திங்கள், 26 பிப்ரவரி, 2018

சண்டிகார் மருத்துவ கல்லூரியில் தமிழக மாணவர் மர்ம மரணம்

tamilthehindu :சண்டிகரில் உள்ள பட்டமேற்படிப்பிற்கான மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம்(பிஜிஐஎம்இஆர்) எனும் மருத்துவக் கல்லூரியின் தமிழக மாணவர் இன்று காலை மர்ம மரணம் அடைந்துள்ளார்.
.ராமேஸ்வரத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் டாக்டர்.கிருஷ்ணபிரசாத். இவரது தந்தை பெயர் ராமு, ராமேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் குருக்களாகப் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணபிரசாத் பிஜிஐஎம்இஆர்-ல் முதலாம் ஆண்டு ஊடுகதிர் துறையின் பட்டமேற்படிப்பு மாணவராக உள்ளார். துவக்கக்கட்டமாக கிடைத்த தகவலின்படி, இவரது அறை இன்று காலை திறக்கப்படாமல் பூட்டி இருந்துள்ளது. வகுப்பிற்கு செல்லாமல் கிருஷ்ண பிரசாத் இருப்பதை அறிய கதவு தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகத்தின் பேரில் அவரது அறை உடைத்து பார்க்கப்பட்டுள்ளது. அதில் கிருஷ்ணபிரசாத் தூக்கில் தொங்கியபடி உயிர் பிரிந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

BBC :சென்னை ஐ ஐ டி யில் சமஸ்கிருததில் வாழ்த்துப்பாடல் .. தமிழ் பாடலுக்கு பதிலாக சமஸ்கிருதம்


சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாமல், சமஸ்கிருத மொழியில் கடவுள் வணக்கப்பாடல் இசைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்பாதை தொடர்பான தேசிய தொழில்நுட்ப மையத்தை சென்னை ஐஐடியில் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி ஐஐடி வளாகத்தில் இன்று காலையில் கையெழுத்தானது. மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் ஐஐடியின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
விழா துவங்குவதற்கு முன்பாக, மகா கணபதி என்ற சமஸ்கிருதப் பாடல் மாணவர்கள் நான்கு பேரால் பாடப்பட்டது. இதற்கு விருந்தினர்கள் எழுந்துநின்று மரியாதை செலுத்தினர். இதற்குப் பிறகு விழா நடைபெற்றது.தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது மரபாக உள்ள நிலையில், அதற்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடலை இசைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஸ்ரீ தேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளதவும் ரத்தத்தில் ஆல்கஹால் ...Accidental Drawning

Ajeevan Veer : ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளதவும் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதும் (Traces of alcohol) உறுதி செய்யப்பட்டுள்ளது
கடந்த 20-ம் தேதி துபாயில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்க ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி, போனி கபூர், ஸ்ரீதேவி ஆகியோர் சென்றுள்ளனர். திருமணம் முடிந்த பின், போனி கபூரும் மகள் குஷியும் மும்பை திரும்பினர். ஸ்ரீதேவி மட்டும் ஷாப்பிங் செய்ய வேண்டிய வேலை இருப்பதால் துபாயில் உள்ள எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.
மும்பை திரும்பிய போனி கபூர், மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டுமென்பதற்காக, அவரிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் 24-ம் தேதி மீண்டும் துபாய் சென்றுள்ளார். மாலை 5.30 மணியளவில், திடீரென்று மனைவியின் முன்னர் போய் போனி கபூர் நின்றதும் ஸ்ரீதேவி ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்துள்ளார். பின்னர், இருவரும் 15 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துள்ளனர். மனைவியை டின்னருக்கு அழைத்துள்ளார் போனி கபூர்.
ரெடியாகி வருவதாகச் சொல்லிவிட்டு ஸ்ரீதேவி பாத்ரூமுக்குச் சென்றுள்ளார்.

உண்மைக் குற்றவாளிகள் யார்..? வன்னியர்களும் தலித்துகளும் பதட்டத்தில் உள்ளனர்.

Gowthama Sanna :கொலை, பாலியல் வல்லுறவு - 2..
வேலாம்புதூர் கிராமத்தில் நடந்த படுகொலைகள் பற்றி வன்னியர்களிடம் உருவாகியிருக்கும் பதட்டம் குறித்து மிகுந்த கவனம் கொள்கிறேன். கிடைத்த முதல்கட்ட தகவலின் பேரிலேயே எனது பதிவு அமைந்தது. எனினும் வேலாம்புதூர் கிராமத்தில் நடந்தவை என்ன..?
வேலாம்புதூர் கிராமத்தில் மேற்கண்ட கொலை நிகழ்வைப் போலவே இரண்டு சம்பவங்கள் நடந்தன.
1. கிராமத்தின் ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு வன்னியரின் வீட்டில் புகுந்து ஒரு இளம் பெண்ணைத் தாக்கி வல்லுறவு செய்த கும்பல் அந்த பெண் இறந்துவிட்டாதாக கருதி தப்பி ஓடியுள்ளது. ஆனால் குற்றுயுரும் குலையுருமாக அந்த பெண் பிழைத்துள்ளார். மருத்துவ சிகிச்கைக்குப் பிறகே காப்பற்றப்பட்டார்.
2. இதே பாணியில் மற்றொரு பெண். குரவர் சாதி. தாக்கப்பட்ட வல்லுறவு செய்யப்பட்டார். அவரும் பலத்த உயிர் காயங்களுடன் காப்பாற்றப்பட்டார்.
3. மற்றொரு வன்னியப் பெண்ணின் தாலி பறிக்கப்பட்டது, ஆயினும் வல்லுறவு தாக்குதலுக்குப் முன்பே காப்பாற்றப்பட்டார்.
4. கடைசியாக ஆராயியின் குடும்பம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது. ஆராயியின் மகளும் தலையில் தாக்கப்பட்ட ரத்த வெள்ளத்தில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார்.

நான்கு சம்பவங்களும் ஒரே மாதிரியாகவும் ஒரு குறிப்பிட்ட கும்பலாலும் நடத்தப்பட்டுள்ளது. அந்த கும்பல் எது என்பது இன்னும் புலனாகவில்லை.
அக்கிராமத்தில் வன்னியர்களும் தலித்துகளும் பதட்டத்தில் உள்ளனர்.

அடிப்படைவாத வஹாபிசம் அஸ்தமனம் ?

சிறப்புக் கட்டுரை: வஹாபிசத்தின் அஸ்தமனம்?minnambalam : களந்தை பீர் முகம்மது இதர சமயங்களுக்கு இல்லாத ஒரு நெருக்கடி இஸ்லாமியச் சமூகத்தில் இருக்கிறது. அது, இஸ்லாமியச் சமயப் பண்பாடு என்பது சவூதி அரேபியாவின் நிழலாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. இது நிர்பந்தமல்ல; நடைமுறைகளால் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கருத்தியலால் நிர்பந்தம்போல ஆகியிருக்கிறது.
சவூதியின் மத அடிப்படைவாதமான வஹாபிசம் உலகெங்கும் பரவ ஆரம்பித்தது அல்லவா? அதன்பின், ஒரு முஸ்லிம் என்பவர் சவூதியின் ஆடை வடிவமைப்பு என்னவோ, அதையே தன்னுடைய ஆடை வடிவமைப்பாகவும் கொள்ள வேண்டும் என்று வரையறுத்தது. இதை முதல் பண்பாட்டுத் தாக்குதல் எனலாம். இதைத் தொடர்ந்து இதர அம்சங்களிலும் தன் நடைமுறைகளின் சிந்தனையைத் திணிக்க ஆரம்பித்தது.

ஸ்ரீதேவிக்கு உண்மையிலேயே ஹார்ட் அட்டாக் தானா?... கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

Gajalakshmi  Oneindia Tamil  ஸ்ரீதேவிக்கு இதற்க்கு முன்பு மாரடைப்பு வந்துள்ளதா? துபாய் : இந்தியாவின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவியின் மரணம் திரைத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும்ம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவி மாரடைப்பில் தான் உயிரிழந்தாரா என்பது உறுதிபடுத்தப்படவில்லை என்று துபாயில் இருந்து வெளிவரும் கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் கந்தக பூமியாம் சிவகாசியில் பிறந்து தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலமாந்து, பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது 54 வயதில் மாராடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. 
 
ஆனால், அவர் தங்கியிருந்த எமிரட்ஸ் டவர்ஸ் ஹோட்டல் அறையின் குளியல் அறையில் மயக்கம் போட்டு விழுந்ததாக சொல்கிறது கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை. திருமண நிகழ்ச்சி முடிந்து ஓட்டல் அறைக்கு சென்ற பின்னர் கணவர் போனி கபூருடன் உரையாடிக்கொண்டிருந்துள்ளார். பின்னர் குளியல் அறைக்கு சென்றவர் 15 நிமிடங்கள் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகத்தின் பேரில் உடைத்து பார்த்த போது தான் ஸ்ரீதேவி பாத் டப்பில் மயங்கி கிடந்துள்ளது தெரிய வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய ஈழத்து ஆர்.முத்தையா பிறந்த நாள் 1886 பிப்ரவரி 24ந்தேதி

Father of typewriting machine Father of typewriting machine தட்டச்சு இயந்திரம் பொதுவெளிக்கு விற்பனைக்கு வந்தது 1875ஆம் ஆண்டு. ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் வகையில் தான் அந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 1930களில் தான் தமிழில் தட்டச்சு இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது. அதனை உருவாக்கியவர் முத்தையா. அதனாலேயே அவர் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இலங்கையில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள சுண்டிக்குளி என்கிற கிராமத்தில் பிறந்தவர் முத்தையா. இவருடைய தந்தை இராமலிங்கம். இவரது குடும்பம் பெரிய குடும்பம். இராமலிங்கத்துக்கு 5 ஆண் பிள்ளைகள், 4 பெண் பிள்ளைகள். அவர்களில் கடைக்குட்டி முத்தையா. இவர் 1886 பிப்ரவரி 24ந்தேதி பிறந்தார்.
சிறுவயதிலேயே தந்தை மற்றும் தாயாரை அடுத்தடுத்து இழந்தார். இருந்தும் படிப்பை இவர் இழக்க விரும்பவில்லை. இவரது சகோதர – சகோதரிகள் இவரையும் நன்றாக படிக்கவைத்தனர். 1907ல் மலேசியா நாட்டுக்கு அகதியாக சென்றார். அங்கு சென்றும் படித்தார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இரயில்வேயில் பணியாளராக வேலைக்கு சேர்க்கப்பட்டார்.

பணமதிப்பிழப்புக்கு சில மணி நேரத்துக்கு முன்பு 90 கோடியை நீரவ் மோடி வங்கியில் மாற்றினார் Nirav Modi deposited Rs 90 crore in PNB hours before demonetisation

it was reported that some hours prior to Prime Minister's announcement of demonetisation  Nirav Modi had deposited cash worth Rs 90 crore at one of the branches of the scam-hit Punjab National Bank (PNB).
தினதந்தி "பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நடந்த முறைகேடு பற்றி பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி விடுத்தார். பெங்களூரு, கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் 2–வது கட்ட பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் கர்நாடகத்திற்கு வந்தார். 2–வது நாளான நேற்று, பாகல்கோட்டை மாவட்டம் சிக்கபடசலு கிராமத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:– ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டபோது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வங்கி வாசலில் நீண்ட வரிசையில் நின்று டெபாசிட் செய்தனர். அந்த வரிசையில் ஒரு பணக்காரரோ, கோட்–சூட் அணிந்தவரோ நிற்கவில்லை. மோடியின் உதவியால், எல்லா திருடர்களும் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கி விட்டனர்.

எலும்பு திருட்டு குற்றச்சாட்டு - பச்சைத் தமிழகம் கட்சி கண்டனம், கோரிக்கை அறிக்கை


எலும்பு திருட்டு குற்றச்சாட்டு - பச்சைத் தமிழகம் கட்சி கண்டனம், கோரிக்கை அறிக்கை
காஞ்சிபுரம் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் உள்ள "செயின்ட் ஜோசப்" கருணை இல்லத்தில், ஏராளமான ஆதரவற்ற முதியவர்கள், நல்வுள்ளங்களின் நன்கொடையால், பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கு கடந்த 3 மாதத்தில் 300க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சராசரியாக 3 பேர்
நாள்தோறும் மரணமடைவதாக கருணை இல்லத்தின் நிர்வாகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரியும் நிலையில், எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் இருக்ககூடும் என்று வருகிற தகவல்கள் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்கள், தமிழக தெருக்களில் இருந்து உதவுகிறோம் என்ற பெயரில் அழைத்துவரப்பட்டுள்ளார்கள். பொது மக்களிடம் நன்கொடை பெற்றே இல்லம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அழைத்து வரப்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் விருப்பம் இன்றியே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பணத்திற்காக அவர்களின் உறுப்புகள் கடத்தப்படுவதாகவும், அவர்களின் உடல் அழுகிய பிறகு எழும்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கேரளா பத்மநாபசாமி கோவில் தங்கம் ... ஆதிவாசி கொத்தடிமைகளின் உழைப்பை உறிஞ்சி அரச குடும்பம் அடித்த கொள்ளை!


நந்தன் ஸ்ரீதரன் மனிதனாகப் பிறந்ததற்காக அவமானமாக. காட்டுமிராண்டிகள்
இல்லாத தேசங்கள் இல்லை.. அது கடவுளின் தேசமாக இருந்தாலும் சரி.
நிறைய பிரிவினரோடு பழகி இருக்கிறேன். நட்பு கொண்டிருக்கிறேன்.. என்ன என்று தெரியவில்லை.. பழங்குடியின நண்பர்கள் என்று யாருடனும் நான் பழகியதே இல்லை..
காட்டுமிராண்டி என்ற பதத்தைக் கேள்விப்பட்டதும் எனக்கு எப்போதும் வனங்களில் வாழும் பழங்குடியினர் நினைவுக்கு வந்தது எனது தவறல்ல.. நான் படித்த புத்தகங்கள் ஏற்படுத்திய பிம்பம் அது.
பின்னர் ஒரு முறை கண்ணகி கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு காட்டுத்தீ பற்றியது.. கோவிலுக்கு சென்ற பக்தர்களில் ஒருவர் விட்டெறிந்த சிகரெட் அல்லது பீடியின் விளைவால் பற்றிய தீ அது.. அதை அணைக்க வனத்துறையினரை விட படாத பாடு பட்டவர்கள் பளியர்கள்.. பற்றி எரியும் தீ.. சின்னப்பிள்ளை ஒண்ணுக்குப் போனது போல ஓடும் சிறு ஓடை.. அந்த தண்ணீரை வைத்து அந்தப் பெரிய தீயை அணைக்க வேண்டும்.. சாக்குகளை அந்த தண்ணீரில் நனைத்து நனைத்து தீயெரியும் புற்களின் மீது போட்டு மிதித்து மிதித்து தீயை அணைத்துக் கொண்டிருந்தார்கள் பளியர்கள். அதீத புகையின் காரணமாக தீயின் மேல் நின்று சாக்கை மிதிக்கும்போதே ஒரு பளிய இளைஞன் மயங்கி ஈரத் துண்டைப் போல சரிந்து விழுவான்.

மறைந்த நடிகை ஸ்ரீ தேவி மீண்டும் மீண்டும் பிளாஸ்டி சேர்ஜரியில் நம்பிக்கை வைத்தாரா ? ...

Actress Sri Devi death may be linked to the plastic surgeries she underwent to change her appearance. She was only 54 and seemingly fit.
Esther Nathaniel : அண்மையில்  மறைந்த நடிகை ஸ்ரீ தேவி ஒரு சத்திரசிகிச்சை செய்தார் காரணம் அவருக்கு ஒரு முக்கியமான படம் ஒன்று கைக்கு வந்ததால் இந்த சத்திர சிகிச்சை செய்துள்ளார் ஏற்கனவே அவர் தன் அழகை மெருகூட்ட இந்த அயோக்கிய உலக மயக்கத்தில் ரசிகனுக்காக விலை போனவர்.மிகவும் சிரமபட்டு அந்த அழகை காப்பாற்றியுள்ளார்.
சினிமாவும் பாருங்களேன் இத்தனை வயதிலும் பதினாறு வயது பருவம ங்கை மயிலன்னு உசுப்பேத்தி உசுப்பேத்தி உசுர எடுக்கவச்சிட்டது அம்மணி நல்ல நடிகை கமலுடன் ஒரு கலக்கல்தான் .
ஸ்ரீதேவியை இளமை சற்றும் குறையாமல் வைத்திருக்க சினிமா உலகம் விரும்பியது நடிகையும் அதையே விரும்பினார் அவரின் முகத்தில் விழுந்த முதுமையை ஏதேதோ செய்து துரத்த விரும்பினார் கடைசியில் மரணத்தை துரத்த முடியவில்லை
இந்த பொருள்முதல்வாத உலகம் பெண்களை காட்சி பொருளாக்கிவிட்டது
ஆண்கள் பெண்களையே ரசிக்கவேண்டும் ஆகவே அவர்களின் கண்களை நோக்கி இந்த பொருள்முதல்வாத சிந்தனையை உலக சந்தை அரிதாரம் பூசுகின்றது
அழகியாகிட ஆளாய் பறக்கிறார்கள்
கேரள பெண்களா தமிழ் பெண்களா அழகு ஆறாம் அறிவில்லாத கூட்டம் விவாதம் வைக்கிறார்கள்

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

தாழ்த்தப்பட்ட மாணவன் தாக்கப்பட்டு படுமோசமான நிலையில் .... தேவர் ஜாதி ரவுடிகள் அக்கிரமம்

Juliet Jenifa : நமது எதிர்வினை எங்கே?
இந்த மாணவன் அரூர் அருகில் உள்ள கொளகம்பட்டியை சேர்ந்த தாழ்த்தபட்ட
வகுப்பைசார்ந்தவன்
இவர்களை தாக்கும் ரவுடிகள் கொளகம்பட்டி அருகில் உள்ள வாழை தோட்டத்தை சேர்ந்த தேவர் இனத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் இந்த மாணவனை தாக்கியதால் அந்த மாணவன் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது
அவன் மற்றும் இந்த வீடியோவில் இடம் பெறாத பாதிக்கப்பட்ட இன்னொரு மாணவன் இருவரையும் தற்பொழுது தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்
வன்முறையாளர்கள் அடிக்கும்போது இந்த வீடியோவை பிடித்து முகநூள் பக்கங்கலில் வெளியிட்டு இனி என் ஊர் பக்கம் வந்தால் இது தான் மற்றவர்களின் நிலைமை என்று இந்த வீடியோவை அனுப்பி உள்ளனர்

நடிகை கௌதமி :கமல் மீது குற்றச்சாட்டு ,,, தரவேண்டிய சம்பளம் பாக்கி ... அவரது அரசியல ஆதரிக்கவில்லை

ஆலஞ்சியார் : தசாவதாரம் விஸ்வரூபம் படத்தில் ஆடை அலங்கார நிபுணராக பணியாற்றியதற்கான நிலவை தொகையை கமல் தரவில்லை..
..கமலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை அரசியலை நான் ஆதரிக்கவில்லை கௌதமி..
 

இதற்கு உடனே எச் ராசா சர்மா
well said sister என டுவிட் செய்திருக்கிறார்..
..
அவர்களின் சொந்த விவகாரங்களில் நாம் ஏன் தலையிட வேண்டுமென ராசா சர்மாவிற்கு தெரியவில்லை மாறாக அதை அரசியலாக்குகிறார்.. கமலின் அரசியல் பயணத்தை எங்கிருந்து வடிவமைக்கபட்டதென எல்லோருக்கும் தெரியும் கௌதமி பிரதமரை சந்தித்த போதே அதற்கான தொடக்கம் குறிக்கபட்டதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள் .. தொடக்கத்தில் கௌதமியோடிருந்த நெருக்கம் அவரது சொந்த விடயம் ஆனால் அவர்களின் ஒப்பந்த முறிவுக்கு கௌதமி சொன்ன காரணம் கவனத்திற்குரியது .. தன் மகளின் எதிர்காலம் கருதி விலகுகிறேன் என்றார்..

ஜெயக்குமார் :ஜெயலலிதா சிலை திருத்தப்படும்... இளங்கோவன் : சிலைக்கு அருகில் போர்டு வைக்கவும்!

சிலைக்கு அருகில் போர்டு வைக்கவும்!அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை மறுசீரமைப்பு செய்யப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இது ஜெயலலிதாவின் சிலைதான் என்று சிலைக்கு அருகே போர்டு வைக்கவும் என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோடு முன்னாள் எம்.பி எஸ்.கே.பரமசிவனின் நூற்றாண்டு விழா இன்று (பிப்ரவரி 25) விவசாய சங்கங்களின் சார்பில் ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று ஜெயலலிதாவின் சிலையைத் திறந்துள்ளனர். ஜெயலலிதா சிலை பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக கூறப்பட்டு வருகிறது.

ஜஸ்டின் ட்ருடோ அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் உட்பட 4 சீக்கியர்கள் ! காலிஸ்தான் கனடா விவகாரமா ?

trudeau, ஜஸ்டின்விகடன் மூ.இ.சியாம் சுந்தர்வேல்: இந்திய மண்ணில் தரையிறங்கும் எந்த வெளிநாட்டுத் தலைவரையும் வரவேற்க முந்திச்செல்லும் பிரதமர் மோடி, கனடா பிரதமர் ட்ரூடோவை வரவேற்காதது விமர்சனங்களை கிளப்பியிருந்தது. அயலரசியல் சூழலிலும் இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி இந்தியா வந்தார். இச்சுற்றுப் பயணத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் விடுமுறையைக் களிக்கத் திட்டமிட்ட ட்ரூடோ, கனடா-இந்தியா அரசியல் சந்திப்புகளையும் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
கைக்கூப்பிய வண்ணம் விமானத்தில் இருந்து இறங்கிய ட்ரூடோவை வரவேற்க விவசாயத்துறை அமைச்சரே நின்றுகொண்டிருந்தார். எவரையும் முன்வரிசையில் நின்று வரவேற்க முனையும் மோடி, ட்ரூடோ வந்திறங்கி சில நாள்களுக்குப் பின்னர் சந்தித்தது ஏன்? மத்திய அமைச்சர்கள் ஏன் ட்ரூடோவைச் சந்திக்கத் தயங்கினார்கள்? இப்படியான ஒவ்வாத நிலைக்கு என்ன காரணம்?

வைகோ : பாலமேஸ்வரத்தில் முதியவர்கள் பிணக்குவியல், எலும்புக்கூடு விற்பனை; பாதாள அறையை சோதிக்க வேண்டும்

tamilthehindu : பாலமேஸ்வரம் விடுதி, சித்தரிக்கப்பட்ட பாதாள அறை, வைகோ- கோப்புப் படம் பாலமேஸ்வரத்தில் முதியவர்கள் பிணக்குவியல் கிடைத்ததை அடுத்து தமிழக அரசு பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு, பாதாள அறையைத் திறந்து, சோதனை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்கின்ற தனியாருக்குச் சொந்தமான தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. ஆதரவு அற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தங்க வைத்து இருக்கின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மோடி தயாரில்லை .. சென்னையில் வாயே திறக்கவில்லை!

காவிரி மேலாண்மை வாரியம்: கண்டுகொள்ளாத பிரதமர்!மின்னம்பலம் :காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமர் தனது உரையில் எவ்வித பதிலும் கூறவில்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் விழா நேற்று (பிப்ரவரி 24) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாகப் பிரதமருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்தார். இதைப் பிரதமருக்குப் புரியும்படி ஆங்கிலத்திலும் கூறினார்.

கமலஹாசன் :சாதி மத விளையாட்டிற்குள் நானில்லை.... ஆணவ கொலைகளை கண்டுகொள்ள மாட்டார் ?

Adv Manoj Liyonzon : சாதி மத விளையாட்டிற்குள் நானில்லை
-மநீம கமல்ஹாசன்-
புகார் ஆனதன் ரீதியாக ஆவணப்படுத்தப்பட்ட கணக்கின்படி மட்டும் தமிழகத்தில் இதுவரை 3000 மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளது, மநீம கமல்ஹாசனுக்கு விளையாட்டாக தெரிகிறது
மத ரீதியாக நிகழ்த்தப்பட்ட ரான்ச்சி-ஹதியா கலவரம், 1969 1985 2002 2006 குஜராத் கலவரங்கள், 1974 1992 மும்பை கலவரங்கள், மொரதாபாத் கலவரம், நெல்லி கலவரம், பிவாண்டி கலவரம், மீரட் கலவரம், பாகல்பூர் கலவரம், ஹைதராபாத் கலவரம், பெங்களூரு கலவரம், மேற்கு வங்காள கலவரம் முசாஃபர் கலவரம் ஆகிய சம்பவங்களில் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டது, மநீம கமல்ஹாசனுக்கு விளையாட்டாக தெரிகிறது
சாதியும் மதமும் பாகுபாட்டை வலியுறுத்துகிறது. இந்த பாகுபாடு மனிதர்களை கொத்து கொத்தாக கொல்கின்றது. சமூகத்தை பாழ்படுத்துகிறது. எதையும் விட இந்த சாதியும் மதமுமே பேராபத்தானது, கொடியது.
பேராபத்தும் மிகக் கொடியதுமான சாதியும் மதமும், மநீம கமல்ஹாசனுக்கு விளையாட்டாக தெரிகிறது என்றால்….

நடிகை ஸ்ரீ தேவி பெற்ற விருதுகள்

சென்னை, நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்தி படங்களில் நடித்து வந்த அவர், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவிக்கு, மீண்டும் கோகிலா என்ற படத்தில் நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது (தெற்கு) வழங்கப்பட்டது. சால்பாஸ் மற்றும் லம்ஹே படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றிருந்தார். ஷண ஷணம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. ஆந்திராவின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் அவருக்கு கிடைத்தது. இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி (MAMI) விருது வழங்கி அவரை அரசு கவுரவித்துள்ளது.

பாபா ராம்தேவ் 50 டன் சந்தனக்கட்டைகள் கடத்தல் ...பிடிபட்டது

Swathi K : பாபா ராம்தேவ்: இவன் செம்மரக்கட்டை கடத்தல் வேற பண்ணுறானா??
News: 23-Feb-2018- 50 Tonnes Of Sandalwood To Be Exported To China By Patanjali Seized; Ramdev Moves Delhi HC
Grade C (தரம் குறைந்த) செம்மரக் கட்டைகளை ஏற்றுமதி செய்ய 2015ல் அனுமதி பெற்று இருக்கிறான் இந்த போலி சாமியார். இப்போது 50 டன் (45, 359 கிலோ) Grade A & B கட்டைகளை சீனா'வுக்கு கடத்த இருந்ததாக குற்றம்.. "தேசபக்தி" போர்வையில் நாட்டு வளத்தை மோடியின் உதவியுடன் இவன் சூறையாடி வருவதை முன்பே சொல்லி இருந்தேன்.
அந்த மீள் பதிவு:
பாபாவும் பாரத பிரதமரும்!! (15th Nov Post)
செய்தி - 14-Nov-2017: மகாராஷ்டிரா.. பதஞ்சலியுடன் சேர்ந்து 25,000 கோடி (இருபத்தி ஐந்து ஆயிரம் கோடிகள் - 250000000000 ரூபாய்) ரூபாய் மதிப்பில் மாடு வளர்ப்பு, பால் உற்பத்திக்கான உடன்படிக்கை. இதற்காக குந்தி (kundi), விதர்பா என்னும் பகுதியில் 800 ஏக்கர் நிலம் பதஞ்சலிக்கு இலவசமாக ஒதிக்கீடு.. (Link 2 & Pic 2)
இவன் போறபோக்க பாத்தா.. அம்பானியை அடிச்சுட்டு ஆசியாவின் முதல் பணக்காரன் ஆனாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை...

கருணை இல்லம் உடல் உறுப்பு விற்பனை .... சந்தேகம் ... ஏராளமான விதிகள் மீறப்பட்டுள்ளதால் ..

Ellaam Samam · திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கருணை இல்லம் இதேபோல் உடல் உறுப்பு விற்பனை, கொலைகள் நடப்பதாகச் செய்தி வந்தது இப்போது இந்தச் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது
tamilthehindu : உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் செயல்படும் கருணை இல்லத்தில் நிகழ்ந்துள்ள விதிமீறல்கள் குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்குமாறு வருவாய் கோட்டாட்சியர் ராஜு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் இறக்கும் தருவாயில் ஆதரவற்றவர்களுக்கான கருணை இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கருணை இல்லத்தில் சுமார் 350 பேர் தங்கியுள்ளனர்.

ஆசிட் ஊற்றப்பட்ட தனியார் பெண் ஊழியர் மரணம் - சென்னை

வெப்துனியா :சில நாட்களுக்கு முன்பு ஆசிட்டால் எரிக்கப்பட்ட தனியார் நிறுவன பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சென்னை மடிப்பாக்கத்தில் ராஜா என்பவர் தனியார் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். இங்கு யமுனா என்ற பெண் பணியாற்றி வந்தார். அந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வருமாறு ராஜா அழைக்க யமுனா அங்கு சென்றுள்ளார். அப்போது, யமுனாவிற்கு ராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. யமுனா கூச்சலிடவே ஆத்திரமடைந்த ராஜா யமுனா மீது ஆசிட் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் படுகாயமடைந்த யமுனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அதையடுத்து, யமுனா மீது ஆசிட் ஊற்றி எரித்த ராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அட்டப்பாடி மதுவின் கண்ணீர் கதை ... கேரள ஆதி வாசியின் உயிருக்கு எந்த விலையும் இல்லை,,, நிரூபித்த கேரளம்



நடிகை ஸ்ரீ தேவி காலமானார் ,,,துபாயில் .. மாரடைப்பு Sridevi passes away


சென்னை: தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 54 .
Bollywood diva Sridevi passed away on Saturday night after a cardiac arrest, confirmed her brother-in-law Sanjay Kapoor. She was 54. The first female superstar of Bollywood was reportedly with her husband Boney Kapoor and daughter Khushi at the time of death. Sridevi along with her family were in UAE to attend the wedding ceremony of Mohit Marwah. “Yes, it is true that Sridevi passed away. I just landed here, I was in Dubai and now I am flying back to Dubai. It happened roughly around 11.00-11.30. I don’t know more details yet,” Sanjay confirmed the news to indianexpress.com.

ஜெயலலிதாவுக்கு ஆறு விரல்கள் இருந்ததா ? .யாருக்கோ செய்த சிலையை ஜெயாவின் சிலையாக்குறார்கள் ?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை தமிழகமெங்கும் உள்ள அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும், அதிமுக சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 70 அடி உயர வெண்கல சிலையும் திறக்கப்பட்டது. மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது புரட்சி தலைவி அம்மா ’ வும் வெளியிடப்பட்டுள்ளது.