செவ்வாய், 9 ஏப்ரல், 2013

19 திமுக MLA க்கள் சஸ்பென்ட்! அவர்களின் நாவுக்கு அவ்வளவு பயம்

சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்வதில் மிக திறமையாக
செயல்படும் தமிழக சட்டமன்ற சபாநாயகர், தமது சாதனை இலக்கை எட்டிக்கொண்டு இருக்கிறார். சாதனை முயற்சியாக நேற்று, 19 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை 19 பேர், இரண்டு நாட்களுக்கு, சட்டசபை நடவடிக்கையிலிருந்து, சஸ்பெண்ட் செய்திருக்கிறார்.
இவர்கள். சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டார்கள் என்பதே ட்ரபிள். அவர்கள் ஏன் பேச வேண்டும்? அமைச்சர் பேசியதற்கு பதில் கூற முயன்றார்கள்.
சட்டமன்றத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம் பேசியபோது, “காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில், தி.மு.க. துரோகம் செய்துவிட்டது’” என்று ஒரு ‘பிட்’டை தூக்கி போட்டார்.
இதற்கு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ. துரைமுருகன், “தி.மு.க. அரசு என்ன துரோகம் செய்தது என்பதை, பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம் கூற வேண்டும்; அவரின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்கிறேன்” என்றார்.
அமைச்சர் ராமலிங்கம் பதில் கூற ரெடியாக வரவில்லையோ, அல்லது, பதிலடி அருமையாக இருக்காதோ என்று தெரியவில்லை. அவரை கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க, அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட சில அமைச்சர்கள் முனைந்தனர். இறுதியில், சபை முன்னவரான அமைச்சர் பன்னீர்செல்வம் பதில் கூறினார்.

தி.மு.க.,வுடன் நெருக்கம் வேண்டாம் : தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு தடை

 "தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டாம்' என,
தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, கட்சி தலைமை, கண்டிப்பான அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாளுக்கு இன்னும் தான் ஒரு புதுசா பூத்த ரோசான்னு நெனைப்பு. எப்போ கிழவியோட கூட்டு சேர்ந்தாச்சோ, அப்பவே அண்ணனுக்கு மதிப்பு கோவிந்தா. இனிமே யார் கூட சேர்ந்தா என்ன?சேராட்டா என்ன? தனியா நினனத்தான் என்ன? திமுகவை விட்டு விலகி இருந்து, தன்னை மிஸ்டர் கிளீனாக காட்டிக்கொள்ள நினைப்பது புரிகிறது. அப்போது தான் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் டிமாண்ட் அதிகமாக இருக்கும் என்ற வியாபார உத்தியும் தெரிகிறது. ஆனாலும், என்ன தான் தலைகீழாக நின்றாலும் இனிமேல், யாரோடாவது கூட்டு சேர்ந்தால் தான் கடையை நடத்த முடியும். தனியாக நின்றே தீருவேன் என்றால் இவர் கட்சி சார்பாக நிற்பதற்கு, மனைவியும் மைத்துனனும் மட்டுமே மிஞ்சுவார்கள். கூட்டு என்று வைத்தால், திமுகவோடு சேர்ந்தாலும் ஆப்பு காங்கிரசோடு சேர்ந்தாலும் ஆப்பு. கம்யூனிஸ்டுகளில் அதிமுகவின் அடிமை பாண்டியன் கட்சியோடு சேர முடியாது. இன்னொன்று இருக்குமிடத்தை விளக்கேற்றி பார்க்க வேண்டியுள்ளது. மற்ற லெட்டெர் பேடுகளை சேர்த்துக்கொண்டு கூட்டணி தலைவர் நான் தான் என்று மூன்றாவது அணியமைத்து பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் அதற்கு டப்பு காலியாகும். இந்தாள் தான் குனிய வேண்டும். அதற்கு வீட்டம்மா ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் அண்ணனுக்கு திரிசங்கு கதி தான். கடந்த சட்ட மன்ற தேர்தலில், வருவது வரட்டும் என்று தனித்து நின்றிருந்தால், மக்கள் மத்தியில் மரியாதை இருந்திருக்கும். அதுவும் போச்சு. கிழவியை எதிர்த்ததால், நம்பிக்கையும் போச்சு. இரண்டுக்கும் தகுதியில்லாத ஒருவரை நாடாளுமன்ற தேர்தலாகட்டும், சட்டமன்ற தேர்தலாகட்டும் மக்கள் எப்படி ஆதரிப்பார்கள்? இனி அண்ணன் பாடு டிங்கி டாங்கி தான்.

துணைநகரம் அன்று எதிர்த்த ஜெயலலிதா! அந்த நாள் ஞாபகம், நெஞ்சிலே வந்ததோ

சென்னை:"மதுரை துணை நகரம் விவகாரத்தில், "அந்த நாள் ஞாபகம், நெஞ்சிலே வந்ததே, அம்மையே... அம்மையே... அம்மையே...' என்று தான் எனக்கு பாடத் தோன்றுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:திருமழிசையில், தி.மு.க., ஆட்சியில் ஒரு துணை நகரம் அமைக்கும் முயற்சிகளில், 2006ல் பொறுப்புக்கு வந்ததும், துவங்கினோம். அந்தப் பகுதி மக்களும், விவசாயிகளும், எதிர்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும், தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தன. அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, துணை நகரம் அமைக்கும் திட்டத்திற்காக, நஞ்செய், புஞ்செய் நிலங்களை கையகப்படுத்துவதில்லை என, தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு, 2006ல், தி.மு.க., துணை நகரத் திட்டத்தை அறிவித்த போது, ஜெயலலிதாவும், வேறு சிலரும், அதை எதிர்க்காமல் இருந்திருந்தால், தி.மு.க., ஆட்சியில், துணை நகரம் வந்திருக்கும். சென்னையின் இட நெரிசலும், ஓரளவு குறைந்திருக்கும். ஆனால், அன்றைக்கு தி.மு.க., அரசு துணை நகரத்தை அறிவித்த போது, எதிர்க்கபட்டாலும், தற்போது சட்டசபையில், ஜெயலலிதா, 110வது விதியின் கீழ் மதுரையில துணை நகரம் அமைக்கப் போவதாக அறிவித்திருப்பதை, அவருடைய கூட்டணிக் கட்சிகள் வரவேற்றுப் பாராட்டியுள்ளன.

திங்கள், 8 ஏப்ரல், 2013

தமிழக தலைவர்கள் ஈழ அகதிகளுக்கு ஒரு சொம்புதானும் கொடுக்கவில்லை

Thinamaniதமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா சென்ற சில மாதங்களிலேயே தங்களுக்குக் குடியுரிமை கிடைத்துவிடும் என்பதால் வாழ்வு தேடித் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், இங்கே படித்துப் பட்டம் பெற்றாலும் கூட, இலங்கைத் தமிழர்களுக்கு அரசு வேலையும் கிடைப்பதில்லை, தனியார் அலுவலகங்களிலும் வேலை கிடைப்பதில்லை என்பதாலும் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 132 முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் அகதிகளின் வாழ்க்கைச் சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்த அகதிகளுக்கு, மிகச் சிறிய அளவில் நிதியுதவியும் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியனவும் வழங்கப்படுகின்றன. அது மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமா?
தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, இலங்கை அகதிகள் முகாம்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதும், சந்தேகத்துடன் பார்க்கப்படுவதுமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

ஓடிவர மறுத்த காதலியை துடிதுடிக்க அறுத்து கொன்ற காதலன்!

 காணச்சகிக்காத கோர படங்கள் நக்கீரனில் வெளியாகி உள்ளது பார்க்க விரும்புபவர்கள்  இங்கே தேடவும்   nakkheeran.in/Users/frmNews.aspx?N=96429

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் சாம்ராஜ் (23). இதே பகுதியை சேர்ந்தவர் மாதையன் என்கிற அம்புலி. இவரது மகள் சந்தியா (23). இவர்கள் இரண்டுபேரும் அரியர் தேர்வு எழுத தர்மபுரி அரசு கலைகல்லூரிக்கு வந்துள்ளனர். 
தேர்வு முடிந்ததும் சந்தியா தர்மபுரி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பென்னாகரம் வழியாக மேட்டூர் செல்லும் பஸ்சின் பின்பக்க சீட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். அப்போது பகல் 12.15 மணியளவில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாம்ராஜ், ஆட்டை அறுப்பது போல் சந்தியாவின் கழுத்தை அறுத்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத சந்தியா அலறிதுடித்தார். ஆனாலும் ஆத்திரம் தீராத சாம்ராஜ் விடாமல் அறுத்தார். அப்போது உயிர் பிழைக்க பஸ்சில் இருந்து வெளியே ஓடிவந்த சந்தியா பஸ் படியிலேயே துடிதுடித்து இறந்தார்.

கர்நாடகாவில் மூன்று சாமியார்கள் மரணம் தீக்குளித்தனரா ? கொலையா ?

Jagannath Swami (30), Eera Reddy Swami (45) and Pranav Swami (16), are believed to have sat on a mound of firewood and set fire to it after dousing it with kerosene at around 4.30 a.m., police said. They were all followers of the late Sri Ganeshwar Avadhoot Maharaj, who died on February 28.

கர்நாடகாவில் சவுலி மடத்தை சேர்ந்த சாமியார்களான ஜெகநாத சுவாமி (வயது 21), சரணய்யா சுவாமி (வயது 18) மற்றும் வி. ரெட்டி சுவாமி (வயது 50) ஆகிய 3 பேரும் மடத்தின் வளாகத்தில் உள்ள மர கட்டைகள் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ வைத்தனர். அதில், அவர்கள் 3 பேரும் குதித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர்.அங்கு கரிக்கட்டையாக கிடந்த மூன்று பேரது உடல்களையும் கைப்பற்றினர். அவர்களின் அருகில் கிடந்த தற்கொலை குறிப்பு அடங்கிய கடிதம் ஒன்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சவுலி மடத்தின் தலைவரான கணேஷானந்த சுவாமிகள் மர்மமான முறையில் கடந்த பிப்ரவரியில் மரணம் அடைந்ததால் வேதனை அடைந்த அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.; லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வழிபடும் இடமான இந்த மடத்தில் சொத்து தொடர்பான விவகாரங்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. nakheeran.in

நடிகை அஞ்சலியின் சொத்துக்களை டைரக்டர் களஞ்சியமும் சித்தியும் அபேஸ்? அஞ்சலி கண்ணீர்


என் உடலில் சிறு கீறல் ஏற்பட்டாலும் அதற்கு என்னுடைய சித்தியும், இயக்குனர் களஞ்சியமும்தான் முழுப் பொறுப்பு கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தமிழில் இவருக்கு ‘அங்காடித் தெரு’,
‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட நிறைய படங்கள் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. இவர் படவிழாக்கள் மட்டுமல்லாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் தன்னுடைய தாயாருடனே வலம் வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இருவரும் தாய்-மகள் என்ற உறவைத் தாண்டி நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர். இந்நிலையில், தற்போது அஞ்சலி தனது தாயை பிரிந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுகுறித்து அஞ்சலியிடம் கேட்கும்போது, நீங்கள் என்னுடைய அம்மா என்று நினைக்கிறவர் என்னுடைய அம்மா கிடையாது. அவர் என்னுடைய சித்தி. மேலும், சென்னையில் என்னுடன் இருக்கும் குடும்பமே என்னுடைய சொந்த குடும்பம் கிடையாது. என்னுடைய சித்தியின் குடும்பத்தைத்தான் நான் அழைத்துவந்து இங்கு குடியமர்த்தியிருக்கிறேன். அவர்களுக்காக நான் நிறைய செய்திருக்கிறேன். என்றாலும் எனக்குத் தெரியாமலேயே பெரிய மோசடி வேலைகளை செய்து வருகிறார். கோடிக்கணக்கில் என்னுடைய பணத்தை கையாடல் செய்துவிட்டார். இவருக்கு உறுதுணையாக இருந்து வருபவர் இயக்குனர் களஞ்சியம். இருவரும் என்னை ஒரு மெசின் போலவே நடத்துகிறார்கள். என்னை தாங்கமுடியாத அளவுக்கு கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். எனது சொந்த அண்ணன், அக்காவைக்கூட பார்க்கவோ, பேசவோ அனுமதிப்பதில்லை. இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் மேஜர். என்னுடைய சொந்தக் காலில் நிற்க முடிவு எடுத்துவிட்டேன். இப்போது ஐதராபாத்தில் குடியேறியிருக்கிறேன். தற்போது எனக்கு யாரும் துணையில்லை. என்னுடன் தொடர்புடையவர்களின் போன் நம்பர்களைக்கூட அவர்கள்தான் வைத்திருக்கிறார்கள். என்னைப் பற்றி அவதூறு பரப்பவும் தயாராக இருக்கிறார்கள்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் – நூல் வெளியீடு!

book-wrapper-3இது அர்ச்சகர் பணி என்கிற பிரச்சினை மட்டுமல்ல. தமிழனின் மானப் பிரச்சினை. கருவறைத் தீண்டாமை பிரச்சனை. இந்தியக் குடிமகன் எவர் ஒருவரும் கலெக்டர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், பிரதமர் ஆகலாம், குடியரசுத் தலைவர் ஆகலாம். ஆனால் அர்ச்சகர் மட்டும் ஆக முடியாது. அது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவரால் மட்டும் தான் முடியும் என்பது கேலிக் கூத்தாக இருக்கிறது.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம். கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் என்ற நூலை மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு பதிப்பித்துள்ளது. இந் நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி 14.03.13 வியாழன்று மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

ப.சிதம்பரம்: ராஜீவ்காந்தியை இழந்தோம்;அதற்கு யார் காரணம் என்பது உங்களுக்கே தெரியும்

 இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி காலம் முதலே காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருந்து வருகிறது. அதற்காக, விலை மதிப்பில்லாத மாணிக்கமான ராஜீவ்காந்தியை இழந்தோம்.
அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கன்ன செட்டி தெருவில், காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி., கிருஷ்ணசாமி எம்.பி., முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான், சேவாதள காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், கவுன்சிலர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியபோது, ’’மத்திய பட்ஜெட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக் காக இந்த ஆண்டு 41,561 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதேபோல் பழங்குடியின மக்களுக்காக 24,598 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டை வேறு திட்டங்களுக்காக செலவிடக்கூடாது என உத்தரவிடப் பட்டு ள்ளது.

மதுரையில் புதிய தி மு க உதயம்? பேசிக்கொள்கிறார்கள்? NEW DMK?

மதுரையில் நேற்று திடீரென மு.க.அழகிரியை கனிமொழி திடீரென சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களை படபடக்க வைத்துள்ளது.
மதுரைக்கு வந்த கனிமொழி, திடீரென முடிவு எடுத்து அழகிரியை சந்தித்தார் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே பக்காவாக திட்டமிடப்பட்ட சந்திப்பு அது.
மதுரை விமான நிலையத்தில் கனிமொழி வந்து இறங்குவது இது முதல் தடவையல்ல. முன்பெல்லாம், அவர் வரும்போது நாலைந்து பேர் வரவேற்க காத்திருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் நேற்று, வழக்கத்திற்கு மாறாக, அவரை வரவேற்க அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மூர்த்தி, மன்னன், மிசா பாண்டியன், கவுஸ்பாட்சா, எஸ்ஸார் கோபி என பெருங்கூட்டமே விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
ஆட்டம் பாட்டம் என பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்ட போதே, கனிமொழி, அஞ்சாநெஞ்சரின் ரூட்டில் வருகிறார் என புரிந்து விட்டது.
அப்போதே மதுரை தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு முகம் இருண்டு போனது. அடுத்து என்ன நடக்கிறது என படபடப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கனிமொழி தலைமையில் செயல்படும் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மதுரை மாவட்ட அமைப்பாளர் ஜி.பி.ராஜாவின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, கனிமொழி மதுரை வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களது படபடப்பை அதிகரிப்பது போல, ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பிய கனிமொழி, நேராக சென்ற இடம், அழகிரி வீடு!
viruvirupu.com

அழகிரி கனிமொழி சந்திப்பு இதுதான் பின்னணி

மதுரை:.மு.க. பொதுக்குழு கூட்டம் புறக்கணிப்பு, ஆதரவாளர்களுக்கு விளக்கம் கேட்டு தி.மு.க. நோட்டீஸ் என கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய மு.க.அழகிரியை இன்று கனிமொழி திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களை படபடக்க வைத்துள்ளது. சமீபத்தில் மதுரையில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொது கூட்டத்தில் கலந்து கொள்ளாத அழகிரி ஆதரவாளர்கள் பதினைந்து பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் விட்டது தி.மு.க தலைமை. இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத அழகிரி ஆதரவாளர்கள், நாங்கள் நடத்திய அஞ்சா நெஞ்சன் பிறந்த நாள் விழாவில், கலந்து கொள்ளாத ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர் கேள்வி கேட்டார்கள். இதனால் குழப்பமான மன நிலைக்கு ஆளானது அறிவாலயம்.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

பேச்சு சுதந்திரத்தை கொஞ்சமாவது அனுபவித்த தருணங்கள் எல்லாம் கலைஞரை திட்டிய போது கிடைத்தவையே

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் கலைஞர் கருணாநிதியை வாயில் வந்த
படியெல்லாம் திட்டி திட்டி தங்கள்  அரசியல் வறுமையையும் வெறுமையையும்  போக்கிகொண்டோர் பட்டியல் மிகவும் பெரிது , 
யாரும் அவரை எப்படியும் திட்டலாம்   அதிலும் இந்த புலி ஆதரவு கூட்டம் இருகிறதே!  தங்களுக்கு  எள்ளளவும் கிடைக்காத சுதந்திரம் என்பதை கொஞ்சமாவது ரசித்து அனுபவித்த தருணங்கள் எல்லாம் கலைஞரை திட்டியபோது கிடைக்க பெற்றவையே .
சுய சிந்தனை நூறு வீதமும் மறுக்கப்பட்ட பிரபாகரனின் பக்தர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட  ஏரியாவில் தானே கடை விரிக்க முடியும்?.
MGR க்கு கலைஞர் எதிரி MGR இன் பணமும் இதர சலுகைகளும் புலிகளுக்கு தேவை கலைஞரை எப்போதும் திட்டி கொண்டே இருக்காவிட்டால் MGR க்கு  சந்தேகம் வந்து விடும் எனவே கலைஞர் வசவை தங்கள் தாரக மந்திரமாகவே வைத்திருந்தார்கள் புலிகளின்

அந்த புலி பய நோய் அப்படியே ஜெயலலிதா மீதான பயப்பிராந்தியாக மாறியது 
ஒரு  தமிழ் துன்பியல்  அங்கதம் அரங்கேறி ,   தற்போது ஜெயா வின் அடிமட்ட ஆதரவு   வேஷதாரி  வரை  விரிவடைந்துள்ளது
இந்த வசவு அரசியலில் வைகோ நெடுமாறன்  கம்யுனிஸ்டு பாண்டியன் மற்றும் சீமான் போன்ற கூத்து கூட்டம் எல்லாம் விளம்பரம் கிடைக்கவும் அதன் மூலம் ஆதாயம் பெறவும்  இந்த கலைஞர் வசவு  மாசாலாவையே பாவம் நம்பி இருக்கிறார்கள்
அரசியல் என்றாலே  ஏதோ கலைஞர் வசவுதான் செல்லுபடியாகும் என்ற தப்பான பாடத்தை பயின்ற  இவர்கள் ஒரு வகை மனநோயாளிகளாகும்

இந்த ஜெயா ஜால்ரா பஜனை குழு கலைஞரை வசை பாடாத நாளே இல்லை புலிமீதும் ஜெயாமீதும் அவ்வளவு பயம் ,
கலைஞரை தாக்குவதில் ஒரு  சௌகரியம் இருக்கிறது.
நாளை கலைஞர் பதவிக்கு வந்துவிட்டாலும் அவர் பழிவாங்க மாட்டார் பாருங்க,
ஜெயாவும் பிரபாவும் பழிவாங்குவதில்   அவுரங்க சீப் கெட்டான் போங்கள்
இந்த பயப்பிராந்தி வசவு நோய் ஒரு நாள் பட்ட நோய் இலகுவில் குணமாகாது
ஆனாலும் எந்த நோய்க்கும் ஏதாவது ஒரு மருந்து இருக்கும் அது இயற்கை விதி .

அங்காடிதெரு அஞ்சலி மச்சான்ஸ் புகழ் நமீதாவாகிறார்?

அங்காடி ஹீரோயினுக்கு கோலிவுட், டோலிவுட்டுனு சான்ஸ் கொட்டுதாம்...
கொட்டுதாம்... இந்த குஷில சகட்டு மேனிக்கு ஃபேட் ஐட்டங்கள உள்ள தள்றாராம். இதால உடல் எடை கூடிட்டே போறாராம். இதை கவனிச்ச சில இயக்குனருங்க, ‘இப்படியே போனா நமீ ஹீரோயின மாதிரி பிகரை குறைக்க முடியாம கஷ்டப்படவேண்டி இருக்கும். புரிஞ்சி நடந்துகிட்டா பீல்டுல நீடிக்கலாம்‘னு அட்வைஸ் பண்ணிருக்காங்களாம்

120 அகதிகளை கடலோர காவல் படையினர் மீட்டு வந்தனர்

australia-2தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி நடுக்கடலில் தத்தளித்த 120 இலங்கை அகதிகள் கடலோர காவல் படையினர் மீட்டு அழைத்து வந்தனர்


இலங்கை அகதிகளை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக சில ஏஜெண்டுகளும், புரோக்கர்களும் உள்ளனர். இவர்கள் மூலம் அகதிகள் விசைப்படகில் தப்பிச்செல்ல முயலும்போது படகு என்ஜின் கோளாறு போன்ற காரணங்களால் அகதிகள் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது.காஞ்சீபுரம் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, நெல்லை மாவட்டம் தோகைமலைநல்லூர், வேலூர் மாவட்டம் வாலாஜா, குடியாத்தம் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் இருந்து 120 அகதிகள் வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றனர். இவர்களில் 79 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள், 20 குழந்தைகள் ஆவார்கள்.

ராகுல் புண்ணியத்தில் மீண்டும் த.மா.கா உதயம் ?

ராகுல் காந்தி  மாநில அரசியலை எள்ளளவும் புரிந்து கொள்ளாமல் கடந்த தேர்தலில் திமுகவையும் அதன் தொண்டர் பலத்தையும் சற்றும் மதிக்காமல் செய்த அரசியலின் பெறுபேறுகளில் இருந்து  எந்த பாடமும் படிக்கவில்லை , கழகங்களின் தயவு அதன்  தொண்டர்களின் ஆதரவு இல்லாமல் காங்கிரசுக்கு இனி தமிழ்நாட்டில் மீட்சி இல்லை .இதை நன்றாக புரிந்து கொண்டவர்கள் ராகுலிடம் பேசவே பயப்படுவதாக தெரிகிறது .ஈழ அரசியலை சாக்காக வைத்து தமாகாவை உருவாக்க முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது வாழ்க
டில்லி மேலிடத்தின் பாரபட்ச நடவடிக்கை, இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் த.மா.கா.,:
அப்பிரச்னைகளை மையப்படுத்தி, காங்கிரஸ் கட்சியை, இரண்டாக உடைக்க, மத்திய அமைச்சர் வாசனும், அவருடைய ஆதரவாளர்களும் தயாராகியுள்ளனர் என்றும், லோக்சபா தேர்தலுக்கு, மூன்று மாதம் முன், மீண்டும், த.மா.கா., உதயமாகும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, ஆறு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., "சீட்' பெறுவதற்கான பேச்சுவார்த்தை திரைமறைவில் துவக்கப்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயக் கடன் தள்ளுபடி... 'மஞ்சள் குளித்த' கழக கனவான்கள்

'விவசாயக் கடன்கள் ரத்து... பல கோடி விவசாயிகள் பலனடைந்தனர்' என்று அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகும். இப்படித்தான் கடந்த 2008-ல் மத்தியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கடைசியில் பார்த்தால், அதில் பெருமளவு தள்ளுபடி பணக்காரர்களாலேயே அனுபவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால்... விவசாயமே செய்யாதவர்கள், விவசாயி என்கிற போர்வையில் கடனையும் அதன் சலுகையையும் அனுபவித்தனர் என்பதுதான் உண்மை. இதையெல்லாம் மத்திய கணக்கு தணிக்கை குழு சில மாதங்களுக்கு முன் அம்பலப்படுத்திவிட்டது!அதே ஸ்டைலில்... தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் ரத்து செய்யப்பட்ட லட்சணத்தை... தற்போது திமுக மற்றும் அதிமுக இரண்டு பேருமே சட்டமன்றத்திலேயே வெளிச்சம் போட்டுள்ளனர். 'நீ என்னை கால் வாரிவிடறியா... நான் உன் காலை வாரிவிடறேன்' என்பதுபோல... இரண்டு கட்சியினரும் ஆதரங்களோடு ஒருவரை ஒருவர் வாரிக்கொள்ள...விவசாயிகள் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது அம்பலமாகியிருக்கிறது!அவர்கள் பேசிக்கொண்டதை கீழே அப்படியே கொடுத்திருக்கிறேன்..பொழிப்புரை ஏதும் இல்லாமலே நீங்கள் அத்தனையையும் புரிந்து கொள்ள முடியும்1

திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி (ஆத்தூர்..''திமுக ஆட்சியில் விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் முழுமையாக ரூ. 7 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டது. அதனால் 24 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர்.''

நிதி மோசடி: அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் ராமநாதன் அதிரடியாக சஸ்பென்ட்!

சென்னை: நிதி மோசடி செய்ததாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ராமநாதனை சஸ்பென்ட் செய்து ஆளுநர் ரோசய்யா உத்தரவிட்டிருக்கிறார்.84 ஆண்டுகால வரலாற்றுப் பெருமைக்குரியது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம். இதன் துணைவேந்தராக இருப்பவர் ராமநாதன். அண்மைக்காலமாக பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து சர்ச்சையில் சிக்கியது அண்ணாமலைப் பல்கலைக் கழகம். இதனால் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.இதைத் தொடர்ந்து சிறப்பு தணிக்கைக் குழு ஒன்று அண்ணாமலைப் பல்கலைக் கழக நிதி முறைகேடுகள் பற்றி விசாரிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் பல்கலைக் கழக நிதியை தவறுதலாக பயன்படுத்தி மோசடி செய்தல்., தேவைக்கு அதிகமான பணியிடங்களை நியமித்து ஊதியம் அளித்தல், பி.எப். பனத்தை செலுத்தாமல் இருப்பது என பல்வேறு முறைகேடுகளைக் கண்டுபிடித்து அரசிடம் அறிக்கையாக அளித்தனர்,

ஐயயோ, ஹோட்டல்லயா சாப்பிடப் போறீங்க?

நம்ம தமிழ்நாட்டு ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...
 இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க?
கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!

தவறான அரசியலின் முதல் பலி அமரர் Alfred.T.Duraiappah

துரையப்பாவின் செல்வாக்கை கண்டு பயந்த தமிழ்அரசியல்வாதிகள் 

இலங்கை தமிழர்களின்  அரசியலை பேசும் யாரும்  அமரர் Alfred Duraiyappah
அவர்களின்  வரலாற்றை  கவனிக்காமல் அரசியல்  பேசவே முடியாது
.
மக்களை உசுப்பேத்தி விட்டு அதில் குளிர்காய்ந்த  இனவாதிகளான தமிழ் அரசியல்வாதிககளுக்கு  மத்தியில் மக்களின் நல்வாழ்வை முதன்மை படுத்தி  மக்களுக்கு உருப்படியான சேவை செய்ததன் மூலம் ஒரு புதிய அரசியல் அத்தியாத்தை அவர் தமிழ் பகுதிகளில் ஆரம்பித்து வைத்தார் அன்றைய தமிழ் தேசிய பேசிய அரசியல்வாதிகளின் செல்வாக்கை யாழ்பாண தொகுதியில் உடைத்து எறிந்த  சுயேட்சை அரசியல்வாதியான அமரர்  அல்பிரெட் துரையப்பாவின் மக்கள் சக்தியையை கண்டு பயந்த அந்த அரசியல்வாதிகள்  அவரை  பற்றி படுகேவலமான  பொய்பிரசாரங்களை  கட்டவிழ்த்து விட்டது ஆனாலும் மக்கள் செல்வாக்கு அல்பிக்கு வளர்ந்து கொண்டே வந்தது. அவர் ஏனைய அரசியல்வாதிகள் போன்று மக்களுக்கு பொய்யான வாக்குறிதிகளை ஒருபோது வழங்காதவர்
சமுகத்தின் சகல தட்டு மக்களாலும் எப்போதும் அணுகக்கூடிய ஒரு மக்கள் தொண்டனாக அவர் இருந்தார் மேனா மினுக்கி தமிழ் கட்சிகளுக்கு அல்பியின் வளர்ச்சி வயிற்றில் புளியை கரைத்தது . பிற்காலத்தில் புலிகள் எப்படி யாரையும் கொல்வதற்கு முன்பாக அவரைபற்றி; படுமோசமான வதந்திகளை அவிட்டு விடுமோ அதே பாணியில் அல்பியை பற்றியும்; கணக்கில் அடங்காத கட்டு கதைகளை உலாவவிட்டு பிரபாகரன் போன்ற அன்றைய விடலைகளை தூண்டி விட்டு காரியத்தை சாதித்து கொண்டார்கள் அமரர் அல்பிரேட் துரையப்பாவை நான்தான் கொன்றேன் என்று பகிரங்கமாக பிரகடன படுத்திய ஒருவரை தண்டிபதற்கு பதிலாக தலைவர் என்று தலைமேல் வைத்து கொண்டாடி அதன் வினையையும் பிற்காலத்தில் முழு தமிழினமும் பெற்று கொண்டது.

சனி, 6 ஏப்ரல், 2013

தமன்னா அப்செட் ஹிம்மத்வாலா ப்ளாப்பாம்

 தமன்னா பிரபல காட்டன் ஹீரோவுடன்  காதல் என்று கிசுகிசு எழுந்தது.
பிறகு அந்த காதல் முறிந்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த தமன்னா கடந்த 1 வருடத்துக்கும் மேலாக தமிழ் படங்களில் நடிக்காமல் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தமிழ் பட வாய்ப்புகள் வந்தபோதும் அதை ஏற்க மறுத்தார்.  தற்போது மன ஆறுதல் அடைந்த தமன்னா 1 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் அஜீத் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.இதற்கிடையில் பாலிவுட்டில் ‘ஹிம்மத்வாலாÕஎன்ற படத்தில் நடிக்க தமன்னாவுக்கு வாய்ப்பு வந்தது. அசின், காஜல் அகர்வால், இலியானா போல் வெற்றி இலக்கை மனதில் வைத்து அதில் நடித்தார். இதற்காக பிரத்யேக நடன பயிற்சி மேற்கொண்டார். இப்படம் சமீபத்தில் பாலிவுட்டில் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதில் அவர் மனம் உடைந்தார். மீண்டும் தனது அதிர்ஷ்டத்தை சோதிக்கும் வகையில் மற்றொரு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்படத்தின் வெற்றிக்காக மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறாராம் தமன்னா.

பஸ் சாரதி, நடத்துனருக்கு மரண தண்டனை. பஸ் – ரயில் கோர விபத்து சம்பவம்

train_accident2005 அளவ்வ பஸ் – ரயில் கோர விபத்து சம்பவம், 41 பேரின் மரணத்துக்கு காரணமான பஸ் சாரதி, நடத்துனருக்கு மரண தண்டனை 10 வருட கடூழியச் சிறைத்தண்டனையுடன் தலா 5,000 ரூபா அபராதம் விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் தீர்ப்பு< அளவ்வ யாங்கல்மோதர பகுதியில் ரயிலுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளாகி 41 பேர் உயிரிழப்பதற்குக் காரணமாகவிருந்த தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு குருநாகல் – கொழும்பு வீதியில் அளவ்வ யாங்கல்மோதர பகுதியில் ரயில் கடவை மூடப்பட்டிருந்த சமயத்தில் ரயில் பாதையைக் கடக்க முற்பட்ட தனியார் பஸ் வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், 35 பேர் படுகாயமடைந்தனர்.

தமிழ் படங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட வேண்டும்: அமைச்சர் ரோஹன திஸாநாயக்க!

தென்னிந்திய சினிமா கலைஞர்களின் திரைப்படங்கள் இலங்கையில் திரையிடப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என பிரதிப் போக்குவரத்து அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  உலக வரைப்படத்தில் இருந்த இலங்கையை அகற்றும் அளவிற்கு தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் மாறியுள்ளனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் முழு உலகத்திற்கு எடுத்து கூறியுள்ள நிலையில்,  ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித்குமார், சரத்குமார் போன்ற நடிகர்கள் இணைந்து உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் இந்த நடிகர்கள் நடித்துள்ள திரைப்படங்களை இலங்கையில் திரையிடுவதை தடைசெய்ய வேண்டும் இவ்வாறான காட்போர்ட் வீரர்களை சூப்பர் ஸ்டார்களாக கருதிய காலத்தை நாம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் திஸாநாயக்க கூறியுள்ளார்./poonththalir.blogspot.com/

SunTV மன்மத’ ராஜா மீது கொலை வழக்கு?

SP_Reporter_Poster_31-3-2013.pdf
பாலியல் வழக்கில் சிக்கிய சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து தற்கொலை செய்துகொண்ட இரண்டு பெண்களின் வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டு வருகிறது. மேலும் ராஜா மீது புகார் கொடுத்த பெண்ணுக்குச் சிலர் கொலை மிரட்டல் விட, அது குறித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.சன் டி.வி.யின் செய்தி ஆசிரியர் ராஜாவை போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியானதும் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தாமாகவே போன் செய்து போலீஸாருக்கு ஏராளமான தகவல்களைக் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,‘‘நீண்ட நாட்களாக அவர் அந்த நிறுவனத்தில் பணி புரிவதால், செல்வாக்கோடு இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் செய்தி வாசிக்கும் பெண்களுக்கான செட்யூல் போடும் பணியை ஜோதிஸ்வரன் என்பவர் செய்து வந்துள்ளார். அவரை அவர்களின் இன்னொரு நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு அனுப்பியுள்ளனர். அதையடுத்து அந்தப் பணியையும் ராஜாவே சேர்த்துப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியுள்ளார். அதன் பின்னர்தான் பெண்களிடம் அவர் கைவரிசையை அதிமாகக் காட்டியிருக்கிறார். இதற்காக அவர் தனக்குக் கீழே உள்ள நம்பிக்கையான இரண்டு பேரை தேர்வு செய்துள்ளார்.
அதில் ஒருவர்தான் வெற்றிவேந்தன். அவர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களிடம் பக்குவமாகப் பேசி சம்மதிக்க வைப்பதில் கில்லாடியாம். அவரால் முடியாத நிலையில், அவர்களுக்கு ட்யூட்டி நேரத்தை மாற்றிக் கொடுப்பாராம். அப்போதும் பணியவில்லை என்றால், டி.வி.யில் வரவிடாமல் செய்துவிடுவார்களாம். அவர்களிடம், ‘செய்தி வாசிக்கும்போது உங்கள் முகபாவம் சரியில்லை. எப்படி செய்தி வாசிக்க வேண்டும் என்று என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று மன்மத ராஜாவிடம் அனுப்பி வைப்பாராம். 

தமிழர்களின் சாயம் தமிழ்நாட்டிலும் வெளுத்து விட்டது

தமிழகத்தில் தற்போது நடக்கும் அரசியல் கூத்துக்கள்  இலங்கை தமிழருக்கு
ஒருபோதும் ஒரு நல்ல  பங்களிப்பை நல்காது என்றே எண்ணுகிறேன் ஏனெனில் வரலாறு அப்படிப்பட்டது .
தமிழகம் என்று நாம் பெருதும் அறிந்து வைத்திருப்பது தமிழக சினிமாக்காரர்களையே . அடுத்த இரண்டாவது இடத்தில் நாம் தமிழகத்தவருடன் கொண்டிருக்கும் பரிச்சயமானது  தமிழ்நாட்டு பத்திரிகைகள் மூலமாகத்தான் .
இந்த இரண்டு உடக தொழில் துறையினரும் இலங்கை தமிழர்களை தமது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளனர்,
தமது வாடிக்கையாளர்களின் விருப்புக்களை நிறைவேற்றி தமது வருமானத்தை  உறுதி செய்வல்லாமல் வேறு எந்த காரணத்திற்காகவும் இவர்கள்  இலங்கை தமிழர்களுக்காக உண்ணா விரதம் போன்றவற்றை செய்வதில்லை நம்பினால் நம்புங்கள் . டெலோவை புலிகள் அழிக்கும்வரை சாதாரணமான மக்களிடம் இலங்கை தமிழர்களிடம் அனுதாபம் அன்பு எல்லாம் இருந்தது உண்மையே . அதன்பின்பு  இவங்க இன்னா சொந்த சகோதரர்களையே கொல்றாங்கப்பா அப்புறம் ஏன் சிங்களவனை திட்டிறாங்க என்று சாமான்யன்  சலிப்படைய தொடங்கினான் .
இறுதியில் பத்மநாபாவை சென்னையில் கொன்றதும் ஒட்டு மொத்த இலங்கை தமிழர்களின் சாயமும் தமிழ்நாட்டில் வெளுத்து விட்டது . ராஜீவ் காந்தியை கொன்றதும் அவர்கள் இலங்கை தமிழர்களை படுமோசமாக வெறுக்க தொடங்கினார்கள் .இன்று வரை இதுதான் உண்மை.
பின்பு புலன்பெயர் புது பணக்காரரின்  பணத்திற்கு விலைபோன  தமிழக உதிரிகளை வைத்துகொண்டு ஆதரவு படம் கீறுகிறார்கள். இவர்கள் கீறும் படம் ஒரு ஜீவனுள்ள ஓவியம் அல்ல. வெறும் இட்டு கட்டிய சாயக்கலவை.

சோனியாஜியின் மருமகன்ஜி ஊழழை அம்பலப்படுத்திய அதிகாரிக்கு 44-வது ட்ரான்ஸ்ஃபர்!

சாதா எம்.எல்.ஏ.வின் லீலைகளை அம்பலப்படுத்தினாலே போட்டு அடிப்பார்கள். இந்த லட்சணத்தில், சோனியாஜியின் மருமகன்ஜியில் கை வைத்தரரை போட்டு அடிப்பது மட்டுமல்ல, ஓட ஓட அடிப்பார்கள் என்பது தெரிந்ததுதான். அப்படி ஓட ஓட அடிவாங்கிக் கொண்டு இருக்கிறார் ஒரு அதிகாரி.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலமோசடியை அம்பலப்படுத்தி அரசியல் புயலை உருவாக்கிய ஹரியானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்கா, தற்போது வெற்றிகரமாக 44-வது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஹரியானா மாநிலத்தில் ஏராளமான விளைநிலத்தை அடிமாட்டுக்கு வளைத்துப் போட்டு அதை டி.எல்.ப். நிறுவனத்துக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தார் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா என்று கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இது அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியது.