சனி, 10 மே, 2025

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்!

 zeenews.india.com  - Yuvashree : India Pakistan War Stopped Indian Citizens Reaction
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பயங்கரவாதிகள், இந்தியர்கள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடங்கியது.
இந்த தாக்குதலானது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில், பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்கள் மற்றும் முகாம்கள் குறிவைக்கப்பட்டு தகர்க்கப்பட்டதாக இந்தியா கூறியது.
இரு நாடுகளும் தாெடர்ந்து தங்கள் எல்லைகளில் தாக்குதல் நடத்தி வந்ததை அடுத்து, தற்போது போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.



போர் நிறுத்தம்:
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய சம்மதம் தெரிவித்ததாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார். “அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு, பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இரு நாடுகளின் அறிவார்ந்த செயலை பாராட்டுகிறேன்” என அவர் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்த பேச்சுவார்த்தை, மே 12ஆம் தேதி நடக்கும் என்று வெளியுறவு அமைச்சர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருக்கிறார்.

இந்தியர்களின் மனநிலை என்ன?
இந்தியா-பாகிஸ்தான் போர் சூழல் முற்றிப்போன நிலையில், இந்தியர்கள் பலர் இது குறித்த தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டபடி இருந்தனர். அப்படி, அவர்கள் போர் நிறுத்தத்திற்கு பின் என்னென்ன கூறியிருக்கின்றனர் என்பதை இங்கு பார்ப்போம்.

பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு ஒருவர், “இப்படி ஒரு அசிங்கமான சூழலை ஏற்படுத்தியதற்கு நன்றி” என்று ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: