
minnambalam.com :நாடாளுமன்றத்தின்
குளிர்கால கூட்டத்தொடர் நேற்று புதன்கிழமை (16-11-2016)அன்று தொடங்கியது.
கூட்டம் தொடங்கிய முதல் தினத்திலேயே, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக
எதிர்க்கட்சிகள் பெரும் விவாதம் நடத்தியிருக்கின்றன. அதிகாரபூர்வமாக
செய்தி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும்
தகவலை தனியே வெளியிட்டது குறித்து, கூட்டு பாராளுமன்றக் கமிட்டி விசாரணை
நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியுள்ளநிலையில், மாலை 6 மணி வரை
தொடர்ந்து நடந்த விவாதத்தை அவையின் துணை சபாநாயகர் வியாழன் காலை 11 மணிக்கு
ஒத்திவைத்தார். வியாழன் மதியம் இரண்டு மணிக்கு விவாதம் தொடங்கும் என
அறிவிக்கப்பட்டது. பிறகு, வியாழன் முழுவதும் அவை
ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.















