ஞாயிறு, 3 ஜனவரி, 2016

சென்னையில் கார் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு... டில்லியை தொடர்ந்து ஆமதாபாத் நகரிலும் அமல்

சென்னையில் ஆளும்கட்சிகாரர்களின் பின்னால் 200 கார்கள் , பாதுகாப்பு வானகங்கள் தொடர்ந்து வருமே அவற்றை என்ன செய்வது எப்படி கட்டுப்பாடு விதிக்கமுடியும் புதுடில்லி:டில்லியில், கார் போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டம் வெற்றி பெற்றதால், ஆமதாபாத் நகரும் அந்த திட்டத்தை பின்பற்ற உள்ளது. அதேபோல், காற்று மாசு அதிகம் உள்ள சென்னையிலும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.டில்லியில் ஞாயிறு தவிர்த்து, வாரத்தில் மூன்று நாட்கள் வீதம், ஒற்றைப் படை மற்றும் இரட்டைப்படை பதிவெண்களில் முடிவடையும் கார்களின் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அமலுக்கு வந்த இத்திட்டப்படி, முதல் நாள் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, ஒற்றைப் படை பதிவெண்களை உடைய கார்கள், டில்லி சாலைகளில் ஓட அனுமதிக்கப்பட்டன. நேற்று, இரட்டைப்படை பதிவெண் கார்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இன்று ஞாயிறுக்கிழமை என்பதால், கார் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு இல்லை; அனைத்து கார்களும் செல்லலாம்.

மீண்டும் அழகிரி திமுகவில்....நீண்ட ஓய்வுக்கு பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கும், முன்னாள் அமைச்சர் அழகிரிக்கும்
சகோதர யுத்தம் மீண்டும் போஸ்டர் சீண்டல்கள் மூலம் துவங்கியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., தென்மண்டல பொறுப்பாளருமான மு.க.அழகிரியின் பிறந்தநாளுக்கு அவரது ஆதரவாளர்கள் அடித்த போட்டி பொதுக்குழு போஸ்டர் விவகாரத்தால், அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து கட்சியையும், தன் சகோதரரும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினையும் அவர் விமர்சித்து வந்ததால், தி.மு.க.,வுக்கும், அவருக்கும் இடைவெளி அதிகரித்தது. அதிரடி அரசியல்: தி.மு.க.,வில் கட்சித் தலைவர் கருணாநிதியையும் மீறி அழகிரி கோஷ்டி, ஸ்டாலின் கோஷ்டி என்று உள்ளது என்பது இந்த மோதல் மூலம் அனைவரும் தெரிந்தது. தி.மு.க.,வை விட்டு நீக்கப்பட்ட அழகிரி, தி.மு.க., தலைவர் கருணாநிதியைத் தவிர மற்ற யாரையும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என, ஸ்டாலினை மறைமுகமாக சாடி அறிக்கைகள் வெளியிட்டும், பேட்டிகள் கொடுத்தும், அதிரடி அரசியலில் ஈடுபட்டார்.

ஏரிகளை ஆக்கிரமித்திருக்கும் கல்விக் கொள்ளையர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.

மேற்கு தாம்பரம் சி.டி.ஒ. காலனிங்க ஃபிளாட் ஏரிக்குப் பக்கத்துலேயே இருக்கு. தண்ணிப் பிரச்சினையே இருக்காது என பில்டர் சொன்னதை நம்பி, பெரும் ஆசையுடன் லேக் வியூ ஏரியாவில் வீடு வாங்கினேன். அதன் ஆபத்தை இப்போது அனுபவிக்கிறேன்.”
– சென்னையின் புறநகர்ப் பகுதியான பெரும்பாக்கம் லேக் வியூ ஏரியா வாசியான அரவிந்தின் புலம்பல் இது. வழக்கமாக மழைக் காலங்களில் சென்னையின் கூவம், அடையாறு கரையோரங்களில் கேட்கப்படும் கதறலை இந்த மழைக் காலத்தில் மேட்டுக்குடியினர் வசிக்கும் பெரும்பாக்கத்திலும், வேளச்சேரியிலும், மேற்கு தாம்பரத்திலும், பழைய மகாபலிபுரம் சாலையிலும் கேட்க முடிந்தது. படகு விட்டு காப்பாற்ற வேண்டிய அளவி்ற்கு மூழ்கிப்போன மேற்கு தாம்பரம் சி.டி.ஒ. காலனி (இடது).
50, 60 இலட்ச ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட அரவிந்தின் வீடு ஏறக்குறைய வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. அரவிந்தும், அவரது பிளாட்டில் வசிக்கும் மற்றவர்களும் ஒரு படகை வாடகைக்குப் பிடித்து வெளியேறித் தப்பித்துள்ளனர்.

பஞ்சாப் பதன்கோட்டில் தீவிர வாதிகள் தாக்குதல்....ஜெய்ஷ் ஈ முஹம்மத் தீவிரவாத அமைப்பு.....

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றங்கரையோரம் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான தளம் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் அந்த விமான தளத்துக்குள் நான்கு தீவிரவாதிகள் ஊடுருவினர். இதை கண்ட பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை எச்சரிக்கும் விதமாக துப்பாக்கிகளால் சுட்டனர். ஆயுதங்களுடன் வந்திருந்த தீவிரவாதிகளும் பதிலுக்கு துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினரிடையே நெடுநேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு தீவிரவாதிகளை விமானப்படையை சேர்ந்த பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர்.

பஞ்சாப்பில் ஆதிக்கம் செலுத்திவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இன்றைய தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

பீப் பாடல் : நேரில் ஆஜராக அவகாசம்... அனிருத் காவல் துறைக்கு கடிதம்

பீப் பாடல் விவகாரம்: நேரில் ஆஜராக காலஅவகாசம் கேட்டு அனிருத் காவல்
துறைக்கு கடிதம் பீப் பாடல் விவகாரத்தில் நேரில் ஆஜராக 15 நாள் காலஅவகாசம் கேட்டு இசையமைப்பாளர் அனிருத் சார்பில் கோவை மாநகர காவல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பீப் பாடல் விவகாரம் தொடர்பாக ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக அளித்த புகாரின் பேரில், நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவு உள்பட 3 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கோவை பந்தய காலை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. இரண்டாவது சம்மன் அனுப்பியபோது, ஜனவரி 2ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

சனி, 2 ஜனவரி, 2016

ரோஜா : தெலுங்கு தேசம் கந்துவட்டி காரர்களின் பாலியல் தொல்லை..கந்துவட்டி MLA க்களின் பட்டியல் வெளியிடுவேன்...

சமீபத்தில் ஆந்திர சட்டமன்ற சபாநாயகர், "முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொச்சைப்படுத்தி பேசியதால் நடிகை ரோஜா  சட்டமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது, அவரை ஒரு வருஷத்துக்கு சஸ்பென்ட் செய்கிறோம்" என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். மறுநாள் ஆந்திர அசெம்ப்ளிக்குள் ரோஜா காலடி வைக்க,  போலீஸார் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தபோது தள்ளுமுள்ளு நடக்க மயக்கம் போட்டு விழுந்தார், ரோஜா. என்னதான் நடந்தது என்பது குறித்து ரோஜாவிடம் பேசினோம்..

'' சபாநாயகர் என்னை சஸ்பெண்ட் செய்ததற்கு ஆதாரமான காப்பியை வாங்குவதற்கு சட்டசபைக்கு போனேன். வழக்கமாக சஸ்பெண்ட் செய்யப்படும் எம்.எல்.ஏ-க்கள் அசெம்ளிக்குள் நுழைய மாட்டார்கள்.

அந்த 400 பேருந்துகள் ஜெயலலிதாவுக்காகதான் காத்திருகின்றன.....நாஞ்சில் பதவி பறிப்பு...ஜெயா அதிரடி!

சென்னை: அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில்
சம்பத் நீக்கப்படுவதாக முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையியில், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார். பதவி பறிப்பு ஏன்? நாஞ்சில் சம்பத் பதவி பறிப்புக்கு, அவர் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அளித்த சில பதில்களே காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது

ஈரோட்டில் குரங்கின் மடியில் நாய்குட்டி...சுகமாக மகிழ்ச்சியாக...



ஈரோடு வேலைப்ப வீதியில் ஒரு குரங்கு தனது கைகளில் ஒரு நாய்க்குட்டியை பத்திரமாக காவிகொண்டு திரியும் காட்சி  பார்ப்பவர் மனதை நெகிழ செய்கிறது. நாய்க் குட்டியும் குரங்கையே தனது தாய் போல எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக சுகமாக இருக்கிறது, மனிதர்கள் தங்கள் சொந்த குழந்தைகளிடம் கூட இவ்வளவு பாசமாக இருப்பார்களா என்று அதிசயக்கும் படி இவர்களின் அன்பு தெரிகிறது
ரோட்டில் குரங்கு ஒன்று நாய் குட்டியை பாசத்துடன் வளர்த்து வருகிறது.
ஈரோடு முத்து வேலப்ப வீதியில் சுற்றி திரிந்த ஒரு ஆண் குரங்கு,   பிறந்து ஒரு மாதமே ஆன நாய்குட்டியுடன் பழகி வருகிறது. குரங்கு,  நாய் குட்டியுடன் பாசத்துடன் பழகுவதை கண்ட மக்கள்,  நாய்குட்டியை பிரித்து கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் குரங்கு நாய் குட்டியுடன் மாயமாக மறைந்து விட்டதாம். தற்போது மீண்டும் அதே பகுதியில் குரங்கு, நாய் குட்டியுடன் தென்படத் தொடங்கியுள்ளது.

"மக்கள் உணவு "நாடு முழுவதும் ரயில் நிலையங்களில்

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் "ஜன் ஆஹார்' என்ற பெயரில் உணவகங்களை இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) தொடங்கி உள்ளது. இந்த உணவகத்தில் அனைத்து உணவு வகைகளும் ரூ.20-க்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன இந்த உணவகம் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் இயங்கும். அத்துடன், அனைத்து மாநில உணவு வகைகளும் ரூ. 20-க்கும் குறைவான விலையில் கிடைக்கும். இதுதவிர, குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவையும் இந்த உணவகங்களில் கிடைக்கும். சுத்தமான குடிநீரும் இந்த உணவகங்களில் இலவசமாக வழங்கப்படும்.dinamani.com

நிர்வாண சாதுக்கள், உடை அணியவேண்டும், என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமா?...வழங்காதா?....

உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தமிழகம் முழுவதும்,இந்து சமய
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 36 ஆயிரத்து, 800 கோவில்களில், பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. பாரம்பரிய உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. மீனாட்சியம்மன் கோவில், பழநி முருகன் கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில், பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி வேட்டி மற்றும் சேலை அணிந்து வந்தனர்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், காளிகாம்பாள் கோவிலில், 'லெக்கிங்ஸ்' ஆடை அணிந்து வந்த பெண்கள் சிக்கினர்.மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், வெளிநாட்டவர் அரைக்கால் பேன்ட், டீ-சர்ட் அணிந்து வந்திருந்தனர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், வேட்டி, சேலை வழங்கப்பட்டது.நவ நாகரிக உடை அணிந்து வந்த சிலரிடம், 'இனி, கோவிலுக்கு வரும்போது, பாரம்பரிய உடை அணிந்து வாருங்கள்' என, கோவில் நிர்வாகிகள் அறிவுரை கூறி, அனுமதித்தனர்.

ஷகீலாவை மோகன்லாலும் மம்முட்டியும் சதிசெய்து விரட்டினார்கள்

வயதாகி, கவர்ச்சி நடிகை என்ற இமேஜிலிருந்து தமாஷ் நடிகை என்றான பிறகு ஷகிலா இன்னும் பரபரப்புச் செய்திகளின் நாயகியாகத்தான் இருக்கிறார்.
மலையாள பட உலகில் 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் ஷகிலாவின் ஏகபோக கவர்ச்சி ராஜ்ஜியம்தான். கேரளத்து முதல் நிலை நாயகர்களான மம்முட்டியும் மோகன்லாலுமே போட்டி போட அஞ்சிய நடிகை இந்த ஷகிலா. இது மிகையல்ல.. நாற்பது வயதுக்காரர்கள் பலரும் கடந்து வந்த உண்மை.
குறிப்பாக தமிழகத்தின் ஒற்றைத் திரை அரங்குகள் பலவற்றைக் காப்பாற்றியது ஷகிலா படங்கள்தான். இப்போது புத்தம் புது படங்களை வெளியிடும் பரங்கிமலை ஜோதி உள்பட!
 ஆனால் ஒரு கட்டத்தில் தணிக்கை குழுவினர் திடீரென ஷகிலா படங்கள் ஆபாசமாக இருப்பதாக கெடுபிடி செய்தனர். சான்று அளிக்கவும் மறுத்தனர்.  இந்த மோகன்லால்  மம்முட்டி எல்லாம் மிக மோசமான மனிதர்கள் , சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழர்களை பாண்டி என்று கொச்சைபடுத்துவார்கள் ...பொறாமையால்  நடிகர் திலகனை நடிக்கவே விடாமல்  கொன்றது இந்த மோகன்லால்தான்...

ஆடைகட்டுப்பாடு ...கொங்குநாடு ஜனநாயக கட்சி வரவேற்கிறது,...கந்துவட்டி...ஜாதி ....கும்பல்கள் வரவேற்பு...

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள
கோயில்களில் பாரம்பரிய உடை அணிந்து வரவேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவந்த இந்து சமய அறநிலையத்துறையின் செயல் பாராட்டக்குரியது. நம் அணியும் ஆடைகளுக்கும், நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. கலாச்சாரம் நமது அடையாளம். நாம் கலாச்சாரத்தை மறந்தால் நமது அடையாளத்தை இழந்து விடுவோம். பாரம்பரிய உடை நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை வெளிக்காட்டுகிறது.அந்த வகையில் கொங்குநாடு ஜனநாயக கட்சி இதை வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியுள்ளார். nakkheeran,com

வெள்ளி, 1 ஜனவரி, 2016

கோவில்களில் ஆடை கட்டுப்பாடு... பெண்களே உடன்கட்டை ஏறும் நாளை நோக்கி....சதிமாதாக்கி ஜெய்!

பெண்களை மிகவும் உயர்வாக மதிக்கும் பண்பு என்பது உண்மையில் பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் உத்திதான். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஏன், எல்லா உயிரனங்களும் உயர்வானவைதான். ஆனால் இவர்களோ பெண்கள் மட்டும் எதோ தெய்வ பிறவிகள் போல உயர்த்திவிட்டு குப்புற கீழே தள்ளி விழுத்தும் காரியத்தை அல்லவா செய்கிறார்கள்?
அடிமைகள் மிகவும் பெறுமதிவாய்ந்த பொருட்களாகும். அடிமைகள் எனப்படுவோர் தங்களை வாங்கவும் விற்கவும் தங்கள் உடல் உழைப்பை உடலை இன்பத்தை  எஜமானனுக்காக  எந்த நேரமும் வழங்க தயாராக இருப்பவர்கள் என்ற பாரம்பரியத்தை கொண்டவர்களாகும்.

ஆணாதிக்கம் என்பது பெண்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக உருவானதுதான். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை,
பெண்களை அடிமைகளாக வைத்திருப்பவர்கள் கண்டு பிடித்த போதை வஸ்துதான் பெண்கள் உயர்வானவர்கள் தெய்வத்துக்கு நிகரானவர்கள் போன்ற டாஸ்மாக் கோட்பாடுகள்.
பெண்கள் உயர்வானவர்கள் தெய்வத்துக்கு நிகரானவர்கள் என்ற சுலோகத்தின் உச்ச கட்டம்தான் உடன் கட்டை ஏறும் பாரம்பரியம் .
 இறந்த கணவனின் உடலோடு மனைவியையும் சேர்த்து உயிரோடு கொழுத்தி எரித்து விட்டு சதிமாதாவுக்கு ஜெய்  என்றுஅவளை உயத்தில் ஏற்றி போற்றி தெய்வத்துக்கு நிகராக கொண்டாடுவது எவ்வளவு கொடுரம் நிறைந்த கயமைத்தனம் ?
இன்றைய பெண்களின் ஆடைக்கட்டுப்பாடு ...கோவிலின் புனிதம் காப்பது எல்லாம் இந்த சதிமாதா தத்துவத்தின் வெளிப்பாடுதான். ஆடை கட்டுப்பாடு பற்றி வகுப்பெடுக்கும் நீதிபதிகளோ அல்லது சமய வீரகளோ எம்ஜியார் ஜெயலலிதா ரஜினி கமலஹாசன் மற்றும் இதர சினிமா நடிகர் நடிகைகளின் அங்கங்களை திரையில் மட்டும் அல்ல வீடுகளில் டிவியில் பார்த்து ரசிப்பவர்கள்தான் ராமகோபாலன் தொடங்கி காஞ்சி சங்கராச்சாரி வரையில் இதுதான் உண்மை .
சமயம் கலாசாரம்  போன்றவைகளை கூறி  மேலும் மேலும் புதிய சட்டங்களை இயற்றுவது  சாதாரண மனிதர்களை  அடிமைகளாக வைத்திருக்கும் யுக்திதான்
ஆடை கட்டுப்பாடு என்பது பெண் அடிமைத்தனமும் ஜாதி அடிமைத்தனமும் பேணுவதற்காக மட்டுமே இவர்களால் தூக்கி பிடிக்க படுகிறது, இதன்மூலம் இவர்கள் யார் என்று தங்கள் வேஷ்டியை தூக்கி காட்டுகிறார்கள் என்றே பொருள் படுகிறது   பார்ப்பான் தனது பூணுலை பறைசாற்றவும் யார்யாருக்கு பூணுல் இல்லை என்பதை கண்டுபிடிக்கவும்  ஆண்கள் மேலங்கி அணியாமலதான் வரவேண்டும் என்று திருச்செந்தூர் போன்ற கோவில்களில் சம்பிரதாயம் என்கிறான், கேரளாவிலும் இலங்கை யாழ்ப்பனதிலும் கூட இந்த மாதிரி பார்ப்பானுக்கு வசதியான வெறும் உடம்பு வழிபாடுதான்... 

இன்று முதல் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள்! 2016, ஜனவரி 1 -

சலுகைகள்இன்று முதல், அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், பொது துறைகளில் மத்திய அரசு பணியில், 'குரூப் - சி' மற்றும் 'குரூப் - டி' பிரிவு ஊழியர்கள் நியமனத்தில் நேர்முகத் தேர்வு கிடையாது
ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கான படுக்கை வசதி நான்காக அதிகரிக்கப்படுகிறது. இதனால், தம்பதியாக பயணம் செய்வோர், ஒரே பெட்டியில் பயணம் செய்ய முடியும்
புதுடில்லி: இன்று, 2016, ஜனவரி 1 - ஆங்கில புத்தாண்டு. இந்த புத்தாண்டில் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள், இதோ:
மொபைல் போனில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது நடுவில், 'கால் டிராப்' ஆனால், வாடிக்கையாளருக்கு சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனம்

எமி ஜாக்சன் : மெரீனா கடற்கரை புதுச்சேரி எனக்கு மிகவும் பிடித்தமான...

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் ‘பிசி’யாக நடித்துக் கொண்டிருப்பவர் என்னை இந்திய பெண்ணாகவே நான் பார்க்கிறேன். சென்னையில் எனக்கு பிடித்த இடம் மெரீனா கடற்கரை. புதுச்சேரியும் எனக்கு மிகவும் பிடித்தமான இடம். தங்கமகன், தெறி படங்களில் சமந்தாவுடன் இணைந்து நடித்தேன். அவர் பழகுவதற்கு இனிமையானவர். ‘கெத்து’ படத்தில் எனக்கு ஐயங்கார் பெண் வேடம். இயக்குனர் திருக்குமரன் எனது நடை, உடை பாவனை அனைத்தையும் மாற்றி விட்டார். இதில் நான் உதயநிதிக்கு சரியான ஜோடியாக இருப்பேன் என்று நம்புகிறேன். இந்த படத்தில் அனுபவித்து நடித்திருக்கிறேன். ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மதச்சார்பற்ற கட்சியுடன் மட்டுமே கூட்டணி: தமிழக காங்கிரஸ்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சியுடன் மட்டுமே
காங்கிரஸ் கூட்டணி அமைத்துக் கொள்ளும் என ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்கள் கேள்வுக்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் :ஜெயலலிதாவுக்காக மட்டும் உடனடி சாலை வசதி செய்வதா?

விஜயகாந்த் | படம்: எம்.சத்தியமூர்த்திஜெயலலிதா செல்கிறார் என்றால் அவர் செல்லும் வழியெங்கும் புயல் வேகத்தில் சாலை போடப்படுகிறது. ஆனால், சாமான்ய மக்களுக்காக எந்தப் பணியும் நடப்பதில்லையே என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசை சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மழைவெள்ளத்தால் சென்னை மாநகரமே சிக்கித்தவித்து, பொதுமக்கள் பலரும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் வேளையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுகூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
ஒரு கட்சியின் செயற்குழு, பொதுக்குழு குறிப்பிட்ட காலத்தில் நடத்தவேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் சட்ட விதியாகும். ஆனால் மழை வெள்ளத்தால் பல்வேறு சிரமங்களை அனுபவித்துக் கொண்டு, நொந்து நூலாகிப்போயுள்ள சென்னை வாழ் மக்கள் மத்தியில் மிகுந்த ஆடம்பரத்துடனும், வெகு விமரிசையாகவும் இதை நடத்தலாமா? அதுவுல என்னாய்ங்க தப்புன்னு நஞ்சில் சம்பத்து பயல் கேட்டிட போராய்ன்..

வினவு: சாணி விற்கும் அமேசான் ! இதுதாண்டா மேக்-இன்-இந்தியா !!

அமேசான்
புலிகேசி 30% இனாமை பெற்றுக்கொண்டு வெளிநாட்டு குளிர்பானங்களான “அக்கமாலா”, “கப்சி”யை உள்ளூரில் அறிமுகப்படுத்தும் பொழுது “விளம்பரப்படுத்தினால் நம் ஊர் மக்கள் ஆட்டு மூத்திரத்தையும் சுத்த இளநீர் என்று ஒருகை பார்த்து விடுவார்கள்” என்று உற்சாகமாக கூறுவார்.
எருவாட்டி விற்க பன்னாட்டு நிறுவனம் “அமேசான்”
ஆனால் நாடு தற்பொழுது இருக்கும் நிலையில் விளம்பரப்படுத்தவெல்லாம் தேவையில்லை. மூத்திரம் என்ன? சாணியே கூட விற்கலாம் என்றளவிற்கு வந்துவிட்டது.
E-commerce எனப்படும் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் எருவாட்டி விற்பனையில் சக்கைப்போடு போடுகிறதாம். இதுபற்றிய செய்தி 29-12-2015 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் வந்திருக்கிறது.
இரண்டிலிருந்து எட்டு எருவாட்டிகள் கொண்ட பை ஒன்று 100ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். ஒவ்வொரு எருவாட்டியும் 200 கிராம் எடை கொண்டதாக இருக்கிறதாம்.

பீப் பாடல்...சட்டப்படி சந்திப்பாங்க....மன்னிப்பா? அது நடக்காது இது மடங்காது இனி முடங்காது....திருந்தவே திருந்தாது ...

Simbu-Rajendar
சென்னை : பீப் பாடல் சர்ச்சை விவகாரத்தை சிம்பு சட்டப்படி சந்திப்பார் என்று அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இணையதளத்தில் பீப் பாடல் வெளியிட்டதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு நேற்று காலை நடிகர் சிம்புவின் தந்தையும், இயக்குனரு மான டி.ராஜேந்தர் வருகை தந்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பின் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளத்தால் சேதம் அடைந்த 1,096 கி.மீட்டர் நீள சாலைகள் சீரமைக்கப்பட்டன: தமிழக அரசு தகவல்

சென்னை - தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;- மழை வெள்ளத்தினால் சேதமடைந்த சாலை மற்றும் பாலங்களை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு விரிவான செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 2 ஆயிரத்து 626 கி.மீ. சாலைகள், 143 தரைபாலம் மற்றும் சிறுபாலங்கள் சீரமைப்பு பணிகளுக்காகவும், 119 மண் சரிவு இடங்களில் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்காகவும், ரூ.150 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஒப்பந்த நடைமுறைகளை பின்பற்றி சாலை சீரமைப்புப் பணிகளை இந்த மாதத்துக்குள்ளாகவும், 7 இடங்களில் தரைப் பாலங்கள் அமைக்கும் பணிகளை அடுத்த மாதம் பிப்ரவரியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வைகோ வாசன் சந்திப்பு! மக்கள் நலகூட்டணி வீறு கொண்டு எழுகிறது

மக்கள் நலக்கூட்டனி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் இன்று மாலையில் சென்னை தேனாம்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தனர்.  இச்சந்திப்பின்ப்போது, வாசனை கூட்டணியில் சேர வலியுத்தினர்.இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  ‘’மக்கள் நலக்கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்க வேண்டும்.  இக்கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைவார்’’ என்று நம்பிக் கை தெரிவித்தார்.தமிழகத்தில் கட்சி சார்பில் நடத்தப்படும் 2ம் கட்ட சுற்றுப் பயணத்துக்குப் பிறகே தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன்,  ‘’தமிழக அரசியல் சூழல் குறித்து மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் விவாதித்தனர்.  கூட்டணியில் இணையுமாறு மக்கள் நலக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.  2ம் கட்ட சுற்றுப் பயணம் முடிந்த பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.nakkheeran,com

ஜெயலலிதா அதிரடி : இனிமேல் அதிமுகவிற்கு வெற்றிதான்...எந்த காலத்திலும் தோல்வியே கிடையாது..

சென்னை:''இனிமேல் அ.தி.மு.க.,விற்கு வெற்றிதான்; என்றுமே வெற்றிதான்;
இனி எந்தக் காலத்திலும் தோல்வி இல்லை,'' என அ.தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கையுடன் பேசியதால் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்தனர். >அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதாவது: நான்கு மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகளை செய்திருக்கிறோம். இன்னும் ஒரு முறை இவர்கள் ஆண்டால் அடுத்த தேர்தல் தமிழகத்துக்கு தேவையே இல்லை... திவாலாகும் தேசத்துக்கு தேர்தல் தேவை இல்லைதானே

திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும்: சோனியாவிடம் வலியுறுத்திய இளங்கோவன்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக நேரடி யாகவும், மறைமுகமாகவும் அரசியல் கட்சிகளின் தலை வர்கள் பேச்சு நடத்தி வருகின்ற னர். பாஜக தலைவர்கள், தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க தீவிர முயற்சி மேற் கொண்டுள்ளனர். அக்கட்சி யின் தேசிய, மாநில நிர்வாகிகள், விஜயகாந்துடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். பாமக இளைஞ ரணித் தலைவர் அன்புமணி ராம தாஸையும் சந்தித்து பேசினர்.
அதே நேரத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், திருமாவளவன் ஆகியோரும் விஜயகாந்தை சந்தித்து தங்களது கூட் டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்குத் தேவை....yaa.....


இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் தர விரும்பும் மட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய சேவை பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.
இதுவரை இணைய வசதியே இல்லாத அல்லது இணையத்தையே பயன்படுத்தாத செல்பேசி பயன்பாட்டாளர்களுக்கு இலவசமாக இணைய சேவையை தருவதே தமது முக்கிய நோக்கம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகிறது. ஆனால் இப்படியான கட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய சேவை என்பது இணையத்தின் பொதுத்தன்மையை, சமநிலையைக் குலைத்துவிடும் என்றும் இணையத்தில் செயற்படும் வணிக, வர்த்தக நிறுவனங்கள் அனைத்துக்கும் இதில் வாய்ப்பளிக்கப்படாது என்பதால் இணைய வர்த்தகவெளியை இது சமனற்றதாக மாற்றிவிடும் என்றும் அனைவருக்கும் பொதுவான இணையத்தை ஃபேஸ்புக் தனது வர்த்தக நலன்களுக்கு ஏற்ப பயன்படுத்தும் சூழலுக்கு இது வழி வகுக்கும் என்றும் இதன் எதிர்ப்பாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பன்னீர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை ‘அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்)
ஓவியம்: அ.நன்மாறன்மிசாவுக்கு முன்பு தொடங்கியது ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை. ஆனால், அவருக்கு முதல்வர் நாற்காலி கிட்டவில்லை. 1993-ம் ஆண்டில் ஆரம்பித்த வைகோவின் தனி ஆவர்த்தனம், 20 ஆண்டுகளைக் கடந்தும் மணிமுடியை அவருக்குச் சூட்டவில்லை. கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. விஜயகாந்த்தின் கோட்டைக் கனவு ‘கானல் நீர்’தான். ‘மக்கள் தலைவர்’ என்கிற அடைமொழிக்காரர் மூப்பனார், பிரதமர் நாற்காலி வரை பேசப்பட்டார். ஆனால், அது அவருக்கு எட்டாக் கனியாகிவிட்டது. இவர்களுக்​கெல்லாம் வாய்க்காத வாய்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரண்டு முறை கிடைத்தது. அதற்குப் பெயர்தான் அரசியல்.
அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் இல்லை; கட்சியில் தலைவரோ, பொதுச் செயலாளரோ இல்லை; தொண்டர்கள் ஆதரவு இல்லவே இல்லை; கூட்டத்தைக் கட்டிப்போடும் பேச்சாற்றல் இல்லை; இப்படி ‘இல்லை’கள் என்பதையேத் தகுதியாக வைத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்காக தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலி இரண்டு முறை நகர்த்தி வைக்கப்பட்டது.