வியாழன், 17 நவம்பர், 2016

முடங்கிய அவைகள்:தலைவர்கள் உரை!


minnambalam.com :நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று புதன்கிழமை (16-11-2016)அன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கிய முதல் தினத்திலேயே, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பெரும் விவாதம் நடத்தியிருக்கின்றன. அதிகாரபூர்வமாக செய்தி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தகவலை தனியே வெளியிட்டது குறித்து, கூட்டு பாராளுமன்றக் கமிட்டி விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியுள்ளநிலையில், மாலை 6 மணி வரை தொடர்ந்து நடந்த விவாதத்தை அவையின் துணை சபாநாயகர் வியாழன் காலை 11 மணிக்கு ஒத்திவைத்தார். வியாழன் மதியம் இரண்டு மணிக்கு விவாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பிறகு, வியாழன் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

’டாஸ்மாக் வசூல் எல்லாம் வீட்டுக்கு வரணும்!’ - அமைச்சர் போட்ட உத்தரவு!

ஜெயலலிதாவின் உடல்நிலை, இடைத்தேர்தல் என, எல்லா விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது 500, 1000 ரூபாய் நோட்டுப் பிரச்னை. என்ன செய்வதெனத் தெரியாமல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள்.
மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவர் அந்த மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளரிடம் பேசியிருக்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக டாஸ்மாக்கில் வசூலாகும் பணத்தையெல்லாம் கொண்டுவந்து வீட்டில் கொடுத்துவிட்டு அதற்குப்பதிலாக ஆயிரம், ஐநூறு ரூபாய் பணத்தை வாங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். டாஸ்மாக் அதிகாரிகளும், அமைச்சர்கள் சொன்னபடி செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் மட்டும் பல கோடி ரூபாய் கடந்த ஒரு வாரத்தில் கைமாறியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இன்னும் சில அமைச்சர்கள், சென்னையில் உள்ள சில மார்வாடிகளிடம் பணத்தை மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு 30 சதவிகித கமிஷனில் அவர்கள் பணத்தை மாற்றித் தருகிறார்களாம். அதாவது, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் ரூ.70 ஆயிரம் திருப்பிக் கொடுப்பார்கள். சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான் அமைச்சர்களுக்கு இந்த மார்வாடிகளை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

கீழ்மட்டச் சந்தை திவால்: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு – 3

கௌதம சன்னா : கௌதம சன்னாஜப்பானிலிருந்து நாடு திரும்பிவிட்டார் மோடி. அவர் செய்துவிட்டுப் போன பேரழிவில் மக்களின் கூக்குரல் தம் காதுகளுக்கு எட்டும் தூரத்தில் அவர் இல்லை. அதனால் ஜப்பானில் அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் கண்டுக் கொள்ளவே இல்லை. அதுதான் அவருக்குத் தேவை. ஏனெனில் உலகம் முழுதும் அணு ஆற்றலுக்கு எதிரான போர்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது மோடி போன்ற கார்ப்ரேட் அனுதாபிகள் அணு ஆற்றல் முகவர்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு மோடி மேற்கொண்டிருக்கும் அணு ஆற்றல் ஒப்பந்தங்கள் 50லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. நீண்டகால அடிப்படையில் நிகழும் இந்தப் பணிக்களுக்கான பணம் இந்தியர்களின் தலையில் சுமத்தப்படும். மேலும் அதன் மூலம் இந்திய அதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும் கமிஷன் தொகையினை முடிந்தால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். இதுதான் ஊழலை ஒழிப்பவரின் லட்சணம். இவற்றில் வரும் தொகைகள் எங்கே போய் முடங்கும் என்பது பொருளாதாரப் புலிகளுக்கு வெளிச்சம்.

வாராக் கடன்களை வசூலிக்க ரகுராம் ராஜன் ஏன் தீவிரம் காட்டினார்?

அதானியின் துறைமுக கட்டுமானம், ஜிவிகே நிறுவனத்தின் ஆற்றல் துறை முதலீடு,கட்டுமானத் துறை முதலீடு, ரிலைன்சு நிறுவனத்தின் தொலைத்தொடர்பு, சாலைகள், ஆற்றல், நிதி சேவை போன்ற துறைகளில் முதலீடு செய்தது. உள்நாட்டு சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களுடனான போட்டிக்கும்,உள்கட்டுமான துறைககளில் முதலீடு செய்யவும்இந்திய வங்கிகள், இந்தியப் பெரு முதலாளிய வர்க்கத்திற்கு கடனை வாரிவழங்கின. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும்,இந்தக் கடன் வீதம் நானூறு மடங்கிற்கு அதிகரித்துள்ளது
அருண் நெடுஞ்செழியன்< 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரா நெருக்கடி, அதைத்தொடர்ந்து 2012-13 இல் ஸ்பெயின்,கிரீசில் ஏற்பட்ட நெருக்கடி தற்போது 2016 இல் வளர்ந்து வருகிற நாடுகளான சீனா, இந்தியா மற்றும் பிரேசிலை சுற்றி சுருக்குக் கயிறாக சுற்றி வளைதுள்ளது.
நெருக்கடியின் முதல் சுற்றானது, வளர்ந்த தொழில்மய நாடுகளில் துவங்கி அதன் இரண்டாம் சுற்று எம்ர்ஜிங் எகனாமி என சொல்லப்படுகிற ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளை முகாமிட்டுள்ளது.
ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமானது 3.5 விழுக்காடு அளவிற்கு மந்தமாக உள்ள சூழலில், விலக்காக சீனாவும் இந்தியாவும் 7 விழுகாட்டு அளவிற்கு வளர்ச்சி பெற்றுவருகிற நிலையில் நமது வாதம் முரண்பாடாகத் தெரிவது இயல்பே! இதை சற்று நெருங்கிப் பார்ப்போம்.

ஜெயலலிதா எதிர்த்த NEET தேர்வை அமைச்சர் பாண்டியராஜன் ஆதரிக்கிறார்! மாணவர்களுக்கு மரண அடி!

வா. மணிகண்டன் வா. மணிகண்டன்மாஃபா பாண்டியராஜன் தமிழக கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட போது சந்தோஷமாக இருந்தது. படிப்பாளி, விவரம் தெரிந்தவர், சுயமாக முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர் என்கிற நம்பிக்கையின் விளைவான சந்தோஷம் அது. ஆனால் தமிழக மாணவர்களின் தலையில் பெருங்கல்லைச் சுமந்து வைத்திருக்கிறார். மாநாடு ஒன்றுக்காக டெல்லி சென்றவர் ‘தமிழகத்தில் நீட் கட்டாயம் நடக்கும். மாணவர்களுக்கு பயிற்சியளிப்போம்’ என்று பேசிவிட்டு வந்திருக்கிறார். இதே நீட் தேர்வைத்தான் ஜெயலலிதா எதிர்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது ஏன் அமைச்சர் பாண்டியராஜன் குறுக்கே திரும்பிவிட்டார்? ஜெயலலிதா மருத்துவமனைக்குச் சென்றாலும் சென்றார்- தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் ஆகிறார்களா அல்லது மேலே இருந்து தண்டல்காரர் யாரோ ஆட்டி வைக்கிறாரா என்றே புரியவில்லை.  ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

குலாம் நபி அசாத்:நோட்டு செல்லாது என்பது மக்கள் மீது பாஜகவின் பயங்கரவாத தாக்குதல் போன்றது

500, 1000 ரூபாய் தடை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பான தகவல்கள் ஏற்கனவே அவர்களின் நட்பு தொழில் அதிபர்கள் மற்றும் பா.ஜனதா தலைவர்களுக்கு தெரியும்
புதுடெல்லி. மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில் மத்திய அரசின் தவறான கொள்கையை, உரி பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டு பேசியதால் கடும் மோதல் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பாராளுமன்றம் இதனால் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் 500, 1000 ரூபாய் விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. 500, 1000 ரூபாய் தடை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பான தகவல்கள் ஏற்கனவே அவர்களின் நட்பு தொழில் அதிபர்கள் மற்றும் பா.ஜனதா தலைவர்களுக்கு தெரியும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நோட்டு செல்லாது என்பது அம்பானி, அதானிக்குத் முன்பே தெரியும்- பாஜக எம்.எல்.ஏ. பரபரப்பு


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென பிரதமர் மோடி அறிவிக்கப்போவது அம்பானி, அதானி குழுமத்துக்கு முன்கூட்டியே தெரியுமென ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. பவானிசிங் ராஜ்வாட் பரபரப்பு கிளப்பியிருக்கிறார். பத்திரிகையாளர் ஒருவரிடம் பவானிசிங் இயல்பாகப் பேசும்போது, இத்தகவலை வெளிப்படுத்தினாராம். ஆனால் அதனை ரகசியமாக வீடியோ எடுத்துவிட்டாராம் அந்த பத்திரிக்கையாளர். இதையடுத்து பவானிசிங், அந்த வீடியோ உண்மையில்லை என மறுத்துவருவதாகக் கூறப்படுகிறது. சி.ஜீவாபாரதி நக்கீரன்.இன்

முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்து போலியானதா? அவரது கையெழுத்துதானா?

Image may contain: text ஆங்கிலம் என்றாலும் தமிழ் என்றாலும் நேர்கோட்டில் அமைந்திருப்பதுதான் முதல்வர் ஜெயலலிதா. கையெழுத்தின் தனித்துவம். ஆனால் இடைத்தேர்தலுக்கு வாக்கு கேட்டு அவர் பெயரில் வெளியான அறிக்கையில் இடம்பெற்றிருந்த கையெழுத்து தாறுமாறாக உள்ளது. நோய்வாய்ப்பட்டிருப்பதால், கையெழுத்தில் நடுக்கம் தெரிகிறதா என கிராஃபாலஜி (Graphology) எனப்படும் கையெழுத்து ஆய்வுகளில் வல்லுநர்களாக இருப்பவர்களிடம் கேட்டோம்.
“ஒருவருடைய கையெழுத்தில் நுண்ணிய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால் அதில் உள்ள எழுத்துகளின் தன்மை மாறாது. உடல்நிலை காரணமாக நடுக்கம் இருந்தாலும் எழுத்துகளின் வடிவம் மாறாது. முதல்வருடைய கையெழுத்து வலதுபுறம் சாய்ந்தபடி ஒரே நேர்க்கோட்டில் சீராக அமைந்திருக்கும்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளை வென்றது

 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய
பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. விசாகப்பட்டினத்தில் நேற்று (நவ.16) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 199 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக இந்திய வீரர் வேதா கிருஷ்ணமூர்த்தி 71 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது. சிறப்பாக பந்து வீசிய ராஜேஸ்வரி 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்  minnambalam.com

பெண்கள் தைரியமா வரவேண்டிய PUB! நானும் எத்தனை நாள்தான் நல்லவளாயே நடிக்கிறது?

‘நைட்லைஃப்’ நக்‌ஷத்ரா
பெரிய பெரிய அனுபவங்கள் எல்லாம் சின்னதாக முயற்சி செஞ்சு பார்க்கலாமேன்னுதான் ஆரம்பமாகும். வீட்ல இருந்து கிளம்பும்போது அப்படித்தான் புதுசா OLA ஷேர் யூஸ் பண்ணிப் பார்க்கலாம்ன்னு தோணுச்சு. கார் புக் பண்ணதும் ரெடியாகி, வீட்டைப் பூட்டிட்டு இறங்கும்போது வடிவேலுவோட பங்கு ஆட்டோதான் ஞாபகம் வந்தது. கோட்டூர்புரம்ல இருந்து R.A.Puram போகணும்னு கார் புக் பண்ணேன். இருங்க, உண்மையைச் சொல்லிடலாம். பேங்க் கியூல நின்னு காசு எடுக்க முடியல. அதனால, OLA Money போட்டு யூஸ் பண்ணிக்கலாம்னு பார்த்தேன். என்னைக்கு பேங்க் கிரவுடு குறையும்னு தெரியாததாலயும், சரி OLA ஷேர் யூஸ் பண்ணலாமேன்னு ஒரு திங்கிங்க்லயும் இந்த வேலையைப் பண்ணேன். நான்தான் முதல் பிக்-அப். கார்ல ஏறுனதுமே இடம் சொல்லிட்டேன். மறந்துட போறாருன்னு ரெண்டு தடவை சொன்னேன்.

டெல்லியில் நில அதிர்வு - ரிக்டரில் 4.2 ஆக பதிவு

தலைநகர் டெல்லி, குர்கான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. நில அதிர்வு ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியானா மாநிலத்தின் ரிவாரி மாவட்டத்தின் பாவால் பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது. நில அதிர்வை உணர்ந்த உடன் நிறைய பேர் டுவிட்டர் வலைதளத்தில் இதனை பதிவு செய்தனர். 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாலைமலர்.com

திருமண கொண்ட்டாட்டத்தில் சாத்வி தேவா தாகூர் துப்பாக்கியால் சுட்டு பெண் பலி ... கைது செய்யப்படவில்லை

திருமணத்தை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய பெண் சாமியார்: மணமகன் அத்தை பலி" சண்டிகர்: அரியானா மாநிலம் கர்னல் நகரில் நேற்று நடைபெற்ற திருமணம் ஒன்றிற்கு அப்பகுதியை சேர்ந்த சாத்வி தேவா தாகூர் என்ற பெண் சாமியார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். திருமண நிகழ்வில் மணமகனின் உறவினர்கள் நடனம் ஆடிக் கொண்டிருப்பதை பார்த்த அந்த பெண் சாமியார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தனது மகிழ்ச்சியை நடனமாடி வெளிப்படுத்தினார். இந்த துப்பாக்கி சுடும் கொண்டாட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களும் இணைந்து கொண்டனர். ஆனால் துப்பாக்கி குண்டுகள் தவறுதலாக அங்கு நடனமாடிக் கொண்டிருந்தவர்கள் மீது பட்டதில் மணமகனின் அத்தை பரிதாபமாக பலியானார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல்... ஜப்பானில் மோடி

மோடி_நிகழ்த்திய_பொருளாதாரப்_பேரழிவு!
கரன்சியில் நடத்திய நாடகம்..
ஜப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது. ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான்.
மோடி எதற்காக புதிய கரன்சிகளை அச்சிட்டு வெளியிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.. மக்களின் தேவைகளை பார்த்து அவற்றை தீர்ப்பதற்கு பதில் ,அவர்களின் தேவைகளை பேராசையாக மாற்றி தமது வெற்றியை பறித்துக் கொண்டதில் மோடிக்கு நிகர் மோடியே. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தைக் கொண்டு வந்து இந்தியர்கள் அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் பிரித்துக் கொடுக்கப்படும் என்று மோடி மக்களிடம் பேராசையைத் தூண்டினார்.

புதன், 16 நவம்பர், 2016

டொனால்ட் டிரம்ப் வெற்றி ? கேவலத்திற்கும் கழிசடைக்கும் இடையே நடந்த போட்டி? Donald Trump that the media doesn't want to show ?


னநாயகத்தின் பக்தர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர். இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த மாபெரும் தோல்வி என்கின்றனர் அமெரிக்கத் தெருக்களில் பேரணியாகச் செல்லும் மக்கள். அமெரிக்க முதலாளித்துவ பத்திரிகைகளோ திகைப்பில் ஆழ்ந்துள்ளன – நடந்து முடிந்த சம்பவங்களை நம்ப முடியாபமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதற்கெல்லாம் பொருள் விளக்கம் சொல்லும் அமெரிக்க அறிவுஜீவிகள் சொந்த நாட்டில் நடந்து முடிந்துள்ளவற்றுக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எதிர்காலத்தில் நிலைமையை எப்படிச் சமாளிப்பது, எந்தவிதமாக தங்களது நலன்களைக் காத்துக் கொள்வது என முதலாளி வர்க்கம் ஆலோசிக்கத் துவங்கி விட்டது. அமெரிக்காவின் அண்டை நாடுகள் வேறுவழியின்றி ’பொறுத்திருந்து’ பார்க்கப் போவதாக அறிவித்துள்ளன. தேர்தல் கருத்துக்கணிப்புப் புலிகளோ தங்கள் தலைகளை பூமிக்குள் புதைத்து விட்டு ஆசன வாயால் முனகிக் கொண்டுள்ளனர்

சிங்கூர் தீர்ப்பு .. நிலம் கிடைக்கும் .. ஆனால் மேலும் நிலம் பறிக்க அரசுக்கு உள்ள வாய்ப்பை நீதிமன்றம் தடுக்கவில்லை?

singur-struggleவினவு : மே.வங்கத்தின் சிங்கூரில் டாடாவின் நானோ கார் திட்டத்துக்காக விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை 12 வாரங்களுக்குள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டுமென கடந்த ஆகஸ்டு 31-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு சிங்கூர் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அவர்களுக்குத் திரும்பக் கிடைத்துள்ளபோதிலும், நாடு தழுவிய அளவில் முக்கியத்துவம் பெற்ற சிங்கூர் விவசாயிகளின் போராட்டம் எழுப்பிய மையமான கேள்விக்கு நீதித்துறை இதுவரை விடையளிக்கவில்லை. சிங்கூர் விவசாயிகளின் போராட்டமானது தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல்போயுள்ளதோடு, அப்போராட்டத்தைச் சட்டவாதத்தில் மூழ்கடிப்பதுதான் இப்போது நடந்துள்ளது.

500 கோடியில் திருமணம் முன்னாள் பாஜக அமைச்சர்+ சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியின் மகளுக்கு பெங்களூருவில் ..

உஷார் சித்து
பெங்களூரு: சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டி மகளுக்கு ரூ500 கோடியில் நடத்தி வைக்கப்பட்ட ஆடம்பர திருமணத்தில் கருப்பு பணத்தை ஒழிக்கப் போவதாக சூளுரைக்கும் பாஜக தலைவர்களும் கலந்து கொண்டனர். கருப்பு பண விவகாரத்தில் பாஜகவை சாடும் காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலை நடத்தி நாட்டுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்திய குற்றவாளி ஜனார்த்தன ரெட்டி. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டு அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. தற்போது ஜாமீனில் இருக்கிறார் ஜனார்த்தன ரெட்டி. இவரை இன்னமும் கட்சியில் இருந்து நீக்காமல் வைத்திருக்கிறது பாஜக.

கறுப்பு மற்றும் கள்ளப் பணம் நெருக்கடியிலிருந்து காப்பாற்றியதா? ஆம் கொஞ்சம் உண்மை இதில் இருக்கிறது!


கறுப்புப் பண பொருளாதரமும், கள்ளப்பணமும்தான் இந்தியப் பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து காப்பாற்றியிருக்கிறது என்னும்விதமாக அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரிடமிருந்து கருத்துகள் வெளியாகியிருக்கின்றன. நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விவாதத்தின்போது மிகத்தெளிவாக கறுப்புப் பணம் மற்றும் கள்ளப்பணம் தொடர்பான கண்ணோட்டத்தை முன்வைத்தார். அப்போது அவர், “கறுப்புப் பண பொருளாதாரத்தை ஒழிப்பது வேறு, கறுப்புப் பணத்தை ஒழிப்பது வேறு. தற்போதைய சூழ்நிலையில், வரிவிதிப்புக்கும் அபராதத்துக்கும் அரசின் நடவடிக்கைக்கும் அஞ்சி கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் அதை புதைத்தோ, தீயிலிட்டுக் கொளுத்தியோ அழித்துவிடுவார்கள். இது, கறுப்புப் பண ஒழிப்பு. எனில், இது கறுப்பு நோட்டுகளை அழிக்கும் நடவடிக்கைதான். கறுப்பு பணம் மீளப் போவதில்லை. அதேபோல் கறுப்பு பொருளாதாரம், ரூபாய் நோட்டில் வழியாக இயங்குவதில்லை. அதற்கு எத்தனையோ மாற்று வழிகள் இருக்கின்றன.

எடப்பாடி ஆசிபெற்ற அதிகாரி வீட்டில் அதிரடி ரெய்டு! ஓ.பி.எஸ். உத்தரவு! பன்னீர் - எடப்பாடி கழுத்தறுப்பு ஆரம்பம்?


தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக இருந்து ஒய்வு பெற்ற ஜெயராமனுக்கு சொந்தமான சென்னை வீட்டில் நேற்று(15/11/1016) லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் ஏராளனமான ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரொக்கப் பணமும் ஆவணங்களும் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற பொறியாளர் வீட்டிலேயே இவ்வளவு பணமும் ஆவணங்களும் சிக்கியுள்ளதால், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நோட்டு ஒழிப்பு: மம்தா தலைமையில் பேரணி!


500, 1000 ரூபாய் நோட்டுகளை திடீரென செல்லாக்காசாக அறிவித்த மத்திய அரசைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில், ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்தனர்.
முன்னதாக, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று மக்களவை கூடியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

மோடியின் அறிவிப்பில் மிகப் பெரிய ஊழல்: திருமாவளவன் குற்றச்சாட்டு

மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பைக் கண்டித்து விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 18 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“500, ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாளிலிருந்து ஏழை எளிய மக்கள் சொல்லவொண்ணா துன்பத்துக்கு ஆளாகிவருகின்றனர். மோடி அரசின் சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை இருபத்தைந்துபேர் உயிரிழந்துள்ளனர். தமது குழந்தைகளுக்கு உணவு தர முடியவில்லையே என்ற கவலையில் பெண்கள் தூக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டுள்ளனர். ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வரிசையில் நின்ற முதியவர்கள் அங்கேயே மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளனர். ஏடிஎம்கள் செயல்படவில்லை; வங்கிகளிலும் பணம் இல்லை. தமது சொந்தப் பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் அல்லல்படுகின்றனர். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தன் உயிருக்கு ஆபத்து என நாடகமாடுகிறார் பிரதமர் மோடி.

சூரத் தொழிலதிபர் ரூ. 6000 கோடி ஒப்படைத்த செய்தி பொய்! மோடிக்கு தங்க கோர்ட் பரிசளித்த அல்லக்கை இவன்தான்~

குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்தவர் லால்ஜிபாய் படேல். வைர
வியாபாரியான இவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பில் பிரதமர் மோடி அணிந்திருந்த சூட்டை பரிசளித்தவர். ஒவ்வொரு தீபாவளியின் போதும் தனது ஊழியர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை அளித்து செய்தியில் இடம்பெறுபவர். இந்நிலையில் பிரதமரின் ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறும் அறிவிப்பின் பின்னணியில் தன்னிடமிருந்த கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் கோடியை அரசிடம் ஒப்படைத்ததாக சமூக ஊடகங்களில் வைரலாக செய்தி பரவியது. இதை ஊடகங்களும் செய்தியாக்கின. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என லால்ஜிபாய் விளக்கம் அளித்திருக்கிறார். thetimestamil.com

6 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் ; பெரு நிறுவனங்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எப்போது மிஸ்டர் மோடி ?

15049808_10154631753129400_133119648_n.jpgஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாதவை என்று அறிவித்ததன் மூலம் இந்தியாவில் புரட்சியை தொடங்கியிருக்கிறார் மோடி என்று ஊடகங்கள் பாராட்டி தள்ளிகொண்டு இருக்கின்றன.
அது உண்மையா என்று பார்த்தால், சந்தேகமே ஏற்படுகிறது.
சில கணக்குகளை கீழே பார்க்கலாம்.
இந்திய வங்கிகளில் வராமல் இருக்கும் கடன் தொகை கிட்டத்தட்ட ஆறு லட்சம் கோடிகளை எட்டி இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் உயிர் கிட்டத்தட்ட ஊசலாடி கொண்டிருக்கிறது. மிகப்பெரும் தொகைகளை வங்கிகளுக்கு அளிக்காவிட்டால், வங்கிகள் திவாலாவதை தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
“கடன் தர நிர்ணய நிறுவனமான (ஒரு நிறு­வ­னத்தின் செயல்­பாடு, நிதி­யா­தாரம் உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­களை ஆராய்ந்து, அந்­நி­று­வ­னத்தின் கடன் தகுதி குறித்து, சாத­க­மான அல்­லது பாத­க­மான மதிப்­பீட்டை அளிக்கும் நிறுவனம் ) மூடிஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “இந்திய வங்கிகளுக்கு,  ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மூலதனம்  என்பது உடனடித்தேவை”யாக இருப்பதாக, குறிப்பிட்டிருந்தது

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் பண பரிமாற்றம்!

மதுரை பழங்காநத்தூரில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாளராக இருப்பவர் மாரிமுத்து.   பேருந்து நடத்துனர்கள் கொடுக்கும் கலெக்‌ஷன் தொகை ஒருநாளைக்கு 10 முதல் 13 லட்சம் வரும்.  நடத்துனர்கள் 100, 50, 20, 10, சில்லறை என கொடுக்கிறார்கள்.  ஆனால், பொன்மேனியில் உள்ள  ஐஓபி வங்கியில் செலுத்தும்போது  500, 1000 மாக செலுத்துகிறார் மாரிமுத்து.  இதை தெரிந்துகொண்ட நடத்துனர்கள், ஓட்டுநர்கள் அமைச்சர் செல்லூர்ராஜூக்கு இந்த மாரிமுத்து வேண்டப்பட்டவர் என்பதால் அவருக்குத்தான் பண மாற்றம் செய்து தருவதாக குற்றம் சாட்டி, இன்று மாலையில் பேருந்தை இயக்கமாட்டோம் என்று கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்று  மாரிமுத்து கேட்டுக்கொண்டதற்கு பின்னர் பேருந்துகள் இயக்கப்பட்டன- மதுரை ஷாகுல்  நக்கீரன்.இன்

Interrogating India.... Beware of Facism !



அந்நிய முதலீடாக வருவது... அம்பானி அதானி நத்தம் விசுவநாதன் பணம்தான் .. கருப்பாக போயி வெள்ளையாக வருகிறது!


private_bahamas_island_large_1ந்த பார்ட்டிசிபேட்டரி நோட்டு என்பதெல்லாம், ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதிகள் பணம் போடுவதற்கான வழி என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. மோடி வெளிநாடுகளுக்குச் சென்று அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக நிறைய பேசுகிறார். அந்நிய முதலீடுகள் என்று இந்தியாவுக்கு வருகின்ற முதலீடுகளின் கணக்கீட்டின்படி, அதிகபட்சமாக இந்தியாவில் முதலீடு செய்திருப்பது அமெரிக்காவோ, பிரான்ஸோ, ஜெர்மனியோ பிரிட்டனோ அல்ல, இந்துமாக்கடலில் அமைந்துள்ள மொரீசியஸ் என்ற குட்டித்தீவு. மிஞ்சிப்போனால் 12 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நாடு இது. அந்த மொரீசியஸ் தீவு சுமார் 40%-க்கும் மேலான அந்நிய முதலீட்டை இந்தியாவில் போட்டுள்ளது. இதுபோன்று கேமன் தீவுகள் உள்ளிட்ட பல தீவுகள் உள்ளன.
இந்தத் தீவு நாடுகள் இவ்வளவு பணத்தை முதலீடு செய்ய எப்படி முடிகிறது?  யாருடைய பணம் அது? அந்தப் பணமெல்லாம் இந்தியத் தரகு முதலாளிகளின் கருப்புப் பணம். இங்கிருந்து பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தி பலப்பல நாடுகளைச் சுற்றி, மொரீசியஸ் சென்று இறுதியில் அந்நிய முதலீடாக இந்தியாவிற்குள் திரும்பி வருகிறது. இப்படி இந்தியா முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய கருப்புப் பணமானது ஜீவாத்மா என்றால், உலக நாடுகளில் உள்ள கருப்புப் பணம் பரமாத்மா போன்றது. பாஜக-வினருக்கு அவர்கள் மொழியில் புரியும்படியாகச் சொல்வதாக இருந்தால் ஜீவாத்மா, பரமாத்மாவில் கலக்கிறது. தேசிய சாக்கடை சர்வதேசிய சாக்கடையில் கலக்கிறது. அதற்குப்பிறகு மொரீசியஸ் வழியாக இந்தியாவிற்குள் அது நுழையும் போது புனித கங்கையாகிறது. அதாவது அந்நிய முதலீடாகிறது.