செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

துர்கா பள்ளிவாசலை இடிக்க உத்தரவிடவில்லை ! Wakf Board backs Durga IAS உண்மையை போட்டுடைத்த இஸ்லாமிய அமைப்புக்கள்

தன்கவுர் : உத்திர பிரதேச பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காசக்தி, வழிபாட்டு தல
சுவரை இடிக்க உத்தரவிட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்ததாக உ.பி., அரசு கூறி வரும் குற்றச்சாட்டு பொய்யானவை என இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் வழிபாட்டு தலத்தின் சுவரை இடிக்க எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளதால் உ.பி.,அரசின் பொய் குற்றச்சாட்டு அம்பலத்திற்கு வந்துள்ளது.துர்கா சஸ்பெண்ட் : மணல் கொள்ளை மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காசக்தி நாக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் அவர் இஸ்லாமிய வழிபாட்டு தலத்தின் சுவரை இடிக்க உத்தரவிட்டதாகவும், அதனால் மத நல்லிணக்கத்தை காப்பதற்காக அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்ததாக உத்திர பிரதேச அரசு தெரிவித்தது. துர்கா சஸ்பெண்ட்டை எதிர்த்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கழகம், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் சஸ்பெண்ட் உத்தரவை மாற்றிக் கொள்ள முடியாது என சமாஜ்வாதி கட்சியும், மாநில முதல்வர் அகிலேஷூம் பிடிவாதமாக இருந்து வருகின்றனர். இதனால் உத்திர பிரதேச அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஷர்மிளா: ஜெகனின் அரசியலை தடுக்கவே தெலுங்கனா பிரிவினை

ஜெகன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடவே தெலுங்கானா: ஷர்மிளா
சாடல்! ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகனின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடவே தெலுங்கானா தனி மாநிலத்தை காங்கிரஸ் உருவாக்கியுள்ளதாக அவரது சகோதரி ஷர்மிளா சாடியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஷர்மிளா, தனி தெலுங்கானா அமைக்கும் மத்திய அரசின் முடிவானது அதிர்ச்சி அளிக்கிறது. எனது சகோதரர் ஜெகனின் செல்வாக்கு அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவே காங்கிரஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது என்றார். ஜெகன் மோகன் ரெட்டி 2011ஆம் ஆண்டு காங்கிரஸை விட்டு வெளியேறினார். ராயலசீமா, கடலோர ஆந்திரா மாவட்டங்களில் ஜெகனின் ஆதரவு காங்கிரஸை திகிலடைய வைத்தது. இதைத் தொடர்ந்து அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 14 மாத காலமாக ஜெகன் சிறையில் இருக்கிறார். இருப்பினும் ஷர்மிளாவும் அவரது தாயாரும் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.tamil.oneindia.in

விஜயகாந்த் :எனக்கும் மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு ??? பேரீச்சம் சாப்பிடுகிறேன் மெக்கா பெர்பியும் யூஸ் பண்றேன்

சென்னை: ""எனக்கும் மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு; அங்கிருந்து . கட்சி கொள்கைப்படி, பெண்களுக்காக பல உதவிகளை செய்திருக்கிறேன். என் கையை கட்டி போட்டாலும், தர்மம் செய்வதை நிறுத்த மாட்டேன். இந்தியாவில் பிறந்த நாம், வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தண்ணீர், என் வீட்டில் இருக்கிறது. பலருக்கும் கிடைக்காத அந்த தண்ணீரை குடிப்பதற்கு, நான் பாக்கியம் செய்திருக்கவேண்டும். எனக்கும், மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு. அங்கு வாங்கிய, ஆல்கஹால் கலக்காத, "பெர்பியூம்' தான் நான் பயன்படுத்துகிறேன். என் அருகில் வந்து நுகர்ந்து பார்த்தால், அது தெரியும். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம் பழத்தை சாப்பிடுகிறேன். இவ்வாறு, அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், பார்த்தசாரதி, சந்திரக்குமார், சுதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாங்கி வரப்பட்ட, ஆல்கஹால் கலக்காத, "பெர்பியூம்' தான் பயன்படுத்துகிறேன்; பேரீச்சம் பழம் சாப்பிடுகிறேன்,'' என, இப்தார் நோன்பு திறப்பு விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

நடிகை தபு திருமணம் பற்றி கேட்டால் எகிறி பாய்கிறார்

சென்னை:‘கல்யாணம் செய்வீர்களா என்று என்னிடம் கேட்காதீர்கள் என்று
நிருபர்களை கடிந்துகொண்டார் தபு.‘சிறைச்சாலை, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ‘சிநேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை தபு. இவருக்கு 41 வயதாகிறது. இவரிடம் நிருபர்கள் சிலர், ‘உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேட்டனர். இதைக்கேட்டு கோபம் அடைந்த தபு, ‘இந்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். எத்தனை நாளைக்குத்தான் இதே கேள்வியை கேட்பீர்கள். இதெல்லாம் பழங்கதையாகி விட்டது என்றார். பிறகு கோபத்தை அடக்கிக்கொண்டு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, ‘ஆரம்பத்தில் நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடிப்பேன். அந்த காலம் மலையேறி விட்டது. சம்பளத்தை குறைத்துக்கொண்டு எனது தகுதியை நானே குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. இனி கால்ஷீட் வேண்டுமென்றால் படமும் பெரியதாக இருக்க வேண்டும், சம்பளமும் பெரிதாக தர வேண்டும், கேரவன், பைவ் ஸ்டார் ஓட்டலில் அறை என என்னை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றார்.  ஆமா உங்களை தான் தமிழ்நாட்டின் மொத்த ஜனங்களும் பாத்துகுன்னு கீது !அடுத்து ‘மென்டல் இந்தி படத்தில் சல்மான் கான் சகோதரியாக நடிக்கிறார் தபு. தெலுங்கு படங்களிலும் தபு நடித்திருப்பதால் தெலங்கானா பிரச்னை பற்றி கேட்டபோது, ‘இப்போதுதானே சொன்னேன், என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என கோபம் அடைந்தார். அத்துடன் பேட்டியை முடித்துக் கொண்டார்..tamilmurasu.org

SRM பச்சமுத்து ஜெயமோகனுக்கு விருது ! மீதியை வினவு ! அறம் தின்ற ஜெயமோகன் !

அறம் - ஜெயமோகன்எஸ் ஆர் எம், புதிய தலைமுறை பாரிவேந்தர் பச்சமுத்து அவர்கள் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் கதைகளை படித்துவிட்டு ரூ. 1.50 இலட்சம் பாக்கெட் மணி கொடுத்த கதை!லிகாலம் முத்திடுச்சி. பசங்க எல்லாம் பெரியவங்க சொன்னா கேட்கறதில்ல. அது அது ஜீன்ஸ் பேன்டும், டி-ஷர்ட்டும் போட்டுக்குதுங்க, ராத்திரி எல்லாம் பார்ட்டின்னு கும்மாளம் அடிக்குதுங்க, வெளிநாட்டு பண்டமா தின்னாத்தான் செரிக்கும்னு அலையுதுங்க. பெரியவங்களுக்கு மரியாதையே இல்ல. எப்ப பார்த்தாலும் பேஸ்புக்லையே விழுந்து கிடக்கிறாங்க. சீரியசா வாசிப்பே இல்லாம ஆகிட்டிருக்கு. தமிழ் இலக்கியம் தொடருமா என்ற அச்சமாயிருக்கிறது.”

ஜேம்ஸ் வசந்தன் கைதுக்கு 50 போலீஸ் ! அடேங்கப்பா இதுதாண்டா தமிழக போலீஸ் ! ராமதாஸ் கண்டனம்

 தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான படுகொலைகள் நடந்துள்ளன; 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் திருட்டுகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் இன்னும் துப்பு துலக்கப்படவில்லை ஆனால் ஒரு ஜேம்ஸ் வசந்தனை கைது பண்ண 50 போலீஸ் ! விபச்சாரிகளின் குரலுக்குதான் போலீசின்  மதிப்பு 
 காவல்துறையினர் பழிவாங்கும் செயல்களுக்கு துணை போவதை விடுத்து சட்டம் & ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை ஆதாரமே இல்லாமல், குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்திருக்கிறது. பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.ஜேம்ஸ் வசந்தன் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் ராதா வேணுபிரசாத் என்ற 65 வயது பெண்மணியை மிரட்டியதாகவும், அவரை நோக்கி ஆபாச செய்கைகளை செய்ததாகவும் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் பணியாற்றி வரும் அவர் மீது இதுவரை இத்தகைய புகார்கள் எழுந்ததில்லை. இப்போதும் ஜேம்ஸ் வசந்தன் மீது காவல்துறையினர் தெரிவிக்கும் குற்றச்சாற்றுகளுக்கு எந்தவித முதற்கட்ட ஆதாரமும் இருப்பதாக தெரியவில்லை. ஜேம்ஸ் வசந்தனுக்கும், ராதா வேணுபிரசாத் குடும்பத்திற்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலவிவரும் மோதலின் ஒரு கட்டமாக, பழிவாங்கும் நோக்கத்துடனேயே இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தாமினி புகாரில் சேரன், சந்துரு இருவர் மீதும் வழக்கு - கைதாவார்களா?

சென்னை: சேரன் மகள் தாமினி கொடுத்த 2 புகார்களின் அடிப்படையில் இயக்குநர் சேரன் மற்றும் காதலன் சந்துரு இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளின் கீழ் இருவரும் கைது செய்யப்படுவார்களா என்பதை போலீசார் இன்று முடிவு செய்வார்கள். இயக்குநர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம், திரை உலகில் மட்டும் அல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமாகத் திகழும் சேரனுக்கு ஆதரவான நிலையை மக்கள் மத்தியில் காண முடிகிறது. சேரன் மகள் தாமினி கடந்த மாதம் 10-ந் தேதி அன்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது காதலன் சந்துரு மீது ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், சந்துரு தன்னை மிரட்டி தொல்லை படுத்துகிறார் என்றும், தனது பேஸ்புக்கை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்திருந்தார். அதே தாமினி, தனது தந்தை சேரன் மீது, கடந்த 1-ந் தேதி அன்று ஒரு புகாரை அதே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது தந்தை சேரன், தனது காதலன் சந்துருவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

வாக்கிங் சென்ற பிரபல வக்கீல் படுகொலை ! இன்று காலை சேலத்தில் பயங்கரம்

சேலம்: இன்று காலை வாக்கிங் சென்ற பிரபல வக்கீல் படுகொலைசேலத்தில் வாக்கிங் சென்ற பிரபல வக்கீல் இன்று அதிகாலை கலெக்டர் அலுவலகம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சேலத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
சேலம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள பாண்டியராஜன் தெருவில் வசித்து வந்தவர் ஆர்.இளம்வழுதி (வயது 45). பிரபல வக்கீல். தினமும் இவர் அதிகாலை வாக்கிங் செல்வது வழக்கம். இதுபோல் இன்று காலை 5.30 மணி அளவில் வாக்கிங் செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது இருட்டாக இருந்தது. இவர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி பக்கம் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவரது தலை மற்றும் கண் பகுதியில் வெட்டு விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் அதே இடத்திலேயே இறந்தார். இதை அந்த வழியே சென்ற சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

எந்த தகப்பனும் செய்யாததை நான் செய்தேன் : சேரன் கண்ணீர்

திரைப்பட இயக்குநர் சேரனின் மகள் தாமினிக்கும், சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்ற இளைஞருக்கும் இடையேயான காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காதல் பிரச்சினையில் தீர்வு காண போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சேரன், அவருடைய மகள் தாமினி, சந்துரு ஆகியோர் கலந்து கொண்டார்கள். விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சந்துருவை போலீசார் அனுப்பி வைத்தார்கள். தாமினி தந்தை சேரனுடன் செல்ல மாட்டேன் என்று கூறியதால், அவரை மைலாப்புரில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.இந்த நிலையில் சேரனும், அவருடைய மனைவி செல்வராணியும் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது சேரன்,‘‘என் மனைவியை இதுவரை வெளியுலகுக்கு நான் அறிமுகம் செய்ததில்லை. இப்போது அறிமுகம் செய்கிறேன். இதுதான் என் மனைவி. எனக்கு 2 மகள்கள். நான், பணக்காரன் அல்ல. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். என் அப்பா சினிமா தியேட்டர் ஊழியர். அம்மா ஆசிரியை. என் மகள்களுக்கு சினிமா பின்னணி, பணக்கார வாசனை வரக்கூடாது என்பதற்காக, அவர்களை கவனமாக வளர்த்தேன்.

தேவிகாவின் கணவன் கனகாவின் அப்பாவாமே ? சொத்துக்காக தேவதாஸ் போடும் வேஷம் !


சென்னை: சமூகத்தில் ?. இடையில்
என்னென்னவோ ஆகிவிட்டது. இந்நிலையில் என் மகள் என்னை சமூகத்தில் ஒரு தவறான மனிதனைப்போல சித்தரிக்கிறாள். நடிகை கனகா மீது போலீஸ் நடவடிக்கை கோரி தந்தை புகார்! நான் அவளை பைத்தியக்காரி என்று சொல்லிவருவதாகவும், அவளது சொத்துக்களை அபகரிக்க முயலுவ தாகவும் அவதூறு பரப்பி வருகிறாள். இதனால் அவள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு குறித்து போலீசார் விசாரணை செய்வதாக தேவதாஸிடம் கூறி அனுப்பி வைத்தனர்
தன்னை தவறானவனாகச் சித்தரித்து வரும் தன் மகள் கனகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் போலீசில் புகார் கூறியுள்ளார். நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அம்மனுவில், "என் மனைவியும் நடிகையுமான தேவிகா, மகள் கனகா பிறந்ததும் என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். அதன்பிறகு கனகாவை கண்ணும்கருத்துமாக நான்தான் வளர்த்து வந்தேன்
tamil.oneindia.in

காஷ்மீர் எல்லையில் இந்திய ரோந்தை தடுத்தது சீனா ! புதிய பிரச்னை?

காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தினரின் ரோந்துப் பணியை சீன ராணுவம் தடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் புதிய பிரச்னை உருவாகி பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய , சீன எல்லையில் வடக்கு லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த 2 சோதனைச் சாவடிகள் இடையே இந்திய ராணுவத்தினர் ''திரங்கா'' என்ற பெயரில் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ரோந்துப் பணியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால், சீனா அந்த வழியில் ஒரு கண்காணிப்பு கோபுரத்தை அமைத்துள்ளது. இந்திய ராணுவத்தினர் ரோந்து வரும்போது அவர்களை சீன ராணுவத்தினர் இடைமறித்து, அது தங்களுடைய பகுதி என்று கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். கடந்த ஏப்ரல் முதல் இதுவரை 21 முறை ரோந்து சென்றதில் 2 முறை மட்டுமே ரோந்து பணி நிறைவடைந்துள்ளது.

10 லட்சம் போலி டாக்டர்கள் ! நாடு முழுவதும் சிகிச்சை அளிக்கின்றனர்.

புதுடெல்லி:நாடு முழுவதும் நகரங்களில் சேவை செய்து வரும் டாக்டர்கள்
குறித்து ஐஎம்எஸ் ஹெல்த் என்ற தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் பெரும்பாலான டாக்டர்கள் எம்பிபிஎஸ் படிக்காதவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எம்பிபிஎஸ், எம்டி போன்ற மருத்துவ பட்டங்களை பெற்றவர்களே டாக்டர்களாக சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலான டாக்டர்கள் மருத்துவ பட்டம் பெறாமல் சிகிச்சை அளிக்கின்றனர். சித்தா, ஆயுர்வேதா படித்த பலர் டாக்டர் என்று போர்டு வைத்து கொண்டு அலோபதி மருந்துகளையும், ஊசிகளையும் நோயாளிகளுக்கு அளித்து வருகின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ADMK பாசறை கூட்டத்தில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை: கல்வித் துறை அமைச்சர் பங்கேற்ற, அ.தி.மு.க., பாசறை
ஆலோசனை கூட்டத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து வந்து பங்கேற்க செய்த சம்பவம், பெற்றோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டையில், அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. இதற்காக, நகர்மன்ற வளாகத்தில், பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டுஇருந்தது. கூட்டத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் தலைமை தாங்கியதால், புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர், சீருடையுடன் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 2:00 மணி வரை கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு, கோழி பிரியாணி, தண்ணீர் பாக்கெட் மற்றும் டீ ஷர்ட் வழங்கப்பட்டன. அரசியல் கட்சி கூட்டத்தில், மாணவர்களை பங்கேற்க செய்த சம்பவம், பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம், இதுகுறித்து, விளக்கம் கேட்க, பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

ஜேம்ஸ் வசந்தன் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு ! இதன் பின்னணியில் அரசியல் விபசாரம் ?

பிரபல இசையமைப்பாளரும், டிவி தொகுப்பாளருமான  ஜேம்ஸ் வசந்தன்
கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையில் பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (50) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சுப்பிரமணியபுரம்  உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள் ளார். தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். டிவிக்களில்  நிகழ்ச்சி  தொகுப்பாளராக உள்ளார். இவருக்கும் அவரது வீட்டு அருகில் வசித்து வரும் ராதா பிரசாத் (60) என்ற பெண் ணுக்கும்  நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் பல முறை வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ராதா பிரசாத் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். அதில் “ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.
இதுகுறித்து போலீசார் மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். எதற்கும் துணிந்த பெண் நினைத்தால் அரசியலும் போலீசும் எவ்வளவு தூரம்  வளைந்து கொடுக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் ,

மாநிலங்களை பிரிக்கும்படி 50 மாநிலங்கள் கோரிக்கை? சிறிய மாநிலங்கள் வலிமையான பாரதம் ?

புதுடில்லி: தனி தெலுங்கானா மாநிலம் அறிவிப்பை தொடர்ந்து, பல மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் பட்சத்தில், எதிர்காலத்தில் இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை, 50 ஆக உயர்ந்துவிடும்.
தனி தெலுங்கானா மாநிலம்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதாக, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன் காரணமாக, உ.பி., அசாம் உட்பட பல மாநிலங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. தெலுங்கானா பிரிப்பையே அமல்படுத்த முடியுமா என சந்தேகம் கொள்ளும் அளவுக்கு, ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், பெரிய மாநிலங்களைப் பிரிப்பதற்கு, பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த வகையில், உ.பி., "மாஜி' முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, உ.பி., மாநிலத்தை நான்கு சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். இது, வளர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என, கூறியிருந்தார். ஆனால், மேற்கு வங்க முதல்வராக உள்ள மம்தா பானர்ஜி, மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க எதிர்ப்பு தெரிவித்தார். மாநில அரசுகள் எதுவும், மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கவில்லை. இருப்பினும், மணிப்பூரில் குகிலாந்து, மேற்கு வங்கத்தில் கமலாபூர், கர்நாடகாவை இரண்டாகப் பிரித்து மாநிலங்களை உருவாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவும், அமெரிக்கா போல வளரனுங்கறத யாரோ தப்பா புரிஞ்சுகிட்டாங்க

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

விபத்தில் சிக்கிய நடிகைக்கு 1.27 கோடி நஷ்டஈடு கிடைத்துள்ளது அழகிபோட்டியில் வென்ற நடிகை ரேகா ஜெயின்

அழகிப்போட்டியில் வெற்றி பெற்று அதன்மூலம் சினிமாப்பட
மருத்துவ வாரியம் அவருக்கு 30 சதவிகிதம் ஊனம் ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை அளித்ததன் பெயரில் சம்பல்பூர் மோட்டார் விபத்து> தீர்ப்பாயம் 23.5 லட்சம் நஷ்டஈடு அளிக்கும்படி காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. காப்பீட்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தபோது, இந்தத் தொகை 14 லட்சமாகக் குறைக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து ரேகா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கிருந்த நீதிபதிகள் ஜி.வி.சிங்வி, வி.கோபாலகவுடா ஆகிய இருவரும் ரேகாவின் வாதத்தை ஏற்றுக்கொண்டனர். அவரது உடல் ஊனம் 30 சதவிகிதம்தான் என்றபோதிலும், ஒரு நடிகையின் தொழிலுக்கு அவரது முக அழகு ஒரு முக்கிய காரணமாகும். அதனை அவர் இந்த விபத்தில் இழந்ததால் அவரால் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய தொழிலில் ஈடுபடமுடியாது என்ற நடிகையின் தரப்பு வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

துர்கா IAS க்கு நியாயம் கேட்கும் சோனியா கெம்கா IAS க்கும் நியாயம் கேட்டு கடிதம் எழுத வேண்டியது தானே?

லக்னோ: சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள உத்தர
பிரதேச மாநில ஐ.ஏ.எஸ்.
அதிகாரி துர்கா குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது சமாஜ்வாடி கட்சியை எரிச்சல் அடையச் செய்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் ப்ரொபேஷனரி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிபவர் துர்கா சக்தி நாக்பால்(28). மணல் கடத்தும் கும்பலுக்கு எதிராக அவர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இதனால் அவர் ஆளும் சமாஜ்வாடி கட்சியினரின் விரோதத்தை சம்பாதித்தார். இந்நிலையில் ஆக்கிரமிப்பு மதவழிபாட்டு தல கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்ட விவகாரத்தில் துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. துர்காவுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் சமாஜ்வாடி கட்சி தனது நிலையை மாற்றுவதாக இல்லை. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், சோனியா காந்தி மேலும் 2 கடிதங்களை எழுத வேண்டும். சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவின் நிலமோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஹரியானா ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் ராப்ர்ட் வாத்ரா தொடர்பான விவகாரத்தில் ராஜஸ்தான் முதல்வரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்தும் அவர் கடிதம் எழுத வேண்டும் என்று தெரிவித்தார்.

tamil.oneindia.in

சிம்புவுடன் நடிக்காதே! சமந்தாவுக்கு சித்தார்த் வேண்டுகோள்

சென்னை:‘சிம்புவுடன் நடிக்க வேண்டாம் என சமந்தாவுக்கு சித்தார்த்
கட்டுப்பாடு விதித்திருக்கிறாராம்.சித்தார்த், சமந்தா ஜோடி காதல் வலையில் விழுந்திருப்பதும், ஜோடியாக விழாக்கள், கோயில்களுக்கு செல்வதும் இண்டஸ்ட்ரிகாரர்களுக்கு வெட்ட வெளிச்சம். இவர்களின் நெருக்கம் அம்பலமானதால் சமந்தாவுக்கான பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதையடுத்து சமந்தாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. நடிப்புக்குத்தான் முக்கியத்துவம் பிறகுதான் காதல், கல்யாணம் என்ற பாணியில் பேட்டி அளித்தார். இதையடுத்து பட வாய்ப்புகளை தக்க வைத்துக்கொண்டார்.

இளவரசன் தற்கொலைக்கு முன் திவ்யாவிடம் பேசினார் திவ்யா தகவல்

சென்னை: இளவரசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு என்னிடம் பேசினார். தான் தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்தார் என்று போலீஸாரிடம் கூறியுள்ளார் தர்மபுரி திவ்யா. இளவரசன் மரணம் தற்கொலைதான் என்பதை போலீஸார் திட்டவட்டமாக கூறியுள்ளனர். மேலும் அதுதொடர்பான ஆதாரங்களையும் அவர்கள் சேகரித்துள்ளனர். எஸ்.பி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் இதுதொடர்பான ஆவணங்களைத் திரட்டியுள்ளனர். தற்போது திவ்யா சில புதிய தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அதாவது இளவரசன் தன்னிடம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். மேலும், ஒரு தடவை அவர் சென்னை லாட்ஜில் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதை அவரது தாயார் தேன்மொழியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

TRS மிரட்டல் எதிரொலி ஆந்திர அரசு ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக் ! TRS கிளர்ச்சியாளர்களின் ஆரம்பமே சரியில்லை ?

திருப்பதி: தெலங்கானாவில் இருந்து ஆந்திரா, ராயலசீமா பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று டிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் திடீரென மிரட்டல் விடுத்துள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையே, தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று 4வது நாளாக பந்த் தொடர்ந்தது. இதனால், ஆந்திராவில் பதற்றம் அதிகரித்துள்ளது.ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பகுதியை பிரித்து, தனி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் நேற்று 4வது நாளாக பந்த் நடந்தது.அதிகாலை முதலே ராயலசீமா, ஆந்திர பகுதிகளில் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து பஸ்கள் வெளியே வரவில்லை.  ஸ்ரீகாகுளம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, கடப்பா, நெல்லூர், விசாகப்பட்டினம், விஜயநகரம், ராஜமுந்திரி, அனந்தபூர், கர்னூல், கிருஷ்ணா மாவட்டங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

சிகரெட் புகை போல ஊதுவத்தி சாம்பிராணி புகையும் உடலுக்கு தீங்கு

வாஷிங்டன்:
ஊதுவத்திகளை அதிகளவில் பயன்படுத்துவதால்
வீட்டுக்குள்ளே காற்று மாசு அடைந்து, நுரையீரல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஓர் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமய சடங்குகள் நடக்கும்போதும், வாசனைக்காகவும் ஊதுவத்திகள் கொளுத்தப்படுகின்றன. ஐக்கிய அரபு குடியரசில் 94 சதவீத வீடுகளில் ஊதுவத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.ஊதுவத்தி புகையால் கண், மூக்கு, தொண்டையில் பிரச்னைகள், தோலில் எரிச்சல், ஆஸ்துமா, தலைவலி, இதயக்கோளாறுகள் ஏற்படுகின்றன. நுரையீரல் செல்லின் கட்டமைப்பு முறையிலேயே மாற்றம் ஏற்படுகிறது. சுவாசம் தொடர்பான நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

காட்டுமிராண்டியை காதலிக்கும் படித்த பெண் ! இது ஒரு தமிழ் சினிமா வியாதி ! பாடம் படிக்கும் சேரன்

522757_385401311545378_1902187585_n
கடந்த இரண்டு நாட்களாக, சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் சேரன் மகள் தாமினியின் காதல்.
DSC_0054ஒரு கிராமத்தில் எப்போதும் குடித்து விட்டு ரவுடித்தனம் செய்யும் ஒருவன் இருக்கிறான்.  அவனுக்கு வேலையே, பாலியல் தொழிலாளிகளைக் கூட மிரட்டி பணம் பறித்து, அவளை பயன்படுத்துவது, யாரையாவது குத்துவேன், வெட்டுவேன் என்று ரவுடித்தனம் செய்து கொண்டே இருப்பது, அரவாணிகளை கிண்டல் செய்து வம்பிழுப்பது… இவனை ஒருத்தி உருகி உருகி காதலிக்கிறாள்.  படம் பருத்தி வீரன் இயக்குநர் அமீர்.
ஒரு பொறியாளர் தனியாகவே இருப்பவன். அவனுக்கு நாள்தோறும் குடித்துக் கொண்டும், பெண்களோடும் இருக்க வேண்டும்.  அவனைப் போல வாழாத ஆண்களை எள்ளி நகையாடுவான்.  அவனையும் ஒரு பெண் காதலித்து இறுதியில் மணப்பாள். படம் மந்திரப் புன்னகை இயக்குநர் கரு.பழனியப்பன்.
ஒரு இளைஞன், பள்ளி வயதில் ஒருத்தியை காதலிப்பான்.  பின்னர் அந்தக் காதல் கைகூடாததால், கல்லூரியில் ஒருத்தியைக் காதலிப்பான். அதுவும் கைகூடாமல் போனதால், வேலைக்குப் போன பிறகு ஒருத்தியை காதலித்து மணம் புரிவான்.  பழைய காதலி சடையில் அவனுக்குப் பிடித்த குஞ்சத்தைக் கட்டிக் கொண்டு அவன் திருமணத்துக்கு வருவாள். இதை அவன் புதிய மனைவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள். படம் ஆட்டோகிராஃப்.  இயக்குநர் சேரன்.
ஒருவனுக்கு வேலையே லங்கரா கட்டை உருட்டுவது.  சீட்டாடுவது. லேகியம் விற்று ஏமாற்றுவது.  வெளிநாட்டுப் பொருட்கள் என்று உள்ளுர் பொருட்களை ஏமாற்றி விற்பனை செய்வது.  வாழ்க்கையில் பாதி நாட்கள் சிறை.  அவனை சாதாரண குடும்பத்து பெண் ஒருத்தி உருகி உருகி காதலிப்பாள்.  படம் பிதாமகன் இயக்குநர் பாலா.

அமர்த்தியா சென்:தமிழகம், கேரளாவின் வளர்ச்சி தனி நாடுகளுக்கு இணையாக உள்ளது

சென்னை: "தமிழகம் தனி நாடாக இருந்திருந்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.;நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் பொருளாதார வல்லுனர் ஜீன் டி ரெஸ் ஆகியோர் எழுதியுள்ள, "நிலையில்லா புகழ்- இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்' என்ற நூல் பற்றி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைவிட வளர்ச்சி பெற்றுள்ளது. இவற்றின் வளர்ச்சி, தனி நாடுகளுக்கு இணையாக உள்ளது' என, அமர்த்தியா சென் குறிப்பிட்டு உள்ளார். அதேநேரத்தில், வளர்ந்த மாநிலங்கள் என்பதற்காக, நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைக்கிறது. இது, வளர்ச்சி பெற்றதற்கு அளிக்கப்பட்ட தண்டனை போல் உள்ளது. இதை, மத்திய அரசின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றுள்ளேன். நாட்டில் நிலவும் வளர்ச்சி ஏற்றத் தாழ்வுக்கு பல கராணங்களை சுட்டிக் காட்டுகின்றனர். இதை சரி, செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்த பின், பெரும் வளர்ச்சி பெற்றுள்ளோம். அதே நேரத்தில், வறுமை, அடிப்படை வசதி குறைபாடுகளும் நீடிக்கின்றன. சமூக, பொருளாதார நிலையில் ஏற்பட்டு வரும் பின்னடைவு குறித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முக்கிய பிரச்னைகள் குறித்து, வசதி மிக்கவர்கள் மத்தியில் மட்டும் விவாதம் நடக்கிறது. இதை, வசதியற்ற மக்கள் மத்தியிலும் உருவாக்க வேண்டும். சமூக, பொருளாதார தளங்களில் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க, நாடு தவறிவிட்டது. அமெரிக்க பாதையைப் பின்பற்றி, வளர்ச்சி அடைந்து விடலாம் என, எண்ணிவிடக் கூடாது. பொதுத் துறை, தனியார் துறை பொருளாதாரம் பற்றி தவறான அணுகு முறைகளே, துவக்கத்திலிருந்து பின்பற்றப்படுகின்றன. மாற்றம் என்பது, உடனடியாக ஏற்படாது. கொஞ்சம், கொஞ்மாகத் தான் அது உருவாகும். கேரளாவும், தமிழகமும் தனி நாடுகளாக இருந்திருந்தால், எவ்வளவோ முன்னேறியிருக்கும். மாநிலங்கள் அனைத்தையும் ஒரே அளவில் சீர்தூக்கி பார்க்காமல், அவற்றின் வளர்ச்சி, அதற்கான கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, தனித்தனி அளவுகோல்களை நிர்ணயிக்க வேண்டும். இந்த அடிப்படையில், சேது கால்வாய் திட்டத்தை தடுக்காமல், அதன் ஒட்டுமொத்த பயனை எண்ணிப் பார்த்து, அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.dinamalar.com

ஆந்திராவில் காங்கிரசின் எதிர்காலம் கேள்விகுறி ? முதல்வர் கிரண்குமார் அச்சம்

ஐதாராபாத்: தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கிய காங்கிரஸ் கட்சி அடுத்து வரும் பொது தேர்தலில் வெறறி பெறுவது கடினம் என மாநில முதலவர்
அச்சம் தெரிவித்துளளார். ஆதரவும் எதிர்ப்பும் : ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என நீண்ட கால கோரிக்கையை காங்கிரஸ் கட்சி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றியது. தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்‌டீரிய சமிதி கட்சி தீவரமாக போராடி வந்தது. தனி தெலுங்கானா காங்கிரஸ் அமைக்கும் பட்சத்தில் டிஆர்எஸ் கட்சியை கலைத்த விட்டு காங்கிரசில் ஐக்கியமாவோம் என அக்‌கட்சி தலைவர் சந்திரசேகரராவ் கூறியுள்ளார். அவர் கூறியதை போல் விரைவில் காங்கிரஸ் கட்சியுடன் டிஆர்எஸ் இணைய உள்ளது.

நீதிபதி சதாசிவம்: ஒரு வாரத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இன்னும் ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார். டெல்லி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த மாதம் 19ஆம் தேதி தமிழ் நாட்டை சேர்ந்த சதாசிவம் பதவியேற்றார். இதையடுத்து சதாசிவம் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள காடப்பநல்லூருக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை அவருக்கு, ஈரோடு சம்பத் நகரில் உள்ள மாவட்ட கோர்ட் வளாகத்தில் அனைத்து வக்கீல்கள் சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய தலைமை நீதிபதி சதாசிவம், '' செக்மோசடி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க கூடுதல் நீதிமன்றம் அமைக்கப்படும். நீதிமன்றங்களை அதிகரிக்க சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், முல்லைபெரியாறு அணைப்பிரச்னைக்கு இன்னும் ஒருவார காலத்திற்குள் தீர்வு காணப்படும். வக்கீல்கள் தங்களது பிரச்னைகளுக்காக நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது பிரச்னைக்கு தீர்வாகாது'' எனக் கூறினார்.