திருச்சி, கடலூர், விழுப்புரம் தொகுதிகளில் கனிமொழியை போட்டியிடவும் வலியுறுத்தி வருகின்றனர், கட்சியில் முக்கிய பதவி கட்சியில் முக்கிய பதவி இதனடிப்படையில் இந்த 4 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் தமது ஆதரவாளர்களை ஒருங்கிணத்து வருகிறாராம் கனிமொழி.

இஸ்ரேல் பிரதமர் மீது போலீசார் ஊழல் புகார்.... (கூடா நட்பு கேடாய் முடியும்?)

தினமலர் : ஜெருசலம்: ஊழல் செய்ததாக இஸ்ரேல் பிரதமர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இஸ்ரேல் போலீசார் பரிந்துரைத்துள்ளனர். இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெத்தன்யாகூ மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு பல முறை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இஸ்ரேல் பிரதமர் ஊழல் புகார் இந்நிலையில் நேற்று இஸ்ரேல் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேல் போலீசார் அந்நாட்டு அட்டர்னி ஜெனரலுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். அதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூ, ஹாலிவுட் திரைபட தயாரிப்பாளர் ஆர்னோன் மில்சரிடம் பரிசுப்பொருட்கள் வாங்கியது. ஆஸ்திரேலிய தொழிலதிபரிடம் ரூ. பல கோடி லஞ்சம் பெற்றது உள்ளிட்ட ஊழல் செய்ததற்கான ஆதாரம் உள்ளன. இது தொடர்பாக அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டினை . நெத்தன்யாகூ இதனை மறுத்துள்ளார்

அதிமுக... அனிதா குப்புசாமி விலகினர் ... புஷ்பவனம் குப்புசாமிக்கு இசைக் கல்லூரி துணை முதல்வர் பதவி கிடைக்கவில்லை ...

அதிமுகவிலிருந்து விலகியது ஏன்: அனிதா விளக்கம்!
மின்னம்பலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தவர் அனிதா குப்புசாமி. ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் ஓபிஎஸ் அணி-சசிகலா அணி எனப் பிரிந்தபோது சசிகலா தரப்பில் அனிதா இருந்தார். ”சசிகலா விரைவில் தமிழக முதல்வராவார்; பன்னீர்செல்வம் போன்ற தீயவர்கள்தான் அதிமுகவிலிருந்து விலகியுள்ளனர்” என்றும் அவர் பேசியிருந்தார். பின்னர் எடப்பாடி- பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றிணைந்த பின்னர் கட்சியில் இருந்து ஒதுங்கியே இருந்த அனிதா தற்போது அதிமுகவிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (பிப்ரவரி 14) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயலலிதா அழைத்ததால் அதிமுகவுக்குப் போனேன். தற்போது அவரே இல்லாததால் விலகிவிட்டேன். தற்போது உள்ளவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்களின் தலைமை பிடிக்கவில்லை. வேறு அணிக்குச் செல்லப்போவதில்லை. அரசியலில் இருந்தே விலகிவிட்டேன்” என்று விளக்கமளித்தார்.

குஷ்பூ :தமிழச்சிக்கு ஸ்கூட்டர் தமிழனுக்கு குவாட்டர்!

தமிழச்சிக்கு ஸ்கூட்டர் தமிழனுக்கு குவாட்டர்!மின்னம்பலம்:  தமிழச்சிக்கு ஸ்கூட்டர் தமிழனுக்கு குவாட்டர் இதுதான் தமிழகத்திற்கு எடப்பாடி அரசு கொண்டுவந்திருக்கும் திட்டம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மறியல் போராட்டத்தை நடத்தின. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் நேற்று(பிப்ரவரி 13) திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி சார்பாக கரூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ கலந்து கொண்டார்.

புதன், 14 பிப்ரவரி, 2018

வைரமுத்து அதிரடி : இந்தியில் தீர்ப்புக்களை வழங்கலாம்... ஆனால் தமிழில் தீர்ப்புக்கள் வழங்க மாட்டார்களாம்?

சமஸ்கிருதம், தமிழ்: நம்பிக்கை பொய்யா?மின்னம்பலம்: தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். துணைவேந்தர் திருவாசகம் விழாவுக்கு முன்னிலை வகித்தார்.
சமீபத்தில் வைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரைக்குப் பிறகு உருவாகியிருக்கும் கட்டுரைத்தொகுப்பு என்பதால் இதற்குத் தமிழ் ஆர்வலர்கள் பலரை வரவழைத்திருந்தார். பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

வைரமுத்து பேசியதன் சுருக்கம்:
மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறு கொண்ட தமிழ் மொழியின் தலையாய ஆளுமைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் ஓர் ஆவேசம்தான் இந்தத் தமிழாற்றுப்படை.

பிந்திய செய்தி கமலஹாசன் சினிமாவில் தொடர்ந்து நடிப்பாராம் .... முந்தய செய்தி தவறாம்

வெப்துனியா: நடிகர் கமல்ஹாசன் இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை எனக்கூறி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வருகிற 21ம் தேதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை துவங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அன்று மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அவர் அறிமுகம் செய்ய உள்ளார்.
அதேபோல், தனது அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்திடம் அவர் நேரம் கேட்டுள்ளார். அநேகமாக, வருகிற 15ம் தேதி அவர் தேர்தல் ஆணையத்தில் தனது அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாலண்டைன் தின காதல் .... ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட காதலியை கரம் பிடித்த ....

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தனக்கு உறுதுணையாக இருந்தவரை கரம் பிடித்த பெண்மாலைமலர் :ஆசிட் வீச்சில் 80 சதவீத தீக்காயத்துடன் பார்வையையும் பறி கொடுத்த இளம் பெண்ணுக்கும் அவரது பாதுகாவலராக விளங்கிய வாலிபருக்கும் காதலர் தினமான இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. #valentineday புபனேஷ்வர்:< ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள ஜகத்பூரில் 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரமோதினி என்ற 17 வயது இளம் பெண் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசினர். அவர் கல்லூரிக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கும் போது இச்சம்பவம் நடந்தது. இதில் பிரமோதினி 80 சதவீத தீக்காயங்களுடன், கண் பார்வையையும் இழந்தார்.

பெப்சி கோலா CEO இந்திரா நூயி ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனராகிறார்

Special Correspondentஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனராக பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ. இந்திரா நூயி தேர்வு பெற்றுள்ளார். வரும் ஜூன் மாதம் இவர் பதவியேற்க உள்ளதாக ஐ.சி.சி. செய்தி வாரிய கூட்டத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தன்னாட்சி பெற்ற இயக்குனரை தேர்வு செய்வதற்கான வாரிய கூட்டம் நடந்தது. இதில் உலகளவில் சிறந்த பெண்மணியாக தேர்வு பெற்றவரும் பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான இந்திரா நுயி ஒரு மனதாக தேர்வு பெற்றார்.

சீறிப்பாய்ந்த வைரமுத்து ... தமிழாற்றுப்படை ... மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்க ...


ராஜா ஜி  :கவிப் பேரரசுக்கு வாழ்த்துகள் . காஞ்சி சங்கரனை ஓரண்டை இழுக்கும் கவிஞர் - தமிழால் அடிக்கிறார்.
மத நம்பிக்கையுள்ளோர் சொன்னார்கள் - சிவ பெருமான் தன் உடுக்கையில் ஒரு பக்கம் அடித்தான் சமஸ்கிருதம் பிறந்தது, மறு பக்கம் அடித்தான் தமிழ் பிறந்தது.
ஒரு மொழியை உயர்ந்ததென்றும், இன்னோரு மொழியை தாழ்ந்ததென்றும் நீங்கள் தானே சொன்னீர்கள்?
இரண்டும் சமம்தானே அப்படியானால் சிவ பெருமானையே நீங்கள் நிராகரிக்கிறீர்களா என்று பொங்கித் தீர்த்துவிட்டார்.
அரங்கம் அதிர்கிறது.
கரவொலி வின்னைப் பிளக்கிறது.
(தமிழை ஆண்டாள் என்று புகழ்ந்த போது கவிஞரை சந்திக்கு இழுத்தீர்களே!
சங்கரனை வைத்து தமிழ்த்தாயை அவமதித்தீர்களே - கேள்மின் இது தான் தமிழ், இவன் தான் தமிழன்.)தமிழாற்றுப்படை<

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

பிரம்மா குமாரிகள்! அடிமைகளாக்கி பணம் பறிக்கும் கும்பல் !Brahma Kumaris hidden doctrine.

All Non Followers Beware Stay Away from bk’s …bk are maniacs and you ebenezer just behaved in a same manner that cults and fake people behave you just said “just leave us alone” so who dont like bk. have no right to speak there mind and criticise bk.. Like or leave us alone!! This is typical cult behavior… You are the most dangerous cult the worst people i have ever seen…
https://hiddendoctrine.wordpress.com/2010/01/29/about-brahma-kumaris/

Sivasankaran Saravanan பிரம்மகுமாரிகள் என்ற அமைப்பு வள்ளுவர்கோட்டத்தில் லிங்க தரிசன கண்காட்சி ஒன்றை நடத்துகிறார்கள். அதிலே பாரதத்தின் வரலாறாக சில பேனர்களை காட்சிக்கு வைத்துள்ளனர். நாராயணன், கிருஷ்ணருடன் தொடங்குகிற அந்த வரலாற்றில் பிராமணர்கள் கலைகள் நிறைந்தவராக உள்ளனர். ராமர் தான் சத்ரிய வம்சத்தை ஆரம்பித்து வைக்கிறார். சீதையுடன் ராம ராஜ்யம் நடத்துகிறார் . ராவண ராஜ்யத்தில் கொடுமைகள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து கலியுகத்தில் கலையம்சம் ஏதுமற்ற சூத்திர சாதியினர் வருகிறார்கள். அதைத்தொடர்ந்து குற்றங்கள் பெருகுகின்றன! மகாபாரத வம்சத்தில் சிவனுடைய அன்பை பெற்ற பிராமணர்கள் தற்போது அமைதியை ஏற்படுத்திவருகிறார்கள்! அதுவும்போக சிவபரமாத்மா தான் ஏசு வாகவும், இப்ராகிமாகவும், புத்தராகவும் அவதரித்து முறையே கிறித்தவ, இஸ்லாமிய, பவுத்த மதங்களை பரப்புகிறார்..
;இலங்கையில் இந்த பிரம குமாரிகள் அமைப்பு  கிழக்கு மாகாணத்தில்  ஒரு இஸ்லாமிய வணக்கஸ் தலத்தை அபேஸ் பண்ணி  உள்ளது ...விபரங்கள்இதோ :

ராகுல் :பாஜகவின் தவறுகளால் இந்தியா தெற்கு ஆசியாவில் தனிமைபட்டுவிட்டது

tamilthehindu :நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி செய்த தவறுகளால், ஆசிய பிராந்தியத்தில் இந்தியா தனித்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான 3 நாள் தேர்தல் பிரசாரத்தை மக்களிடம் ஆசிர்வாதம் என்ற பெயரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். கர்நாடகத்தின் தென் பகுதிகளை மையமாக வைத்து இந்த பிரசாரத்தை ராகுல் காந்தி முன்னெடுத்தார்.
கலாபுர்கி நகரில் மக்கள் மத்தியில் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெளியுறவுக்கொள்கையில் பிரச்சினைகளை உருவாக்கிவிட்டது. இதனால் ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா தனித்துவிடப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய சீனா, ஆசிய பிராந்தியத்தில் மற்ற நாடுகளுடன் நெருங்கி வருகிறது.

திருநங்கை ஷானவி :என்னை கருணைக் கொலை செய்து விடுங்கள்

வெப்துனியா :தன்னை கருணைக் கொலை செய்து விடும்படி திருநங்கை ஒருவர் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த பொன்னுசாமி(29) என்பவர் கடந்த 2014ம் ஆண்டு பாலியல் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார். தனது பெயரை ஷானவி என மாற்றிக்கொண்டார். மேலும், விமான நிலையத்தில் பணி புரிய விரும்பிய ஷானவி அதற்கான பயிற்சிகளை பெற்றார்.
சென்னை ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். அந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஏர் இந்தியா கேபின் க்ரீவ் பதவிக்கு வந்த விளம்பரத்தை கண்டு பெண்கள் பிரிவில் விண்ணப்பித்துள்ளார்.

தாயை மருத்துவமனையில் சேர்த்த 5 வயது சிறுவன்: இறந்தது தெரியாமல் அருகே தூங்கிய சிறுவன் ... தெலுங்கனா

tamilthehindu :தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஓஸ்மானியா அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தாயை அனுமதித்த 5 வயது சிறுவன், சிறிது நேரத்துக்கு பின் அவர் இறந்தது அறியாமல் அவர் அருகே தூங்கியது பார்த்தவர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது.
ஹைதராபாத் நகரில் உள்ள ஓஸ்மானியா அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஒரு இளம் பெண்ணும், அவரின் மகன் 5 வயது மகனும் வந்தனர். அந்த இளம் பெண்ணுடன் வேறுயாரும் உதவிக்கு வரவில்லை.
மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்குச் சென்ற அந்தப் பெண் தன்னால் சுவாசிக்க சிரமமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரின் நிலையைக் கண்ட மருத்துவர்கள், அந்தப் பெண் இதயநோய் பிரச்சினையில் சிக்கி இருப்பதை அறிந்து உடனடியாக செயற்கை சுவாசத்துக்கு ஏற்பாடு செய்து, சிகிச்சை அளித்தனர்.

அதிமுகவினர் கை காட்டுபவர்களுக்கே அரசு வேலை ... அமைச்சர் செங்கோட்டையன் ஒப்புதல் வாக்குமூலம்! வழக்கு பாய்கிறது?

இளைஞர்களை மிரட்டும் செங்கோட்டையன்

மின்னம்பலம்: அதிமுக தொண்டர்கள் கைகாட்டுபவர்களுக்கே அரசு வேலை
என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது இளைஞர்களை மிரட்டும் செயல் என்று திமுக எம்.பி.கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 12) நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "அதிமுக தொண்டர்கள் கவலைப்படத் தேவையில்லை. இனி நீங்கள் கைகாட்டுபவர்களுக்கே பதவியும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். இதனை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்திலேயே பேசியுள்ளோம்" என்று பேசியிருந்தார்.
அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் நலத்திட்ட உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு சமீபத்தில் கூறியிருந்த நிலையில், அதுபோலவே செங்கோட்டையனும் பேசியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நான் சுகர் பேஷன்ட், ரவுடியல்ல: பினு

நான் சுகர் பேஷன்ட், ரவுடியல்ல: பினுமின்னம்பலம்: சென்னை போலீசில் சரணடைந்த ரவுடி பினு, ’நான் பெரிய ரவுடியல்ல, சுகர் பேஷன்ட்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்த வீடியோவைக் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பூந்தமல்லி அருகே வேலு என்பவரின் மெக்கானிக் செட்டில் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய ரவுடிகள் எனக் கூறப்படும் பினு, விக்னேஷ், கனகு ஆகியோர் தலைமறைவாயினர்.
கடந்த 6 நாட்களாகத் தீவிரமாகத் தேடப்பட்டுவந்த பினுவைச் சுட்டுப் பிடிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 13) காலை அம்பத்தூர் போலீசில் அவர் சரணடைந்தார்.