மின்னம்பலம் - Kavi :இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ஆயுதப்படைக்கு அந்நாட்டுஅரசு அதிகாரம் வழங்கியுள்ளது.
Pakistani government given authority to armed forces
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற குறியீட்டு பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்தநிலையில் பாகிஸ்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.
இந்தியாவின் நடவடிக்கையை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், “”ஒரு போர் நடவடிக்கை” என்று குறிப்பிட்டார்,
பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான இந்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்ததாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டது. Pakistani government given authority to armed forces
பஹ்வல்பூரின் அகமதுபூர் கிழக்குப் பகுதியில் உள்ள சுபான் மசூதி குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தசூழலில் தங்கள் நாட்டு ஆயுதபடைகளுக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரம் வழங்கியிருக்கிறது.
அதேசமயம், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா கூறும் நிலையில், அது இந்தியாவின் கற்பனையான தீவிரவாத முகாம்கள் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக