வியாழன், 15 பிப்ரவரி, 2018

இஸ்ரேல் பிரதமர் மீது போலீசார் ஊழல் புகார்.... (கூடா நட்பு கேடாய் முடியும்?)

தினமலர் : ஜெருசலம்: ஊழல் செய்ததாக இஸ்ரேல் பிரதமர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இஸ்ரேல் போலீசார் பரிந்துரைத்துள்ளனர். இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெத்தன்யாகூ மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு பல முறை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இஸ்ரேல் பிரதமர் ஊழல் புகார் இந்நிலையில் நேற்று இஸ்ரேல் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேல் போலீசார் அந்நாட்டு அட்டர்னி ஜெனரலுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். அதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூ, ஹாலிவுட் திரைபட தயாரிப்பாளர் ஆர்னோன் மில்சரிடம் பரிசுப்பொருட்கள் வாங்கியது. ஆஸ்திரேலிய தொழிலதிபரிடம் ரூ. பல கோடி லஞ்சம் பெற்றது உள்ளிட்ட ஊழல் செய்ததற்கான ஆதாரம் உள்ளன. இது தொடர்பாக அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டினை . நெத்தன்யாகூ இதனை மறுத்துள்ளார்

கருத்துகள் இல்லை: