tamil.samayam.com -மரிய தங்கராஜ் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே எல்லையில் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது ட்ரோன், போர் விமானங்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவம் அதை முறியடித்து வருகிறது.
பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு வருகின்றன. இந்தியா ஒரு பக்கம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினரை குறிவைத்து பாகிஸ்தானுக்குள்ளே தாக்குதல் நடைபெறுகிறது.
பாகிஸ்தானின் பெரிய மாகாணம் என்பது பலுசிஸ்தான் ஆகும். பாகிஸ்தானின் 44 சதவீத நிலப்பரப்பைக் கொண்ட பலுசிஸ்தானம் பாலைவன மாகாணம் ஆகும். சவாலான நிலப்பரப்பை கொண்டது. இங்கு சுதந்திர பலுசிஸ்தானம் வேண்டி பலுச் விடுதலை படை போராடி வருகிறது.
பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்தி வரும் நேரத்தை பயன்படுத்தி சுதந்திர பலுசிஸ்தானம் கேட்டு போராடும் போராளிகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துகின்றன. ஏற்கனவே பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் இந்தியா பதில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு நெருக்கடி உருவாக்கி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு தென்மேற்கு பகுதியில் பலுச் விடுதலை படை தாக்குதல் நடத்துகிறது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் திணறி வருகிறது.
இந்தியா பதில் தாக்குதல்!
பாகிஸ்தான் இந்தியா மீது நேற்று இரவு 8.45 மணி முதல் 9.20 வரை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியா விடிய விடிய பதிலடி கொடுத்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய எல்லையோர மாநிலங்களில் இரவு முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
3 பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய விமான படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பதான் கோட்டில் பாகிஸ்தானின் ஜெட் விமானத்தை இந்தியா வீழ்த்தியது. இந்தியாவின் 15 இடங்களை தாக்க முயன்ற பாகிஸ்தானின் நடவடிக்கை தோற்கடிக்கப்பட்டது.
பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் முயற்சி முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் வான் தடுப்பு பிரிவை இந்தியா தகர்த்தாக தகவல் வெளியாகியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக