செவ்வாய், 3 ஜனவரி, 2012

மாநில சுயாட்சித் தீர்மானத்தை அதிமுக கடுமையாக எதிர்த்தது


மாநில சுயாட்சி. தங்களுடைய உயிர்நாடிக் கொள்கையான திராவிட நாடு கோரிக்கையை ஒத்திவைத்ததற்குப் பிறகு திமுக முன்வைத்த கோரிக்கை. மாநிங்களுக்குப் போதுமான அதிகாரங்களைக் கொடுத்துவிட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ அவற்றை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டால் போதும் என்பதுதான் அண்ணா சொன்ன கருத்து. அதை அடிப்படையாக வைத்து மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற கோஷத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்தத் தொடங்கினார் கருணாநிதி.
1972 ஆகஸ்டு மாதத்தில் மதுரையில் திமுக மாநாடு ஒன்றை நடத்தினார் கருணாநிதி. மாநில சுயாட்சி மாநாடாக அடையாளப்படுத்தப்பட்ட அந்த மாநாட்டில் மாநில சுயாட்சிக் கோரிக்கை அழுத்தம்திருத்தமாக வலியுறுத்தப்பட்டது. தற்போது அந்தக் கோரிக்கையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றும் முடிவுக்கு வந்திருந்தார் கருணாநிதி. திமுக இன்னமும் பிரிவினை எண்ணங்களில் இருந்து விடுபடவில்லை; மாநில சுயாட்சி என்ற பெயரில் மீண்டும் மீண்டும் பிரிவினைக் கருத்துகளைத்தான் பரப்பிவருகிறது என்பது இந்திரா காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு.

தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் படுகொலை


தூத்துக்குடியில் பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி 3வது மைல் காமராஜர் நகரை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். கல்லூரி பேராசிரியர். இவருடைய மனைவி டாக்டர் சேதுராம லட்சுமி (வயது 50). இவர் அதேபகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். ஆஸ்பத்திரியின் பின்புறம் அவரது வீடு உள்ளது.
டாக்டர் சேதுராம லட்சுமி, நேற்று இரவு 10 மணி அளவில் ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது ஆஸ்பத்திரிக்குள் புகுந்த மர்ம கும்பல், டாக்டர் சேதுராம லட்சுமியை சூழ்ந்து கொண்டு அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி சாய்த்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

திங்கள், 2 ஜனவரி, 2012

முஸ்லீம் கட்சிகளை ஆதரிப்பதைவிட திராவிட கட்சிகளை ஆதரிப்பதில் தீவிரம்

தமிழ்நாட்டில் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை!ஏன்?


தமிழ்நாட்டில் நிறைய முஸ்லீம்கள் இருந்தும் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை. கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் முஸ்லீ்ம் கட்சிகள் பலமாக இருக்கினறன?
-எஸ். ஜமால், மதுரை.
கேரளா போன்ற மாநிலங்களில் முஸ்லீம் கட்சிகள் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறதோ, அந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க போன்ற இஸ்லாமியர் விரோதக் கட்சிகளும், இஸ்லாமியர் மீதான காழ்ப்புணர்ச்சி, வன்முறையும் வளர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரத்தின் காரணமாக, இந்துக்கள் மத்தியில் இந்து தீவிரவாத உணர்வு மழுங்கடிக்கப்பட்டது. இஸ்லாமியர்களை தங்கள் நேசத்திற்குரியவர்களாக பார்க்க, திராவிட இயக்கத்தின் சிறுபான்மை ஆதரவு நிலைபாடும் காரணமாக இருந்தது,

புது அணை கட்டினால் இரு மாநிலங்களும் பராமரிக்க முடியுமா?- நீதிபதி கேள்விக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு!


Justice AS Anandh
டெல்லி: முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்டினால் அதை தமிழகமும், கேரளாவும் இணைந்து பராமரிக்க முடியுமா என்று இன்றைய விவாதத்தின்போது ஐவர் குழு தலைவரான உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் கேட்டார். இதற்கு தமிழக வக்கீல்கள் கடும் எதிர்ப்பும், ஆட்சேபனையும் தெரிவித்தனர்.
நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு இன்று காலை டெல்லியில் உள்ள மத்திய நீர் ஆணையத்தின் அலுவலக வளாகத்தில் கூடியது.

நுங்கம்பாக்கத்தில் சு.சாமி உறவுக்காரப் பெண் கொலை

சென்னை: நுங்கம்பாக்கத்தில் இந்தியன் வங்கியின் துணை மேலாளர் சீதாலட்சுமி என்பவர் மர்ம மனிதனால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார். கொள்ளையன் அவர் அணிந்திருந்த நகைகளுடன் தப்பியோடிவிட்டான்.
சென்னை நுங்கம்பாக்கம் காந்தார் நகர் ஸ்கீம் ரோட்டைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (52). வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்தார். அவரது கணவர் ராம் மோகன். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். அதன் பிறகு சீதாலட்சுமி காந்தார் நகரில் உள்ள தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீட்டின் முன்பக்கத்தில் உறவினர் ஒருவர் குடியிருக்கிறார். பின்பக்கத்தில் சீதாலட்சுமி தங்கியிருந்தார்.

சீனாவில் இந்திய தூதரக அதிகாரி மீது பயங்கர தாக்குதல்

சீனாவின் இவூ நகரில் இந்திய தூதரக அதிகாரியை சீன வர்த்தகர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிழக்கு சீனாவில் உள்ள இவூ நகரில் Euro Global Trading என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அந் நாட்டு வர்த்தகர்கள் சிலருக்கு பாக்கி வைத்துள்ளது. பணத்தை தராத அந்த நிறுவனத்தின் அதிபர் சீனாவிலிருந்து தப்பிவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் இரு இந்திய ஊழியர்களான தீபக் ரகேஜா, ஷியாம்சுந்தர் அகர்வால் ஆகியோரை சீன வர்த்தகர்கள் கடத்திச் சென்று சிறை வைத்தனர்.

ஜெயலலிதா, கமல்ஹாஸனின் நடன ஆசிரியை சரசா மரணம்!


Sarasa
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரபல நடிகர் கமல்ஹாஸன் உள்ளிட்டோருக்கு நடனம் கற்றுத் தந்த கே ஜே சரஸா இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 72.
சென்னை மந்தவெளியில் சரசாலயா என்ற பெயரில் நடனப்பள்ளி நடத்தி வந்தார் சரஸா.
நடிக்க வரும் முன்பும், நடிகையான பின்பும் இவரிடம்தான் நடனம் கற்றுக் கொண்டாராம் இன்றைய முதல்வர் ஜெயலலிதா. பிரபல நடிகர் கமல்ஹாஸனுக்கும் ஆரம்ப நாட்களில் நடன ஆசிரியை சரஸாதான்.
இவர்களைத் தவிர, பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராம், பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கும் நடிகை ஷோபனா, சொர்ணமால்யா போன்றவர்களும் நடனம் கற்றுக் கொண்டனர்.
இன்று காலை மலர் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
சரஸா கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. தனது தங்கை சீதாவின் மகள் ராஜலட்சுமியை சுவீகாரம் எடுத்துக் கொண்டார். இந்த ராஜலட்சுதான் முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லை பெரியாரில் நிலநடுக்கத்தால் பாதிப்பு இல்லை : ஐவர் குழு அறிக்கை !

Mullaperiyar Dam

டெல்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐந்து பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழு பல்வேறு நிபுணர்களின் ஆய்வறிக்கைகள் மற்றும் நேரடிய ஆய்வு முடிவுகளை வைத்து விசாரித்து வருகிறது.

அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!

www.vinavu.com அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக்கொண்டு தேவனின் ‘அற்புதங்களை’ப் பிரச்சாரம் செய்வது; பிறகு தேவனின் மகிமை காப்பதற்கு அறிவியலை அவமதிப்பது என்ற திருச்சபையின் திமிருக்கும், இரட்டை வேடத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு.
டார்வின்
அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!கி.பி. 1860-ஆம் வருடம், ஜூன் மாதம். இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகம் மக்கள் வெள்ளத்தால் ததும்புகிறது; பற்பல நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் அறிஞர் பெருமக்கள், என்னதான் நடக்கும் என்று கிசுகிசுத்தவாறு அமர்ந்திருக்கும் பிரபு குலத்தவர்கள். நடைபெற இருந்த மாபெரும் விவாதப் போரைப் பற்றி ஆரவாரத்துடன் பேசிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் என ஆக்ஸ்போர்டு வளாகம் அதிர்ந்து கொண்டிருந்தது.
ஆக்ஸ்போர்டின் கலகலப்பிற்கு காரணம் உண்டு, ‘இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு அன்றைய இங்கிலாந்தில் ஒரு சூறாவளியைக் கிளப்பியவர் சார்லஸ் டார்வின். பரிணாமத் தத்துவத்தை 230 பக்கங்களில் விவரிக்கும் இச்சிறுநூல் ஏற்படுத்திய புயலில் விவிலியமும் பறந்து சென்றது.
இறைவனின் மறைவாக்கு கேள்விக்குள்ளாக்கப்படுவதை கிறித்தவ பாதிரிகள் கடுமையாக எதிர்த்தார்கள். பொதுமேடையில் விவாதத்திற்குத் தயாரா என்று டார்வினின் ஆதரவாளர்களுக்கு சவால் விட்டனர்.
மதத்தின் பிடியிலிருந்து அறிவியலை மீட்கும் கடமையுணர்வுடன் ஆக்ஸ்போர்டு விவாதத்திற்கு வருகை தந்தனர் டார்வினின் ஆதரவாளர்களான ஹக்ஸ்லியும், ஹூக்கரும். அறிவின் அடக்கத்துடன் அமர்ந்திருந்த இவ்வறிஞர்களின் எதிரில் ஆக்ஸ்போர்டு மதத்துறையின் பிரபலமான மதகுரு பிஷப் வில்பர் போர்ஸ் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து வீற்றிருந்தார். அவரைச் சுற்றி வெண் தூண்களாய் ஆண்டவனடியார்கள் மூளையைச் சாணை பிடித்துக் கொண்டு (!) அமர்ந்திருந்தனர்.

Vayalar Ravi:முல்லைப்பெரியாறு பிரச்சனை: மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது


முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்று, மத்திய மந்திரி வயலார் ரவி கூறினார்
தமிழ்நாடு கேரள மாநிலங்கள் இடையே நீடித்து வரும் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, கேரளாவில் உள்ள தலைவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி வயலார் ரவி, நேற்று கண்ணூர் வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டனர். இதற்கு பதில் அளித்து வயலார் ரவி கூறியதாவது:
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. இது இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் பிரதமர் மட்டும் ஒரு முடிவுக்கு வர முடியாது.
இரு மாநில அரசுகளும் இதுபற்றி பேசி ஒரு முடிவுக்கு வரலாம். இதற்கு இரு மாநிலங்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வயலார் ரவி கூறினார்.

இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டினர் நேரடியாக முதலீடு செய்யலாம்-மத்திய அரசு அதிரடி!

புத்தாண்டு முதல், இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டினரும் நேரடியாக முதலீடு செய்து பங்குகளை வாங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள், அறக்கட்டளைகள், பென்சன் நிதியை கையாளும் நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம்.
இதன்மூலம் இந்தியப் பங்குச் சந்தைகளில் டாலர்களின் முதலீடு அதிகரிக்கும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில், டாலர்களை அதிகளவில் ஈர்த்தால், ரூபாயின் மதிப்பு சரிவதையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசு கருதுகிறது.

பென்னி குயிக்கு 2000 வெள்ளி கொடுத்த பழனி செட்டி முல்லைப் பெரியாறு அணையை

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, தென் தமிழகத்தைச் செழிக்கச் செய்த பென்னி குயிக்கைத் தெய்வ மாக வழிபடுகிறார்கள் தென் தமிழக மக்கள்!

பென்னி குயிக் போற்றப்படுவதற்குக் காரணகர்த்தாவாக இருந்த பலர், வெளி உலகுக்குத் தெரியாமலேயே போய்விட்டார்கள். அவர்களில் ஒருவர்தான் பழனிசெட்டி!
பெரியாறு அணையைக் கட்ட பென்னி குயிக்குக்குத் தனி மனிதனாகப் பொருள் உதவி செய்தவர்களில் ஒருவர்தான், இந்தப் பழனிசெட்டி. இவருடைய பெயரை இப்போதும் பெருமையுடன் பேசிக்கொண்டு இருக்கிறது பழனிசெட்டிப்பட்டி கிராமம்.
 கர்னல் பென்னி குயிக் அணை கட்டும் வேலைகளைத்தொடங்கிய போது, இரண்டு முறை ஏற்பட்ட வெள்ளத்தில் அணை உடைந்துபோனது. இதனால் அணை வேலைகளை நிறுத்திவிட்டு திரும்பும்படி இங்கிலாந்து அரசு, பென்னி குயிக்குக்கு உத்தரவிட்டது. பஞ்சத்தில் உழன்றுபசியில் தவித்த மக்களைப் பார்த்த பென்னிக்கு இங்கிலாந்து செல்வதற்குத் துளியும் விருப்பம் இல்லை. அணை கட்ட அரசு, பணமும்ஒதுக்கவில்லை. 'செல்வந்தர்களிடம் உதவி கேட்கலாம்’ என முடிவு செய்தார் பென்னி.யாரும் ஒத்துழைப்புக் கொடுக்க வில்லை. மனம் உடைந்த பென்னி, அணைக்கட்டுப் பகுதிகளை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு, இங்கிலாந்து கிளம்பலாம் என்கிற முடிவோடு குமுளிக்குக் கிளம்பினார். செல்லும் வழியில் வெயில் அதிகமாக இருந்ததால் பிலாக்கிபுரம் (தற்போதைய பழனிசெட்டிப்பட்டி) ரோட்டில் இருந்த வேப்ப மர நிழலில் ஓய்வு எடுத்து இருக்கிறார். அங்கே பென்னி குயிக்கைச் சந்தித்து இருக்கிறார் பழனிசெட்டி. அணையின் பயன்களை கேட்ட பழனிசெட்டி, பென்னியை வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோய், 2 ஆயிரம் வெள்ளி பணத்தை அவர் கையில் கொடுத்துஇருக்கிறார். மீதிப் பணத்துக்கு, பென்னி குயிக் தன்னு டைய மனைவியின் நகைகளை விற்று அணையைக் கட்டி, தென் மாவட்டங்களை பஞ்சத்தில் இருந்து மீட்டாராம். (இந்தச் செய்திகளை பென்னி குயிக்கே தன்னுடைய டைரியில் குறிப்பிட்டு உள்ளார்)

வாச்சாத்தி' படத்திற்கு இயக்குநர்கள் சங்கம் முழு ஆதரவு - அமீர் அறிவிப்பு


 'வாச்சாத்தி' படத்திற்கு இயக்குநர்கள் சங்கம் முழு ஆதரவு - அமீர் அறிவிப்புசென்னை, டிச.31 (டிஎன்எஸ்) மலைவாழ் மக்கள் வாழும் வாச்சாத்தியில் நடந்த உண்மை சம்பவத்தைக் கருவாக கொண்டு உருவாகும் 'வாச்சாத்தி' படத்திற்கு இயக்குநர்கள் சங்கம் முழு ஆதரவு கொடுக்கும் என்று இயக்குநர் அமீர் கூறியிருக்கிறார்.
1992ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம், அரூர் தாலுக்காவில் உள்ள மலைவாழ் மக்கள் வாழும் கிராமமான வாச்சாத்தியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை படமாக உருவாக்குகிறார்கள்.

சென்ற ஆண்டின் சொதப்பல்ஸ் ஆஃப் 2011'


Rajapattai and Osthi Movies


தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அல்லது தாங்களாகவே பணம் செலவழித்து ஏக எதிர்ப்பார்ப்பை உருவாக்கி, அதை பூர்த்தி செய்யத் தவறிய படங்களின் வரிசை இது.
1. ஒஸ்தி
கஷ்டப்பட்டு திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த தரணியின் இயக்கத்தில் வெளியாகி சென்ற ஆண்டின் சொதப்பல்களின் சிகரம் என்ற 'சிறப்பைப்' பெற்றது இந்தப் படம். ஸ்கூல் பையனுக்கு காக்கி யூனிபார்ம் மாட்டி, மாறுவேஷப் போட்டிக்கு அனுப்பிய மாதிரி இருந்தது என பலரும் நக்கலடிக்கும் அளவுக்கு பொருந்தாத ஹீரோயிஸம், நெல்லைத் தமிழ் என்ற பெயரில் சகிக்க முடியாத உச்சரிப்பு, 10 நிமிடம் கூட தொடர்ந்தார் போல இருக்கையில் உட்காரமுடியாத அளவுக்கு எரிச்சலூட்டும் காட்சிகள் என.... பார்த்த அத்தனை பேரையும் படுத்தி எடுத்த படம் இது.

விரைவில் Indian bullet train புல்லட் ரயில்

ஒரு மணி நேரத்தில் 300 கி.மீ., தூரத்தை, அசுர வேகத்தில் கடக்கும் அதிவேக புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை, ரயில்வே அமைச்சகம் முடுக்கி விட்டுள்ளது. முதற்கட்டமாக மும்பை - புனே - ஆமதாபாத் வழித்தடம் தேர்வாகி, அதற்கான ஏற்பாடுகள் துவங்கவுள்ளன.


இந்தியாவிலும்  புல்லட் ரயில் சேவைக்கு இறுதி வடிவம் நெருங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவை குறிப்பை (கேபினட் நோட்) ரயில்வே ஆணையம் தயாரித்துள்ளது. வெகு விரைவில் இந்த குறிப்பு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

முதல்கட்டமாக என்ன? இதன்படி முதல்கட்டமாக, டில்லி - சண்டிகர் - அமிர்தசரஸ், புனே - மும்பை - ஆமதாபாத், ஐதராபாத் - சென்னை, ஹவுரா - ஹால்தியா, சென்னை - பெங்களூரு - கோயம்புத்தூர் - எர்ணாகுளம் - திருவனந்தபுரம், டில்லி - ஆக்ரா - லக்னோ - வாரணாசி - பாட்னா என, ஆறு வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், தற்போது மும்பை - புனே - ஆமதாபாத் வழித்தடம் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கட்சியில் சேருவோரிடம் சத்தியம் வாங்க ராமதாஸ் உத்தரவு

சென்னை: கட்சியில் சேர்க்கும் புதிய உறுப்பினர்களிடம், பா.ம.க.,வுக்கு ஓட்டுப் போட, குல தெய்வத்திடம் சத்தியம் வாங்க ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட பா.ம.க.,வின் பொதுக்குழு, சென்னை அடுத்த பாடியில் நடந்தது. இதில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பா.ம.க., ஆரம்பித்த ஐந்து மாதத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து நின்று 7 சதவீத ஓட்டுகள் பெற்றோம். தற்போது நடந்த தேர்தலில் கூட்டணி வைத்து வெறும், 2.15 லட்சம் ஓட்டுகள் மட்டுமே பெற்றோம். கூட்டணி வைத்ததால் வந்த பின்னடைவு இது. நாம் அடிக்கடி கூட்டணி மாறுகிறோம் என்று பொதுமக்கள் கிண்டல் செய்தனர். இரண்டு திராவிட கட்சிகளும் நம்மை இழுத்தடித்தனர்.

ஜெ.அரசின் நிர்வாகம்! சட்டமன்ற உறுப்பினர்களே சங்கடப்பட்டு நிற்கிறோம்!

ஜெயலலிதா அரசின் நிர்வாகச் சீர்கேடு என்பது எங்கிருந்து துவங்குகிறது?
அதிரடியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடம் மாற்றுவது, அமைச்சர்களை அடிக்கடி துறை மாற்றுவது, நீக்குவது என்று எப்போதும் மாற்றம் குறித்த செய்திகளே பத்திரிகைகளில் பிரதான இடம் பிடிக் கின்றன. ஒரு அமைச்சர் தன் துறையில் குறைந்தபட்சம் ஒரு முழு ஆண்டாவது செயல்பட்டால்தான் அந்தத் துறையின் நடைமுறைகளை முழுக்கப் புரிந்துகொள்ள முடியும். அப்போதுதான் துறை அதிகாரி களிடம் நல்லுறவைப் பேணவும் முடியும். ஆனால், அதற்குக் கொஞ்சமும் வாய்ப்பு அளிக்காமல் அடிக்கடி அதிகாரிகளையும் அமைச்சர்களையும் மாற்றுவது நிர்வாகச் சிக்கல்களைத்தான் அதிகமாக்கும். ஒவ்வொரு மாற்றத்தின்போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சர்களும் தவறு செய்திருப்பார்களோ என்று உருவா கும் பிம்பம் காரணமாக, அவர்கள் மாற்ற லாகிச் செல்லும் துறையினர் அவர்களைச் சுதந்திரமாக அணுக யோசிப்பார்கள். அதிகாரிகள்தான் அமைச்சர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால், அதற்கு இங்கே வழி இல்லாத வகையில் அதிகாரிகளும் பந்தாடப்படுகிறார்கள்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

Indian cities top in Google search for Sex!

From R. Vasudevan—Reporting from New Delhi
New Delhi, 01 January (Asiantribune.com):
Given the size of Indian population, one would have thought Indians get enough sex. But that still doesn't stop Indians from searching for more.
Data collected by Google through its search engine shows that in 2011, seven Indian cities featured in the list of top 10 cities worldwide where the "sex" query was particularly popular.
The rankings might come as a bit of a surprise. Lucknow and Kolkata - cities which pride themselves on their high cultural values -- came in at No. 2 and 3, respectively. Pune was at No. 5, New Delhi at 6, Bangalore at 7, Chennai at 8 and Mumbai at 9. The only non-Indian cities in the list were Colombo, which topped the chart, Lahore at No. 4 and Hanoi at 10.
In short, every single city in the top 10 was from Asia. The famed Indo-Pak rivalry spilled over to this sphere as well, with Pakistan emerging as the country from where Google received the maximum number of search queries for "sex" in 2011.
Pakistan had topped the list in 2010 as well.

2011 - டாப் 10 குத்து பாடல்கள்


1. ஹுய்! ரக்கம்மா ராக்கு ராக்கு... (சிறுத்தை)

9.நீ சிரிச்சா கொண்டாட்டம்... (தூங்கா நகரம்)


8.இச்சு இச்சு இச்சு... (வெடி)


7.நோ மணி... நோ மணி... (வானம்)

6.சில்லாக்ஸ்... (வேலாயுதம்)


5.சங்கிலி புங்கிலி கதவ தொற... (கஞ்சனா)

4.ஹே திய்யா திய்யா டோலு... (அவன் இவன்)


ன்னித்தீவு பொண்ணா... (யுத்தம் செய்)

2.கலாசலா கலசலா... (ஒஸ்தி) 

1.ஒத்த சொல்லால... (ஆடுகளம்)


3ல் ஒரு டைவர்சுக்கு பேஸ்புக் காரணம் !

லண்டன்: உலகம் முழுவதும் நடக்கும் 3ல் ஒரு விவகாரத்துக்கு சமூக இணையதளமான பேஸ்புக்தான் காரணம் என்று இங்கிலாந்து சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, விவாகரத்து சட்ட ஆலோசனை அளிக்கும் டைவர்ஸ் ஆன்லைன் நிறுவன நிர்வாக இயக்குனர் மார்க் கென்னன் கூறியுள்ளார். இது பற்றி, டெய்லி மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:கடந்த ஓராண்டில் பெறப்பட்ட விவாகரத்துகளில் 33 சதவீத வழக்குகளின் நீதிமன்ற வாதங்களில் பேஸ்புக்  இடம்பெற்றது. எங்களிடம் வந்த விவாகரத்து தொடர்பான 5,000 புகார்களில் மூன்றில் ஒன்றில் பேஸ்புக் பற்றி மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.பேஸ்புக் பக்கங்களில் தங்கள் நண்பர்களுடன் பலர் மனம் திறந்து தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

லோக்பால்: 187 திருத்தங்களை ஏற்க முடியாது: சிதம்பரம்

மும்பை: "லோக்பால் மசோதா தொடர்பாக, ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்ட 187 திருத்தங்களையும் ஏற்க முடியாது. இதில், ஏதாவது ஒரு சில திருத்தங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2011 திருப்பதி ஏழுமலையானுக்கு 1,600 கோடி வருமானம்

  திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த ஆண்டில் 1,600 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.  நாட்டிலேயே மிகவும் பிரபலமான கோயிலாகவும், வருமானம் அதிகம் உள்ள கோயிலாகவும் திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது. ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். அவர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், நகை போன்றவற்றை செலுத்துகின்றனர். தவிர, சேவா டிக்கெட் மூலம் சிறப்பு தரிசனமும் செய்கின்றனர். இதனால் ஆண்டுக்கு ஆண்டு ஏழுமலையானின் வருமானம் அதிகாரித்துக் கொண்டே வருகிறது.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்துக்கு கிடைத்த முதல் வெற்றி !


முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவு தமிழகத்துக்கு ஓரளவு ஆறுதலை தந்துள்ளது.முல்லைப் பெரியாறு அணையில் ஏதேனும் பிரச்னை திடீரென்று ஏற்பட்டால், அதை சமாளிக்க மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ.) அவசர கால நடவடிக்கை திட்டத்தை உருவாக்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டது. கேரள அரசின் மனுவின் பேரில் இந்த குழு அமைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகாரக் குழு உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரையில் இந்த நிபுணர் குழு அமைப்பதை நிறுத்தி வைத்து, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சில தினங்களுக்கு முன்பு  உத்தரவிட்டது. முல்லைப்பெரியாறு விஷயத்தில் மவுனம் காத்து வந்த மத்திய அரசு, குறைந்தபட்சம், முதல்வர் ஜெயலலிதா மற்றும் தலைவர்களின் குரலுக்கு செவிசாய்த்து, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து, குழு அமைப்பதை தடுத்து நிறுத்தியது கண்டிப்பாக முதல் வெற்றி தான்.  கேரளாவின் தந்திரம் ஒரு நதியில் அணை கட்ட வேண்டும் என்றால் அந்த அணை கட்டப்படும் இடத்துக்கு மேல் பகுதியில் (அப்பர் ஸ்ட்ரீம்) இருக்கும் மாநிலம், நாடு மற்றும் கீழ்பகுதியில் (டவுன் ஸ்ட்ரீம்) இருக்கும் மாநிலம், நாடு ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும். அணை கட்டப்படும் நதியினால் குடிநீர் வசதி பெறும் மக்கள், பாசன வசதி பெறும் விவசாயிகள் நலனைக் காக்கவே இந்த ஏற்பாடு. ஐ.நா.சபையில் ஏற்கப்பட்ட ‘ஹெல்சிங்கி’ தீர்மானமும் இதை வலியுறுத்துகிறது. முல்லைப் பெரியாறில் புதிய அணையை கேரளா கட்ட வேண்டும் என்றால், தமிழக அரசு, மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உட்பட 3 உயர்நிலை குழுக்கள் ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும். கேரள அரசு இந்த அனுமதி எதையும் பெறவில்லை. பெறவும் முடியவில்லை. 

சசிகலாவை துரத்தியது ஏன்’ என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

சசிகலாவும் அவருடைய உறவினர்​களும் பணவெறி பிடித்தவர்கள், ஆட்சிக்குக் கெட்ட பெயர் உண்டாக்கும் அளவுக்குக் கொள்ளை அடிப்பவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அம்மையாருக்கு 20 வருடங்களுக்கும் மேல் ஆனதா? தன்னைச் சுற்றி தன் வீட்டிலேயே நடந்த இந்தத் தவறுகளைக் கண்டுபிடிக்க முதல்வருக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டது என்றால், நாட்டில் நடக்கும் தவறுகளைக் கண்டுபிடிக்க அவருக்கு எத்தனை வருடங்கள் தேவைப்படும்!''ஜெயலலிதாவின் அதிரடிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. சசிகலா தரப்பு இன்னமும் சைலன்ட். மீடியாக்களுக்கு மிக நெருக்கமானவரான நடராஜனும் வெளிநாடு சென்று விட்டார். நடராஜன் ஏ.பி.ஆர்.ஓ​-வாக பணியாற்றிய காலம்தொட்டு அவருக்கு நண்பராக இருப்பவர் திருச்சி வேலுச்சாமி.
ஜெ. - சசி மோதல் கொழுந்துவிட்டு எரிகிற நிலையில் நடராஜனின் நண்பராக இங்கே மனம் திறக்கிறார் வேலுச்சாமி!
 ராவணன், கலியபெருமாள் என்று கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள், பவர் சென்டர்களாக மாறி கட்சிக்காரர்களை எப்படி எல்லாம் ஆட்டுவித்தார்கள் என்பது கண்கூடு. வேட்பாளர்கள் தேர்வு தொடங்கி யார் அமைச்சராவது என்பது வரை அத்தனையும் அந்த பவர் சென்டர்களின் விருப்பப்படியே நடந்தது. இதைப் பார்த்துக் குமுறிய எம்.ஜி.ஆரின் பக்தர்கள் இன்றைக்கு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால், அதேநேரம் இத்தனை காலம் ஜெயலலிதாவுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்த சசிகலா, இன்றைக்கு பலவிதமான பழிகளுக்கு ஆளாகி நிற்பதை ஏற்க முடியவில்லை. 'என் உடன்பிறவா சகோதரி’ என சசிகலாவை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய முதல்வர் ஜெயலலிதா, 'அவரைத் துரத்தி அடித்தது ஏன்’ என்பதையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

RAID. sasi jeya பங்கு பிரிப்பு சிக்கல் மந்திரிகள் வீட்டிலேயே மாநில அரசின்

கவர்னர் ரோசையா அடிக்கடி அமைச்சரவையை மாற்றுவது நல்லதல்ல என்று கூறியதால் மந்திரிகளை டிஸ்மிஸ் செயும் முடிவை  சுமார் மூன்று மாதங்களுக் காவது  தள்ளி வையுங்கள். அடிக்கடி மந்திரிகளை மாற்றினால், அரசாங்கம் ஸ்திரத்தன்மையில் இல்லை என்று அர்த்தம்’ என்பதாகச் சொன்னாராம். இதனால் முதல்வர் ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாராம். '11 முதல் 15 அமைச்சர்கள் வரைக்கும் மாற்றம் செய்தே ஆகவேண்டும் என்பதில் அம்மா உறுதியா இருக்காங்க. கவர்னர் இப்படிச் சொன்னதால் யோசிக்கிறாங்க. எப்படியும் ஜனவரி பாதி வரைக்கும் மந்திரிசபை மாற்றம் தள்ளிப் போகலாம். ஆனா, கட்டுச்சோத்துக்குள் பெருச் சாளிகளை மூன்று மாதமெல்லாம் அம்மா தங்கவிட மாட்டாங்க’ என்று சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்!' எல்லாம் பங்கு பிரிப்பு சிக்கல்