திங்கள், 29 ஏப்ரல், 2019

சென்னையில் 900 அடி வரை தோண்டினால் தான் தண்ணீர் .. வெகுவாக குறைந்த நிலத்தடி நீர் மட்டம்.

The underground water level go downstairs in Chennai..People are afraid tamil.oneindia.com - NeelakandanS : சென்னை: நாடு முழுவதும் கடும் கோடை வெயில் வாட்டும் நிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது மக்களை கலங்க வைத்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பொய்த்த மழையின் காரணமாக, நடப்பாண்டில் சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடி நீர் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் என்றில்லாமல் சென்னை சுற்றுவட்டார பகுதிகளிலும் இதே நிலை தான். இதுவரை குடிநீர் தட்டுப்பாடு இல்லை என கூறிய சென்னை புறநகர் பகுதிகளில் கூட, தற்போது சிறிது சிறிதாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட துவங்கியுள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள மறைமலைநகரில் நீரைப் பெற 900 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டியுள்ளது என தொழிலாளர்கள் கூறியுள்ளனர். புறநகர் பகுதியிலேயே இந்த நிலை என்றால் சென்னை நகரப் பகுதியை பற்றி சொல்லவா வேண்டும் நகரின் பல முக்கிய பகுதிகளில் நீர்மட்டம் சுமார் 800 அடி ஆழம் வரை கீழிறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

மம்தாவின் 40 எம் எல் ஏக்கள் தன்வசம் உள்ளதாக பிரதமர் மோடியே ஒப்புதல் வாக்குமூலம் ..

திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில்
உள்ளனர் என திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி அதிர்ச்சி கொடுத்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான 4ஆம் கட்டத் தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடம் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப் பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாஜக வேட்பாளர் கார் உடைக்கப்பட்டது. இதேபோல், மேற்கு வங்கத்தில் ஆசன்சோல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 125-ல் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

தடுப்பூசி போட வந்த 20 குழந்தைகளை காணவில்லை .. கொல்லிமலையில் அதிர்ச்சி

vikatan.com - -ragupathi-r :
குழந்தைகளை விற்றதாக நர்ஸ் அமுதாவுடன் கூட்டாளி கைது
குழந்தை கடத்தலில் கைது செய்யப்பட்டவர்கள்ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், 9-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கும் கொல்லிமலை முக்கிய இடம்பெற்றுள்ளது. அதாவது இங்கிருந்துதான் பெரும்பாலான குழந்தைகள் வாங்கி விற்பனை செய்யப்பட்டுள்ளனர். கைதான கொல்லிமலை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதவள்ளியிடம் 6 குழந்தைகளை விற்பனை செய்ததாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
கொல்லிமலையில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட தாய்சேய் நல அலுவலர் தேவி தலைமையில், பயிற்சியில் உள்ள 15 நர்ஸ்கள் மருத்துவமனையில் உள்ள பிறப்பு பதிவேடுகளை சரிபார்த்தல், தத்துக் கொடுத்த குழந்தைகளின் விவரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொல்லிமலையில் முதன்முதலாக 1999-ல் தொடங்கப்பட்ட பவர்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறப்புச் சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் சிறப்புக் குழுவினர் நேற்று ஈடுபட்டனர். மேலும், இந்தக் குழுவானது வீடு, வீடாகவும் சென்று சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் ஈடுபட உள்ளது.

ஃபோனி புயல் தமிழகத்தை ஏமாற்றவில்லை... காப்பாற்றியிருக்கிறது...!

tamil.news18.com - sankaralingam : எதிர்பார்த்தது போல ஃபோனி புயல் தமிழகத்தை நெருங்கியிருந்தால், குடிநீர் பிரச்னை தீர்ந்திருக்காது, இதுவரை கண்டிராத சேதத்தை ஏற்படுத்தியிருக்கும்
தமிழகத்துக்கு மழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபோனி புயல், நாளை மறுநாள் மிகத்தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபோனி புயல், தற்போது சென்னையில் இருந்து 880 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. மெதுவாக இந்த புயலானது வடமேற்கு பகுதியில் நகர்ந்து வருகிறது அடுத்த 24 மணி நேரத்தில் ஃபோனி புயல் தீவிரமாக மாறும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் 48 தமிழர்கள் தவிப்பு!.. வீடியோ


மின்னம்பலம் : தமிழகத்தைச் சேர்ந்த 48 தொழிலாளர்கள் மலேசியாவில் தாங்கள் துன்பப்படுவதாகவும், தங்களைக் காப்பாற்றுமாறும் வாட்ஸ்அப்பில் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளனர்.
அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சரியான நிறுவனங்கள், நபர்களிடம் பணியாற்றும்வரை, இத்தகையவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், வேலை கேட்டு வந்த தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களைத் துன்புறுத்துவதும் சில இடங்களில் நடைபெறுகிறது.
வேலைக்காக மலேசியா சென்று சம்பளம், உணவு, தங்குமிடம் இல்லாமல் தவிக்கும் 48 தமிழர்கள் பேசும் வீடியோவொன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

குழந்தைகள் விற்பனை: கைதானோர் எண்ணிக்கை 8

குழந்தைகள் விற்பனை:  கைதானோர் எண்ணிக்கை 8மின்னம்பலம் : ராசிபுரம் செவிலியர் உதவியாளர் அமுதவல்லி தலைமையில் பச்சிளம் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மோசடிக் கும்பலைச் சேர்ந்த மேலும் இரண்டு பெண் தரகர்கள் நேற்று (ஏப்ரல் 28) கைதாகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரிலுள்ள காட்டூர், காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அமுதவல்லி என்பவர் ஏழைக் குழந்தைகளை அவற்றின் பெற்றோரிடமிருந்து சட்ட விரோதமாக விலைக்கு வாங்கி அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக 25.04.2019-ம் தேதி தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்ற எண் 05/2019 , பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2015 உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

திமுகவை நோக்கி அதிகார வர்க்கம் ... ஆட்சி மாற்றத்துக்கு அதிகாரிகள் தயார் நிலையில்?

மின்னம்பலம் : 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் மே 23 வெளியாகவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் சிலர் திமுக
மாவட்டச் செயலாளர்களை வீடு தேடிச் சந்தித்துவருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பிறகு தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்ட பெரும்பாலான மாவட்ட ஆட்சியர்கள் நியமன ஐஏஎஸ் (கன்ஃபோர்டு)அதிகாரிகள்தான். அதாவது இவர்களுக்கு நேரடியாக தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆகத் தேர்வு செய்யப்படாமல் பதவி உயர்வின் மூலம் ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கும்.
இவர்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட பல மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும், அவர்களின் பொருளாதாரம் கிடுகிடுவென்று வளர்ச்சியடைந்திருப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த மாவட்ட ஆட்சியர்களை, எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பிரச்சினைகளுக்காகச் சந்திக்கச் சென்றால்கூட மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

இலங்கையில் இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணிய தடை! நாளை முதல் அமுலுக்கு வருகிறது

virakesari.lk : தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாளை (2019.04.29) முதல் அவசரகால கட்டளையின் கீழ் தடைசெய்வதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்தவொரு சமூகப் பிரிவையும் அசௌகரியத்திற்குள்ளாக்காத வகையில் அமைதியும் நல்லிணக்கமுமிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா அறிந்திருந்தும் தலையிடாமைக்கான காரணம்.. இலங்கை தீவிரவாதம் .. கேர்னல் ஹரிஹரன் பேட்டி!

வீரகேசரி : - கேர்ணல் ஹரிகரன் : தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பிலான தகவல்களை இந்தியா அறிந்திருந்தும் இலங்கையின் உள்நாட்டு விடயமான பாதுகாப்பில் அளவுக்கு மீறி தலையிட்டால் அது இலங்கை அரசியலில் இந்திய எதிர்ப்பை மேலெழச் செய்வதற்கே வழி வகுக்கும் என்பதாலேயே பொறுமையாக இருந்தது என்று இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவரும் எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
கேள்வி:- தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் டிதாடர்பாக இந்திய பாதுகாப்பு துறைக்கு தகவல்கள் கிடைத்ததாகவும், இந்தியப் புலனாய்வுத்துறை தகவல்களை வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. இது குறித்த தகவல்களை தாங்கள் அறிவீர்களா?
பதில்:- இந்த தகவல் இந்திய பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களுக்கு எதிராக விசேடமாக அமைக்கப்பட தேசிய ஆய்வுக் குழு (NIA -National Investigation Agency) சந்தேகத்தின் பேரில் கைதான ஒரு தீவிரவாதியை விசாரணை செய்யும் போது தற்செயலாகத் தெரியவந்தது. ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த தகவலை இந்தியா இலங்கை அரசுக்கு அளித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்தியது. இலங்கை அரசுக்கு அளித்த குறிப்பில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் தாக்கப் படலாம் என்ற விவரமும் அளிக்கப்பட்டு இருந்தது.

நிந்தவூர் தீவிரவாதிகளின் முகாம் ... முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன


(எம்.எப்.எம்.பஸீர்)வீரகேசரி : தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில்  குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் இதுவரை தீர்க்கப்படாது இருந்த முக்கிய இரு குற்றங்களின் ஆதி அந்தம் கண்டறியப்பட்டுள்ளது. தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானின் வாகன சாரதியாக  கடமையாற்றிய கபூர் மாமாவைக் கைதுசெய்து முன்னெடுத்த விசாரணைகளிலேயே இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் அது தொடர்பில் மேலும் இரு காத்தான்குடியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் நிந்தவூர் மற்றும், புத்தளம் – வணாத்துவில்லு பகுதிகளில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பாதுகாப்பு இல்லங்கள் இரண்டு கண்டறியப்பட்டன. அத்துடன் அவற்றிலிருந்து ஆயுதங்கள் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளன.
கபூர் மாமா எனப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை எனும் சந்தேக நபருக்கு மேலதிகமாக கைது செய்யப்பட்ட ஏனைய இருவரில் ஒருவர் காத்தான்குடி – மூன்றை சேர்ந்த 34 வயதான அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தவ்ஸ் எனவும் மற்றையவர் காத்தான்குடி தெற்கை சேர்ந்த 30 வயதான ஹம்சா மொஹிடீன் மொஹம்மட் இம்ரான் எனவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந் நிலையில் கடந்த 2018 நவம்பர் 30 ஆம் திகதி மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் பொலிஸ் காவலரணில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சுட்டும் ஒருவரை கழுத்தறுத்தும் கொலை செய்து அவர்களது கடமை நேர ரிவோல்வர் ரக துப்பாக்கிகளை கடத்திச் சென்றமை தொடர்பில் முழுமையான  தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளா இரண்டு பேரிடம் விசாரணை....இலங்கை குண்டுவெடிப்பு. .. என்ஐஏ கிடுக்குப்பிடி!


NIA investigates two men in Kerala regarding Sri Lanka blast tamil.oneindia.com - shyamsundar : திருவனந்தபுரம்: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் வரிசையாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இலங்கை மட்டுமில்லாமல் தெற்காசியாவிலேயே நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். அங்கு அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. 450க்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்தனர். இதில் இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன் இலங்கை ஆளும் கட்சியை சேர்ந்த இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியூதின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.

சுவற்றில் 700 வருடம் பழமையான சிலை… 100 வருடங்களுக்கு பின் மீட்பு

statue statue nakkheeran.in - kalaimohan : மதுரை மாவட்டம் மேலூரில் வீட்டு சுவற்றில் மறைத்து  வைக்கப்பட்டிருந்த பழமையான திரௌபதி அம்மன் சிலை நூறு ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.< மதுரை மேலூரில் 500 ஆண்டுகளுக்கு பழமையான திரௌபதி  அம்மன் கோவில் உள்ளது. இங்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு பூசாரியாக நாராயணன் என்பவரும் அவருக்கு உதவியாளராக கந்தசாமி என்பவரும் பணியாற்றியதாக கூறப்படுகிறது.

ify"> நாராயணனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கோவிலில் இருந்த பழமையான திரௌபதி அம்மன் சிலையை மற்றும் நகைகளை கந்தசாமி எடுத்துச் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து 1915 ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் திருடுபோன சிலைகள் மற்றும் நகைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கந்தசாமியின் வீட்டின் சுவற்றில் திரௌபதி அம்மன் சிலை மறைத்து வைக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கிடைக்க இந்த தகவலை சிலை கடத்தல் பிரிவு அதிகாரியான பொன்.மாணிக்கவேலிடம் தெரிவித்துள்ளனர்.

3 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க கோரிக்கையை ஏற்க கூடாது சபாநாயகருக்கு வைகோ வேண்டுகோள்

3 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க கோரிக்கையை ஏற்க கூடாது சபாநாயகருக்கு வைகோ வேண்டுகோள்தினத்தந்தி : சென்னை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்று தமிழக கவர்னரிடம் மனு கொடுத்த காரணத்தால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கடந்த 2017 செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
சபாநாயகரின் இந்த நடவடிக்கை செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டும் தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து 18 எம்.எல்.ஏ.க்கள் இடமும் காலி என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இருக்கிறது.
 மேலும் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மே 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான் மேலும் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சி கொறடாவும், சட்ட அமைச்சரும் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.

மக்கள் நீதி மையம் கட்சியின் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம்,  இடைத்தேர்தல், வேட்பாளர்கள் அறிவிப்புதினமலர் : சென்னை: திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் தொகுதிகளுக்கு மே.19 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க., அ.திமு.க., வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இந்நிலையில், மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வேட்பாளர்கள் இன்று(ஏப்., 28) அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, திருப்பரங்குன்றம் - சக்திவேல் ஒட்டப்பிடாரம் - காந்தி, அரவக்குறிச்சி - மோகன்ராஜ்,
சூலூர் - மயில்சாமி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சி தலைவர் கமல் அறிவித்துள்ளார்.

ஷர்மிளா சையத் :துப்பாக்கியையும் குழந்தையையும் பிடித்துக் கொண்டு வீராவேசம் பேசி வெடித்த வெறியர்களை முதன்முதலாக காணுகிறேன்.

Sharmila Seyyid : போர் காலத்தில் ஒரு கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க
குறைந்தது ஒன்பது சோதனைச் சாவடிகளிலாவது இறங்கவேண்டியதிருக்கும். நோயாளிகள், வயதானோர், கர்ப்பிணிகளைக்கூட சிலபோது இறங்கவைத்தே இராணுவ சோதனை நடக்கும். ஆனால் மடியில் உறங்கும் குழந்தை இருந்தால் ஒரு கருணையோடு இறங்கி நடக்கவிடாமலேயே சோதனையிடுவார்கள். இதற்காகவே சிலர் மடியில் குழந்தையை தூங்கவைத்தபடி பயணிப்பதை கண்டிருக்கிறோம். குழந்தைகள் இறைவனுக்கு நிகரானவர்கள் என்ற நம்பிக்கை பொதுவாக இன, மத பேதங்களுக்கு அப்பாலானதாக இருந்தது.
ஆனால் இனி குழந்தையை மடியில் வைத்திருப்பவர்களைக்கூட இரக்கமின்றி பரிசோதிக்கவேண்டிய கட்டாயத்தை கிழக்கிலங்கையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய இலங்கை IS தீவிரவாதிகள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
போரில் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படுவதை (கொல்லப்படக்கூடாதென்று மதங்களும், போர் விதிகளும் இருந்தும்) அறிந்திருக்கிறேன். ஆனால் தனது பிள்ளைகளை மடியிலேயே வைத்துக் கொண்டு ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையால் குழந்தையையும் பிடித்துக் கொண்டு வீராவேசம் பேசி வெடித்த வெறியர்களை முதன்முதலாக காணுகிறேன். இதற்கு முன்பு உலகில் யாருக்குமே இந்தளவு வெறிபிடித்திருந்ததாக அறிந்ததேயில்லை. இஸ்லாமோபோபியா ஆதரவும் இந்த வெறி இவ்வளவு நியாயமாக முற்றியதற்கு ஒரு காரணம்.

பி எச். அப்துல் ஹமீத் : எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தம்பி! இப்படிப் பண்ணிட்டாங்களே?

thaaii.com :  என்னைப் பொறுத்த வரையில் – வானொலி அறிவிப்பாளன் என்கிற முறையில் மக்களுக்குப் பரிச்சயமானவன். ஆனால் நான் எந்த ஊரில் பிறந்தவன் என்பது பல பேருக்குத் தெரியாது. இலங்கையிலுள்ள பலரே அவரவர் பகுதியைச் சேர்ந்தவன் என்று என்னை நினைப்பதுண்டு. அதற்குக் காரணம் என்னுடன் யார் பேசுகிறார்களோ அவர்களுடைய வட்டார மொழிக்கு நான் மாறிவிடுவதுதான் காரணம்.
கொழும்பில் பிறந்தவன் நான்.
அதில் என்ன மகிழ்ச்சி என்றால் இது இலங்கையில் வாழக்கூடிய பல சமூகங்களின் பிரதிநிதிகள் வாழக்கூடிய பகுதி. பல மதங்கள், கலாச்சாரம் சார்ந்தவர்கள் வாழக்கூடிய பகுதி. நீண்ட காலமாகவே தலைநகரமாக இருந்த பகுதி.
ஆசிய அளவில் மிகவும் முக்கியமான துறைமுகம் உள்ள பகுதி. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் பிறந்து வளர்ந்ததால் இன, மொழி, மத பேத பாகுபாடுகள் எதுவும் தெரியாத நிலையிலேயே வளர்ந்தேன்.
‘தெமட்டக் கொடை’ – இது கொழும்பில் நான் பிறந்த பகுதி. “தெமிழகொடை” என்று சிங்களத்தில் சொல்வார்கள். தமிழர்களைக் கூட்டமாக வந்து கொட்டிய இடம் என்கிற அர்த்தத்தில் அந்தப் பெயர் வந்திருக்கலாம்.
அந்தப் பகுதியில் தமிழ் மகா வித்யாலயம் ஒன்றிருந்தது. நான் வளர்ந்த தோட்டம் கொழும்பில் மிகவும் பின்தங்கின, மின்சார வசதியில்லாமல் – தலைநகருக்குள் ஒரு கிராமமாக இருந்த பகுதி.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

சீமானின் அரசியல்.. எக்ஸ்ரே ரிப்போர்ட் .. . வாயில் வந்ததை அடிச்சுவிடு .. பின் கதவால் போயி கலெக்ஷனை வாங்கு

மு.ரா. விவேக் : நம் காலகட்டத்தில் நாம் பார்த்தவரை
பெரியாரையும்,திராவிடத்தையும் !
திமுக கலைஞரை,இன்று அவ்வப்போது தளபதி ஸ்டாலினை!
எவ்வளவு நக்கல்,நையாண்டி,கிண்டல் செய்து சீமான் பேசி வருகிறான்,கடந்த 9 வருடமாய் எவ்வளவோ பொய்கள்,ஆக்ரோஷமான கற்பனை பேச்சுக்கள்.....செய்துகொண்டே தான் இருக்கிறான்!
அவனது பொறுக்கித்தனமான மேடைப்பேச்சுக்கும்,ஊடக பேட்டிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் ,மேடையில் அவனது டார்கெட் அவனது பேச்சு கூட்டத்தின் விசில் சத்தம் மற்றும் கைதட்டல் ஆகியவற்றை பார்த்து பேசுவான்,ஊடகத்தில் மோகத்தை தடவிகிட்டு இத இப்படி பாக்கணும்!,அப்படி பாக்கணும்!-இதை என் அவர்கிட்ட கேக்கல?,இவ்வளவு நாள் என் செய்யல? என்ற ரீதியில் பேச்சு இருக்கும்!
இன்னும் சொல்லப்போனால், குருமூர்த்தி கூட்டம் போல் எதுனா அவன் தம்பிகளால் அல்லது அவன் பேச்சால் சர்ச்சை வந்தால், நாம் தமிழருக்கும் அந்த பிள்ளைகளுக்கும் சம்பந்தம் இல்லை ன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பான்!
எம்ஜியார் முதல்வரா இருந்தப்ப பெரியாரை கூப்பிட்டு மேடையில் பாராட்டினார் ன்னு பேச தொடங்கிய பொழுது விசில் அடிச்சு கைதட்டிய கூட்டத்திற்கு முன்பாக, இன்று காத்தான் குடி கலவரத்திற்கு தன்னை கேள்வி கேட்டதாக பொய் பேசி தன் அரசியலை நடத்தி வருகிறான்-அந்த கூட்டமும் எந்த ஒரு அறிவு மயிரும் இல்லாமல் கைதட்டி விசில் அடிச்சுக்கிட்டே இருக்கு!

கேரளாவில் தேசிய புலனாய்வு விசாரணை.. இலங்கை குண்டுவெடிப்பு...

தினமலர் :சென்னை : இலங்கையில் கடந்த வாரத்தில் நடந்த மோசமான குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பந்தமாக, கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர். >இலங்கை தலைநகர் கொழும்புவில், கடந்த வாரம் ஈஸ்டர் திருநாள் அன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என்று மொத்தம் 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த கொடூர சம்பவத்தில் 253 பேர் கொல்லப்பட்டனர். 400 க்கும் அதிகமானோர் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் செயல்படும் நேஷனல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு (என்.டி.ஜே.,) க்கும் தொடர்பு இருப்பதாக அந்நாட்டு விசாரணை அமைப்புகள் கண்டறிந்துள்ளன.< இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து இந்திய உளவுத்துறை முன்னரே இலங்கைக்கு தகவல் அளித்துள்ளன. இந்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்தும் இலங்கை அதிகாரிகள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்தோனேசியா .. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட 272 பேர் உயிரிழப்பு

நக்கீரன் - கலைமோகன் : வாக்கு எண்ணிக்கையில் ஈடுக்கப்பட்டிருந்த ஊழியர்கள்272 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் கடந்த 17ஆம் தேதி அதிபர் மற்றும் துணை அதிபர், நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைக்கான தேர்தல் ஒன்றாக நடைபெற்றது.  தேர்தல் செலவுகளை குறைக்கும் வகையில் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில், சுமார் 19 கோடியே 30 லட்சம் பேர் வாக்களித்தனர். வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் 5 வாக்குகள் பதிவு செய்த நிலையில் கடந்த 10 நாட்களாக இரவு பகலாக தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர் பணிச்சுமை காரணமாக வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு வரை 272 பேர் உயிரிழந்ததாகவும், 1878 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் இந்தோனேஷிய தேர்தல் ஆணையம் பரிதாபத்துடன் தெரிவித்துள்ளது. இதனிடையே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அடுத்த மாதம் 22ம் தேதி அறிவிக்கப்படும் நிலையில் மேலும் பலர் உயிரிழக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது

ஸ்டாலின் கோமதி மாரிமுத்துக்கு ரூ. 10 லட்சத்தை பரிசளித்தார்

வெப்துனியா :  கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப்போட்டியில்
இந்தியாவுக்கான முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்த23 ஆவது ஆசிய தடகளப்போட்டிகள் தற்போது கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதாகும் கோமதி இந்த தொடரில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
;கோமதி பந்தய தூரத்தை 2 நிமிடம் 70 வினாடிகளில் கடந்து அவரது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த கோமதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

செக்ஸ் இல்லாத் திருமண வாழ்க்கை: பரவும் வெறுமை!

செக்ஸ் இல்லாத் திருமண வாழ்க்கை: பரவும் வெறுமை!கெல்சி போரெசென்- மின்னம்பலம் : கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த விஷயம் தானா கிடைச்சிடும் என்று சொல்பவர்கள் நம்மூரில் அதிகம். உலகம் முழுக்கவே திருமணம் மற்றும் சேர்ந்து வாழ்தலின் அடிப்படையாக செக்ஸ் மட்டுமே உள்ளது. உலகம் முழுக்க இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான். ஆனால், திருமண வாழ்வின்போது சில கட்டங்களில் செக்ஸ் இல்லாமை எனும் பிரச்சினையைப் பல தம்பதிகள் எதிர்கொள்கின்றனர். இந்த அனுபவம் பெரும்பாலும் எல்லா தம்பதிகளுக்கும் வாய்க்கின்றன. இதற்குப் பல காரணங்கள் உண்டு.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் மிரட்டல் .. இலங்கையை போன்று குண்டு வெடிக்கும்

மாலைமலர் : இலங்கையை போன்று கோவையில் குண்டு வெடிக்கும் என்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை: சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு மர்ம போன் ஒன்று வந்தது.
போனில் பேசிய நபர் இலங்கையை போன்று கோவையிலும் குண்டு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.
இதுபற்றி சென்னை போலீசார், உடனடியாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவை போலீசார் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர். போனில் பேசிய நபர் பொள்ளாச்சி பகுதியில் 2 பேர் குண்டு வைக்கப் போவதாக பேசிக் கொண்டு இருந்தனர் என்றும், இதனை கேட்டுத்தான் உங்களுக்கு தகவல் கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் பொள்ளாச்சியில் இருந்து பேசியதை போலீசார் உறுதி செய்தனர்./>போனில் பேசியநபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதால் அவர் யார்? என்பது உடனடியாக கண்டுபிடிக்கபட வில்லை. அவரை பிடிக்க போலீஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜே.எம்.ஐ. அமைப்புகளுக்கு தடை

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜே.எம்.ஐ. அமைப்புகளுக்கு தடை விதித்தார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா.
கொழும்பு: இலங்கையில் கடந்த ஞாயிறன்று கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இலங்கை ராணுவமும், போலீஸ் படைகளும் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளும் தடை செய்யப்படுவதாக அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்தார். அந்த அமைப்புகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் முடக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

பெப்சி - உருளைக்கிழங்கு - வழக்கு விவகாரம்.


RS Prabu : நீங்க கஷ்டப்பட்டு வாயப்பொத்தி, வயித்தபொத்தி சம்பாரிச்சு ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டுட்டு வெளியூர் போயிடறீங்க. எனக்கு வாடகைக்கு விட்ட அதை நான் உள்வாடகைக்கு விட்டு நாலு காசு பாத்தா சரியா தப்பா?
மணல் ஆற்றிலிருந்து வந்தது. செங்கல், சிமெண்ட்டுக்கான கச்சாப்பொருள் எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்த காடுகளை, மலைகளைத் தோண்டி எடுத்துவரப்படுகிறது. பணம் என்பது வங்கி கடன் வழங்கியது. வங்கிக்கு அரசாங்க முதலீடும் பொதுமக்களின் முதலீடுமே மூலதனம். அதாவது வங்கி கடனாக அளிப்பது மக்களின் பணம். மின்சாரத்தை ஆற்று நீரிலிருந்தும் ஏன் காற்றிலிருந்தும் கூட இலவசமாகத்தான் இயற்கை அருள்கிறது.
அதாவது ஒரு வீடு என்பது நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்த இயற்கை வளங்களாலேயே உண்டக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க ஒரு அச்சடித்த ஸ்டாம்பு பேப்பரை வைத்திருக்கும் நபர் எப்படி இந்த நாட்டின் குடிமகனாகிய என் தார்மீக உரிமையை மறுக்கலாம்? அதாவது அந்த ஹவுஸ் ஓனர் எப்படி நான் உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்கலாம்?
இந்த நாட்டின் குடிமகனுக்கு ஒரு வீட்டை உள்வாடகைக்கு விட உரிமையில்லையா? ஓனருக்கு வாடகை கொடுத்த பிறகு நான் என்ன செய்தால் அவருக்கு என்ன?

திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்

திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்மாலைமலர் :திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். #DMK #VasanthiStanley திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்ய சபாவில் தமிழகத்தின் பிரதிநிதியாக தோ்ந்தெடுக்கப்பட்டவர் வசந்தி ஸ்டாலின். அவர் ஒரு பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக செயலாற்றியவர். தற்போது இவருடைய மரணம் திமுக கழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது