செவ்வாய், 13 மார்ச், 2018

அந்த 1000 கோடிக்கு கணக்கு காட்டுங்க!’ – டிஜிட்டல் நிறுவனங்களைக் கேட்கும் தயாரிப்பாளர்கள்

Rs 250 cr loss to Film Industryதமிழ் சினிமாவில் கடந்த 30 நாட்களாக டிஜிட்டல் சினிமா பற்றி பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தயாரிப்பாளர்கள் – தியேட்டர் உரிமையாளர்கள் – டிஜிட்டல் நிறுவனங்கள் இடையே மோதல் போக்கு முடிவுக்கு வராமல் தொடர்கதையாகி தமிழ் சினிமா வர்த்தகத்தை, தயாரிப்பை முடக்கிப் போட்டுள்ளது. இந்த நிலையில் தத்தமது நிலைபாட்டை நியாயப்படுத்தி ஆடியோ, வீடியோ பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கியூப் நிறுவனம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் உலகிலேயே தமிழகத்தில்தான் இ-சினிமா கட்டணம் குறைவாக இருக்கிறது. நிறைய வசதிகளை தயாரிப்பாளர்களுக்கு இலவசமாகவே நாங்கள் செய்திருக்கிறோம்.
தயாரிப்பாளர்கள் தேவையற்று புலம்புகிறார்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்கு தயாரிப்பாளர்கள் சங்க கௌரவ செயலாளர் துரைராஜ் கடுமையாக தனது கண்டணத்தை தெரிவித்திருக்கிறார்.

உபியில் 11ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்து வெடித்துச் சிதறிய மின்சாதன பொருட்கள்! - ஒருவர் பலி

நக்கீரன் :சாதாரண வீட்டு உபயோக மின்சாரத்திற்கு பதிலாக 11ஆயிரம் வோல்ட் பாய்ந்ததால் வீடுகளில் இருந்து மின்சாதன பொருட்கள் வெடித்துச் சிதறின. உத்தரப்பிரதேசம் மாநிலம் மீருட் மாவட்டம் இன்சோலி கிராமத்தில் உள்ளது குவான் பட்டி பகுதி. இந்தப் பகுதியில் நேற்று மாலை திடீரென்று வீடுகளில் வைக்கப்பட்டிருந்த மின்சாதனப் பொருட்கள் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் முதலில் தெரியாமல் இருந்த நிலையில், குவான் பட்டி பகுதியில் மட்டும் வீடுகளுக்கு செல்லும் மின் கடத்திகளில் 11ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது தெரியவந்தது. மின்கடத்திகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் இந்த விபத்துக்கு காரணம் எனவும் தகவல் தெரிவிக்கிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் செல்போனை சார்ஜரில் மாட்டியபடியே உபயோகித்த 20 வயது இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். நான்கு பெண்களுக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவித் தொகைகளை அறிவித்துள்ளது.

காவிரி படுகையில் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைத்து பாலைவனமாக்குவதா?- அன்புமணி

tamilthehindu : 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் காவிரி பாசன மண்டலம் பாலைவனமாக மாறிவிடும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி காட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அங்கு அடுத்தடுத்து பெட்ரோலியத் திட்டங்களைச் செயல்படுத்தி பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.
இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கொள்கையின்படி அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களை கண்டறியவும், எடுக்கவும் ஒரே உரிமம் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 12 மார்ச், 2018

மதிமாறன் : ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்

எம்.ஜி.ஆரை முன்னுறுத்தி தமிழகத்தைக் கொள்ளையடித்த கும்பல் மெல்ல ரஜினியின் பின் அணியாகுது. பள்ளிக் கல்வியைத் தனியார் மயமாக்கி, உயர் கல்வியைச் சூதாட்டமாக்கியவர் புரட்சித்தலைவர். அவர் ஆட்சியில் M.L.A. வாக, மந்திரியாக இருந்தவர்களே மருத்துவம், பொறியியல் கல்வி வியாபாரிகளாக அவதாரம் எடுத்தார்கள்.
அதில் ஒருவர்தான் A.C. சண்முகம். அதை மிக முறைகேடாகக் கையாண்டவர். அவர் பல்கலைக்கழத்திற்கு அங்கீகாரம் இல்லை என்று தெரிந்தும் பல மாணவர் வாழ்க்கையைச் சீரழித்தவர்.
கூவம் ஆற்றை ஆக்கிரமத்து அதில் பல்கலைக்கழகம் கட்டியவர். ஜெயலலிதா ஆட்சியில்தான், ஆக்கிரமித்த கட்டிடங்கள் இடித்துத் தள்ளப்பட்டது.
அந்தக் கல்வி யோக்கியர் கல்லூரியில் நின்று கொண்டு, இந்த ஆன்மீக யோக்கியர் கல்வியின் சிறப்புக் குறித்துப் பேசுகிறார்.
இவ்வளவு நாள் எம்.ஜி.ஆரின் சிறப்புகள், அவரோடான உறவுகள் குறித்துப் பேசாமல் இப்போது அள்ளிவிடுறார்.
சரி இருக்கட்டும். ‘வந்தவர்களுக்கெல்லாம் வாரிக் கொடுத்தார் புரட்சித் தலைவர்’ என்று அவர்களிடம் வாங்கியவர்கள் சொல்கிறார்கள். நீங்க என்ன ரசிகர்களுக்குக் குடுத்தீங்க?

50000 பேர் 180கிமீ நடைபயணம் சரித்திரம் படைத்த மஹாராஷ்ஷ்ட்ரா விவசாயிகள்

Special Correspondent FB Wing:  வேளாண் கடன் தள்ளுபடி, மானியம் அளித்தல், விவசாய சீர்திருத்தங்களுக்கான எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து இந்திய கிசான் சபா என்னும் அமைப்பு மஹாராஷ்ஷ்ட்ரா விவசாயிகளைத் திரட்டி மாபெரும் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் ஒன்றினை திட்டமிட்டது.
விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் ,சிவசேனா கட்சி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
முதலில் புனே நகரில் புறப்படும்போது, 30 ஆயிரம் விவசாயிகளாக இருந்த நிலையில், மும்பைக்கு வந்தபோது, 50 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. பிரம்மாண்ட வரிசையில் விவசாயிகள் மும்பை நகருக்குள் வந்துள்ள விவசாயிகள் அனைவரும் திங்களன்று மாநில சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமீட்டனர். இதன் காரணமாக மும்பை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காக போலீஸார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், விரிவான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

2ஜி குறித்து மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை! ... சிதம்பரம் ஞானோதயம் ...

2ஜி குறித்து மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை!
மின்னம்பலம் :‘2ஜி விவகாரத்தில் தொலைத்தொடர்பு துறை மீதான இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் அறிக்கை மிகவும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று’ என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதியுள்ள Speaking Truth to Power என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன்ஸ் ஆண்கள் பள்ளி அரங்கத்தில் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிதம்பரம் பேசுகையில், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவை தொலைத்தொடர்பு மற்றும் மின் துறை. இந்தத் துறைகளுக்கு வகுக்கப்பட்ட கொள்கைகள் தொடர்பாக முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டன.
தொலைத்தொடர்பு துறை குறித்து இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கை அலுவலக அதிகாரியின் அறிக்கையில் 2ஜி அலைக்கற்றை குறித்து மிகைப்படுத்தப்பட்டு அறிக்கை தரப்பட்டது. தொழில்முறை பிரச்சினைகளை தொழில்முறை பிரச்சினையாகவே அணுக நாங்கள் தவறிவிட்டோம்.

பாலுமகேந்திரா புத்தக சாலை... படைப்புத் திறனை மெருகூட்ட...

மின்னம்பலம் :தினேஷ் பாரதி
உதவி இயக்குநர்கள் தங்களின் படைப்புத் திறனை மெருகூட்டிக்கொள்ள பாலுமகேந்திரா புத்தக சாலை என்ற பெயரில் புதிதாக நூலகம் ஒன்றை தொடங்கவிருக்கிறார் இயக்குநர், நடிகர், எழுத்தாளர், பதிப்பாளர் அஜயன் பாலா.
திரைத் துறையில் இயக்குநராக வேண்டும் என்ற கனவில் நாளும் வெவ்வேறு துறை சார்ந்த இளைஞர்கள் சென்னையை நோக்கிப் படையெடுத்து வந்தவண்ணம் இருக்கின்றனர். உதவி இயக்குநர்கள் தங்களின் அறிவை மேம்படுத்திக்கொள்ளப் புத்தகங்களை நாடுகிறார்கள். ஆனால், அவர்களின் முழுமையான தேவையை அரசு துறை சார்ந்த நூலகங்களால் நிறைவேற்ற முடிவதில்லை. அதேசமயம் தான் விரும்பும் புத்தகங்களை வாங்கிப் படிப்பதற்கான பணமும் அவர்களிடம் இருப்பதில்லை.
உதவி இயக்குநர்களின் இத்தகைய நிலையைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் தமிழில் மிகச் சிறந்த 5,000 புத்தகங்கள் கொண்ட நூலகம் ஒன்றை ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்க இருப்பதாக அஜயன் பாலா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் சினிமா நூல்களை கொண்ட நூலகமாகவும், நண்பர்களின் நல்ல நூல்களின் கொடையும் நூலகத்தைச் சிறப்பிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

லண்டனில் சத்யராஜ் சிலை!

லண்டனில் சத்யராஜ் சிலை!மின்னம்பலம் :லண்டனில் உள்ள ‘மேடம் துஸாட்ஸ்’ அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் மெழுகுச் சிலை வைக்கப்படவுள்ளது.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி இந்திய அளவில் வசூல் சாதனை புரிந்தது பாகுபலி திரைப்படம். வரலாற்றுச் சம்பவங்களை உள்வாங்கி பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்குகள், கிராபிக்ஸ் தொழில்நுட்பம் ஆகியவை மட்டும் படத்திற்கான வெற்றிக்குக் காரணமாக அமைந்துவிடவில்லை. கதாபாத்திர உருவாக்கமும், நடிகர்களின் சிறந்த நடிப்பும் படம் பற்றிய நம்பகத்தன்மையை அதிகரித்தது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் பதியக்கூடிய அளவில் அமைந்திருந்தது. கதாநாயகன், கதாநாயகி கதாபாத்திரத்திற்கு இணையாக பேசப்பட்டது சத்யராஜ் ஏற்று நடித்திருந்த கட்டப்பா கதாபாத்திரம்.

BBC :நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 40 பேர் உயிரழப்பு

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச நிலையத்தில், 71 பேருடன் பயணித்த விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். படத்தின் காப்புரிமை Twitter/@Bishnusapkota அதேபோல் இந்த விமானத்தில் இருந்த குறைந்தது 22 பேர் உயிர்பிழைத்துள்ளனர். திங்கள்கிழமை பகலில் தரையிறங்கும் போது வங்கதேச விமான சேவை விமானம் ஒன்று விமான ஓடுதளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிழம்பு உண்டானது. மீட்பு படையினர் சிதைந்த விமானத்தில் இருந்து உடல்களை மீட்டனர்.
திரிபுவன் சர்வதேச நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன  விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து புகை எழும்புவதை காண்பிக்கின்றன. விபத்துக்குள்ளான விமானம் உள்ளூர் ஊடகங்களில் S2-AGU என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், இதனை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் உறுதி செய்யவில்லை.

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 12பேர் உயிரிழப்பு - சுற்றுலா வழிகாட்டி கைது

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு - சுற்றுலா வழிகாட்டி கைது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரழந்தனர , 
மாலைமலர் :தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுற்றுலா வழிகாட்டி ராஜேஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி:தேனி மாவட்டம் குரங்கணியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக்கொண்டனர். தீயின் தாக்கத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.< பலியான 9 பேரின் சடலங்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மலையேற்ற பயிற்சி நிறுவனம் இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முறையான அனுமதி பெறாமல் காட்டுக்குள் அவர்கள் சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 11 மார்ச், 2018

ராகுல்காந்தி : எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும் முன்கூட்டியே தெரியும்

நான் அந்தப் பாதுகாவலர்களுடன் பேட்மின்டன்
விளையாடி இருக்கிறேன். அவர்களே என் பாட்டியைக் கொன்றதைப் பார்த்திருக்கிறேன், அவர்கள் இறந்ததையும் ரெண்டு கண்ணால் பார்த்தேன்.
எனக்கு எங்கள் பாட்டி இறந்துவிடுவார் என்றும் –
எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும்
முன்கூட்டியே தெரியும்.
இந்த அரசியலில் ஒரு கொள்கையுடன்
தீய சக்திகளுக்கு எதிராக நிற்கும்போது
நீங்கள் கொல்லப்படுவது தானாகவே நடந்துவிடுகிறது.
அப்படிதான் எனது பாட்டியும் அப்பாவும் இறந்தார்கள்.
தான் இறந்துவிடுவேன் என்று என் பாட்டி இந்திராகாந்தி என்னிடம் சொன்னார். இந்த அரசியலை உணர்ந்திருந்த நான், “நீங்கள் இறந்து விடக்கூடும் அப்பா” என்று அப்பாவிடம் சொன்னேன்.
ஸ்ரீபெரும்புதூரில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது
நான் ஹார்வார்டில் இருந்தேன்.
தேர்தல் பிரசாரம் தொடர்பான விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன.
அது மிகவும் பிரச்னையான தேர்தல் என்பதும் –
அப்பா தேர்தல் பிரச்சாரத்துக்காக வருவது ஆபத்தானது என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம்.

ஆசிரியர் வீரமணி : பெரியார், அம்பேத்கர், லெனின் படங்களை ஏந்தியபடி உணர்வாளர்கள் சென்று மாலை அணிவியுங்கள்

மார்ச் 11 - தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலை உள்ள இடங்களில் பெரியார், அம்பேத்கர், லெனின் படங்களை ஏந்தியபடி சமூக உணர்வாளர்ளைத் திரட்டிச் சென்று மாலை அணிவியுங்கள் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ராதாரவியின் .... ஆதாரத்துடன் வெளியிட்ட நடிகை ரோகினி



இமயமலையில் ரஜினி பாஜக முன்னாள் முதல்வர்களை சந்திப்பு

ரஜினிகாந்த்-பாஜக முன்னாள் முதல்வர் சந்திப்பு!மின்னம்பலம் :ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்தை கன்ட்படி கிராமத்தில் பாபா ஆசிரமத்தில் இமாச்சல் பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் சந்தித்துப் பேசினார்.
அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் , சாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியலே தன்னுடைய கொள்கை என்றும் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் கட்சியின் கட்டமைப்பு பணிகளும், உறுப்பினர் சேர்ப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

ஜெயா பாணியில் கமல் ... குழந்தைக்கு கமலா ரஞ்சிதம் என்று பெயர் சூட்டினார்

ஜெ. பாணியில் கமல்ஹாசன்.. 10 மாத குழந்தைக்கு கமலா ரஞ்சிதம் என பெயர் சூட்டினார்மாலைமலர் :ஈரோடு: நடிகர் கமல்ஹாசன், ஜெயலலிதா பாணியில், தனது கட்சியை சேர்ந்த தொண்டரின் மகளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார். முன்னாள் முதல்வர், மறைந்த, ஜெயலலிதா, சுற்றுப் பயணங்களின்போது, அதிமுக தொண்டர்களின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது வழக்கம். இப்போது மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசனும் அதை செய்துள்ளார்.
கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில், கமல்ஹாசன் நேற்று முதல் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அப்போது, கட்சி தொண்டரும் ரசிகருமான ஒருவரின், 10 மாத, பெண் குழந்தையொன்றுக்கு, கமலா ரஞ்சிதம் என்று பெயர் சூட்டியுள்ளார்.

சீன அதிபர் ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் சீனாவில் அதிபராக இருக்கும் புதிய சட்டம்

நக்கீரன் :சீனாவில் அந்நாட்டு அதிபராக பதவியேற்பவர் இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. இந்த நடைமுறை கடந்த 1990ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு அதிபராக தற்போது இருக்கும் ஷி ஜின்பிங்கின் ஆட்சிக்காலம் வருகிற 2023ஆம் ஆண்டோடு நிறைவுக்கு வருகிறது.
கடந்த ஆண்டு கூட்டப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் சீன அதிபருக்கான பதவிக்காலத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை உயர்மட்டக் குழுவும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், இந்த சட்டத்திருத்ததை நிறைவேற்றுவதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ரப்பர்ஸ்டாம்ப் பயிற்சி என்று அழைக்கப்படும் முறையில் இந்தத் தேர்தலானது நடத்தப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக 2,964 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்திருந்தனர். மூன்று பேர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. இந்தத் தேர்தலில் முதல் ஆளாக ஷி ஜின்பிங் வாக்களித்தார்.

மகாராஷ்டிரா விவசாயிகள் பேரணி ... கடன் தள்ளுபடி.. அதிர்ச்சி வைத்தியம்


வெப்துனியா :கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் மாபெரும் விவசாயிகள் பேரணி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் கடுமையான வரட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தங்களது கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாரதிய கிசான் சபா என்ற விவசாய அமைப்பு பேரணி நடத்தினர். நாசிக் மாவட்டத்தில் இருந்து மும்பை நோக்கி சென்று சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
கடந்த 6ஆம் தேதி 100 விவசாயிகள் இணைந்து தங்களது பேரணியை தொடங்கினர். இதைத்தொடர்ந்து இவர்களது பேரணியை கண்ட மற்ற விவசாய அமைப்புகளும் இவர்களுடன் இணைந்தனர். அரசியல் கட்சிகளும் இவர்களது பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்த பேரணியில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர். இந்த மாபெரும் பேரணியை சற்றும் எதிர்பாராத மகாராஷ்டிரா மாநிலம் அதிர்ந்துள்ளது. மும்பை தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் மாபெரும் பேரணி மற்ற மாநில விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

நீலகிரியில் தங்கச் சுரங்கம்: ரகசியமாக வெட்டி எடுக்கும் கும்பல்: கோடிக் கணக்கில் விற்பனை

tamilthehindu :பாறையில் படிந்துள்ள தங்கத்தை காட்டும தொழிலாளர் ;படம் உதவி: ரோஹன் டி பிரேம்குமார். நீலகிரி நீலகிரி மாவட்டம், தேவலா, பந்தலூர் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ரகசியமாக சுரங்கம் அமைத்து சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
ஊட்டியில் இருந்து 70 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலையின்மை, குறைவான கூலி காரணமாக தேவலா, பந்தலூர் பகுதியைச் சுற்றி இருக்கும் மக்கள் உயிரைப் பணயம் வைத்து,மிகுந்த ஆபத்தான சுரங்கம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தின் அளவு குறைவாக இருந்தபோதிலும், மிக சுத்தமாக இருப்பதால் அதிக விலைக்கு வாங்கப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் ஆபத்தான பணியாக இருந்தாலும், தங்களை ஆர்வத்துடனும், ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
பந்தலூர்-தேவலா பகுதியில் செயல்படும் 10-க்கும் மேற்பட்ட சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு ஷிப்டுக்கும் 12க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர். தலையில் பேட்டரி லைட்டுடன், தோளில் சுத்தியல், கயிறுகளுடன், தங்கத்தை தேடி அந்த குகைக்குள் அலைந்து திரிகின்றனர்.

தேனி: காட்டுத்தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகள் - மீட்புப்பணிகள் தீவிரம்


மாலைமலர் :தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போடி அருகே& தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் இன்று 25 கல்லூரி மாணவிகள் மடை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட 25 மாணவிகளும் இதில் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
100க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 9 பேர் மலையில் இருந்து கீழே இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருவதாக அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார் தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. #

உ.பி.,யில் பகுஜன் சமாஜுக்கு காங்., ஆதரவு.. அதிரடி திருப்பம்.

Siva Bsp i லக்னோ:< உ.பி., அரசியலில் புதிய திருப்பமாக, இம்மாதம் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில், பகுஜன் சமாஜ் வேட்பாளரை ஆதரிப்பதென, காங்., முடிவு செய்துள்ளது. இம்மாநிலத்தில், 10 ராஜ்யசபா, எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், 23ல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், நாளையுடன் முடிகிறது. இத்தேர்தலில்,
பெகன்ஜி மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் சார்பாக, பீம்ராவ் அம்பேத்கர், வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
காங்., ராஜ்யசபா தேர்தலில், பகுஜன் சமாஜுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. இதனால், அக்கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
உ.பி., சட்டசபை, காங்., தலைவர், அஜய் சிங் லல்லு, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கைகோர்க்க முடிவு, சர்வாதிகார, மதவாத அரசியலுக்கு எதிராக, மதச்சார்பற்ற கட்சிகளுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளோம்.
ராஜ்யசபா தேர்தலில், பகுஜன் சமாஜ் வேட்பாளருக்கு, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவளிப்பர். இது தொடர்பாக, காங்., தலைவரிடம் தெரிவித்து உள்ளோம். இவ்வாறு அவர்கூறினார்.

ஸ்ரீதேவியுடன் கடைசி நிமிடத்தில் இருந்த தங்கை எங்கே, ஏன் அமைதியாக இருக்கிறார்?

ஏன்?
அமைதி siva.- Oneindia Tamil : மும்பை: ஸ்ரீதேவி இறக்கும்போது அவருடன் துபாயில் இருந்த அவரின் தங்கை ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.
நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றார் நடிகை ஸ்ரீதேவி. திருமணம் முடிந்து பலரும் மும்பை திரும்பியபோது அவரும், அவரின் தங்கை ஸ்ரீலதாவும் துபாயிலேயே இருந்தனர்.
கடந்த 24ம் தேதி ஸ்ரீதேவி மது போதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
ஸ்ரீதேவியின் தங்கை ஏன் அக்காவின் இறுதிச் சடங்கு, பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ள பாலிவுட்காரர்கள் ஆர்வமாக...< ஸ்ரீதேவியின் தங்கை ஏன் அக்காவின் இறுதிச் சடங்கு, பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ள பாலிவுட்காரர்கள் ஆர்வமாக உள்ளனர். ஸ்ரீலதா மிஸ்ஸானது பலருக்கும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

BBC :பாஜக உறவு முறிவு: சந்திரபாபு நாயுடுவின் தந்திரக் கணக்கு என்ன?

பாஜக - தெலுங்கு தேசம் கட்சிகளின் கூட்டணி முறிவுஸ்ரீராம் கோபிசெட்டி ">பிபிசி தெலுங்கு< தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக இந்தியாவின் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு தலைநகர் டெல்லியின் அரசியல் வட்டாரங்களிலும், ஆந்திர பிரதேச மக்களும் எதிர்பார்க்காத முடிவல்ல. இந்த முடிவு மிகவும் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரண்டு கட்சிகளுக்கும் பெரிய அளவிலான இழப்பு இல்லாத இந்தப் பிரிவினையை எதிர்கொள்ள தெலுங்கு தேசமும், பாரதிய ஜனதா கட்சியும் (பாஜக) நன்றாகவே தயாராகியிருந்தன.
பாஜகவோடு கூட்டணியில் தொடர்வதால் உருவாகும் கெட்டப்பெயரில் இருந்து தப்பித்து கொள்வதைத் தவிர இந்த முடிவின் மூலம் என்ன நன்மையை சந்திரபாபு நாயுடு பெறுவார் என்பது கேள்விகுறி.

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி ... மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை .. சந்தடியின்றி

tamilthehindu: சி.கதிரவன் நாடு முழுவதும் இமயமலை, கங்கை, காவிரி உள்ளிட்ட 10 இடங்களில், அடையாளம் செய்யப்பட்டுள்ள புதிய பெட்ரோலிய வள வட்டாரங்கள் குறித்த வரைபடம்.
தமிழகம், புதுச்சேரியின் கிழக்கு கடலோரமான மரக்காணம் முதல் குமரி வரை பெட்ரோலிய வள இருப்பு மண்டலமாக அடையாளம் செய்யப்பட்டுள்ள பகுதியும் (மஞ்சள் நிறம்), ‘ஹெல்ப்’ திட்டத்தின்படி காவிரி வடிநிலத்தில் நிலம் மற்றும் கடலில் ஏலம் விடப்பட உள்ள 3 புதிய பெட்ரோலிய வட்டாரங்களும் (பச்சை நிறம்) காட்டப்பட்டுள்ளன.
மத்திய ஹைட்ரோ கார்பன் இயக்குநரகத்தின் 2015-16 செயல்திட்ட அறிக்கையில் (பக்கம்-119), ஆந்திராவின் ராஜமுந்திரி, தமிழ்நாட்டின் காவிரி வடிநிலம் உள்ளிட்ட 3 இடங்களில் நீரியல் விரிசல் (ஹைட்ராலிக் ஃபிராக்சர்) சோதனை நடத்தப்பட்டது தொடர்பான வரைபடம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி வ.சேதுராமன்.
நாடு முழுவதும் இமயமலை, கங்கை, காவிரி உள்ளிட்ட 10 இடங்களில், அடையாளம் செய்யப்பட்டுள்ள புதிய பெட்ரோலிய வள வட்டாரங்கள் குறித்த வரைபடம்.
‘ஹெல்ப்’ எனப்படும் ஒற்றை உரிமம் திட்டத்தில், காவிரி வடிநிலம், கங்கை வடிநிலம், இமயமலை முன்நிலம் உட்பட நாடு முழுவதும் 55 புதிய வட்டாரங்களில், 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டில் உலகளாவிய நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான முதல் அனுமதி வரும் ஜூன் மாதம் வழங்கப்பட உள்ளது. இதற் கான ஏல நடைமுறை சந்தடியின்றி கடந்த ஜனவரி 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா ரஜினிக்கு : நீ போயஸ் தெருவுக்குள் காரில் வரக்கூடாது, நடந்துதான் வரவேண்டும் .. Flash Back

Ravi Raj : "நானா பதவிக்கு ஆசைப் படுபவன்? 1996 லேயே, எனது 45 வயதிலேயே முதலமைச்சர் நாற்காலி என்னைத் தேடி வந்தது! ஆனால், வேண்டாம் என்று தள்ளி விட்டவன் நான்! இப்போது 68 வயதிலா நான் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவேன்?" - யோக்கிய சிகாமணி, போலி ஆன்மீகவாதி சொரிகாலன்!
அது சரி? 1996 ல் எவன் உன்னிடம் முதலமைச்சர் நாற்காலியை தூக்கிக்கொண்டு வந்தான்? நீயாக ஒரு நாற்காலி செய்து இதுதான் முதலமைச்சர் நாற்காலி என்று நினைத்திருக்கலாம்! அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு புளுகுவதில் நீ 'கேடி'யையும் மிஞ்சி விட்டாய்! சரி? அந்தத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கு ஆதரவாக நீ பிரச்சாரம் செய்தாய்? எத்தனை பொதுக் கூட்டங்களில் நீ பேசினாய்?
அப்போது முதல்வராக இருந்த ஜெயா குடியிருந்த போயஸ் தோட்ட சாலையில்தான் உனது வீடும் உள்ளது! அவர் அலுவலகத்திற்கு செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பும், சென்றபின் ஒரு மணி நேரம் வரையிலும் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும் என்பது உலகறிந்த விஷயம்!
உனது காரும் ஒரு நாள் நிறுத்தப்பட்டது! அதை எதிர்த்து நீ காவலருடன் தர்க்கம் செய்த விஷயம் அம்மையார் காதுக்கு சென்றது! அந்த தெருவுக்குள் நீ எப்போதுமே காரில் வரக்கூடாது, நடந்துதான் வரவேண்டும் என்று அம்மையார் உத்தரவு போட்டதால், அலறி அடித்திக்கொண்டு "காப்பாற்றுங்கள்" என்று தலைவர் கலைஞரின் காலில் விழுந்தாய்!

பாஜகவின் ரவுடி பெண்ணுக்கு அய்யாக்கண்ணு அடித்து விட்டாராம் .. வழக்கு பாய்ந்தது


  கடந்த 8 ம் தேதி திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகித்ததாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட 4 பேர் மீது காவல்நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு tamilhtehindu :சங்கத் தலைவர் அய்யாகண்ணு மீது திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதையேற்று அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோயிலுக்குள் அனுமதியின்றி துண்டு பிரசுரங்களை வினியோகித்தற்காக, கோயில் நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார்.
இந்த நிலையில், நிர்வாகம் சார்பில் இன்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அய்யாகண்ணு துண்டு பிரசுரம் வினியோகித்தபோது அதை பாஜக பெண் நிர்வாகி நெல்லையம்மாள் தடுத்தார்.
அப்போது, இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அய்யாகண்ணு, நெல்லையம்மாளை தகாத வார்த்தையால் திட்ட, பதிலுக்கு நெல்லையம்மாள் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது