செவ்வாய், 15 ஜூன், 2021

இட ஒதுக்கீடு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டது.!

May be an image of Kandasamy Mariyappan, beard and eyeglasses

Kandasamy Mariyappan  :  இடஒதிக்கீடு நெறிமுறை படுத்தப்பட வேண்டும் என்று நான் கூறியதை பல நண்பர்கள் தவறு என்று கூறுகின்றனர்.!
கண்டிப்பாக அவர்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும்.! அதனால்தான் இவ்வளவு ஆணித்தரமாக மறுக்கின்றனர்.!
ஒருவேளை அவர்கள் கூறுவது போன்று அதனை சரி என்று பார்த்தாலும், எதிர்காலத்தில் இது ஒரு ஆபத்தாகத்தான் இருக்கும் என்பதுதான் எனது பார்வை.!
காரணம் இட ஒதுக்கீடு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டது.! அதனை நமது அரசுகள் நீட்டித்துக் கொண்டே வந்தது.! இதனால் பொதுப் பட்டியலில் உள்ளவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்.!
70களுக்கு முன்பு வரையில் அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், மின்துறை, போக்குவரத்து, வங்கி, காப்பீடு, நீதிமன்றம்  மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர்சாதியினரே பணியில் இருந்தனர்.!
இது எப்படி சாத்தியமானது.!
முன்பே பணியில் இருக்கும் உயர்சாதியை சேர்ந்த ஒருவரது உறவினர்களை அல்லது அவரின் நண்பர்கள் அல்லது நண்பர்களின் உறவினர்களை பணிக்கு அமர்த்துவார். அது ஒரு சங்கிலித் தொடராக இருக்கும்.!
இதனை 70களுக்குப் பிறகு நமது ஆட்சியாளர்கள் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தியது மட்டுமல்லாமல் அதனை உறுதி செய்து, வாரியம் மற்றும் TNPSC மூலமாக எல்லா தரப்பு மக்களுக்கும் அந்த பணிகள் கிடைக்க வழி செய்கின்றனர்.!

தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு வருமா?

  Hemavandhana - tamil.oneindia.com :   சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனை வர போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. காரணம், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜனை, லாட்டரி அதிபர் மார்ட்டின் சந்தித்து பேசியதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. டாஸ்மாக் எப்படி அரசுக்கு நிதி வருவாயை பெருக்க உதவுகிறதோ, அதுபோலவே லாட்டரி விற்பனையும் பெருமளவு நிதியை தமிழக கஜானாவுக்கு வாரி தரும்
குடிமகன்களுக்கு டாஸ்மாக் ஒரு போதை என்றால், பலருக்கு இந்த லாட்டரியும் ஒரு போதையாக இருந்தது.. பலர் பித்து பிடித்து போயிருந்தனர்.
விமர்சனம் எத்தனையோ குடும்பங்கள் இதனால் நடுத்தெருவுக்கு வந்தன.. எத்தனையோ உயிர்கள் தற்கொலை செய்து கொண்டன. ஒருகட்டத்தில் நிறைய விமர்சனங்கள் எழுந்ததால், இந்த லாட்டரி சீட்டு திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.. இப்படிப்பட்ட சூழலில், சமீபத்தில் ஒருநாள் திடீரென கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி தந்திருந்தார்..

ரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000- 14 மளிகை பொருட்கள் வினியோகம்

கொரோனா 2வது தவணை ரூ 2000, மளிகை பொருட்கள் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் பெண்கள்
ரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000- 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது
கொரோனா 2வது தவணை ரூ 2000, மளிகை பொருட்களை பெற்றுக்கொண்டவர்கள்
சென்னை:   தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதனால் பொதுமக்கள் பாதிக்கக்கூடும் என்பதால் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.4 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் வழங்கப்பட்டது. 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் ஜூன் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மளிகைப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி – விலை சரிவுக்கு காரணம் என்ன?

கெளதமன் முராரி - பிபிசி தமிழுக்காக : இன்றைய மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.15% (76 புள்ளிகள்) அதிகரித்து 52,551 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி50 0.08% (12.5 புள்ளிகள்) ஏற்றம் கண்டு 15,811 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. ஆனால் அதானி குழும நிறுவன பங்குகள், இந்த சந்தை சூழலுக்கு பொருந்திப் போகாமல் கொஞ்சம் அதிகமாகவே விலை வீழ்ச்சி கண்டிருக்கின்றன.

இந்திய பங்குச் சந்தைகளில் கெளதம் அதானிக்குச் சொந்தமான அதானி குழுமத்தின் ஆறு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.  ஆறு பங்குகளில், அதானி க்ரீன் எனர்ஜி மட்டுமே 0.68% விலை அதிகரித்து 1,226 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

மற்ற ஐந்து பங்குகளும் 4.9 சதவீதம் முதல் 9.2 சதவீதம் வரை விலை வீழ்ச்சி கண்டிருக்கின்றன. அதானி பவர், அதானி டோடல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய பங்குகள் லோயர் சர்க்யூட் விலையைத் தொட்டிருக்கின்றன.

சிவசங்கர் பாபாவை தேடி டேராடூன் விரைந்தது சி.பி.சி.ஐ.டி!! வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

 நக்கீரன் செய்திப்பிரிவு  :    ஆன்மீகவாதி போர்வையில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிவசங்கர் பாபா மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியான நிலையில்,
இந்த வழக்கு நேற்று (14.06.2021) சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. தற்போது டேராடூனில் உள்ள அவரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி குழு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர்.

பழைய பேருந்துகளை கடலில் இறக்கும் இலங்கை: மீன்களின் இனப்பெருக்கத்திற்கு? கேள்வி எழுப்பும் மீனவர்கள்!

பழைய பேருந்துகளை கடலில் இறக்கும் இலங்கை: மீன்களின் இனப்பெருக்கத்திற்குதானா? கேள்வி எழுப்பும் மீனவர்கள்!

கலைஞர் செய்திகள் :இலங்கை அரசு, மீன்கள் இனப்பெருக்கத்தைப் பெருக்குவதாகக் கூறி, பயன்படுத்த முடியாத பழைய பேருந்துகளைக் கடலுக்குள் இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதுவும், குறிப்பாக இலங்கை காங்கேசன் துறைமுகம் முதல் மன்னார் வரை உள்ள கடல் பகுதியில்தான் பழைய பேருந்துகள் இறக்கப்பட்டு வருகிறது. மேலும் பயன்படுத்த முடியாத 40 பழைய பேருந்துகளைக் கடலில் போட இலங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதில், முதல் கட்டமாக ஜூன் 12ம் தேதி முதல் பழைய பேருந்துகள் கடலில் இறக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில், 20 பேருந்துகள் கடலில் இறக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஒரு நாளைக்கு ஐந்து பேருந்துகள் வீதம் கடலில் இறக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு, 1970க்கு முன்பு இருந்த நிலைக்கு மாற்றப்பட வேண்டும்? .. கந்தசாமி மாரியப்பன்

May be an image of Kandasamy Mariyappan, beard and eyeglasses

  Kandasamy Mariyappan   :  தமிழ்நாட்டில்...
இடஒதுக்கீடு, 1970க்கு முன்பு இருந்த நிலைக்கு மாற்றப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் மற்றும் எனது பார்வை.!
அதாவது 41% இடஒதுக்கீடு மட்டுமே இருக்க வேண்டும். BC 25%, SC 15%, ST 1%, OC 59% என்ற நிலை வர வேண்டும்.
MBC முறை நீக்கப்பட வேண்டும். இஸ்லாமியர்கள் BC உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு BC ஒதுக்கீட்டிலேயே வைக்க வேண்டும்.! அருந்ததியர்கள் உள் இடஒதுக்கீடு 2.5% என்று மாற்றி தொடர வேண்டும்.!
கிருஷ்ணசாமி உருவாக்கிய புதிய வேளாளர்கள் உட்பட அனைத்து வேளாளர்கள் (முதலியார் BC, பிள்ளைகள் BC, கார்காத்த, கவுண்டர், சோழிய, துளுவ,  etc.), செட்டியார்கள் BC, உடையார்கள், அகமுடையார்கள் (தேவர்கள்) அனைவரையும் பொதுப் பட்டியலுக்கு (OC) கொண்டு வர வேண்டும்.!
இரண்டு தலைமுறைக்கு மேலாக இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்களை பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்ல வேண்டும்.! இதுதான் அந்த சாதியை சேர்ந்த ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளவரை உயர்த்தி விட வழி வகுக்கும்.!
ஒருவேளை இடஒதுக்கீடு உள்ள குறிப்பிட்ட பிரிவில் தகுதியான ஆட்கள் இல்லையென்றால்.., அதே பிரிவில் உள்ள பொதுப் பிரிவினரை கொண்டு அந்த இடத்தை நிரப்ப வேண்டும்.!

இடஒதிக்கீடு நெறிமுறை படுத்தப்பட வேண்டும்! கந்தசாமி மாரியப்பன்

May be an image of Kandasamy Mariyappan, beard and eyeglasses

Kandasamy Mariyappan  : இடஒதிக்கீடு நெறிமுறை படுத்தப்பட வேண்டும் என்று நான் கூறியதை பல நண்பர்கள் தவறு என்று கூறுகின்றனர்.!
கண்டிப்பாக அவர்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும்.! அதனால்தான் இவ்வளவு ஆணித்தரமாக மறுக்கின்றனர்.!
ஒருவேளை அவர்கள் கூறுவது போன்று அதனை சரி என்று பார்த்தாலும், எதிர்காலத்தில் இது ஒரு ஆபத்தாகத்தான் இருக்கும் என்பதுதான் எனது பார்வை.!
காரணம் இட ஒதுக்கீடு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டது.! அதனை நமது அரசுகள் நீட்டித்துக் கொண்டே வந்தது.! இதனால் பொதுப் பட்டியலில் உள்ளவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்.!
70களுக்கு முன்பு வரையில் அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், மின்துறை, போக்குவரத்து, வங்கி, காப்பீடு, நீதிமன்றம்  மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர்சாதியினரே பணியில் இருந்தனர்.!
இது எப்படி சாத்தியமானது.!
முன்பே பணியில் இருக்கும் உயர்சாதியை சேர்ந்த ஒருவரது உறவினர்களை அல்லது அவரின் நண்பர்கள் அல்லது நண்பர்களின் உறவினர்களை பணிக்கு அமர்த்துவார். அது ஒரு சங்கிலித் தொடராக இருக்கும்.!
இதனை 70களுக்குப் பிறகு நமது ஆட்சியாளர்கள் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தியது மட்டுமல்லாமல் அதனை உறுதி செய்து, வாரியம் மற்றும் TNPSC மூலமாக எல்லா தரப்பு மக்களுக்கும் அந்த பணிகள் கிடைக்க வழி செய்கின்றனர்.!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

 minnambalan : அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் உட்பட பத்து எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 14)அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தலைமை கழகத்துக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காரில் தளவாய் சுந்தரம், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகிய நான்கு பேரும் வந்தனர்.

இன்றைய கூட்டம் குறித்து அதிமுக வட்டாரத்தில் நாம் விசாரித்த போது,

“தலைமை கழகத்துக்கு வந்ததும், ஓபிஎஸ், ஈபிஎஸ், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி முனுசாமி ஆகியோர் தனி அறைக்குச் சென்று பேசினார்கள். அதன் பிறகு ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவர் மட்டும் தனியாகப் பேசினார்கள்.

மின்னல் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி!

May be an image of standing, outdoors and text that says 'vimara'

Rubasangary Veerasingam Gnanasangary  : மின்னலின் காந்த அலையால் தாக்கப்பட்ட எனது அனுபவம்.
பல வருடங்களுக்கு முன்னர், நான் pizza டெலிவரி செய்வதற்காக காரில் இருந்து பீட்சாவை காவிக்கொண்டு அந்த வீட்டின் கதவை நோக்கி சென்று கொண்டிருந்தேன்.
வீட்டின் பக்கத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்ட  கரவன் வண்டி (caravan - படத்தில் உள்ளது) மீது மின்னல் தாக்கியது.
அந்த கரவனுக்கும் எனக்கும் சுமார் பதினைந்து அடி தூரம்தான் இருக்கும். சலீங் என்று கண்ணாடிகள் உடையும் சத்தம், நான் நிதானமாகத்தான் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஆனால் எனது கால்கள் விறுவிறு என்று அடிகள் வைக்கத் தொடங்கின. என்னை ஏதோ இழுப்பது போன்று உணர்ந்தேன். நானும் அதை எதிர்க்க முயற்சிக்கிறேன் ஒரு நொடிக்குள்ளேயே சடார் என்று  என்னை குப்பற விழுத்தியது. அதே வேகத்தில் நானும் எழுத்துவிட முயற்சித்தேன் ஆனால் தொடர்ந்து சில நொடிகளுக்கு என்னை இழுத்துப் பிடித்தவண்ணமே இருந்தது.
எனது கைவிரல்கள் இரண்டில் இரத்த உறைவு சிறிதாகவும் முழங்கால்கள் கொஞ்சம் பலமாகவும் அடிபட்டதை காரில் ஏறி அமர்ந்த பின்னரே உணர்ந்தேன்.
Dr. கனகசபாபதி வாசுதேவா அவர்களிடம் "மின்னல் தாக்கி அநியாய இறப்புகள் ஏற்படுகின்றனவே, அதுபற்றிய தங்கள் ஆலோசனையை எழுதுங்களேன்" என்று கேட்டிருந்தேன். அவரும் எழுதி உள்ளார்.

பணிக்கன் குளம் பாலைப்பழம் ... தள்ளாடும் வாழ்வாதாரம்

May be an image of one or more people, people standing, road, tree and grass

திருகோணமலை சந்தையில் பாலைப்பழம்
N.K. Kajarooban  :    யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன்.
பனிக்கன்குளம் பகுதியில் பையில் ஏதோ வைத்து , வழிமறித்து விற்க முயன்றாளொரு பெண்!
“பாலைப்பழம்!”
பார்த்ததும் வாகனத்தை நிறுத்தினேன்.
மாஸ்க்கை மீண்டும் சரிப்படுத்திக் கொண்டு கேட்டேன்
“என்ன விலை?”
“ஒரு Bag நூறு ரூபா!”
அருகில் வீதியோரமாக அவள் கணவனாக இருக்க வேண்டும். ஒரு பெரிய சட்டியிலிருந்த பாலைப் பழங்களை பைகளில் போட்டுக் கொண்டிருந்தார்
ஒரு Bag ஐப் பணங்கொடுத்து வாங்கிவிட்டேன். அப்பெண் விடுவதாயில்லை.
“அண்ணே இன்னும் இரண்டு வாங்குங்கண்ணே!”
“வேணாம் போதும்!”

 இப்பொழுது அவளது கணவர் எழுந்து என்னருகில் வருகின்றார்.
“விடியேல இருந்து நிற்கிறமண்ணே! ஒருத்தரும் வாகனத்தை நிற்பாட்டுகினமில்லை. வீட்டில சரியான கஸ்ரமண்ணே! நாங்கள் விறகு வெட்டி றோட்டில வைச்சு விற்கிறது. இப்ப ஆட்கள் வாறயில்லை விறகு யாவாரமுமில்லை! அதோட பாலைப்பழம் விற்கத் தொடங்கினம் இந்தக் கொறோனாக்குப் பயந்தோ தெரியா சனங்கள் வாகனத்தை நிற்பாட்டுதுகளில்லை! நீங்கள் தானண்ணே முதல் யாவாரம்.”

சசிகலா அதிமுக! 700 கிளைச்செயலாளர்கள் தயார்... தேனி கர்ணன் அதிரடி..!

 நக்கீரன் -வே.ராஜவேல் : அதிமுக, அமமுக கட்சியினரிடம் சசிகலா பேசும் ஆடியோ தொடர்பாக சசிகலாவின் ஆதரவாளரும் அண்ணா திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவருமான தேனி கர்ணனை தொடர்புகொண்டோம்.
சசிகலா பேசும் ஆடியோக்களை வெளியிடுவது யார்? இந்த நேரத்தில் ஏன் வெளியிட வேண்டும்?
இந்த ஆடியோக்களை வெளியிடுவது தொண்டர்கள்தான்.
சென்னையில் தங்கியிருக்கும் சசிகலாவுக்கு தொடர்ந்து தொண்டர்கள் கடிதம் எழுதிவருகின்றனர். கரோனா காலம் என்பதால் பதில் கடிதம் போய் சேருமா, சேராதோ என்பதால் கடிதத்தில் உள்ள தொண்டர்களின் எண்களுக்குத் தொடர்புகொண்டு சசிகலா பேசுகிறார்.
சசிகலா சம்மதம் இல்லாமல் வெளியிட முடியுமா? அல்லது சசிகலாதான் வெளியிட சொல்கிறாரா?
சசிகலா வெளியிட சொல்லவில்லை. மிகப்பெரிய ஆளுமை தன்னிடம் பேசியதைத் தொண்டர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். அதனால் அதனை வெளியிட்டுவருகிறார்கள். தான் எழுதிய கடிதத்திற்கு சசிகலா ஃபோனில் பேசிவிட்டார் என்பதை சந்தோசமாக நினைக்கிறார்கள். அதனால் தொண்டர்களே வெளியிடுகிறார்கள்.

திங்கள், 14 ஜூன், 2021

சாட்டை துரைமுருகன்.. கிஷோர்.. "கேமர்" மதன்.. 3 நாளில் அடுத்தடுத்து தட்டி தூக்கிய போலீஸ்.. பின்னணி!

  Shyamsundar - /tamil.oneindia.com :  சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து 2 யூ டியூபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னொரு யூ டியூபர் மீது போலீஸ் விரைவில் ஆக்சன் எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன
தமிழ்நாட்டில் சமூக ஊடக தளங்கள் மக்களின் அரசியல் கொள்கையையும், அன்றாட வாழ்க்கையையும் மாற்ற கூடிய சக்தி கொண்ட ஊடகமாக மாறிவிட்டது.
கிளப் ஹவுசில் நடக்கும் ஒரு சின்ன விவாதம் உங்கள் வாழ்க்கையையே புரட்டி போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது
யூ டியூபில் போடும் சின்ன வீடியோ உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம், ஜெயில் கம்பிகளுக்கு பின்னிலும் கொண்டு தள்ளலாம்.
அப்படித்தான் தமிழ்நாட்டில் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடந்த சில வருடங்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள், வீடியோக்களை பகிர்ந்து வந்த மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது சாட்டை துரைமுருகன் மீதுதான். யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். திருச்சியில் வினோத் என்ற கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக சாட்டை துரைமுருகன் உட்பட சிலர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் சாட்டை துரைமுருகன் மீது மிரட்டல் புகார் தவிர மேலும் சில வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

திரு.புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கம்! சசிகலாவோடு பேசிய மேலும் பலர் நீக்கம்

 மாலையமலர் :சசிகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டமன்ற கட்சி துணைத்தலைவர், கொறடா மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், சசிகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

கிஷோர் கே.சாமி அதிரடி கைது!! சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய...

dhinakaran சென்னை தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ-டியூபர் கைது... சென்னை: தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ-டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். பேரறிஞர் அண்ணா. கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி தவறான கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது.newstm.in : சமூக வலைதளங்களில் கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா,  முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் மீது அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் பங்கு பெறும் கிஷோர் கே.சாமி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் பெரிய தலைவர்கள் மட்டுமல்லாது, மாற்று சிந்தனைக் கொண்ட அரசியல் பிரமுகர்களையும் விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? விரைவில் சட்டசபை தேர்தல்.. ஒன்றிய அரசு முடிவு? .காரணம் என்ன?

 Vigneshkumar   - tamil.oneindia.com ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிப்பது, சட்டசபைத் தேர்தலை நடத்துவது ஆகியவற்றுக்குத் தேவையான பணிகளை மத்திய அரசு மிக விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழக்கும் வகையிலிருந்த சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. தற்போது வரை மத்திய அரசின் இந்த செயல் சரியானது தானா என்பது குறித்த விவாதங்கள் தற்போது வரை தொடர்கிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்கவும் அங்குத் தேர்தலை நடத்தவும் தேவையான பணிகளில் மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக காஷ்மீரிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இருப்பினும், இதுவரை எந்த அரசியல் கட்சிக்கும் முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும், காஷ்மீரில் ஏழு மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய குப்கர் கூட்டணி (PAGD) பேச்சுவார்த்தைக்குத் தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது.

கெளதம் அதானி? 5.6 லட்சம் கோடி ரூபாயுடன் ஆசியாவின் 2ஆவது பெரிய பண முதலையானது எப்படி? அம்பானியை முந்துவாரா?

கெளதம் அதானி

கெளதமன் முராரி  -      பிபிசி தமிழுக்காக  :   நல்ல வேலை, கை நிறைய சம்பளம், சொந்த வீடு, சாத்தியமானால் ஒரு கார். ஓய்வு காலத்துக்கு ஒரு சில கோடிகள், குடும்பம், குழந்தை குட்டி, ஐஐடி, ஐஐஎம் இது தான் ஒரு இந்திய சாமானியனின் எண்ண ஓட்டங்கள்.
குறிப்பாக இந்தியாவின் பெரும்பாலான நடுத்தர குடும்பங்களுக்கு இது ஒரு லட்சியப் பயணம் என்று கூட சொல்லலாம்.
ஆனால் அஹமதாபாத்தில் ஜவுளித் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த கெளதம் சாந்திலால் அதானிக்கு மேலே குறிப்பிட்ட எதுவும் விருப்பப் பட்டியலில் இல்லை.
கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வியாபாரம் செய்ய புறப்பட்டவர், இன்று உலகின் டாப் 15 பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்திருக்கிறார் என்கிறது ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீடு.

டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடும் பாஜக!

டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடும் பாஜக!

 minnambalam : நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கு முன்பு  முற்றுகை போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் இன்று (ஜூன் 13) வெளியிடப்பட்டன.  இதனிடையே டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் இன்று தங்கள் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர்  எல்.முருகன் கலந்து கொண்டார்.

ஞாயிறு, 13 ஜூன், 2021

தமிழ்நாட்டில் புலி பிரசாரம் எப்படி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகிறது?

News7 Tamil on Twitter: "#தேர்தல்போர் நாடாளுமன்றத் தேர்தல் : தமிழகம்,  புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல்  ...
சாந்தி நாராயணன்  :; தமிழ்நாட்டில் எட்டும் இடங்களில் மக்களை  கொள்கைவயப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் மல்லாக்க படுத்து கனவு கண்டுகொண்டு ஈழம் புலிகள் பிரபாகரன் என்று திராவிடர் இயக்கங்கள் மறுபடியும் மயங்குகின்றனவோ என்று தோன்றுகிறது.
கோவையும் நெல்லையும் தர்மபுரியும் இன்னும் சாதிய மூர்க்கங்களில் இருந்து வெளியே வரவில்லை.
இவையெல்லாம்.  கவனம் இருக்கிறது தானே
Narayanaperumal Jayaraman  : உண்மை...மீண்டும் தேவையில்லாமல் ஈழத்து பக்கம் வண்டியை திருப்பி, தமிழ்நாட்டில் ஆர் எஸ் எஸ்ஸை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்..
Mugil Bharathi  : அப்பிடியெல்லாம் விட முடியாது, வாங்குனா straightஆ ஈழம்தான்.. அப்புறம் தனித்தமிழ்நாடு, அப்புறம் malaya, burma, cambodia .. கடைசீல லெமூரியா.. அப்புறம் இங்க இருந்து நடந்தே Newzealand போய்ரலாம்...
செல்லபுரம் வள்ளியம்மை : இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் கூட பிரபாகரன் புலிகள் என்பவை தற்போது பேசுபொருள் அல்ல ..
தமிழ்நாட்டில் மட்டும் இது எப்படி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக இன்னும் இருக்கிறது?

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டில் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை, ஆய்வை மற்றும் உற்பத்தியை ஒன்றிய அரசு அனுமதித்தாலும் தமிழ்நாடு அரசு அதுமதிக்காது 

 கலைஞர் செய்திகள் - premjourn  :   டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு :-
எரிவாயு அமைச்சகம், நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஏலம் விடுவதாக ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிவிக்கையில், காவிரிப் படுகை பகுதியில் வடதெரு என்ற பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் 40 காலி பஸ்: மீன்வளம் பெருகிட இலங்கை புதிய முயற்சி

Srilanka, Empty Bus, இலங்கை, காலி பஸ், பேருந்து, கடல், மீன்

dhinamalar :ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடலில் மீன்வளத்தை பெருக்க இலங்கை அரசு, கடற்படை கப்பல் மூலம், 40 பழைய பஸ்களை கடலுக்குள் போட்டு மீன்களுக்கு புகலிடம் ஏற்படுத்தியுள்ளது.

பாக் ஜலசந்தி கடலில் ராமேஸ்வரம் முதல் கோடியக்கரை உள்ள தமிழக விசை, நாட்டுப்படகு மீனவர்கள், இலங்கையில் யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை உள்ள மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். தமிழக மீனவர்கள் பயன்படுத்தும் இழுவலையால், இலங்கை பகுதியில் மீன் வளம் அழிந்து, மீனவர்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்து உள்ளனர்' என அந்நாடு மீன்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டினார்.மீன்கள் இனப்பெருக்கத்திற்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட, 60 நாட்கள் தடை காலம் நாளை முடிகிறது.

திரை வியாபாரத்தில் அகல கால்வைத்த நயன்தாரா விக்னேஷ் ஜோடி! திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில்

Nayanthara and Vignesh ShivN off to Kochi for Onam!

சினிமா பேட்டை :  விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பற்றிய காதல் கதை ஊர் அறிந்தது தான்.  தற்போது ஸ்டார் ஜோடிகளாக வலம் வரும் இந்த ஜோடியினர் பணம் சம்பாதிப்பதில்  அதிக முனைப்புக் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நயன்தாரா ஒரு பக்கம் சம்பாதிக்கும் பணத்தை விக்னேஷ் சிவன்  இன்னொரு பக்கம் பிசினஸ் செய்து வருகிறார். நல்ல விஷயம்தான் என்றாலும் இந்த  ஊரடங்கு சமயத்தில் ஏடாகூடமாக மாட்டிக் கொண்டாராம் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகிய  மூவரையும் வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி  வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் சில நாட்களே படப்பிடிப்பு மீதம்  உள்ளது.
விக்னேஷ் சிவன் படம் இயக்குவதையும் தாண்டி நல்ல படங்களை தயாரிக்கவும்  நல்ல படங்களை வாங்கி வெளியிடவும் முனைப்பு காட்டி வருகிறார்.

மதுக்கடைகளை திறந்தது ஏன்? - அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி !.. கடுமையான 18 கட்டுப்பாடுகள்!

 மாலைமலர் :ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு
சென்னை:   கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 10-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கில் நாளை முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர்த்து சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமரர் மு. சிவசிதம்பரம் ! மக்கள் ஆளுமைபெற்ற கடைசி தமிழ்த் தலைவர்! (உடுப்பிட்டி சிங்கம்)

May be a black-and-white image of 1 person

Amirthalingam Baheerathan : சிம்மக்குரலோன், ஆஜானுபாவமானோன் சிறந்த கனவான், துரோகமறியான். எனது தந்தையின் உற்ற நண்பன் எமது தலைவன். 1983 கலவரம் உச்சத்தை எட்டியிருந்த போது, கொழும்பில் அவரது வீடு எரிக்கப்பட்ட செய்தி வந்த போதும், அவரது மனைவி உயிருடன் இருக்கிறாரா இல்லையா என வினா எழுந்த நிலையிலும் கலங்காது எமது மக்களை பாதுகாப்பதையிட்டு நடவடிக்கைகள் எடுத்து கொண்டிருந்த தலைவன். எனது தந்தையின் கொலையை தனது கண்முன்னே கண்டு துடித்து “எனது வாழ்நாளுக்கும் இந்த அவலம் போதும்” என மன உளைச்சல் அடைந்த பெருமகன். அன்னாரை நினைவில் நிறுத்துவோம். அன்றைய ஒற்றுமையை எண்ணி இன்றைய நிலையில் கண்ணீர் விடுகிறோம். நன்றி மாலி அண்ணா.  

Subramaniam Mahalingasivam  :  இலங்கையில் மக்கள் ஆளுமைபெற்ற கடைசி தமிழ்த் தலைவர்!
இப்படி ஓர் ஆரூடத்தை எவருமே சொன்னதில்லை.
கவர்ச்சிமிக்க பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சிறிலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்றத்தில் எட்டு ஆசனங்களை மட்டுமே வென்றது.
எதிர்க்கட்சித் தலைவர் பிரதமராவதும், பிரதமர் எதிர்க்கட்சித் தலைவராவதும்தானே வழக்கமாக கூறப்படும் வாக்கியம்?.
அதுவும், தனிநாடு கோரிக்கையுடன் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, 18 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாகியது.
இலங்கை அரசியலில் முன்னெப்போதுமில்லாத விசேஷங்கள் 1977 பொதுத் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்டன.
திரு ஜே. ஆர். ஜயவர்த்தன, 5/6 பெரும்பான்மையுடன் முதன் முதலாக பிரதமரானார். ‘

தனியார் மருத்துவமனைகளில் தேங்கிக் கிடக்கும் 1 கோடி தடுப்பூசிகள்!.. ஒன்றிய அரசின் தவறான முடிவு.

கலைஞர் செய்திகள் : தனியார் மருத்துவமனைகளுக்கு கொடுக்கப்பட்ட 1.29 கோடி தடுப்பூசிகளில் 22 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து, பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை ஒன்றிய அரசு அதிகமாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காததன் விளைவு, நாடுமுழுவதும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல மாநில முதல்வர்கள் 18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு செலுத்தப்படும்
தடுப்பூசிகளை ஒன்றிய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தினர். இதனால் ஒன்றிய அரசு நாட்டிலுள்ள 18 வயதைக் கடந்த அனைவருக்கும் ஜூன் 21 முதல் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் என தெரிவித்தது.