புதன், 3 ஜூலை, 2013

பா.ம.க.,வினர் மீது 1,000 வழக்குகள் ! பொது சொத்து சேதம்

சென்னை: பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பாக, பா.ம.க.,வினர் மீது, ஆயிரத்துக்கும் மேலான வழக்குகள் போடப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் உள்ள, குரு எம்.எல்.ஏ., பஸ் உடைப்பு வழக்கில் நேற்று நேரில் ஆஜரானார்.சென்னையை அடுத்த, மாமல்லபுரத்தில், ஏப்., 25ம் தேதி நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழாவிற்குச் சென்றோருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் மரக்காணத்தில் மோதல் நடந்தது. இதில், போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து, வட மாவட்டங்களில், வன்முறை சம்பவங்கள் நடந்தன. 800க்கும் மேலான அரசு, தனியார் பஸ்கள் நொறுக்கப்பட்டன; 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன; மூவர் இறந்தனர்.

செவ்வாய், 2 ஜூலை, 2013

வடிவேலு டைரக்ட் பண்ண போகிறாராம் ! அடுத்த பாக்கியராஜ் வருகிறார் பராக் !

ஆகா ஓகோ என்று மீடியாக்களுக்கு செய்தி கொடுக்கப்பட்டு தொடங்கப்பட்ட
வடிவேலுவின் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படம் ஆல்மோஸ்ட் ட்ராப்ட் என்று செய்தி அடிபடுவது படத்துக்கு நெகட்டிவ் இமேஜை கொடுக்கும் என்பதை புரிந்து கொண்டுள்ள தயாரிப்பு நிறுவனம், அதை மாற்ற படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது.
தயாரிப்பு நிறுவனத்துக்கு வேண்டியதெல்லாம், வைகைப் புயலும், டைரக்டர் யுவராஜும் சிரித்துப் பேசியபடி ஒரு நாளாவது ஷூட்டிங் நடத்த வேண்டும். அதன் போட்டோக்களை எடுத்து மீடியாவில் கொடுத்து ‘பட வேலைகள் ஷோராக தொடங்கிருச்சு’ என்று காட்டணும்.

சுமங்கலித் திட்டம் பெண்களுக்கு உண்மையில் நன்மை அளிக்கிறதா ? இல்லை

சுமங்களித் திட்டத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக் காமல் முதலாளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது என குற்றம் சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை. அவினாசி சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையமும், புதுக்கோட்டை குடிமை சமூக அமைப்புகளும் இணைந்து சுமங்கலி திட்டப் பிரச்சினைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தை புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமையன்று நடத்தியது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் பேசியபோது, ’’பொதுவாக பெண்களின் வளர்ச்சிக்கு ஆணாதிக்கமும், மூடநம்பிக்கையும் பெரும் தடையாக இருக்கிறது. ஏழை, எளிய உழைக்கும் பெண்களை வறுமையும், அறியாமையும் சேர்த்து வாட்டுகிறது. இதைப் பயன்படுத்தி திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் சுமங்களித் திட்டம் என்கிற பெயரில் ஏராளமான இளம் பெண்கள் பலவழிகளில் சுரண்டப்படுகின்றனர்.

100 கோடி குவித்த கம்பவுண்டர் மத்திய அரசின் விருது பெற்றவர்

He is just another hospital compounder, but then again, as this raid reveals Mahesh Chand Sharma is also a billionaire with assets worth more than a whopping Rs. 100 crores. After months of tracking him, the Anti-Corruption Bureau finally caught him red-handed while accepting a bribe of 5 lakh.

 ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங் மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வந்தவர் மகேஷ் சந்த் சர்மா. நர்சிங் கவுன்சில் ஆலோசகராகவும் இவர் பணியாற்றி வந்தார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு பல புகார்கள் வந்தன. கடந்த சில மாதங்களாக இவரது நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் நர்சிங் கல்லூரி உரிமையாளரிடமிருந்து ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது மனைவி பெயரில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது. இது தவிர 25க்கும் மேற்பட்ட நர்சிங் கல்லூரிகளில் இவர் பங்குதாரராக இருப்பதும் தெரியவந்துள்ளது. நர்சிங் கல்லூரிகள், மருத்துவமனை, ரிசார்ட், ஜெய்ப்பூரில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் என பல இடங்களில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இவர் சேர்த்துள்ள சொத்தின் மதிப்பு ரூ. 100 கோடியை தாண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை டிஐஜி கோவிந்த் நாராயண் புரோகித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சர்மாவின் சொத்துக்களை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

The Hindu ஆசிரியர் சித்தார்த் வரதராஜனுக்கு கைது வாரன்ட்! விஸ்வரூபம் விவகாரம்

சென்னை: விஸ்வரூபம் படம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு கற்பிக்கும் வகையில் கட்டுரை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தி இந்து நாளிதழ் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனை கைது செய்யுமாறு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முஸ்லீம்களை அவமதிக்கும் காட்சிகளை நீக்கும்வரை கமல்ஹாஸன் நடித்த விஸ்வரூபம் படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்தது. இது குறித்த தி இந்து நாளிதழ் வெளியிட்ட கட்டுரையொன்றில், திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கையை குறிப்பிட்டிருந்தது. இந்தக் கட்டுரை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும், அவர் மீது அவதூறு கற்பிப்பதாகவும் அமைந்ததாகக் கூறி தமிழக அரசு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நீரா ராடியா உரையாடலை ஆதாரமாக்க ஆ. ராசா கடும் எதிர்ப்பு!

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை ஒரு ஆதாரமாக பதிவு செய்ய முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கில் வரும் 9-ந் தேதி மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சிடிக்களை ஆராய குழு ஒன்று உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது. 6 பேர் கொண்ட குழு ஒன்றும் இந்த சிடிக்களை ஆராய்ந்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மொத்தம் உள்ள 5,800 உரையாடல்களில் 62 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பானவை என்று அரசு வழக்கறிஞர் லலித் கடந்த வார விசாரணையின் போது கூறியிருந்தார். இந்த உரையாடல்களையே ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒரு ஆதாரமாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் டாடா குழுமத்தின் சார்பில் கடந்த வாரம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது நீரா ராடியா உரையாடல்களை இந்த வழக்கில் ஆதாரமாக பயன்படுத்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் 9-ந் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதே நாளில் தொழிலதிபர் அனில் அம்பானியை சாட்சியமாக விசாரிக்கக் கோரும் சிபிஐ மனு மீதும் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

பாகிஸ்தானில் மழையில் நடனமாடிய 2 இளம்பெண்களும் தாயும் சுட்டுக்கொலை! Teenage Pakistani girls shot dead in honour killing for dancing in rain.

மழையை கண்ட ஆனந்தத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் போல ‘தந்தான தந்தான தந்தான தனனே..’ என்று துள்ளி ஆடிய சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் சுட்டுக்கொன்ற வெறிச்செயல், பெண்ணியக்க வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மெலிதான தூரல் மழைக்கு இடையில் பாகிஸ்தானின் சிலாஸ் பகுதியை சேர்ந்த நூர் ஷேசா(16), நூர் பஸ்ரா(15) ஆகிய சகோதரிகள் சில சிறுவர் சிறுமிகளுடன் துள்ளி நடனமாடும் காட்சி சமீபத்தில் இணையதளங்களில் உலா வந்தன. உலகெங்கிலும் வாழும் ஆயிரக்கணக்கானோர் இந்த படப்பதிவை கண்டு மகிழ்ந்தனர். இந்நிலையில், இவர்களின் வீட்டுக்கு வந்த 5 பேர் காட்டு மிராண்டித் தனமாக அந்த பெண்கள் இருவரையும் அவர்களின் தாயார் நோஷரா என்பவரையும் ஈவிரக்கமற்ற அந்த பழமைவாத கும்பல் சுட்டுக்கொன்றது. குடும்ப கவுரவத்தை குலைத்ததாக கருதிய தனது பங்காளிதான் கூலிப்படையை ஏவி தங்கைகளையும், தாயையும் சுட்டுக் கொன்றதாக பலியான பெண்களின் அண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார் இதனால் தலைமறைவாக இருக்கும் குத்தோர் என்ற பழமைவாதியையும், இந்த படுகொலையை செய்த 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Mumbai 4 லாரிகளில் ரூ.250 கோடி பறிமுதல் ! 2,50 crore seized from four trucks திரைப்படங்களில் வருவதை விட மகா ஊழல்

Mumbai: The Income Tax Department and National Investigation Agency personnel on Monday night seized cash worth Rs 250 crore and gold from four trucks here and detained 47 people.
The joint operation by more than 100 officers was carried out at around 9 pm, when the four trucks reached outside the Mumbai Central station to unload the suitcases.
Those detained with around 150 suitcases of cash are being grilled. Gold and jewellery have also been seized, added reports.

The NIA sleuths got information about the transfer of cash and gold from the biggest unofficial market of Angadias, carriers of cash and gems. 
மும்பையில் 4 லாரிகளில் இருந்து ரூ.250 ரொக்கத்தை வருமானவரித் துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்தனர். மும்பை மத்திய ரயில் நிலையத்திற்கு வெளியே 4 லாரிகளில் இருந்து ரூ.2,500 கோடி ரொக்கத்தை வருமானவரித்துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று இரவு பறிமுதல் செய்தனர். மொத்தம் 150 சூட்கேஸ்களில் பணம் இருந்தது. ரொக்கம் தவிர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பணம் மற்றும் நகைகள் குஜராத் ரயிலில் பெயர் தெரியாத இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருந்தன. இந்த சம்பவம் குறித்து இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு மும்பை பால்லர்ட் எஸ்டேட்டில் உள்ள சிந்தியா ஹவுஸ் கட்டிடத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் எண்ணப்பட்டது. சிந்தியா ஹவுஸில் பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.i

யாமி கோபம் ! சொந்த கதையில் பூர்ணா நடிப்பதா ?

சென்னை:பூர்ணா நடித்த வேடத்தை ஏற்க மறுத்தார் யாமி. ராதா மோகன்
இயக்கிய ‘கவுரவம்‘ படத்தில் அறிமுகமானவர் யாமி கவுதம். பல்வேறு இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தபோது பேய் பற்றிய திகில் அனுபவத்தை எதிர்கொண்டு பயந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவத்தை மையமாக கொண்டு ‘அவ்னு என்ற பெயரில் தெலுங்கு படத்தை இயக்கினார் ரவிபாபு. பூர்ணா நடித்திருந்தார். இப்படம் ஹிட்டானது. இதை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்த இயக்குனர் யாமி கவுதம் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தார். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது நடிக்க மறுத்துவிட்டார். இதுபற்றி இயக்குனர் கூறும்போது, ‘இந்த கதாபாத்திரத்தில் நடிக்க யாமிக்கு விருப்பம் இல்லை. எனவே அவரை வற்புறுத்தவில்லை. இது எந்தவிதத்திலும் கதையை பாதிக்காது. இந்த வேடத்துக்கு மற்றொரு ஹீரோயினை எளிதாக என்னால் தேர்வு செய்ய முடியும் என்றார். யாமியின் சொந்த அனுபவ கதையான இதில் பூர்ணா நடித்தது அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாலேயே இந்தியில் அவர் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. tamilmurasu.org

பாமகவிடம் கலவர சேதம் அறவிட விசாரணை ஆரம்பம் !

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில், வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, மரக்காணம் பகுதி வழியாக வாகனங்களில் வந்த பா.ம.க., வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், மரக்காணம் காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், உயிரிழப்பும், ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பஸ்கள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து டாக்டர் ராமதாஸ் உள்பட பா.ம.க. தலைவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வட மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் கல்வீச்சில் சேதம் அடைந்ததாக கூறப்பட்டது. 10 பஸ்கள், 2 வேன்கள், 35 மரங்கள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டன. 150-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.

பெண்களில் 40 சதவீதத்தினர் கணவரால் கொல்லப்படுகின்றனர் ! W.H.O அதிர்ச்சி தகவல்

லண்டன்:உலகம் முழுவதும் குடும்பத்தினரின் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் 3 ல் ஒருவர் கொல்லப்படுவதாக உலக சுகாதார நிறுவனம்
அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவன இயக்குனர் மார்கரெட் சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:உலகம் முழுவதும் வன்முறைக்கு இலக்காகும் பெண்களில் 40 சதவீதம் பேர் தங்களது கணவன்களால் கொல்லப்படுகின்றனர். வெளி நபர்களை விட அதிகமாக தங்களது கணவன்களால் 7 சதவீதம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். 1983 முதல் 2010 வரை நடத்தப்பட்ட ஆய்வில் 30 சதவீதம் பெண்கள் குடும்பங்களுக்குள் நடைபெறும் வன்முறை மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 37 சதவீதம் பெண்களும், தென் அமெரிக்க நாடுகளில் 30 சதவீதம் பேரும், ஐரோப்பா, ஆசிய நாடுகளில் 25 சதவீதம் பெண்களும் இது போல் குடும்ப வன்முறைகளுக்கு இலக்காகின்றனர். இவற்றில் 86 நாடுகளில் ஆய்வு நடத்தியதில் 15 வயதிற்கும் குறைவான சிறுமிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் வரதட்சணை, காதல் போன்ற காரணங்களால் பெண்கள் கௌரவ கொலைக்கும் ஆளாகின்றனர்.

திவ்யா: தாயாருடன் செல்கிறேன் தாயார் சம்மதித்தால் கணவருடன் வாழ விரும்புகிறேன்

சென்னை: தர்மபுரி மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் தலித் மக்கள் பெரும் தாக்குதலுக்குள்ளாக வித்திட்ட காதல் திருமணம் புரிந்து கொண்ட திவ்யா, தனது தாயாருடனேயே இருக்க விரும்புவதாகவும், அதேசமயம், தனது தாயார் அனுமதித்தால், தனது காதல் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த முறை உயர்நீதிமன்றம் வந்தபோது பெரும் நெருக்குதலுக்குள்ளாக்கப்பட்டார் திவ்யா என்ற பரபரப்பு பேச்சு அடிபட்டது. அதை உறுதிப்படுத்துவது போல, தான் தனது கணவருடன் செல்ல விரும்புவதாக மட்டும் கூறி விட்டு கண்ணீர் மல்க தனது தாயாருடன் கிளம்பிப் போனார் திவ்யா. ஆனால் நேற்று வழக்கு விசாரணையின்போது தனது தாயார் விரும்பினால், அனுமதித்தால் தனது காதல் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

திங்கள், 1 ஜூலை, 2013

இலங்கை அகதி பெண்ணை Q branch போலிஸ் 9 மாதமாக பாலியல் பலாத்காரம்

 மகளை பார்க்க சென்ற என்னை க்யூ பிரிவு பிரபாகரன் கன்னத்தில் அறைந்தார். இப்படியாக 9 மாதங்களாக என் மகளை சிவஈஸ்வரி வீட்டில் வைத்து பிரபாகரன் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்
திருச்சியில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இளம் பெண்ணை 9 மாதமாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக க்யூ பிரிவு பொலிஸ் மீது தமிழக பொலிஸ்மா அதிபரிடம் புகார் அளிக்கப்பட்டுளளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 530 வீடுகளில் 1,470 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இலங்கை அகதிகள் முகாம் என்பதால் இதன் கண்காணிப்பை க்யூ பிரிவு பொலிசார் மேற்கொண்டுள்ளனர். இந்த பணியில் க்யூ பொலிஸ் பிரிவு பிரபாகரன் ஈடுபட்டு வந்தார். இந்த முகாமில் விஜயகுமார் மற்றும் அவரது மகள் ராதிகா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). ஆகியோர் வசித்து வருகிறார்கள். இந்த விஜயகுமார் தமிழக டிஜிபியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அவர் மனுவில் கூறியிருப்பதாவது, என் மனைவி இறந்ததையடுத்து வயதுக்கு வந்த மகளை பார்த்துக் கொள்வதில் மிகவும் சிரமமாக இருந்ததால் இலங்கையில் உள்ள உறவினரின் வீட்டுக்கு என் மகள் ராதிகாவை அனுப்பி வைக்க முடிவு செய்தேன்.

கலைஞர் : திருநங்கைகளுக்கு அவமானம் இளைக்கும் மத்திய மாநில அரசுகள்


மூன்றாவது பாலினத்வராகிய
திருநங்கையினரை 9 என்ற எண் குறியிட்டு அவமானப்படுத்த வேண்டாம் என்று திமுக தலைவர் கலைஞர்
கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியா முழுவதும் ஆறாவது பொரு ளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் பெயர், தொழில், இருப் பிடம் போன்ற எல்லா விவரங்களையும் அதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் தற்போது வழங்கப்பட் டுள்ளதாக புகார்கள் கூறப்படுகின்றன.
இந்தப் பிரச்சினை கடந்த சில ஆண்டு காலமாக திருநங்கையர்களுக்கு இருந்து வருகிறது. திமு கழக ஆட்சியிலே இதே பிரச்சினை எழுப்பப்பட்டபோது, திருநங் கையர்கள் மூன்றாவது பாலினம் என்பதைக் குறிப்பிடும் வகையில் அந்தப் படிவத்தில் ஆண்/பெண் என்பதற்கு எவ்வாறு M/F (Male/Female) என்று அச் சிடப்பட்டிருப்பதைப் போல, திருநங்கை யர்களைக் குறிக்கும் வகையில் T (Transgender) என்ற எழுத்து குறிப்பிடப் பட்டது.
முதல் முதலில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபற்றி அப்போதே 16.3.2008 தேதியில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ், “Third Sex gets its due in T.N. - Karuna Govt. is Country’s First to issue Ration cards with “T” as Gender”  என்ற தலைப்பில் பெரிதாக எழுதியிருந்தது.

திமுக அணியில் தேமுதிகவை இணைக்க காங்கிரஸ் மும்முரம்? விஜயகாந்த் தனித்து போட்டியிட தயக்கம் ?

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்தியிருக்கும் காங்கிரஸ், தேமுதிகவையும் இதே அணியில் இணைத்துவிட மும்முரம் காட்டுவதாக தெரிகிறது. ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸின் ஆதரவை திமுகவும் தேமுதிகவும் கோரியிருந்தன. ஒருவழியாக காங்கிரஸ் மேலிடம் திமுகவை ஆதரிப்பதாக அறிவித்தது. இதன் மூலம் லோக்சபா தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்து கொண்டிருக்கிறது. இருப்பினும் கைவிட்ட தேமுதிகவை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளையும் காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உங்களை நம்பித்தானே களத்தில் இறங்கினோம்..காலைவாரிவிட்டீர்களே? என்ற கோபத்தில் இருக்கிறாராம் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதற்கு பதிலாக லோக்சபா தேர்தலில் திமுகவுடன் இணைந்து களம் இறங்குவோம் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறதாம். சென்னைக்கு வருகை தந்திருந்த காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடமும் காங்கிரசார் இதே கருத்தை வலியுறுத்தி இருக்கின்றனர். அப்போது செய்தியாளர்கள் முகுல் வாஸ்னிக்கிடம், விஜயகாந்தை ஏமாற்றிவிட்டீர்களா என்று கேட்டதற்கு, அடிப்படை ஆதாரமற்ற கருத்து என்று கூறியதுடன் நடைமுறையில் அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் இழைத்த இந்துத்துவ புனிதர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி

சியாமா பிரசாத் முகர்ஜிபாரத மாதாவை பாசத்துடன் உச்சிமோரும் தேசபக்திக்கு ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்தவர்கள் போல சங்க பரிவாரங்கள் காட்டிக் கொள்வதுண்டு. ஆனால் இது அப்பட்டமான வரலாற்று மோசடி என்பதற்கு ஆங்கிலேயர் காலம் முதல் வரலாற்றின் பக்கங்களில் ஆதாரங்கள் நிரம்பி வழிகின்றன. இன்றைக்கு அமெரிக்க கூஜாக்களாக இருக்கும் இந்துமதவெறியர்கள் 47-க்கு முன்னர் ஆங்கிலேயரது கூஜாக்களாக அடியாள் வேலை பார்த்து வந்தனர். இது தொடர்பாக ஏற்கனவே சில கட்டுரைகளை வினவில் வெளியிட்டிருக்கிறோம். சமீபத்திய அத்வானி – மோடி அதிகாரச் சண்டையின் போது வயிற்று வலியால் துடித்த பீஷ்ம பிதாமகர் அத்வானி புலம்பியது நினைவிருக்கிறதா? சியாம் பிரசாத் முகர்ஜி போன்ற தலைவர்கள் ஆரம்பித்து வைத்த பாஜக இன்று சுய மோக தலைவர்களால் சீர்குலைந்து வருகிறது என்று தனது வயிற்று வலிக்கு காரணம் சொன்னார் அத்வானி. ஆனால் அத்வானி கொண்டாடும் இந்த சியாம் பிரசாத் முகர்ஜி ஒரு அப்பட்டமான ஏகாதிபத்திய அடிமை என்பதை திரைகிழித்து காட்டுகிறது இந்தக் கட்டுரை. பொய்களாலும், மதவெறியாலும் வரலாற்றை மாற்ற நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் யோக்கியதையை படியுங்கள், பகிருங்கள்!

World War Z – மற்றும் ஹாலிவுட்டின் அட்டக் கத்திகளும்

வே.மதிமாறன்
ஹாலிவுட் படங்கள் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடைய வளர்ச்சியடையComputer Graphics (CG) வந்ததற்குப் பிறகு மிகப் பெருபான்மையான ஹாலிவுட் படங்கள் ‘விந்தை’ காட்டுகிற தன்மைக்கு மாறியிருக்கிறது. பார்வையாளனை முட்டாளாக கருதுகிற முறை அதிகமாகி இருக்கிறது.
அதோட நம்பகத்தன்மையை அது இழந்துக்கிட்டு வருது. குறிப்பாக
இன்றைய அதி நவீன தொழில்நுட்ப சினிமாவாக இருக்கிற ஹாலிவுட் படங்கள் எவ்வளவு பிரம்மாண்டமான காட்சிகளை CG யில் உருவாக்கினாலும், 1959 ஆம் ஆண்டு வெளிவந்த Ben Hur  படத்தில் வரும் chariot race சை வெல்ல முடியவில்லை. காரணம் அதன் நம்பகத் தன்மை. Ben Hur - பிரம்மாண்டத்தின் உன்னதம். மிகைப்படுத்தப்பட்ட சில சம்பவங்களோடு திரைக்கதை இருந்தாலும் அது காட்சியாக்கப்பட்ட விதம் அதன் கேமரா கோணங்கள் முழுக்க முழுக்க மனிதர்களாலே செய்யப்பட்டது. அதுதான் இயந்திரங்களால் வெல்ல முடியாத பிரம்மாண்ட அழகிற்கு காரணம்.
ஒரு கீ போர்டு எழுப்புகிற வயலின் ஓசைக்கும், ஒரு வயலின் மேதை வாசிக்கிற  இசைக்கும் வித்தியாசம் உண்டு. அந்த வித்தியாசம் உணர்வுகளை உருக்குகிற உன்னதம். Ben Hur வயலின் மேதையால் வாசிக்கப்பட்ட இசை.

ஒன்இந்தியா இணையதளத்துக்கு சிறந்த வெப் மீடியா விருது

பெங்களூர்: ஒன்இந்தியா இணையதளத்துக்கு ஆண்டின் சிறந்த வெப் மீடியா விருது கிடைத்துள்ளது. டெல்லியில் உள்ள மீடியா மற்றும் செயற்கைக் கோள் ஒளிபரப்புக்கான கவுன்சில் இந்த விருதினை வழங்கியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் இந்த கவுன்சில் விருதுகளை வழங்கி வருகிறது. அதில் சிறந்த வெப் மீடியாவுக்கான விருது ஒன்இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இந்திய மொழிகளில் அதிக அளவிலான செய்தித் தளங்களைக் கொண்டுள்ள ஒரே இணையதளம் ஒன்இந்தியாதான் என்பது நினைவிருக்கலாம். ஒன்இந்தியா போல பல்வேறு தரப்பினருக்கும் பெங்களூர் கன்ட்ரி கிளப்பில் நடந்த எழில்மிகு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆண்டின் சிறந்த பத்திரிக்கையாளர் விருது டிஎன்ஏவின் சுமன் சர்மா, ஹைவே சேனலின் ஆசிஷ் ஜெயின், டெய்னிக் பாஸ்கரின் ஹர்ஷ் பாண்டே ஆகியோருக்குக் கிடைத்தது.

துக்ளக்: உண்மையைச் சொல்வதில்லை! சொன்னால் துரோகி பட்டம் கிடைத்து விடுமோ என்று பயப்படுகிறார்கள்

‘இலங்கையில் துக்ளக்’ என்ற இந்தத் தொடர் நமது வாசகர்கள் மத்தியிலும், இன்டர்நெட்டிலும், பெருவாரியான மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. ‘இது இலங்கைவாழ் தமிழருக்கு எதிரான தொடரில்லை’ என்பதை புரிந்து கொண்டு பலர் பாராட்டியுள்ளனர். ‘ஐ ஓப்பனர்’ என்கிற ரீதியில் இத்தொடர் பல பாராட்டுகளைப் பெற்றாலும், ஒரு சிலர் இந்தத் தொடரை விமர்சிக்கவும் செய்தனர். இலங்கைக்குச் சென்று வரும் முன் எனக்கு இருந்த யூகங்கள், கருத்துக்கள் அங்கு சென்று வந்த பிறகு மாறி விட்டன என்பதை ஏற்கெனவே இந்தக் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டு விட்டேன். எனவே, இந்தப் பிரச்னையில் கருத்து மாறுபடுபவர்கள், முதலில் ஒருமுறை இலங்கை சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து வரவேண்டும். அதை விட்டு விட்டு ‘இதுவரை வந்த செய்திகளெல்லாம் பொய்யா? சேனல்-4 வெளியிட்ட ஆவணப்படம் பொய்யா?’ என்ற கேள்விகளையே கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி கூறிக் கொண்டிருப்பது நியாயமில்லை. இலங்கைத் தமிழர் மேல் அவ்வளவு அக்கறை உள்ளவர்கள், ஒருமுறை போய் அங்குள்ள மக்களை சந்தித்து விட்டு வர வேண்டும். அதை விடுத்து இங்கேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு ‘இது பொய். அதுதான் நிஜம்’ என்று குரல் எழுப்புவது என்ன நியாயமோ தெரியவில்லை.

பாரதிராஜா நன்றாக ஹோம் வொர்க் செய்து மீண்டும் வருவார் ! அன்னகொடி ஒரு சறுக்கல்

athishaonline.com
பாரதிராஜா இதுவரை வெவ்வேறு ஜானர்களில் படமெடுத்திருக்கிறார்.
ஆனால் இதுவரை அவர் ஒரு
முழூநீள காமெடி படமெடுக்கவில்லையே என்கிற ஏக்கம் எல்லோருக்குமே உண்டு. அவருடைய மகன் மனோஜ் அறிமுகமான தாஜ்மகால் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஒன்றென கருதலாம். அதில் காமெடி அந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை.
படுதோல்வியடைந்த படம். ஆனால் சமீபத்தில் திரைகண்டிருக்கிற அன்னக்கொடி இதுவரை தமிழில் வந்த சகல காமெடி படங்களின் சாதனைகளையும் ஒரே பாய்ச்சலில் டுபக்காய் டுபுக்காய் என்று தாண்டிவிடுகிறது. தியேட்டர்களில் முதல் காட்சியில் தொடங்கும் சிரிப்பலை ''அன்புடன் பாரதிராஜா'' என்கிற கட்டைகுரல்வந்து திரை இருளும் வரை நீளுகிறது. சமீபத்தில் வெளியான எந்த படமும் இந்த அளவுக்கு ரசிகர்களை சிரிக்கவைத்திருக்காது. சூதுகவ்வும், பீட்சா, நகொபகாணோம் முதலான இளம் இயக்குனர்களின் காமெடிகளை ஒருசிலகாட்சிகளில் அடித்து தொம்சம் பண்ணுகிறார் இயக்குனர் இமயம். யெஸ் ஹீ ஈஸ் பேக்!

புற்றீசலாய் கேரள நகைஅடகுக் கடைகள் – ஏன் ? மக்கள் வாழ்வு சூறையாடப்படுகிறது

முத்தூட்விளம்பரங்கள்பொதுத்துறை வங்கிகளிடம் 8 சதவீத வட்டிக்கு கடன் வங்கி மக்களுக்கு 25 சதவீத வட்டிக்கு கொடுப்பது தான் இந்த பிரம்மாண்ட வளர்ச்சியின் இரகசியம்.
து கல்லூரியில் சேரும் காலம். கல்லூரியில் விரும்பிய பிரிவு கிடைக்குமா, நண்பர்கள் சேரும் கல்லூரியில் சேர முடியுமா என்று மாணவர்கள் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள். பெற்றோர்களுக்கோ வேறு விதமான கவலைகள். மழைக்காலத்து ஈசல்கள் போல் பல்கிப் பெருகியிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் சரி, வேறு பாடப்பிரிவுகளுக்கு இடம் கிடைத்தாலும் சரி – கல்விக் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன.
ஒட்டுண்ணி அடகு நிறுவனங்கள்.
அப்பாவி பெற்றோர்கள் பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்த சொத்து பத்துகளை விற்றாவது தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை உத்திரவாதப்படுத்திக் கொடுக்கும் கனவுகளோடும் அந்தக் கனவுகளுக்கும் எதார்த்தத்திற்குமான இடைவெளி ஏற்படுத்தும் நிராசைகளோடும் கல்லூரி வாசல்களை மொய்த்து நிற்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி, தங்கள் குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்க்கவிருக்கும் பெற்றோருக்கும், அடுத்த வகுப்புக்குத் தேர்வாகிக் காத்திருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் கூட இதே விதமான கவலைகள் தான்.
இந்த சமயத்தில் கடந்த வாரம் தினத்தந்தியில் வந்த விளம்பரம் ஒன்று நம்மை ஈர்த்தது – “அறிமுகம், ஸ்கூல் ரீ ஓப்பன் கோல்ட் லோன் மேளா” என்கிற பெயரில் முத்தூட் நகை அடகு நிறுவனம் கொடுத்த விளம்பரம் தான் அது.

Saudi 75 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளனர்.

 இந்த நடவடிக்கையால் பாதிக்கப்போவது சவூதி கம்பனிக்களும்தான்.காரணம் அங்கு உடல்வருந்தி உழைப்பை கொடுப்பது நம்மவர்களே.இதை சவுதி உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை.
துபாய்:சவுதி அரேபிய அரசின், புதிய தொழிலாளர் சட்டம் காரணமாக, இதுவரை அங்கு பணியாற்றி வந்த, 75 ஆயிரம் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழந்து, இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்ப உள்ளனர். இவர்களை, பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான, அவசர ஏற்பாடுகளை
மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. சவுதி அரேபியாவிலும், வேலைவாய்ப்பின்மை பிரச்னை, தலை தூக்கியுள்ளது. இதனால், தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க, சவுதி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, "நிதாகத்' என்ற புதிய சட்டத்தை, அமல்படுத்தியுள்ளது, இதன்படி, சவுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 10 தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தியிருந்தால், அங்கு, கண்டிப்பாக, உள்நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் வேலையில் சேர்க்க வேண்டும்.புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது, அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும். இதனால், சவுதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டினர், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த ஏழு எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயகாந்த் கடிதம்

கட்சி உத்தரவுக்கு மாறாக, மாற்று கட்சி வேட்பாளருக்கு ஓட்டளித்த காரணத்தை, வரும், 10ம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும். உரிய விளக்கம் அனுப்ப தவறினால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, ஏழு தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடித விவரம்:
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவனுக்கு ஓட்டளிக்க வேண்டும் என, கட்சியின் பொதுச் செயலர் ஆகிய நானும், கொறடாவும் கடந்த, 19 மற்றும் 20ம் தேதி கடிதம் எழுதியிருந்தோம்.ஆனால், நீங்கள் மாற்று கட்சிக்கு ஓட்டளித்ததாக அறிகிறேன். இதன்மூலம், கட்சியின் கட்டளையையும், கட்டுப்பாட்டையும் நீங்கள் மீறியுள்ளீர்கள். இதனால், கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும், தற்காலிகமாக நீங்கள் நீக்கி வைக்கப்படுகின்றீர்கள். கட்சியின் உத்தரவுக்கு மாறாக, மாற்று கட்சி வேட்பாளருக்கு ஓட்டளித்த காரணத்தை, வரும், 10ம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும். உரிய விளக்கம் அனுப்ப தவறினால், மேற்கூறிய குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கில்லை என, முடிவு செய்யப்பட்டு, அதற்குரிய நடவடிக்கைகளை, தங்கள் மீது எடுக்க கட்சி உரிமை பெற்றுள்ளது.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

ஸ்டாலின்: காங்., - தி.மு.க., கூட்டணி இப்போதைக்கு இல்லை

மதுரை: ""தமிழகத்தில் காங்கிரஸ் உடனான கூட்டணி என்பது இப்போதைக்கு இல்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரையில், கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் நிதியளிப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஸ்டாலின் பேசியதாவது:ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றதை பலராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பொதுத்தேர்தலின் போது மக்களிடம் ஓட்டு கேட்பது போல் தான், ராஜ்யசபா தேர்தலிலும், காங்கிரஸ் உட்பட கட்சிகளிடம் ஆதரவு கேட்டோம். எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சி என்ற, உரிமையில் ஆதரவு கேட்டோம். அவ்வளது தான். இதனால், பொதுத் தேர்தல்களிலும், இக்கூட்டணி தொடரும் என்பது அர்த்தமில்லை. ராஜ்யசபா தேர்தலில், 23 எம்.எல்.ஏ.,க்களை மட்டும் வைத்து, வெற்றி பெற்றது கருணாநிதியின் ராஜதந்திரம்.

ஞாயிறு, 30 ஜூன், 2013

அமெரிக்காவின் புதிய பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணப் பெண் நியமனம் ! EPRLF கேதீஸ்வரனின் மருமகள்

அமெரிக்காவில் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் உதவி சட்டமா அதிபராக
யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் உலக வங்கியின் அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஏ.தர்மரத்தினத்தின் மகளும், EPRLF இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான கேதீஸ்வரன் லோகநாதனின் ( இவர் புலிகளின் கொலைவெறிக்கு இரையானவர்) சகோதரியின் மகளும்  இலங்கை வங்கியின் முன்னாள் பொதுமுகாமையாளர் சி.லோகநாதனின் பேர்த்தியுமாவார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணம், வடமராட்சியை சேர்ந்தவர்களாவர். மைதிலி ராமன், அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தில் குற்றப்பிரிவு பதில் உதவி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் Yale பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதுடன், சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். குற்றவியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்கும் மைதிலி ராமன், அமெரிக்கா முழுவதிலும் உள்ள சம்ஷ்டி குற்றவியல் வழக்குகளை கையாளும் சுமார் 600 அரச சட்டவாளர்களுக்குத் தலைமை தாங்கவுள்ளதுடன், குற்றவியல் சட்டங்களை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருப்பார்.