திங்கள், 22 ஜனவரி, 2018

கேரளா தொடரும் சாதி சுவர் ... இடிக்க போராடியவர்களை கைது செய்த பினராய் அரசு

2 Journos, 7 Dalits Arrested During ‘Caste Wall’ Protest in Kerala
நக்கீரன் :சாதிச்சுவரை இடிக்கக்கோரி போராட்டம் நடத்திய தலித்துகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அபிலாஷ் மற்றும் அனந்து ராஜகோபால் எர்ணாகுளம் பகுதியில் நாயர் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்பின் சார்பில் ஒரு சுவர் கட்டப்பட்டுள்ளது. மைதானத்திற்கு மத்தியில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த சுவர் தலித் மக்கள், அங்குள்ள கோவிலுக்கு செல்லாமல் இருப்பதற்காக கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த சுவரை இடிக்கக்கோரி தலித் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு தலித் இளைஞர்கள் மற்றும் அந்தப் போராட்டத்தை படமெடுத்துக் கொண்டிருந்த இரண்டு பத்திரிகையாளர்களை கைது

வைரமுத்துவை வசைபாடிய சிஷ்யைகள்.... ராமகோபாலன் உபயம்

 Kalai Mathi - Oneindia Tamil ஆண்டாள் சர்ச்சை | கவிஞர் வைரமுத்து உருக்கமான விளக்கம் சென்னை: வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க
வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகிகளில் ஒருவருமான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். ஆண்டாள் குறித்து வைரமுத்து மேற்கோள் காட்டிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையானது. இதனை தொடர்ந்து வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் தன்மீதான சர்ச்சை குறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வைரமுத்து வெளியிட்டுள்ளார்.
அதில் தான் மேற்கோள் காட்டியது தவறாக சித்தரிக்கப்பட்டு திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மூச்சையுற்று கிடக்கிறது மூச்சையுற்று கிடக்கிறது இதனால் தனது மனம் உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் தனக்குள் ஒலித்துக்கொண்டிருந்த தமிழ்க்குயில் கடந்த 10 நாட்களாக மூச்சையுற்று கிடப்பதாகவும் உருக்கமாக வீடியோவில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மகேந்திரன் மருத்துவ மனையில்


புதுக்கோட்டை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மீண்டும் உண்ணாவிரதம் இருக்க போவதாக ஜீயர் தெரிவிப்பு

ஜீயர் விதித்த கெடு!


கவிஞர் வைரமுத்துவுக்கு  எதிராக மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் போராட்ட அறிவிப்பை நேற்று (ஜனவரி 21) வெளியிட்டுள்ளார்.
கடந்த 7ஆம் தேதி தினமணி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் குறித்து உரையாற்றினார். ஆண்டாள் குறித்து அவர் கூறியது சர்ச்சைக்குள்ளாகவே பல்வேறு இந்துத்துவ அமைப்பினர் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர்.
வைரமுத்துவுக்கு எதிராக, ‘வாழ்க இந்து நீதி தர்மம்’ எனும் தலைப்பில் ஜீயர்கள், மடாதிபதிகள், இந்து அமைப்புகள் ஆகியோர் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜனவரி 15ஆம் தேதி போராட்டம் நடந்தது.
அதில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், ‘வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதிக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

கனிமொழி :திராவிடம் என்ன என்றே தெரியாதவர்களின் கைகளில் ஆட்சி சிக்கிக்கொண்டு இருக்கிறது

தி.ஜெயப்பிரகாஷ் :

திராவிடம் பற்றி என்னவென்று தெரியாதவர்களின் கைகளில் ஆட்சி சிக்கிக்கொண்டு இருக்கிறது என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியிருக்கிறார்.
திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தி.மு.க எம்.பி கனிமொழி, 2-ஜி வழக்கின் வெற்றியைப் பற்றியும், தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல் பற்றியும் பேசினார்.
அதில், `இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகள் அதிகமுள்ள மாவட்டம் திருப்பூர். ஆனால் பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு போன்றவை திருப்பூரின் பல தொழிற்சாலைகளை மூடிவிடும் நிலைமையை உருவாக்கிவிட்டது. பஸ் கட்டணத்தை 67 % உயர்த்திவிட்டார்கள். ஆட்டோ கட்டணத்தைவிட அது உயர்வாக இருக்கிறது. 2-ஜி வழக்கு ஒரு புனையப்பட்ட பொய் வழக்கு. இந்திய மக்களின் பணத்தை தி.மு.க மூட்டை மூட்டையாக அள்ளிக்கொண்டு போய்விட்டதைப் போன்று தோற்றத்தை உருவாக்கிவிட்டார்கள். இந்த வழக்கு 7 ஆண்டுகள்வரை நீட்டிக்கப்பட்டதற்கு நாங்கள் காரணமல்ல. சி.பி.ஐ-தான் இந்த வழக்கை சரியாக நடத்தவில்லை.

படவிமர்சனம் : "கடைசில ஆண்டாளை காணோம்"

Venkat Ramanujan : ஆரம்ப ஷாட்டில் மிடுக்காக நடந்து வந்த வைரமுத்து., பிஜேபி பாணியில் இல்லாத ஆதாரத்தை எடுத்து article விட " இது #RSS டெக்கனிக் ., போயும் போயும் இதை போயி ஏன்டா காப்பி அடிச்சான் " என்று திகிலோடு ஷாக் ஆகி சீட் நுனிக்கே வந்து விடுகிறார்கள் தியேட்டரில் .
காவி உடையில் வந்து தனது ISO 9001 certified ., Central Government approved Who is வேசி மகன் கம்பெனி உரிமத்தை காட்டி விட்டு ..
திரும்ப திரும்ப *&$# #&* என்று certificate கொடுக்க ., கூட வந்த சைவ வைத்தி நண்பன் கமுக்கமாக சிரித்து ஓடி விட ., தியேட்டரில் எல்லாரும் வைரமுத்து முகத்தை அப்பாவியாக பார்க்க ., அவரோ அம்மாஜியாக வருத்தம் என்று சொல்லி விட்டு ஓடி ஒளிகிறார் ...
சட்டுன்னு வருத்தம் சொன்னதை எதிர்பார்க்காத ., வேட்டியை கட்டின நானும் ரௌடின்னு உதார் விட்ட ராஜா விடாமல் இதே கொச்சியில் நடந்து இருந்தால் உன் தலை உன்னிடம் இருக்காது என்றே ரேஞ்சில் டாப் கியரில் எகிற ..
நடப்பது மாநிலத்திலும் மத்தியிலும் இயக்குனர் ஆட்சி என்பதால் 20Rs தினகரன் ., பத்மஸ்ரீ விவேக் கூட Vairamuthu வை கண்டித்து பிஜேபி க்கு ஒன் சைடு லவ் 😘 போடும் போது எந்த reaction காட்டாமல் திரையை வெறித்தபடியே பார்க்க தொடங்கினர் ஆடியன்ஸ் ..
இந்த நேரத்தில் " பூநூல் போட்டுண்டு .. பாலு இன்கிறேது உன் பெயர் தேவர் ன்னு நீ படிச்சி இளிச்சிவாங்கின பட்டமா " என்று தேவர் ஜாதியை மட்டுமே குதறிய பாரதிராஜா பிளாஷ் பாக் ஓடும் பிண்ணனி திரையில் .

வடமாநிலங்கள் பிறப்பு வீதம் கூடுகிறது ... தென்மாநிலங்கில் பிறப்பு வீதம் குறைகிறது ,,, எம்பிக்கள் தொகையும் திருத்தப்படும்?

சிறப்புக் கட்டுரை: வடக்குக்காகத் தெற்கு கொடுக்கும் விலை!மின்னம்பலம் ஷோயிப் தனியால் : இந்தியாவில் மக்கள்தொகைப் பிரச்னை அதிகரித்து வருகிறது. 1952இல் உலகிலேயே குடும்பக் கட்டுப்பாட்டைச் சட்டபூர்வமாகத் தழுவிய முதல் நாடு இந்தியாதான். ஆனாலும், இந்தப் பிரச்னை தொடர்ந்துவருகிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்துவரும் சீனாவை 2024க்குள் இந்தியா மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் 1950இல் சீனாவின் மக்கள்தொகை இந்தியாவின் மக்கள்தொகையைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக இருந்தது.
இவ்வாறு அதிகரித்துவரும் இந்தியாவின் மக்கள்தொகைப் பெருக்கத்தை நெருக்கமாகப் பார்த்தால் இது மேலும் சிக்கலானதாக மாறிவருகிறது. இந்தியாவின் மக்கள்தொகைப் பிரச்னை பற்றிப் பேசும்போது பல்வேறு மாநிலங்களிடையே இருக்கும் வேறுபாட்டைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பேச வேண்டும்.

அரசியல் கண்ணாடி அணிந்து இந்தப் புத்தகத்தைப் படிக்காதீர்கள் - ஆ.ராசா

அரசியல் கண்ணாடி அணிந்து இந்தப் புத்தகத்தைப் படிக்காதீர்கள்  - ஆ.ராசாமின்னம்பலம் : 2ஜி வழக்கு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய ‘2ஜி சாகா, அன்ஃபோல்ட்ஸ்’ புத்தகம் நேற்று (ஜனவரி 20) டெல்லி ரஃபி மார்க் இந்திய அரசியல் அமைப்புச் சட்ட சபாநாயகர் அரங்கில் வெளியிடப்பட்டது. புத்தகத்தை ஆ.ராசா வெளியிட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் முதலில் பேசிய பரூக் அப்துல்லா, “நானும் ஆ.ராசாவும் ஒரே கேபினெட் அமைச்சரவையில்தான் பணியாற்றினோம். நான் முதலில் ஒன்று கூற விரும்புகிறேன். ராசா சொன்னது போலவே அவர் பல அவமானங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளார். தற்போது அவர் இன்னும் வலிமையடைந்துள்ளார். 2ஜி பிரச்னை குறித்து இந்தப் புத்தகம் நேர்மையாகவும், நாணயமாகவும் பேசுகிறது.

பேரா .சுப.வீரபாண்டியன் - பாண்டே .. தந்தி டிவி எடிட் பண்ணிய செய்திகள் இவைதான் : ஆண்டாள் - வைரமுத்து எபிசொட்

1. தேவதாசி என்ற சொல்லுக்காக இவ்வளவு சினம்கொள்ளும் பார்ப்பனர்கள்தாம் அந்த முறை, இந்த மண்ணில் நிலைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் வாதாடியவர்கள். அதனை எதிர்த்தவர்கள் நாம். தந்தை பெரியார், மூவலூர் ராமாமிர்தத்தம்மையார், மருத்துவர் முத்துலட்சுமி ஆகியோர் அதனை எதிர்த்தனர். சத்தியமூர்த்தி ஐயர், எம்.கே. ஆச்சார்யா போன்றவர்கள் ஆதரித்தனர். ஆக, நம் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்க வேண்டும், அவர்கள் வீட்டுப் பெண்கள் அதற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைந்து போகிறது என்பதே அவர்களின் கவலை.
2. அவர்கள் மனம் புண்பட்டு விட்டததாகக் கவலைப்படுவோர், "நீறு இல்லா நெற்றி பாழ்" என்று சொன்னபோதும், "நாத்திகம் பேசி நாத்தளும்பேறியோர்" என்று பாடியபோதும் எங்கள் மனம் புண்படும் என்பதை எண்ணிப்பார்க்கவில்லையே, ஏன்? புண்படுவது ஒருவழிப்பாதையா என்ன?

Suba Veerapandian : அழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது!நான் பங்கேற்ற தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பான அந்த நிமிடம் தொடங்கி, தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளால் சூழப்பட்டேன் நான். நிறையப் பாராட்டுகள், சில குற்றச்சாற்றுகள், சில ஐயங்கள் இவைகளைத் தாண்டி, அன்று இரவு முழுவதும் ஆபாசச் சொற்கள் கலந்த மிரட்டல்கள்! கவிப்பேரரசு வைரமுத்துவின் ஆண்டாள் தொடர்பான கட்டுரை விவாதம் அதே அழுகல் வாடையுடன்இன்னும் தொடர்கிறது.

ஈரான், ஆப்கான், வட இந்தியா, தென்னிந்தியாவில் இன்றும் பேசப்படும் தமிழை அடிப்படையாகக் கொண்ட மொழிகள்!!

பேசும் இடங்கள் tamil.oneindia.com Mathi: இந்தியா தமிழ் பேசிய நாகர்கள் தேசம்தான் சென்னை: இந்திய துணைக்கண்டம் ஆதித் தமிழர்களான நாகர்களின் தேசம் என்பவை நிறுவும் வகையில் ஈரான் தொடங்கி இந்திய நிலப்பரப்பு முழுவதும் 70-க்கும் மேற்பட்ட தமிழை தாய்மொழியாகக் கொண்ட திராவிட மொழிகள் இன்றும் உயிர்ப்புடன் பல கோடி மக்களால் பேசப்பட்டு வருகின்றன.
திராவிட மொழிகள் தொடர்பாக தமிழக அரசின் இணையப் பல்கலைக் கழக பாட நூலில் இடம்பெற்றுள்ள தரவுகளின் சுருக்கம்:
தமிழ், மலையாளம், இருளா, கொடகு, கோடா, தோடா, கன்னடம், படகா, துளு ஆகிய ஒன்பது மொழிகளும் தென் திராவிட மொழிகள் என்று அழைக்கப்படுகின்றன. தெலுங்கு தென் திராவிட மொழி பிரிவில் இடம்பெறவில்லை.

தலித் சகோதரியின் மரண வாக்குமூலம்..விருதுநகர் ...

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டம் இனாம்ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வி(27/2018), த/பெ. ஆனந்தராஜ். இவர் கிறிஸ்துவ பறையர் சமூகத்தை சார்ந்தவர். அதே ஊரைச் சேர்ந்த எனவர்சாமி(35/2018), த/பெ. பெரிய அய்யனார் என்பவர் கடந்த 23/12/2017 அன்று இரவு சுமார் 9:30 மணியளவில் நன்கு மது அருந்திவிட்டு தள்ளாடிய நிலையில் இரத்த காயத்துடன் செல்வியின் வீட்டிற்கு சென்று செல்வியை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனை கண்ட செல்வியின் வீட்டாரும், செல்வியும் எனவர்சாமியை பிடித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலக்கரை காவல்நிலைய காவலர்கள் கார்த்திக் , பீட்டர் ஆகியோர் எனவர்சாமியை 108ஆம்புலன்ஸில் விருதுநகர் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, செல்வி வீட்டாரிடம் நாளை சூலக்கரை கவல்நிலையத்திற்கு வந்து புகார் கொடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர்.
மறுநாள் 24/12/2017 கலை செல்வி மற்றும் செல்வியின் தந்தை ஆனந்தராஜ், சகோதரன் ஜோதிராஜன் ஆகியோர் சூலக்கரை காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்கச் சென்றபோது அங்கே இருந்த நிலைய எழுத்தர், பெண் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் ராமராஜ் ஆகியோர் ஒழுங்கா இந்த பிரச்சனையை பேசி முடிச்சுக்கோங்க, இல்லைனா எனவர்சாமியை அடிச்சீங்கன்னு சொல்லி உங்கள உள்ள வச்சுருவேணு சொல்லி செல்வி தரப்பினர் கொடுத்த புகார் மனுவை வாங்காமல் செல்வி மற்றும் செல்வியின் குடும்பத்தாரை மிரட்டியுள்ளனர்.

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

ஹிந்தி எதிர்ப்பு ... மொழிப்போர் தியாகிகளுக்கு பென்சன் கிடையாது ..

ஹிந்தி எதிர்ப்பு போராட்டக்காரருக்கு பென்ஷன்... கிடையாது! ஹிந்தி எதிர்ப்பு போராட்டக்காரருக்கு பென்ஷன்... கிடையாது! தினமலர்: சென்னை:ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவருக்கு, ஓய்வூதியம் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருப்பூரைச் சேர்ந்தவர், சொக்கலிங்கம்; ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, ௪௪ நாட்கள் சிறையில் இருந்தார். பின், நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை சிறையில், ௧௦ நாட்கள் அடைக்கப்பட்டார். மொழிப்போர் காவலர்களுக்கு, ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில், தனக்கு ஓய்வூதியம் கோரி, சொக்கலிங்கம் விண்ணப்பித்தார். அரசுக்கும், சொக்கலிங்கத்துக்கும் இடையே, பல முறை கடிதப் போக்குவரத்து நடந்தும், ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவு
வரவில்லை.சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார். அவரது கோரிக்கையை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு: நிதி சுமை தெரியவில்லையா?

மின்னம்பலம்: ‘எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கும்போது அரசின் நிதி சுமை ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லையா?’ என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக நேற்று முன்தினம் (ஜனவரி 19) தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தக் கட்டண உயர்வினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குறைந்த கட்டணமே வசூல் செய்யப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கட்டான உயர்வு .. தமிழிசை எதிர்ப்பு பொன் ராதா ஆதரவு ,,, தமிழிசை கட்சி மாற ஆயத்தம்?

கட்டண உயர்வு: பாஜகவில் குழப்பம்!
மின்னம்பலம் :பேருந்துக் கட்டண உயர்வுக்கு பாஜக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணத்தை உயர்த்துவதில் தவறில்லை என்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகத் தமிழக அரசின் சார்பில் கடந்த 19ஆம் தேதி திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. மேலும் திமுக, பாமக, மார்க்சிஸ்ட், விசிக, உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன. திமுக போராட்டத்துக்கு காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கோடியக்கரை:பறவைகள் கணக்கெடுக்கும் பணி!

கோடியக்கரை:பறவைகள் கணக்கெடுக்கும் பணி!மின்னம்பலம் :நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 256 வகையான பறவைகள் வருகின்றன. கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாக பறவைகளுக்குத் தேவையான உணவு கிடைப்பதால் அதிகளவில் பறவைகள் சரணாலயத்திற்கு வரத்தொடங்கியுள்ளன.

வீட்டை நவீனமாக்கும் சுவரொட்டிகள்! Wall paper வால் பேப்பர்

சண்டே ஸ்பெஷல்: வீட்டை நவீனமாக்கும் சுவரொட்டிகள்!மின்னம்பலம் : வீட்டை அலங்கரிப்பதற்கு வால்பேப்பர் எனப்படும் சுவரொட்டிகளைப் பயன்படுத்தும் போக்கு இப்போது அதிகமாகியிருக்கிறது. வீட்டு உள்அலங்காரத்தில் முக்கியமான அம்சமாகச் சுவர் அலங்காரத்தைச் சொல்லலாம். அந்தச் சுவர் அலங்காரத்தை எளிமையாகவும், அசத்தலாகவும் செய்வதற்கு உதவுகின்றன சுவரொட்டிகள்.

சுவரொட்டிகளில் இப்போது பலவகைகள் கிடைக்கின்றன. அழகு, கலைநயம், புதுமை, தனிநபர் ரசனை, பட்ஜெட் என எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து, நமக்குப் பொருத்தமான சுவரொட்டிகளைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்படி, உங்கள் வீட்டுக்குப் பொருத்தமான சுவரொட்டியைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது ஐடேக்கோர்வாலா என்னும் இணையதளம். ‘தி இன்டிரியர் பீப்பிள்’ என்னும் உள்அலங்கார நிறுவனம் ‘ஐடேக்கோர்வாலா’ தளத்தை முதன்முதலில் பிரத்தியேகமாகச் சுவரொட்டிகளுக்காகச் சமீபத்தில் ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆன்லைன் வால்பேப்பர் ஷாப்பிங், சுவரொட்டிகளின் பயன்பாட்டை எல்லோருக்கும் சாத்தியப்படுத்துகிறது.
சுவரொட்டிகளில் நவீனம்

சுவரொட்டிகளால் வீட்டுக்கு நவீனத் தோற்றத்தை எளிமையாக வழங்க முடியும். அதுவும், தற்போது வீடுகளில் இந்தச் சுவரொட்டிகள் பலவகையில் பயன்படுத்தப்படுகின்றன. நவீனத்துடன் வீட்டில் வசிப்பவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துவதிலும் இந்தச் சுவரொட்டிகள் பெரிய பங்குவகிக்கின்றன. “ஒவ்வொரு குடும்பத்திலும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கும். அது பாரம்பரியம், கலை, தனி நபர் ரசனை என ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களுடைய அந்தக் கதையை சுவரொட்டிகள் வழியாக நவீன மொழியில் சொல்கின்றனர்.

20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி உத்தரவு

மாலைமலர் :தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் உத்தரவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் கையெழுத்திட்டார்.
தேர்தல் ஆணையம் பரிந்துரை ஏற்பு: 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி உத்தரவு" புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சியில், முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவர் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேரை பாராளுமன்ற செயலர்களாக நியமித்தார். இது அமைச்சருக்கு நிகரான பதவி ஆகும். இதனால், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள், ஆதாயம் தரும் கூடுதல் பதவியை வகித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம் .... EVM இருக்கையில் யார் வந்தா என்ன?

மாலைமலர் :இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத்தை நியமனம் செய்து சட்ட அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்: சட்ட அமைச்சகம் அறிவிப்பு" c புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிக்கும் அச்சல் குமார் ஜோதி, விரைவில் ஓய்வுபெற உள்ளார். அவரது பதவிக் காலம் முடிவடைய உள்ளதால், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனை சட்ட அமைச்சகம் இன்று உறுதி செய்துள்ளது அச்சல் குமார் ஜோதி ஓய்வு பெற்றதும், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் ஜனவரி 23-ம் தேதி பதவியேற்பார் என்றும் சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சி பி எஸ் சி பாட திட்டத்தில்தான் neet தேர்வு மத்திய அரசு முடிவு .. மாணவர்கள் அதிர்ச்சி

: Dakshinamurthy- Oneindia Tamil டெல்லி: மருத்துவ படிப்பில் சேர நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படியே கேள்விகள் கேட்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர, நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடப்பாண்டு 2018 நீட் தேர்வு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.  இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பெரும்பாலான தமிழக மாணவர்களுக்கு சற்றே ஆறுதலாக இருந்தது. இந்த சூழலில் நீட் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்தாண்டு பாடத்திட்டத்தின் படியே, நடப்பாண்டிலும் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும் பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமச்சீர் மற்றும் மாநில பாடத்திட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் படித்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மருத்துவ படிப்பில் ஏழை எளிய மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

மோடிக்கே பீச்சே கியா ஹே மோடி கே பீச்சே *** மோடிக்கு பின்னால் முழு பார்பனர்களும்

Ravi Raj:  மோடியின் பின் யார் இருக்கிறார்கள் என்றால் முழு பிராமண சமுதாயமும் நின்று அவரை முட்டுக்கொடுக்கிறது. காங்கிரஸ், திமுக, கம்யுனிஸ்ட் அதிமுக என்றால் எல்லாக்கட்சியினரும் இருப்பார்கள் ஆனால் இந்த பிராமண ஜனதா பார்ட்டியில் மட்டும் பெரும்பகுதி அவாள்களாகவே இருப்பார்கள். தொலைக்காட்சியில்கூட, கே.டி ,ராகவன், நாராயணன், சுப்பிரமணி, சிப் விஞ்ஞானி எஸ்.வி.சேகர், இவங்கதான் பெரிய அறிவாளி மாதிரி கம்புசுத்துவாங்க. இங்கேதான் ஒரு சூட்சமம் இருக்கிறது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தங்களைத்தாங்களே அறிவாளி சமுதாயம் என்று பறைசாட்டிக்கொண்டு மற்றவர்களெல்லாம் சரஸ்வதியின் நிழல் படாதவர்களாகவே ஆக்கி வைத்திருந்தார்கள். ஒரு சிலர் தப்பித்தவறி பேசிவிட்டாலும் அவர்களுக்கு ஆண்டவன் வழி தண்டனையை கொடுத்து அடக்கினார்கள், ஏகலைவன் முதல் சம்பூகன்வரை இதே நிலைதான். இப்படிதங்களை அறிவாளியாக காட்டிக்கொண்டவர்களுக்கு வடக்கில் ஒருத்தரும் (அம்பேத்கார்) தெற்கில் ஒருத்தரும் (பெரியார்)ஆப்பை சீவி அடித்தபின்பு இவர்கள் இல்லாத ஆட்சி இங்கே நிறுவ முடிந்தது. இது அவர்களுக்கு மிகுந்த எரிச்சலை தந்தது அவர்கள் மற்றவர்களை மட்டம் தட்ட எண்ணினார்கள்.

குரங்கில் இருந்து மனிதன் .. டார்வின் தத்துவம் தவறு பாஜக அமைச்சர் ..... மத்தியிலும் ஒரு செல்லூர் ராசு


தினத்தந்தி :குரங்கிலிருந்து மனிதன் என்ற டார்வின் கோட்பாடு தவறானது: மத்திய மந்திரி கண்டுபிடிப்பு குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாடு தவறாது எனவும், அதை பாட புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய இணை மந்திரி சத்யபால் சிங் கூறியுள்ளார். மும்பை: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணை மந்திரி சத்யபால் சிங் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த ‘அகில இந்திய வேதிக் சம்மேளனம்’ மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர், மனித பரிணாம வளர்ச்சி பற்றிய சார்லஸ் டார்வின் கோட்பாட்டை தவறு என விமர்சித்தார். “குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆ.ராசா ... வரலாறு காட்டிய திராவிட மாவீரன்

சிவசங்கர் எஸ்.எஸ் : தாய், தந்தையருக்கு அவர் எட்டாவது பிள்ளை. எட்டாவது பிள்ளையென்றால் கசப்பாகத் தான் பெயர் வைப்பார்கள். ஆனால், இவரது பெற்றோர் இவருக்கு வித்தியாசமாக இனிப்பாக, மகிழ்வாகப் பெயர் வைத்தார்கள். ஆம், 'ராசா' என்று வைத்தார்கள். ஆமாம், அவர் தான் ஆ.ராசா.
இவர் வாழ்வே வித்தியாசம் தான். இவர் பிறக்கும் வரை, இவர் பெற்றோர்கள் இலங்கையில் இருந்தார்கள். இவர் இந்தியாவில் பிறந்தவர். இவரது குடும்பம், ஆன்மீகத்தில் ஊறியக் குடும்பம். இவர் மாத்திரம், பாடாலூர் பள்ளியில் படித்தக் காரணத்தால், பெரியார் வழியில் பயணித்தார்.
குடும்பத்தார் விருப்பப்படி பி.எஸ்.ஸி முடித்தவர், தன் விருப்பப்படி, குடும்பத்தினர் விருப்பத்திற்கு மாறாக, மதுரை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார்.
முசிறியில் பி.எஸ்.சி படிக்கும் போதே, திராவிடர் கழக மாணவரணியில் பணியாற்றினார். இவர் பணி காரணமாக மாநில துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ஆர் கே நகர்.. தினகரன் வெற்றி செல்லாது? தினகரனை கார்னர் செய்த திமுக.. மருது கனேஷ் புகார் ..


தினகரனுக்கு எதிராக திமுக முறைப்பாடு .! புதிய சிக்கலில் மாட்டியுள்ள தினகரன்.!! பல்வேறு பணபுகார்களுக்கு இடையே ஆர்.கே நகர் தேர்தல் கடந்த வருடம் டிசம்பர் மாதம 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் அபாரமாக வெற்றி பெற்றார். மேலும் திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் டெபாசிட் இழந்தார். பின்னர் தினகரனின் வெற்றிக்கு பணம் பட்டுவாடா தான் காரணம் என பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் அவரது தரப்பில் இருந்து ரூ. 20 டோக்கனாக கொடுத்து ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என குற்ற சாட்டுகள எழுந்தது இந்நிலையில் திமுக திமுகவின் மருது கணேஷ் தினகரன் மீது ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தினகரன் தேர்தல் நேரத்தில் ரூ.28 லட்சத்தை விட கூடுதலாக செலவு செய்துள்ளார் என கூறியுள்ளார். மேலும் தினகரனின் வெற்றியை தேர்தல் ஆணையம் தகுதி இழக்க செய்ய வேண்டும் என கூறியுள்ளார். லைவ்டே

வடநாட்டு ஊடகங்களில் சூறாவழி ..2G Saga unfolds" .. டெல்லியை துவம்சம் செய்கிறது ராசாவின் 2 ஜி புத்தகம் ,,,,

சிவசங்கர் எஸ்.எஸ் :  தில்லி ஓர் தந்திரபூமி. எவ்வளவு சக்தி வாய்ந்தவரையும் வீழ்த்தி விடும். ஆதிக்கக்கர்த்தாக்களுக்கு அடிமையாக இருந்தால் ராஜபோகமாக வாழலாம். மறுப்பேச்சும், மாற்றுப் பேச்சும் இருக்கக் கூடாது.
அதிலும், ஹிந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்றால் அவ்வளவு தான். அது அரசியல்வாதியாக இருந்தாலும், அதிகாரியாக இருந்தாலும், தொழில்புரிவோராக இருந்தாலும் அவர்களை பொருட்படுத்த மாட்டார்கள், தில்லியில்.
பொருட்படுத்தும் அளவு உயர்ந்து வந்து விட்டால், தருணத்திற்கு காத்திருப்பார்கள். சின்ன சறுக்கலையும் பயன்படுத்தி அதலபாதாளத்தில் தள்ளி விடுவார்கள்.
அதலபாதாளத்திற்கு வீழ்த்தப்பட்டவர் மீண்டு, தப்பிப்பது அரிது. அப்படி தப்பித்தாலும், பழைய நிலைக்கு வருவது மிக அரிது. பழைய நிலைக்கு வந்தாலும், வாய் திறப்பது சிரமம்.
அதலபாதாளத்தில் வீழ்த்தப்பட்டவர் மீண்டு வந்து, வீழ்த்தப்பட்ட இடத்திலேயே நின்று, வீழ்த்தப்பட்டதையும், அதிலிருந்து மீண்டு வந்ததையும் நூலாக வடித்துள்ளார், வாய் திறந்தும் உரக்க உரைத்திட்டார்.

உன் எந்த கடவுளையும் விட உன் பணம் பெரிது. அதற்கு போராடு.

Shalin Maria Lawrence : தமிழக அரசாங்கம் எனும் கொடூரம்
1.நான் வடசென்னை போகும்போது யோசிப்பேன்.ஏன் இந்த சேரிகள் பராமரிப்பிலாமல் இருக்கின்றன ? சென்னை முழுவதும் துப்புரவு தொழிலாளிகளாய் அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்க ஆனால் அவர்கள் இல்லங்களை சுத்தி இருக்கும் கழிவுகளை அகற்ற யாரும் கிடையாது. அங்கே கழிவு நீரும் ,குப்பையும் தேங்கி கிடப்பது எதனால் என்று யோசித்திருக்கிறேன். அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது.
அவர்கள் சுத்தத்தில் இருந்து பழக்கப்பட்டுவிட்டால் அவர்கள் மற்றவர்களின் அழுக்கை எவ்வாறு கையால் அல்ல துணிவார்கள் ? அவர்கள் தெருக்கள் சுத்தமாக இருந்து விட்டால் அவர்கள் பாதாள சாக்கடையில் எப்படி இறங்குவார்கள் ? முகம் சுளிப்பார்கள் அல்லவா ?
அவர்கள் கடைசி வரை அழுகுக்கும் அசுத்தங்களுக்கும் நடுவில் வாழ வேண்டும் அவர்கள் கடைசி வரை தங்களுக்கு மற்றவர்களின் அசிங்கத்தை எந்த கூச்சமும் இல்லாமல் அள்ள வேண்டும். ஒரு கிருமியை போல.
2.அரசு பள்ளிகள் அதிகம் இருக்கின்றன,அவைகளில் சரியான கட்டமைப்பு இருக்கின்றது. ஆனால் அவைகளின் பராமரிப்பு சரியாக இருக்காது.
பொதுவாக அதன் கழிப்பிடங்கள் சரியாக இருக்காது ,லேப் இருக்கும் ஆனால் அதில் உபகரணங்கள் சரியாக இருக்காது.ஆசிரியர்கள் அதிக அளவில் பணி ஒழுக்கத்தை கடைபிடிக்க மாட்டார்கள்.எதனால்?