திங்கள், 5 மே, 2025

பெரியார் இயக்கங்கள் புலிகள் புகழ் பாடி பெரியாரை கொன்றுவிட்டார்கள்?

No photo description available.

ராதா மனோகர் : பெரியார் Vs பிரபாகரன்?  அதிகமாக எதுவும் கூறி இனி என்னவாகப்போகிறது?
தமிழக பெரியார் இயக்கங்கள் பெரியாரை கொன்றுவிட்டார்கள்
பிரபாகரனையும் அவரது பாசிச அரசியலையும் ஆதரிப்பது என்பது பெரியாரை கொல்வதற்கு இணையானது
இன்று என்னை போலவே பெரியார் வாழ்வியலை புரிந்து கொள்ளும் எந்த இலங்கை தமிழர்களாலும் பெரியரையோ திராவிடத்தையோ இலங்கையில் பேசமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது
ஆம் பெரியார் பெரியார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கும் பல பெரியார்வாதிகள்   புலிகள் புலிகள் என்று அறுநூறு தடவைகள் உச்சரிக்கிறார்கள்
அதாவது பெரியார் என்று கூறும் போது கூடவே பிரபாகரன் புலிகள் என்ற எக்ஸ்டரா லங்கேஜும் ஏற்றி வைக்கப்படுகிறது

அண்மையில்  திராவிடர் கழக  இளம் பேச்சாளர்  கூட பிரபாகரனின் பெரிய படத்திற்கு முன்னால் போஸ் கொடுத்திருந்தார்
பெரியவர்களை பற்றி பேசவே வேண்டாம்.
பெரியாரை மொத்தத்தில் இன்றும்  கொன்று கொண்டே இருக்கிறார்கள் இவர்கள்
பாவம் பெரியார்



சுய சிந்தனை சுயமரியாதைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பெரியாருக்கு இவ்வளவு பெரிய துரோகமா?
சுய மரியாதையை சுய சிந்தனை என்றால் கிலோ என்ன வேலை என்று கேட்கும் ஒரு உன்மத்த கும்பலை போற்றி புகழ் பாடுவது என்ன விதமான அரசியல் கொள்கை?
இனி பெரியார் பற்றி  பேசுவதே ஒரு இயலாத காரியமாகி விட்டது
இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளிலும் கூட ஏறக்குறைய இதே நிலைமைதான்.


தமிழ் காமராசன் :   ஓர் தத்துவ விசாரணை
+++
தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?
ஏற்கனவே இவ்வாறு திராவிட இயக்கத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் வாதிட்டுள்ளனர்; கருதி வந்துள்ளனர். இதன் தொடர் விளைவாக எழுந்த சீமான் இன்று பெரியார் குறித்து அவதூறுகளைப் பரப்பும் வலதுசாரி ஆகிவிட்டார். இப்போதும் இவ்வாறு திருமுருகன் காந்தி வாதிட்டு வருகின்றார்.
இன்றைய நிலையில் இதுபற்றி திராவிட இயக்கத் தலைவர்களின் – சிந்தனையாளர்களின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை.
+++
தந்தை பெரியார் மறைந்த போது (1973) பிரபாகரன் அவர்களின் வயது 19.
அப்போது இலங்கையில் தமிழர்களின் மீதான இன ஒடுக்குமுறை கடுமையானதாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கைத் தமிழர்களுக்குள் நிலவிய ஏற்றத் தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் கருதில் எடுக்காமல், “தமிழர்களின் மீதான சிங்களவர்களின் ஒடுக்குமுறையே முதன்மையான பிரச்சனை; இதற்குத் தீர்வு தனித் தமிழீழழ்; மற்றவற்றையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்கிற தேசியவாத அரசியல் சொல்லாடல் – செயல்பாடு ஒருபக்கம் எழுந்தது. இந்த அரசியலின் மாபெரும் பிரகிருதியாக எழுந்து செயல்பட்டவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.
இதற்கு மாறாக, மற்றொரு பக்கம் ஏற்கனவே நடந்துகொண்டிருந்த சமூகச் சீர்திருத்த – சமூக மாற்றப் போராட்டங்களுடன் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை இணைக்க முயன்றவர்களும் சிலர் அரசியல் களத்தில் இருந்தனர். அவர்களைத் தம் சொந்த மண்ணிலிருந்து ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதற்கட்டத்தின் (1976-1990) முடிவில் (1986-1990) புலிகள் முற்றிலும் துடைத்தெறிந்தனர்.
இதன் பின்னரும்கூட தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களும் – கம்யூனிஸ்ட் இயக்கங்களும் உளமாற புலிகளை ஆதாரித்தனர்.
தமிழ்நாட்டுச் சூழலில் புலிகளின் ஆதரவு அரசியல் சொல்லாடலின் ஊடாகத் தேசியவாத அரசியல் சூறாவளியில் திடாவிட இயக்கத் தோழர்கள் சிக்கிக் கொண்டனர்; மென்மேலும் கம்யூனிஸ்ட் தோழர்கள் அமிழ்த்திக் கொண்டனர்.
தமிழ்நாட்டுச் சூழலில் இதன் முதல் பலியாக அமைந்தது, பெரியார் கட்டியெழுப்பிய பகுத்தறிவு சார்ந்த ஆதிக்க எதிர்ப்பு தமிழ் உணர்வு. அது ஆண்ட பரம்பரை பெருமிதத் தமிழ் உணர்வாக மடைமாற்றப்பட்டது. இதன் மடத்தனமான வெளிப்பாடு மணியரசன் என்றால், அற்பனத்தனமான வெளிப்பாடுதான் சீமான்.
ஈழ விடுதலைப் போர் பேரழிவில் முடிந்த பின்னரும்கூட, பெருமித தேசியவாத அரசியல் சொல்லாடலிலிருந்து தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தவர் வெளியில் வர முடியவில்லை. இதன் விளைவாகத்தான் இறுதிப் போரின் பேரழிவு ஏற்படுத்திய கடுந்துயரத்தையும் தமிழ் அரசியல் உணர்ச்சிப் பெருக்கையும் சீமான் என்கிற அரசியல் பொறுக்கி – கோமாளி தமது அரசியல் முதலீடாக ஆக்கிக் கொள்ள முடிந்தது.
+++
சிந்தித்து பார்ப்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் வலி நிறைந்ததாக இருப்பினும், தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியாகக் கொஞ்சமேனும் தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் இல்லை என்பதுதான் நாம் ஏற்றுக்கொள்ள தயங்குகின்ற உண்மை.
+++
ஒருவர், பெரியார் கொள்கைத் தொடர்ச்சியின் பிரபாகரன் என்றும், பிரபாகரனின் வாரிசு தான் மாட்டும்தான் என்றும் பழைய சீமான் போல பேசிக் கொண்டிருக்கலாம். அல்லது தோழர் திருமுருகன் காந்தி போல பெரியாரையும் பிரபாகரனையும் இணைத்து சிந்திக்கும் அரசியல் ஒன்றே தமிழ்நாட்டின் விடிவெள்ளி என்று கச்சைக் கட்டிக் கொண்டு வாதிட்டு, திமுக எதிர்ப்பிற்கு நியாயம் தேடலாம்.
+++
தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் எந்த முன்னிபந்தனையும் இன்றி திராவிட – கம்யூனிஸ்ட் புரட்சி இயக்கங்கள் ஆதரித்தனர் என்பது கடந்தகால வரலாறு. நானும் ஆதரித்தேன். ஆனால் இன்றைக்கு நாம் சரியாகச் செயல்படுவதற்கு, குறைந்தப்பட்சம் நம்மை நாமே விமர்சனப்பூர்வமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.
இது ஓர் வேண்டுகோள் மட்டுமே. சிந்திக்கும் துணிவுடையோர் சிந்தனை செய்க! உரையாடுக!

Guru  :  இவ்வளவு நடந்த பிறகும் ‘பெரியார் ஆசையை நிஜமாக்கிய விபுலிகள்’னு பேசி மீண்டும் அதே தவறை, அதே பெரியாரிஸ்ட்கள் செய்கின்றனர். தோழர் தியாகு போன்றவர்களும்.
அதே போல் திருமுருகனின் பெரியார் அப்ராப்ரியஷனையும் கண்டிப்பதில்லை

கருத்துகள் இல்லை: