புதன், 16 நவம்பர், 2022

கர்நாடகாவில் 250 பெண்களை மணக்க குவிந்த 14,000 ஆண்கள்! திருமண மையம்

tamil.news18.com  :  250 பெண்களை வரன் பார்க்க 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடிய  அதிசயதக்க நிகழ்வு கர்நாடகாவில்  நிகழ்ந்துள்ளது.
பல இடங்களில் இளைஞர்கள் திருமணத்துக்கு மணப்பெண் கிடைக்காமல் தவிப்பதால் தகுந்த மணமகள்களை மணமுடிக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் திருமண வரன் பார்க்கும் நிகழ்வுகளில் ஆண்கள் கூட்டம் அலைமோதுவதை தொடர்ந்து பார்த்து வந்துள்ளோம்.
அப்படி ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம் மண்டியாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில், நாகமங்கலா தாலுகா ஆதிசுஞ்சனகிரி தொகுதியில் திருமண வரன் பார்க்கும்  நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலில் வடிந்த திரவம்! துடிதுடித்த மாணவி பிரியா.. நடந்தது என்ன ?

tamil.oneindia.com  -   shyamsundar :  சென்னை: சென்னையில் கால் அகற்றப்பட்ட மாணவி பிரியா மரணம் அடைந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை மாணவி பிரியாவின் கால்கள் அகற்றப்பட்டு அதன்பின் அவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது.
தமிழ்நாட்டிலா இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது என்று சொல்லும் அளவிற்கு மிக கொடூரமான சம்பவம் தலைநகர் சென்னையில் நடைபெற்று இருக்கிறது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மாணவி பிரியா. 17 வயதான இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

“ஒருநாள் இது நடக்கும்” : இறப்பதற்கு முன் ஷ்ரத்தா

மின்னம்பலம் -christopher :  டெல்லியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண் ஷ்ரத்தா, தான் கொல்லப்படுவதற்கு முன் தன்னை காப்பாற்றும்படி தகவல் கொடுத்ததாக அவரது நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் அப்தாப் பூனாவாலா என்பவரால் ஷ்ரத்தா வால்கர் என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
இதனையடுத்து போலீசார் இந்த கொலை வழக்கில் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 26 வயதான ஷ்ரத்தாவுக்கும், கொலையாளி அப்தாப் அமீன்(28) என்ற நபருக்கும் டேட்டிங் செயலியான பம்பிள் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

மிசோரம் கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த 11 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு- மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரம்

மாலை மலர் :  மிசோராமில் கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த 11 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு- மேலும் ஒருவரை உடல்கள் மீட்கப்பட்டன.
விபத்தில் மீதமுள்ள ஒருவரை தேடும் பணி நீடிப்பதாக கூடுதல் துணை ஆணையாளர் சாய்ஜிக்புய் கூறியுள்ளார்.
மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது.
இந்த குவாரியில் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென குவாரியில் கற்கள் அதிக அளவில் சரிந்து விழுந்துள்ளன.
இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கினர். இதுபற்றி தகவல் அறிந்து எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செவ்வாய், 15 நவம்பர், 2022

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

கரூர்: கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

மாலைமலர் : கரூர் கரூர் மாவட்டம் சுக்காலியூர் காந்திநகர் பகுதியில் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்துள்ளது.
இந்நிலையில், அதில் போடப்பட்ட சவுக்கு குச்சிகள் மற்றும் கான்கிரீட் பலகைகளைப் பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் மேன்ஹோல் எனப்படும் மூடியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த மோகன்ராஜ், ராஜேஷ் ஆகிய 2 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.

தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு . இரு மருத்துவர்கள் இடை நீக்கம்

தினமலர்  : சென்னை; விளையாட்டு வீராங்கனை உயிரிழக்க காரணமாக இருந்த, இரண்டு டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா..சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிகுமார். அவரது மகள் பிரியா, 17; கால்பந்து வீராங்கனையான இவர், ராணிமேரி கல்லுாரியில், விளையாட்டு பிரிவில், பட்டப் படிப்பு படித்து வருகிறார்.
இவருக்கு, வலது கால் மூட்டு பகுதியில் ஜவ்வு விலகியதால், கொளத்துார் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை நடந்தது. மேல் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அவரது கால் அகற்றப்பட்டது.
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகத் தான், பிரியாவின் கால் அகற்றப்பட்டதாக, பெற்றோர் குற்றம் சாட்டினர்.

காதலி உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிஜ்ஜில் வைத்து கடலில் வீசிய காதலன் மகாராஷ்டிரா

மாலைமலர் :புதுடெல்லி:  மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா (வயது 26). மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் இவர் வேலை பார்த்து வந்தார்.
அப்போது உடன் வேலை பார்த்த அப்தாப் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் மலர்ந்தது. அந்த காதலை ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்த்தனர்.
அதையடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் காதல் ஜோடி டெல்லிக்கு இடம் மாறியது.
அங்கு மெக்ருலி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினர்.
இதற்கிடையே மும்பையில் உள்ள பெற்றோருடனும் ஷ்ரத்தா தொடர்ந்து பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 18-ந் தேதிக்கு பிறகு ஷ்ரத்தாவை அவருடைய பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா காலமானார்.. நடிகை விஜயநிர்மலாவின் கணவர், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை

தினத்தந்தி   : ஐதராபாத தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக காலமானர். நடிகர் கிருஷ்ணா திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

லிங்காயத் மடாதிபதி சிறுமிகளை மிரட்டி மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் ..சிறுமிகள் சாட்சியம்

Shivamurthy Sharanaru

tamil.samayam.com சாக்லேட் சாப்பிட்டதும் மயக்கம்.. அதன்பின் உடலெல்லாம் வலி..லிங்காயத் மடாதிபதிக்கு எதிராக சிறுமிகள்.!
கர்நாடகாவில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக, 64 வயதான லிங்காயத் சமூக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு உள்ளார். லிங்காயத் மடங்களை ஆன்மிகப் பள்ளிகளாக மாற்றியதில் பிரபலமான இவர், பெங்களூரில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தால் நடத்தப்படும் பள்ளியில், மைனர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி கடந்த செப்டம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு தலைமை தாங்கிய சித்ரதுர்கா காவல் கண்காணிப்பாளர் கே.பரசுராம் கடந்த காலங்களில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குழந்தைகள் எதிர்க்கும் போதெல்லாம், மயக்க மருந்து தடவிய ஆப்பிள்களை அவர்களுக்கு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார்" என்று கூறினார்.

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முருகன் தவிர மற்ற 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை


 மாலைமலர் : : திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த போலி பாஸ்போர்ட், விசா மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
3 பிளாக்குகளை கொண்ட இந்த முகாமில் ஒரு பிரிவில் இந்த கைதிகள் இருக்கிறார்கள். அவர்கள் சொந்தமாக சமைத்து சாப்பிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கு முடிந்த பின்னர் அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இதற்கிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலையான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

எம்பி தேர்தல்: பாஜக குறி வைக்கும் எட்டு தொகுதிகள்.. தென் சென்னை, வேலூர், ஈரோடு, கோவை, சிவகங்கை.... ?

 minnambalam.com  -  Aara  :  மக்களவைத் தேர்தல் 2024 இல் வர வேண்டியிருக்கிறது.   குஜராத், இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒருவேளை பாஜகவுக்கு சாதகமாக வரும் பட்சத்தில் இந்த சூட்டோடு சூடாக 2023 ஆம் ஆண்டே மக்களவைத் தேர்தலை நடத்தி முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறது பாஜக.
அந்த வகையில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் எம்பி தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது பாஜக. தமிழ்நாட்டிலும் அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.
நவம்பர் 12 ஆம் தேதி சென்னையில்  பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகளோடு முக்கிய ஆலோசனை நடத்திய அமித் ஷா,  ‘இதே திசையில் இன்னும் வேகமாக செல்லுங்கள்’ என்று பாஜகவினருக்கு பூஸ்ட் கொடுத்துள்ளார்.
மேலும் தமிழகத்துக்கு மத்திய அமைச்சர்களை அதிகமாக பிரதமர் மோடி அனுப்பிக் கொண்டிருக்கிறார். மத்திய அமைச்சர்கள் வருகை மூலமாக தமிழ்நாட்டுக்கு மோடி அரசு செய்து வரும் மக்கள் நலத்திட்டங்களை  தமிழ்நாடு மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள்’ என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் காலமானார் – ஒரு அரசியல் ஆளுமையின் இழப்பு!

May be an image of 5 people and people standing

thesamnet.co.u: தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் காலமானார் – ஒரு அரசியல் ஆளுமையின் இழப்பு!
 த ஜெயபாலன்
காண்டீபன் அமிர்தலிங்கம் இன்று காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டது மட்டுமல்ல தமிழீழ இராணுவம் என்ற அமைப்பையும் இவர் கட்டமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்தார். ஈரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இயற்கை எய்தியதாக தமிழீழ விடுதலைக் கூட்டணி நண்பர்கள் தெரிவித்தனர். தமிழரசுக் கட்சி தமிழ் காங்கிரஸ்சோடு சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி அதன் தலைவராகி எதிர்க்கட்சித் தலைவருமானவர் இவருடைய தந்தையார் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இலங்கைத் தமிழர்களிடையே அரசியல் குடும்பமாக மிகவும் அறியப்பட்டது அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி குடும்பத்தினர். இவர்களுடைய மூத்தமகனே காண்டீபன் அமிர்தலிங்கம். இவருடைய இளைய சகோதரர் பகீரதன் அமிர்தலிங்கம் மருத்துவர் லண்டனில் வாழ்கின்றார். இந்த அரசியல் குடும்பத்தில் இறுதியாக எம்மத்தியில் வாழ்பவர் இவர் மட்டுமே.

திங்கள், 14 நவம்பர், 2022

322 கைதிகள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல்!

மின்னம்பலம் -monisha  :  அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறைக்கைதிகள் 322பேரை விடுவிக்க கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு ஓர் ஆண்டு கழித்து இப்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
திமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட நாட்களாகச் சிறையில் உள்ள கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கம். கடந்த ஆண்டு(2021) 509கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக அரசு ஆளுநரிடம் பரிந்துரைத்தது.
ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டார்.

ராஜீவ் கொலை வழக்கில் மறுசீராய்வு மனுவை காங். தாக்கல் :புதுவை நாராயணசாமி தகவல்

 hindutamil.in : ராஜீவ் கொலை வழக்கில் மறுசீராய்வு மனுவை காங். தாக்கல் செய்யும்: நாராயணசாமி தகவல்
புதுச்சேரி: “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யாவிட்டால் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்படும்” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேரு பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்பி வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு நேரு படத்திற்கு மாலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி கூறியது:

ரஷிய ராணுவம் வெளியேறிய கெர்சன் நகருக்கு வருகை தந்த அதிபர் ஜெலன்ஸ்கி

மாலை மலர்  :  கீவ்: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின.
அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றினர்.
இதற்கிடையே, கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள், படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன என தெரிவித்தார்.

துருக்கி குண்டுவெடிப்பு 6 பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் காயமடைந்துள்ளனர்

தினத்தந்தி : துருக்கி குண்டுவெடிப்பு தாக்குதல்; சந்தேக நபர் கைது: துருக்கி உள்துறை மந்திரி
துருக்கியில் குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 பேர் பலியான சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு உள்ளார் என உள்துறை மந்திரி கூறியுள்ளார்.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் கடைகள் அதிகம் நிறைந்த இஸ்திக்லால் பகுதியில் நேற்று திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 81 பேர் காயமடைந்துள்ளனர்.
துருக்கி நாட்டு உள்ளூர் நேரப்படி மாலை 4.20 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது என்று இஸ்தான்புல் கவர்னர் அலி யெர்லிகாயா கூறினார். இந்த வீதியில் பல கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளன.

24 மாவட்டங்களில் 45 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியது-

மாலைமலர் : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 12-ந் தேதி (நேற்றுமுன்தினம்) 37 மாவட்டங்களில் 19.14 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 68.17 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் சராசரியாக 47.01 மி.மீ. மழை பெய்துள்ளது.
நேற்று முன்தினம் பெய்த மழையால் சேலம் மாவட்டத்தில் ஒருவரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 83 கால்நடைகள் இறந்துள்ளன. 538 வீடுகள் சேதமடைந்தன.

ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த கலைஞர் . உலகமே போற்றிய கண்ணொளி திட்டம்.. திடீர் டிரென்ட்

பார்வை குறைபாடு

tamil.oneindia.com  -  Vishnupriya R  :  சென்னை: உலகமே போற்றும் இலவச கண்ணொளி திட்டத்தை,
முன்னாள் முதல்வர் கலைஞர்  கொண்டு வந்தார் என்பது குறித்து சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நீயா நானா நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளி வெர்சஸ் பொது மக்கள் கலந்து கொண்டது. இதில் தமிழகம் குறித்து பெருமையாக சொல்வதென்றால் எதை சொல்வீர்கள் என கேட்டதற்கு வடமாநிலத்து பெண் ஒருவர் தமிழ்நாடு மருத்துவ காப்பீடு திட்டத்தால் அவருடைய மகனுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதன் மூலம் வாய் பேச முடிந்ததாக நன்றியுடன் கூறியிருந்தார்.
இந்த காப்பீடு திட்டம் முன்னாள் முதல்வர் கலைஞரால்  கொண்டு வரப்பட்டது. அது போல் அவர் செய்த மருத்துவ உதவிகள் குறித்து சமூகவலைதளங்களில் கீர்த்தனா ராம் என்பவர் ஒரு நீளமான பதிவை போட்டுள்ளார்.

திராவிடர்களின் ஆடல் கலையை (சதிர் ஆட்டம்) பரதநாட்டியம் என்று திரிக்கும் திருடர்கள் .. இல்லாத பரதமுனிக்கு பரதநாட்டியம் பிறந்ததாம்

கலைஞர் 'நீ தமிழன் தானே' என தன் உதவியாளரிடம் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து, ‘பரதமுனிதான் பரதநாட்டியம் தொடங்கினார் என்றால் யார் நம்புவது? திராவிட இயக்கக் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை மெல்ல மெல்ல அழிக்கப்பார்க்கிறார்கள். அதுதான் அடிக்கல் நாட்டுவிழா அழைப்பு. அது அழைப்பு அல்ல. யாருக்கோ தேவையான பிழைப்பு. நம்மை தாழ்த்தும் அந்த நினைப்பை வேரறுக்க வேண்டும்’ என்றார்.

 விகடன் .com கலைஞர்  சொன்னால், அது அவர் கருத்து!” 'பரதமுனி' பற்றி பத்மா சுப்பிரமணியம்
பா. ஜெயவேல்
மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் பகுதியில் பரதமுனிக்கு கோயில் அமைத்திருக்கிறார் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம். அதன் திறப்புவிழாவை ரகசியமாக நடத்தி முடித்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது.
கடந்த 2003 ம் ஆண்டு பரதமுனிக்கு கோயில் எழுப்ப இருப்பதாக ஜெயலலிதாவிடம் மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலமும், 27 லட்சம் பணமும் பெற்றார் பத்மா சுப்பிரமணியம்.
தி.மு.க ஆட்சி அமைந்தபோது 2007ல் பரதமுனி கோயில் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பத்மா சுப்பிரமணியம் சார்பில் முதல்வரிடம் வாழ்த்து கேட்கப்பட்டிருந்தது.

விடுதலையான நளினி அடுத்த நாளே இப்படி பத்திரிகையாளர் சந்திப்பை....

 Bilal Aliyar  :  விடுதலையான நளினி அடுத்த நாளே இப்படி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திக்கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு,  திமுகவிற்கு நன்மையாக இருக்காது!
விடுதலையான ஏழு பேரையும் போராளிகளாக கட்டமைக்கும் மோசமான போக்கை போலி தமிழ் தேசியர்கள், முற்போக்காளர்கள் கைவிட வேண்டும்.
அரசும் இந்த விசயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும்1
Sammil Kafoor : இவங்க எல்லாம் தப்பே செய்யலைன்னு சொல்ல முடியாது..ஏதோ விடுதலை ஆகிட்டாங்க..மனிதாபிமான முறையில் சந்தோசம். பெரிய தியாகியா எல்லாம் நினச்சி பேட்டி எடுக்க கூடாது.. ராஜிவ் காந்தியின் இழப்பு லேசாக கடந்து போகும் இழப்பு அல்ல..
Madhav Anandhan  :   if ராஜிவ் காந்தி was not assasinated, Modi coul never think about PM roll
Sheikh Mukhtar :  ஆமாம்

ஞாயிறு, 13 நவம்பர், 2022

தந்தை பெரியாரை ன 1927 முதலே பெரியார் என அழைத்தனர்! ஆதார பூர்வமான செய்தி


 சிவசங்கரன் சுந்தரராசன் :  பெரியார் பட்டம் 1938ல் வழங்கப்படவில்லை. 1928 முதலே அப்படி அழைக்கப்படுகிறார் என்பதற்கு ஆதாரம் 1929ல் வெளியிடப்பட்ட
ஈ.வெ. ராமசாமி பெரியாரவர்களின் பொன்மொழிகள்* நூல்.
Thirunavukarasan Manoranjitham  : வைக்கம் போராட்ட காலத்திலேயே ( 1924 ) திரு வி க அவரது நவசக்தி இதழில் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் என்று எழுதியிருக்கிறார்.
சிவசங்கரன் சுந்தரராசன்  :   தற்போது புதிதாக நீல கோஷ்டியினர் பெரியார் என்ற பட்டம் வழங்கிய மீனாம்பாள் சிவராமன் பெயரை திராவிடவாதிகள் மறைக்கிறார்கள் ஈ.வெ.ராமசாமியை பெரியார் என மாற்றிவரையே மறைக்கிறார்கள் என இரண்டு மூன்றாண்டுகளாக உருட்டுகிறார்கள்.
Thirunavukarasan Manoranjitham  :  இனி எல்லோரும் பெரியார் என்றே அழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அந்த மாநாட்டில்தான்.
அதை திராவிடர் இயக்கத்தினர் யாரும் மறைக்கவில்லை.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

 தினத்தந்தி  :   தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் பத்து மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தனுஷ்கோடியில் யாரும் அறியாத இலங்கை தமிழர்களின் கிராமம்

சிறுநீரக கற்களுக்காக மருத்துவமனை சென்றவரின் சிறுநீரகமே திருடப்பட்டது உத்தர பிரதேச மருத்துவ மனையில்

நக்கீரன்  : உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டம் நாக்லாதால் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் சந்திரா.  53 வயதான இவர் வீட்டுக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். சுரேஷ் சந்திராவிற்கு நீண்ட காலமாக அடிவயிற்றில் வலி இருந்துள்ளது.
மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோது அவருக்கு இடது பக்க சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அலிகார் குரேஷி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்லுமாறு சுரேஷ் சந்திராவுக்குத் தெரிந்தவர் பரிந்துரை செய்துள்ளார்.
இதன் பின் தெரிந்த நபர் சொன்ன மருத்துவமனைக்குச் சென்ற சுரேஷ் சந்திராவை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.  missing kidney link

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைப்பு

 மாலை மலர்  :   திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர்.
சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் உள்பட நைஜீரியா, பல்கேரியா, வங்காளதேசம், இந்தோனேசியா உள்பட 130 வெளிநாட்டினர் இந்த முகாமில் தங்கி உள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்படும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் சென்னை புழல் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர்.