திங்கள், 24 ஜூன், 2013

சித்தார்த்: படிக்கும் போது நான் அழகாக இருப்பதாக எந்த பெண்களும் சொல்லவில்லை.

சித்தார்த் நடித்த “தீயா வேலை செய்யனும் குமாரு” படம் சமீபத்தில்
ரிலீசானது. மேலும் பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சென்னையில் சித்தார்த் அளித்த பேட்டி வருமாறு:- தீயா வேலை செய்யனும் குமாரு படம் ஹிட்டானதால் சந்தோஷத்தில் இருக்கிறேன். முதல் வாரத்திலேயே ரூ.10 கோடி வசூலித்துள்ளது. பத்து வருட சினிமா வாழ்க்கையில் தமிழில் இப்போதுதான் ஜெயித்துள்ளேன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ”ஜிகர்தண்டா” படத்தில் தற்போது நடிக்கிறேன். வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படத்திலும் நான் சொந்தமாக தயாரிக்கும் பட மொன்றிலும் நடிக்க உள்ளேன். தமிழ் ரசிகர் வித்தியாசமான படங்களை ஜெயிக்க வைக்கின்றனர். சூது கவ்வும் போன்ற படங்கள் அதற்கு உதாரணம். தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன். சுந்தர் சி. இயக்கத்திலும் மீண்டும் நடிக்க ஆசை உள்ளது. நடிகைகளில் பாய்ஸ் படத்தில் நடித்த ஜெனிலியாவை பிடிக்கும். தமிழ் பேசும் சமந்தாவையும் பிடிக்கும். பழகுவதற்கு சமந்தா இனியவர். படங்கள் இயக்கவும் ஆசை உள்ளது. அதற்கான நேரம் வரும் போது செய்வேன்.

கேரள MLA கற்பழித்தார் இளம்பெண் புகார் ! தந்தையும், மகனும் என்னை நாசமாக்கி விட்டனர். வீடியோ காட்சிகள் அம்பலம்


As per the complaint filed by a 30-year-old woman, a native of Manjapra, the Aluva police have registered a case against the former minister Jose Thettayil, a Janata Dal (S) representative and his son Adarsh.  அங்கமாலி தொகுதி தற்போதைய எம்.எல்.ஏ.யும், கடந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சியில் போக்குவரத்து மந்திரியாக இருந்தவருமான ஜோஸ் தெற்றயில், அவரது மகன் ஆதர்ஷ் ஆகியோர் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி ஆலுவா போலீசில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- அங்கமாலியில் எனது தந்தை ஒரு மரஅறுவை மில் நடத்தி வருகிறார். இதனை திறந்து வைக்க அப்போது மந்திரியாக இருந்த ஜோஸ் தெற்றயில் எங்கள் ஆலைக்கு வந்தார். அதன்பிறகு அவர் எங்கள் வீட்டுக்கும் வருவார். அப்போது என்னை அவரது மகன் ஆதர்சுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாக கூறினார். இதற்கு நானும் சம்மதித்தேன். அதன் பிறகு ஆதர்சு எங்கள் வீட்டிற்கு வந்தார். என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றார். திருமணம் செய்யப்போகிறார் என்ற நம்பிக்கையில் நானும் அவருடன் சுற்றினேன். இதில் ஆதர்சு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு என்னை சந்திப்பதை தவிர்த்தார்.
இதுபற்றி அவரது தந்தை ஜோஸ் தெற்றயிலிடம் கூறினேன். அவர் ஆலூவாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று என்னை பலாத்காரம் செய்து விட்டார். தந்தையும், மகனும் என்னை நாசமாக்கி விட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2012 இல் 16,175 பேர் சாலை விபத்துகளில் மரணம் ! இது ஒரு தமிழக.சாதனை

சாலை விபத்துபுரட்சித் தலைவி’ ஆட்சியில் மது விற்பனையில் மட்டுமல்ல சாலை விபத்துக்களிலும் இந்திய அளவிலேயே முதல் இடத்தை பெற்றிருக்கிறது தமிழகம். 2003-ம் ஆண்டில் 51,000 விபத்துக்களைச் சந்தித்த தமிழகம் 2012-ம் ஆண்டில் 68,000 விபத்துக்களை கண்டிருக்கிறது. தேசிய குற்றப்பதிவு நிறுவனம் அளித்திருக்கும் இந்த புள்ளி விவரங்களின் படி கடந்த 10 ஆண்டுகளாக சாலை விபத்துக்களில் தமிழகம் முன்னணியில் இருக்கிறதாம்.
இந்தியாவில் நடக்கும் விபத்துக்களில் 15 சதவீதத்தை தமிழகம் வைத்திருக்கிறது. ஒரு மணிநேரத்திற்கு எட்டு விபத்துக்களை சந்திக்கும் சூழலில் தமிழ்நாடு உள்ளது. கடந்த வருடம் 16,175 மக்கள் இங்கே சாலை விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி தினமும் 44 பேர்கள் இறக்கிறார்கள். சென்ற வருடம் தமிழகத்தில் நடந்த 4.4இலட்சம் விபத்துக்களில் 1.4 இலட்சம் விபத்துக்கள் மரணத்தை ஏற்படுத்தும் தீவிர விபத்துக்களாகும்.
இந்த புள்ளிவிவரங்களின் படியே 53 பெருநகரங்களில் அதிகம் விபத்துக்கள் நடக்கும் நகரம் சென்னையாகும். இங்கு 9,663 விபத்துக்களும் அதில் 1,401 மரணத்தை ஏற்படுத்தும் விபத்துக்களாகவும் இருந்தன. புது தில்லியும், பெங்களூருவும் சென்னைக்கு அடுத்த் இடங்களில் இருக்கின்றன.
இப்படி விபத்துக்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கு என்ன காரணம்?

பங்குச் சந்தை: வெற்று டாலர்களை போட்டு சூதாட்டம் நடத்திய அன்னிய நிதி நிறுவனங்கள்! 1.57 லட்சம் கோடி இழப்பு யாருக்கு ?

பென் பெர்னான்கேசென்ற வியாழக்கிழமை (20.6.2013) அன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 526 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,719 என்ற அளவில் நிலைத்தது. 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-இல் ஏற்பட்ட 704 புள்ளி வீழ்ச்சிக்குப் பிறகு இந்த வீழ்ச்சியே மிகப் பெரிது என்றும் 1,650 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் விற்பனை ஆகின என்றும் முதலீட்டாளர்களுக்கு ரூ. 1.57 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ரூ 1.57 லட்சம் கோடி யாருக்கு இழப்பு? மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் என்பது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 நிறுவனங்களின் பங்கு விலைகளை குறித்த வீதத்தில் சேர்த்து கணக்கிடப்படும் எண். அந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தால் குறியீட்டு எண் உயரும், குறைந்தால் குறியீட்டு எண்ணும் வீழ்ச்சியடையும். குறியீட்டு எண் 526 புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததோடு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு ரூ 1.5 லட்சம் கோடி குறைந்திருக்கிறது.

அஞ்சலியின் கொந்தளிப்பு!! நடிகைகள் என்றால் அடிமைகளா?

தனது சித்தி பாரதிதேவியின் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டு இப்போது
ஆந்திராவில் மையம் கொண்டிருக்கிறார் அஞ்சலி. அங்கு தனது பெற்றோருடன் இருந்தபடி தாய்மொழியான தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நேரத்தில் திடீரென்று மீண்டும் அவர் சித்தியிடன் இணைந்து விட்டதாக செய்திகள் வெளியானது.ஆனால், இதுபற்றி அஞ்சலியிடம் கேட்டபோது, என்னை பார்ப்பதற்காக அவராகவே ஆந்திரா வந்தார். வீடுதேடி வந்ததால் பேசினேன். மற்றபடி அவரது கட்டுப்பாட்டை விட்டு முற்றிலுமாக வெளியேறி விட்டேன். இப்போது என் சம்பந்தப்பட்ட விசயங்கள் அனைத்தையும் நானே சுதந்திரமாக முடிவெடுக்கிறேன். இது எனக்கு உற்சாகமாக உள்ளது. திரையுலகைச் சேர்ந்த நண்பர்களும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். அதனால், எனக்குள் இருந்த இறுக்கமான நிலை மாறி இப்போது சகஜமாகி விட்டேன். மேலும், நான் எனது சித்தியிடம் ஒரு கொத்தடிமை போன்று நடத்தப்பட்டேன். லட்சம் லட்சமாக சம்பாதித்து கொடுத்த என்னை அவர் அப்படி அடிமை போல் நடத்தியது எனக்கு பிடிக்கவிலலை. அதனால் அதற்கொரு முடிவு கட்டத்தான் அங்கிருந்து வெளியேறினேன். நான் மட்டுமல்ல யாராக இருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பார்கள் என்கிறார் அஞ்சலி.

நடிகை ஹேமமாலினியின் இளைய மகள் நிச்சயதார்த்தம்

பாலிவுட் நட்சத்திர தம்பதியான, தர்மேந்திரா - ஹேமமாலினியின் இளைய மகளும், பிரபல ஒடிசி நடன கலைஞருமான, அகானா தியோலின் திருமண நிச்சயதார்த்தம், மும்பையில் நேற்று நடைபெற்றது. தர்மேந்திராவும், ஹேமமாலினியும், தம்பதியருக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். தர்மேந்திரா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்; ஹேம மாலினி, தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர். இந்த தம்பதியரியரின் இளைய மகள், அகானா தியோல், 27 ஒடிசி நடனக்கலைஞர். இவர் ஒரு சில திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். ஒடிசி நடனத்தில் திறமை பெற்ற அகானா, பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நடனங்களிலும், தேர்ச்சி பெற்றவர். பேஷன் டிசைனிங்கிலும், ஆர்வம் உடையவர். அகானாவுக்கும், டில்லியைச் சேர்ந்த தொழில் அதிபர், வைபவ் வோராவுக்கும், நேற்று முன்தினம் இரவு, மும்பையில் ஜூஹூ பகுதியில் உள்ள, ஹேமமாலினியின் இல்லத்தில், திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில், பாலிவுட் திரையுலக பிரபலங்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் பங்கேற்றனர். திருமண தேதி பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ஹேமாமாலினி தர்மேந்திரா தம்பதியரின் மூத்த மகளும், பிரபல பாலிவுட் நடிகையுமான, இஷா தியோலுக்கு கடந்தாண்டு பரத் தகாடனி என்ற தொழில் அதிபருடன், திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

மருத்துவமனையில் மர்ம மரணம் : உடல் உறுப்புகளை திருட சிறுமி படுகொலையா?

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
லண்டன்: இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வசிப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரர் சந்தோக் சிங். இவரது மனைவி அம்ரித் கவுர். இவர்களுக்கு 8 வயதில் குர்கிரண் கவுர் என்ற பெண் குழந்தை இருந்தாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் இந்தியா வந்தனர். அப்போது சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டாள். கானா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். எனினும் சிகிச்சை பலனின்றி குர்கிரண் கவுர் இறந்தாள். இதையடுத்து அவளது உடல் உறுப்புகள் பிரேத பரிசோதனையின் போது வெட்டி எடுக்கப்பட்டு பாட்டியாலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. அங்கு சிறுமியின் உடல் உறுப்புகளை பரிசோதித்த டாக்டர்கள் மூளை பாதிப்பால் இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் குர்கிரண் கவுரின் பெற்றோர் அம்ரித் கவுர், சந்தோக் சிங் ஆகியோர், தங்கள் மகள் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சிறுமியின் உடல் இங்கிலாந்து கொண்டு வரப்பட்டது. ஆனால், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய இயலாது. இந்திய டாக்டர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் ஏற்க முடியாதுÕ என்று இங்கிலாந்து டாக்டர்கள் தெரிவித்தனர்.

சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம்

 சென்னை : மழை பெய்யாததால் புழல் ஏரி வறண்டுவிட்டது. கிருஷ்ணா நீரும் வரவில்லை. இதனால் சென்னைக்கு வரும் குடிநீர் முற்றிலுமாக நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ஏரி மைதானம் போலிருப்பதால் மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். குண்டு குழிகளில் கிடக்கும் தண்ணீரில் அப்பகுதியினர் துணி துவைத்து, குளித்து மாசுபடுத்துகின்றனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமானது புழல் ஏரி. இதன் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. தற்போது இருப்பு 568 மில்லியன் கன அடி. இதில் சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 153 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்தாண்டு இதே தேதியில் 1073 மில்லியன் கன அடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மதகு திறக்கும் இடம், ஜோன்ஸ் டவர் திண்டு, ஆலமரம் பகுதி, எராங்குப்பம், பம்மதுகுளம், பொத்தூர், திருமுல்லைவாயல், ஒரகடம், முருகாம்பேடு, சூரப்பேடு ஆகிய பகுதிகளில் முற்றிலும் தண்ணீர் வற்றி வறண்டுபோய் கிடக்கிறது.

மேற்கு வங்கத்தில் எல்லா பெண்களும் கற்பழிக்கப்படுகிறார்களா? என்னத்தே சொல்ல வார்ர்ரீங்கோ ?

மேற்கு வங்கத்தில் எல்லா பெண்களும் கற்பழிக்கப்படுகிறார்களா?: மம்தா கேள்வி
மேற்கு வங்கத்தில் சமீப காலங்களில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் கடந்த 2012-ம் ஆண்டு நாட்டிலேயே மேற்கு வங்கத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக 30942 நடந்து இருப்பதாக தேசிய குற்றப்பதிவு துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஊடகங்களில் செய்தி அதிகமாக கூறப்பட்டுவருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 24 பர்க்கானாஸ் மாவட்டத்தில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அந்த ஊடகங்களை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- சில ஊடகங்கள் எதிர்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு எங்கள் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுக்கின்றன. மேலும் அரசுக்கு எதிராக அவர்கள் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு அவர்கள் செய்வதால் மேற்கு வங்கத்திற்கு அவர்கள் அவமானத்தை கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு பிரச்சினைகாகவும் என்னை குறைகூறினார்கள். இப்பொழுது அவர்கள் கற்பழிப்பிற்காக என்னை கூட வசை பாடுகிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள். இங்குள்ள பெண்கள் அனைவரும் கற்பழிக்கப்படுகிறார்களா?.
இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை: ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு! 7 நகரங்களில் நடவடிக்கை


பெருநகரங்களில்
குற்றங்களை தடுக்கும் விதமாக ஆளில்லா விமானம்
மூலம் கண்காணிப்பு, ஹெலிகாப்டரில் கமாண்டோக்களை ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.பாதுகாப்பான நகரம்' என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படும்.>இதன் கீழ், தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், ஆமதாபாத் ஆகிய ஏழு நகரங்களில் வான்வழி பாதுகாப்பு திட்டமிடப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்களில்பொருத்தப்பட்ட சக்திவாய்ந்த நவீன கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பது இதில் ஒரு முக்கிய அம்சமாகும். இந்த நகரங்களின் பாதுகாப்புக்கு ஹெலிகாப்டர்கள், நவீன கண்காணிப்பு கருவிகள் உள்ளிட்டவை வழங்கப்படும். ஹெலிகாப்டர்களில் கமாண்டோ வீரர்களை பயன்படுத்த வேண்டும்.நகரங்களில் பாதுகாப்பு நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிதாக வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதலில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, குற்றத் தடுப்பு ஆகியவற்றில்  வான்வழி பாதுகாப்பு மிகவும் அவசியம் என்று தெரிவித்திருக்கிறது

எட்வார்ட் ஹாங்காங்கில் இருந்து பயணம்! விக்கிலீக்ஸ் ஆலோசகர்களும் விமானத்தில்!!

அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோடன், ஹாங்காங்கில் இருந்து சாகசமாக வெளியேறியுள்ளார். அவரை ஏற்றிச் சென்ற விமானம் தற்போது ரஷ்ய வான் பகுதியில் பறந்து கொண்டிருக்கிறது.
அவரை கைது செய்து நாடுகடத்துமாறு அமெரிக்கா ஹாங்காங் அரசை கேட்டுக் கொண்டுள்ள நிலையிலும் ஹாங்காங்கின் செப் லப் கொக் விமான நிலையத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை புறப்பட்ட விமானத்தில் ஏறிவிட்டார். இவர் வெளியேறுவதற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தது தாம் என்று அறிவித்துள்ளது விக்கிலீக்ஸ்.
“எட்வார்ட் ஹாங்காங்கில் இருந்து வெளியேறுவதற்கு தேவையான ஒழுங்குகளை செய்ததுடன், அவரை பத்திரமாக அழைத்துச் செல்ல, விக்கிலீக்ஸின் சட்ட ஆலோசகர்கள் குழு ஒன்றும் அதே விமானத்தில் பறக்கிறார்கள்” என்று சற்றுமுன் விக்கிலீக்ஸ் ட்விட் பண்ணியுள்ளது.

உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கில் வியாபாரத்தை பெருக்கும் மோடி மஸ்தான்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி புதிகாக அமைத்துள்ள தகவல் தொடர்பு குழுவின் தலைவரான அஜய் மக்கான் இது தொடர்பாக மேலும் கூறியது: அரசியல்வாதியாக நரேந்திர மோடி தனது தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறார் என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்<இயற்கை சீற்றத்தால் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு, சேதங்களால் நாடே கவலை கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ராணுவத்தினரும், துணை ராணுவப் படையினரும் தங்களை மீட்புப் பணிகளில் முழுமையாக அர்ப்பணித்துள்ளனர். ஆனால் அவர்களின் ஊக்கத்தை குறைக்கும் வகையில் மோடி செயல்பட்டு வருகிறார். உத்தரகண்ட் மாநிலத்துக்கு அவர் சென்று ஒரு நாளில் 15 ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றியதாக ஒரு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது வியப்பை அளிக்கிறது. பேரழிவு சம்பவத்திலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்களும் உத்தரகண்ட்டுக்கு சென்று வந்தனர். ஆனால் அவர்கள் யாரும் மோடியைப் போல தங்கள் வருகையை தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. ஏராளமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நேரத்தில், அரசியல் கட்சிகள் ஒன்றிணைத்து அவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஆதாயம் தேட முயற்சிக்கக் கூடாது என்றார் அஜய் மக்கான்.

மீட்பு சுணக்கம்! உத்தரகண்டில் பலத்த மழையால் பரிதவிக்கும் 30 ஆயிரம் பேர்

டேராடூன்:இம்மாதம், 17ம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தையே புரட்டிப் போட்ட பேய் மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு போன்றவற்றால், இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டு உள்ளது.உத்தரகண்ட் மாநிலம், 93 சதவீதம் மலைகளும், அதில், 64 சதவீதம் அடர்ந்த காடுகளும் கொண்டது. அங்கு அமைந்துள்ள சிவபெருமானின் வழிபாட்டுத் தலங்களில், வழிபடச் சென்ற பக்தர்கள் மற்றும் அங்கு வசித்த பொதுமக்கள், கடந்த, ஏழு நாட்களாக சொல்லொணாத் துயரம் அனுபவித்து வருகின்றனர். சிக்கிய லட்சம் பேர்: பேய் மழை பெய்யத் துவங்கிய போது, உத்தரகண்டின், கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் சில வழிபாட்டுத் தலங்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், உள்ளூர் மக்களும் இருந்துள்ளனர்.ராணுவம், இந்தோ - திபெத் எல்லை போலீஸ், எல்லை சாலை அமைப்பு பணியாளர்கள் என, ஆயிரம் வீரர்களும், அவர்களுக்கு துணையாக, மிகக் குறைந்த எண்ணிக்கையில், மாநில அரசு ஊழியர்களும், கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்ட மீட்பு பணிகளில், 70 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்; இன்னும், 30 ஆயிரம் பேர் மீட்கப்பட வேண்டியுள்ளது.அவர்களில் பெரும்பான்மையினர், மலையின் உச்சியில் தஞ்சம் அடைந்து உள்ளனர். காட்டு வெள்ளத்திற்கு பயந்து, எப்படியோ வேகமாக ஏறிவிட்டவர்களால், இறங்க முடியாமல், ஹெலிகாப்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

எங்கும் பிணக்குவியல்… பேய் நகரம் போல் காட்சி தரும் கேதார்நாத்: மீட்பு பணி குழுவினர் வேதனை!

கேதார்நாத் ஆலயத்தின் முன்பு சடலங்கள் குவிந்துள்ளதால் பேய் நகரம்
போல காட்சியளிப்பதாக மீட்புப் படையினர் வேதனையுடன் கூறியுள்ளனர். ஓம் நமச்சிவாயா என்று பக்தி கோஷம் எப்போதும் முழங்கும் கேதார்நாத் ஆலயத்தின் முன்பு இப்போது மயான அமைதியாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கோவில், கடைவீதிகள், விடுதிகள் போன்ற இடங்களில் பக்தர்களால் நிரம்பி வழிந்த கேதார்நாத் இப்போது சகதிகள் சூழ, சடலங்களால் நிரம்பி வழிகிறது. ஊர் முழுவதும் இடிந்து காணப்படுவதால் உணவு தேடி காகம், நாய் போன்ற ஜீவராசிகள் மட்டும் அங்கு அலைந்து வருகின்றன இப்போது மெதுவாக வெள்ளம் வடிந்து வருகிறது. கோவிலின் வெளிப்பகுதி பாதிக்கப்படாமல் அப்படியே உள்ளது. ஆனால், கோவிலின் வெளிப்புற வாயிலில் சடலங்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால்,கேதார்நாத் நகரம் பேய் நகரம் போல் காட்சி அளிப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் வேதனையுடன் தெரிவித்தனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள பக்தைகளை கற்பழித்து கொலைசெய்யும் கொடூரன்கள்

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிர் பயத்தில் உள்ள பெண் பக்தர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் கொடுமை அரங்கேறியுள்ளது. கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் அங்கு ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனர். போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் கால்நடையாக செல்லும் பக்தர்கள், மலைகளிலும், வனப்பகுதிகளிலும் கிடைக்கும் இடங்களில் தங்கி ஓய்வெடுத்து வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி திருடர்களும், வழிப்பறி கொள்ளையர்களும் பக்தர்களிடம் உள்ள பணம், நகைகளை கொள்ளையடித்துச் செல்கின்றனர். கேதார்நாத் பள்ளத்தாக்கில் உள்ள கோரிகுண்ட் பகுதியில் மட்டும் ரூ.17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சனிக்கிழயன்று இரவு கோரிகுண்ட் பகுதியில் தங்கியிருந்த இரண்டு பெண்பக்தர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு பெண்ணும், அவரது மகளும் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Traffic ராமசாமிக்கு முழு நேர போலீஸ் பாதுகாப்பு : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை,: சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு முழு
நேர போலீஸ் பாதுகாப்பு
வழங்க வேண்டும் என்று டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தனக்கு பல்வேறு தரப்பிலிருந்து அச்சுறுத்தலும், மிரட்டலும் வருகிறது. எனவே, முழு நேர போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’ என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:மனுதாரர் டிராபிக் ராமசாமி இந்த நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். பொதுநலன் உள்ள அந்த வழக்குகளில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளையும் பெற்றுள்ளார்.

2016 இல் நாமதான் ஆட்சி அமைப்போம் ! அன்புமணி


ராஜ்யசபா தேர்தலில் காங்., இழுத்தடிப்புக்கு காரணம் என்ன? இது தாண்டா அரசியல்

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றால் தான், காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான எம்.பி.,க்கள் கிடைக்கும் என்பதால், ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வை ஆதரிக்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் சிலர், அக்கட்சியின் தலைவர் சோனியாவிடம் வலியுறுத்தி உள்ளனர். பலப்படுத்தலாம்: அதேபோல், தே.மு.தி.க., வுக்கு ஆதரவு அளித்து, அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் ஓட்டு வங்கியை பலப்படுத்தலாம் என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலிடம், காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் சிலர் வலியுறுத்தியதால், உடனடியாக முடிவு எடுக்க முடியாமல், காங்கிரஸ் மேலிடம் வழக்கம் போல் இழுத்தடித்து வருகிறது. ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளித்ததன் மூலம், லோக்சபா தேர்தலில், தி.மு.க., அணியில் அக்கட்சி இடம்பெறப் போவது உறுதியாகியுள்ளது. வட சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மூன்று தொகுதிகளில், ஒரு தொகுதி, தி.மு.க., கூட்டணியில், மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் என, கூறப்படுகிறது. புதிய தமிழகம் கட்சிக்கு, தென்காசி லோக்சபா தொகுதியை விட்டுக்கொடுக்க, தி.மு.க., முன்வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் டி.ஆர்.பாலு வழங்கினார்.  கடைசியில், மனசாட்சி படி வாக்களியுங்கள் என்று உத்திரவு வரும். அதற்க்கு முன் வாய் மொழியாக, யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று அறிவுருத்தபடுவார்கள்.?

ஞானி: கொலைகளுக்குத் தன் அரசாங்க ஆதரவை அளித்தவர்தான் மோடி.

அத்வானி x மோடி : முகமூடிகளின் கதை"
அத்வானி x மோடி : முகமூடிகளின் கதை<
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தி கோவிந்தாச்சாரியா பல வருடங்கள் முன்னர் வாஜ்பாயியை பிஜேபியின் முகமூடி என்று வர்ணித்தார். பின்னர் தான் அப்படிச் சொல்லவில்லை என்று அவர் மறுக்கவும் செய்தார். அவர் சொல்லியிருந்தாலும் சொல்லியே இராவிட்டாலும், வாஜ்பாயி பி.ஜே.பிக்கு வாய்த்த அருமையான முகமூடி என்பதில் சந்தேகமில்லை.
பி.ஜே.பி அடிப்படையில் ஆர். எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில், ஆர்.எஸ் எஸ்சின் லட்சியங்களை நிறைவேற்றும் நோக்கத்துடன் இயங்கும் அரசியல் கட்சி என்பது யார் மறுத்தாலும் மறைக்கமுடியாத உண்மையாகும். இந்துத்துவா என்பது மதவாதம் அல்ல என்றும் தாங்கள் வலியுறுத்துவது பண்பாட்டைத்தான் என்று பிஜேபி எவ்வளவு குரலெழுப்பினாலும், அவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்சின் இதர மத எதிர்ப்பு/வெறுப்புக்கான அரசியல் தத்துவ வடிவம்தான் என்பது நடைமுறையில் அயோத்தி முதல் குஜராத் வரை அம்பலமாகிவிட்டது.

கோத்ரா கலவரத்தை மறக்கவேண்டுமாம் ! BJP ராஜ்நாத் சிங் அட்வைஸ்

கோத்ரா கலவரத்தை தவிர்க்க முஸ்லிம்களுக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது கோத்ரா கலவரம் குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது:- 2002 ஆண்டு குஜராத் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நாட்டில் 13,000 மதக்கலவரங்கள் நடந்து இருக்கின்றன. ஆனால் அவைகளை நாம் மறந்து தான் இருக்கிறோம். ராஜஸ்தானில் பாரதீய ஜனதாவின் பைரோன் சிங் ஷெகாவாத், வசுந்தர ராஜே சிந்தியா ஆகியோர் ஆட்சியில், மைனாரிட்டிக்கு எதிராக எந்த பாகுபாடுகளும் நடந்து இருக்கவில்லை. எங்களுடைய வார்த்தைகளிலும் செயல்களிலும் எந்த வேறுபாடும் இல்லையென்கிற நம்பிக்கையை உங்களுக்கு ஊட்டவே நான் விரும்புகிறேன். பிரிட்டிஷ் ஆட்சியில் பிரித்து ஆளும் கொள்கையை கடைபிடித்தனர். ஆனால் சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் அகியும் இன்னும் இந்து முஸ்லிம்களுக்கிடையே உள்ள அந்த இடைவெளியை நாம் சரிசெய்யவில்லை.

40 அடி மனிதனின் பாதச் சுவடு நெடுந்தீவில் கண்டு பிடிப்பு ! வரலாற்றுக்கு முந்தைய மர்மங்கள்

இது உண்மையிலேயே மிகவும் அதிசயமான ஒரு பாத சுவடுதான் . வழக்கம்போல இதையும் சமய கோட்பாடுகளுடன் சம்பத்தப்படுத்தும் கதைகள் கட்டி விடப்படுகின்றன , இது ஒரு வேளை அழிந்து போன குமரிகண்டம் அல்லது அட்லாண்டிஸ் போன்ற lost continent பற்றிய பெரிய உண்மையை வெளிப்படுத்துவதாக இருக்கலாம் .
யாழ்.நெடுந்தீவு பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த பாதச்சுவடு உருவாக்கியமைக்கு விஞ்ஞான ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுவதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆழ்வார்பிள்ளை சிறி தெரிவித்ததுடன் இது பாறைகள் சிதைவடைந்து கூட இந்த சுவடு உருவாகியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 40 அடி மனிதன் ஒருவன் காலை வைத்ததால் உருவானதாகவும், இராமாயணப் போர் நடைபெற்ற போது அனுமான் மலையைத் தூக்கிக் கொண்டு வரும் போது அவர் வைத்த பாதச்சுவடு என்றும் பல்வேறு கதைகள் தற்போது இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். Written By newscenter

பெப்சி உமாவுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தாராம் ஜெயா டிவி சரவணராஜன்

"பெப்சி உங்கள் சாய்ஸ்" தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பெப்சி உமா, தற்போது அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியென்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகியாக கடமையாற்றிய சரவணராஜன், பெப்சி உமாவுக்கு அடிக்கடி செக்ஸ் தொந்தரவு செய்துவந்ததுடன், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் நிகழ்ச்சி தொகுப்பில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டினார். சரவணராஜனின் தொல்லைகள் அதிகமானதால் இதுபற்றி பெப்சி உமா மகளிர் பொலிசில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து தொலைக் காட்சி தயாரிப்பு நிர்வாகியான சரவணராஜனை நேற்றிரவு கைது செய்த பொலீசார், அவர் மீது "வன் கொடுமை" சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சைதாப்பேட்டை நிதிமன்றத்தில் ஆஜர்படுத்ததியதாகவும், அதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கைதான சரவணராஜன் திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 22 ஜூன், 2013

தீ குளிக்கும் பச்சை மரம் ! என்று ஒரு திரைப்படம் என்ன தலைப்போ என்ன படமோ ?

விவசாயம் பொய்த்ததால் தற்கொலை செய்யும் பிரஜன், சித்தியால்
மனரீதியாக சித்ரவதை செய்யப்படுகிறார். செய்யாத திருட்டுக்காக ஆசிரியரால் கடுமையாக தண்டிக்கப்பட, ஆத்திரப்படும் பிரஜனும் அவன் நண்பர்களும் அவரைத் தாக்குகின்றனர். இதில் அவர் இறந்து விட சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு பல வருடங்களுக்கு பின் விடுதலையாகிறார்கள். மற்றவர்கள் தவறான வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்கள். பிரஜன் நேர்மையாக வாழ தன் ஊருக்கே வருகிறார். அங்கு அடைக்கலம் கொடுத்தவர் இறந்துவிட அவர் மகள்களை பாதுகாக்கும் பொறுப்பும் வருகிறது. இளைய மகள் பிரயூவை திருமணம் செய்து கொள்கிறார். வறுமை துரத்த ஆஸ்பத்திரி பிணவறையில் உதவியாளராக சேர்கிறார். அங்கு நடக்கும் கொடூரமான சமூக விரோத செயல்கள் அவரை கோபமூட்டுகிறது. எதிரிகள் உருவாகிறார்கள். பின் அவர் வாழ்க்கை என்னாகிறது என்பது மீதி கதை.

நயன்தாரா.. அனுஷ்கா ! தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே 2 கோடி வாங்கும் நடிகைகள்


 தமிழ் சினிமாவிலே இதுவரை எந்த
நடிகையும் பெறாத அளவு சம்பளத்தை
பெற்று சினிமா வரலாற்றில் தங்களுக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள் நயன்தாராவும், அனுஷ்காவும். இருவரது மார்க்கெட்டும் உச்சத்தில் இருப்பதால், அதிக சம்பளத்தைக் கொடுத்து இவர்களைத் தங்களது படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் போட்டி போடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள். தற்போது, நயன்தாரா, அனுஷ்கா சம்பளம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.< இந்தாவு அதிக சம்பளத்தை இதுவரை தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி வேறு எந்த நடிகைகளும் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் பேராதரவால், தங்களின் சம்பளத்தை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளனராம் இவர்கள். தெலுங்கில் நடித்துவரும் ‘அனாமிகா' படத்துக்காக இந்த சம்பளத்தைப் பெறுகிறார் நயன். இப்படம் இந்தியில் ஹிட்டான ‘கஹானி' என்ற படத்தின் ரீமேக். இந்தியில் இந்த கதாபாத்திரத்தை வித்யாபாலன் ஏற்றிருந்தார்
அள்ளிக் கொடுகும் தயாரிப்பாளர்கள்... கதைப்படி நயனுக்கு கர்ப்பிணி வேடம். கர்ப்பிணியாக நடிப்பதற்காகவே, இவ்வளவு பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார்களாம் படத்தயாரிப்பாளர்கள் தமிழில் அஜீத் ஜோடியாக ஒரு படத்திலும், ஆர்யா ஜோடியாக ‘ராஜாராணி' படத்திலும் உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதலி' படத்திலும் நடித்து வருகிரார். ஆனால், இப்படங்களுக்காக குறைந்த அளவே சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இனி, 2 கோடிதான்... அனாமிகாவின் மூலம் சம்பளத்தை உயர்த்தியுள்ள நயன், இனி ஒப்பந்தமாகும் படங்களுக்கும் இதே அளவு ரூ 2கோடியைச் சம்பளமாக கேட்க முடிவெடுத்துள்ளாராம்
பொம்மாயி வேடம் தான்... அனுஷ்கா ‘ருத்ரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடிப்பதற்கு அதிகச் சம்பளமான ரூ.2 கோடி பெற்றுள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுக்கு மகாராணி வேடமாம். இப்படத்திற்காக வாள் சண்டையும் கற்றார் அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி அவர்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற கும்பல்!

பாகிஸ்தான் ஆளும் கட்சியின் ஆதரவோடு ஒரு கும்பல் கிறிஸ்தவ பெண்களை தாக்கி நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது, பாகிஸ்தானில் ஆளும் கட்சியான பிஎம்எல்-என் கட்சியின் ஆதரவுள்ள நிலச் சொந்தக்காரர் அப்துல் ராஷீத் என்பவரின் மகன் மொஹமட் முனீர். அவரால் அனுப்பப்பட்ட அடியாட்கள் சிலர் கடந்த 3ம் திகதி இரவு கிறிஸ்தவ குடும்பம் ஒன்று வசிக்கும் வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அந்த வீட்டு ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தனர். வீட்டில் அர்ஷத் பீபி, சாஜிதா பீபி மற்றும் சௌரியா பீபி ஆகிய 3 பேர் மற்றும் அவர்களது மாமனார் சாதிக் மாசிஹ் மற்றும் மாமியார் ராணி பீபி ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.