புதன், 14 பிப்ரவரி, 2018

சீறிப்பாய்ந்த வைரமுத்து ... தமிழாற்றுப்படை ... மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்க ...


ராஜா ஜி  :கவிப் பேரரசுக்கு வாழ்த்துகள் . காஞ்சி சங்கரனை ஓரண்டை இழுக்கும் கவிஞர் - தமிழால் அடிக்கிறார்.
மத நம்பிக்கையுள்ளோர் சொன்னார்கள் - சிவ பெருமான் தன் உடுக்கையில் ஒரு பக்கம் அடித்தான் சமஸ்கிருதம் பிறந்தது, மறு பக்கம் அடித்தான் தமிழ் பிறந்தது.
ஒரு மொழியை உயர்ந்ததென்றும், இன்னோரு மொழியை தாழ்ந்ததென்றும் நீங்கள் தானே சொன்னீர்கள்?
இரண்டும் சமம்தானே அப்படியானால் சிவ பெருமானையே நீங்கள் நிராகரிக்கிறீர்களா என்று பொங்கித் தீர்த்துவிட்டார்.
அரங்கம் அதிர்கிறது.
கரவொலி வின்னைப் பிளக்கிறது.
(தமிழை ஆண்டாள் என்று புகழ்ந்த போது கவிஞரை சந்திக்கு இழுத்தீர்களே!
சங்கரனை வைத்து தமிழ்த்தாயை அவமதித்தீர்களே - கேள்மின் இது தான் தமிழ், இவன் தான் தமிழன்.)தமிழாற்றுப்படை<

கருத்துகள் இல்லை: