![]() |
![]() |
ராதா மனோகர் ; யாழ் தேஷ் - பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க - அர்ச்சுனா ராமநாதன்
வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தேசிய தலைவர் போராட்டம் தியாகம் தமிழ் என்று ஓயாது கரகாக்கும் அர்ச்சுனா ராமநாதன் அவர்கள் தன்னையும் அறியாமல் ஒரு வரலாற்று உண்மையை படீரென்று போட்டுடைத்துள்ளார்!
தெரிந்தோ தெரியாமலோ உண்மையை கூறியதற்கு நன்றி
ஒரு ப்ளஸ் பேக் : 1971 இல் பங்களாதேஷ் தேசம் சுதந்திரம் பெற்றது!
அதை யாழ்ப்பாணத்தில் கொண்டாடும் முகாமாக தமிழரசு கட்சி ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது!.
அந்த வேளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார் அன்றைய பொதுநிர்வாக உள்நாட்டு உள்ளூராய்ச்சி நிதி நீதி அமைச்சராக இருந்த திரு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அவர்கள்.
அந்த காலக்கட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் தனித்தமிழ் நாட்டு கோரிக்கை பேசுபொருளாகி கொண்டிருந்தது.
1970 தேர்தலில் தனி ஈழக்கோரிக்கையை முன்வைத்து தமிழர் சுயாட்சி கழகம் போட்டி இட்டு மக்களின் கவனத்தை சற்று ஈர்த்திருந்தது.
தமிழர் சுயாட்சி கழகத்திற்கு பின்னால் இளைஞர் கூட்டம் செல்வதை உணர்ந்த தமிழரசு கட்சியினர் தாமும் தனி நாடு பற்றி பேச தொடங்கி இருந்தனர்.
இந்த நிலையில் பங்களாதேஷ் பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற்ற நிகழ்வு பலரின் தனிநாட்டு கனவுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்தது!
அதுவும் மிக குறுகிய கால போராட்டத்திலேயே அது சாத்தியமானது பலரின் நம்பிக்கைக்கு வலு சேர்த்தது.
அன்று யாழ்ப்பாணத்தில் பங்களாதேஷ் விடுதலையானது யாழ் மக்களின் விருப்பமான பேசுபொருளா இருந்தது
இதை பற்றி அமைச்சர் திரு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க . இலங்கையில் யாழ் தேஷ் இற்கு இடமில்லை என்று வேடிக்கையாகவும் கொஞ்சம் எச்சரிக்கையாகவும் கூறினார்!
தமிழர்கள் தமிழ் ஈழம் தனிநாடு என்ற சொற்களை கூறிக்கொண்டிருந்த காலத்தில் இது வெறும் யாழ்ப்பாண மையவாதிகளின் அரசியல்தான் என்பதை மிக சரியாகவே அவர் புரிந்து கொண்டிருந்தார் என்று எண்ணுகிறேன்.
ஏனெனில் அதைதான் தற்போது வெளிப்படையாக நான் யாழ்ப்பாணத்தான்!
யாழ்ப்பாண பாரம்பரியம் யாழ்ப்பாண கலாச்சாரம் என்றெல்லாம் நீட்டி முழக்கி உள்ளார் திரு அர்ச்சுனா ராமநாதன்!
இப்போது அர்ச்சுனா ராமநாதனின் தேசிய தலைவர் தமிழன் என்ற சொற்கள் எல்லாம் அனாதையாகி போய்விட்டன!
அர்ச்சுனவின் தேசிய தலைவரும் இஸ்லாமியர்களை துரதியவர்தானே?
சகோதரர்களை வேட்டை ஆடியவர்தானே
கிழக்கை புறக்கணித்து எல்லா உயர் பொறுப்புக்களையும் வடக்கு அதுவும் கூடுமானவரை வடமராய்ச்சிக்கே வழஙகியவர்தானே?
இவை எல்லாம் எதை காட்டுகிறது?
ஈழப்போராட்டம் என்பதே ஒரு யாழ் தேஷ் போராட்டம்தான் என்பதை அல்லவா?
இதைத்தான் யாழ் தேஷ் போராட்ட ட்ராக் ரெகார்ட் தெளிவாக காட்டி விட்டது!
அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அவர்கள் 1971 இல் கூறியது இன்று உண்மையாகி விட்டது!
ஒரு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரின் பூர்வீகம் பற்றி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறீர்கள்!
மெத்த படித்த உங்களுக்கு இது ஒரு காட்டுமிராண்டி தனமக தெரியவில்லையா? .
இப்போதும் உங்கள் மீது கோபம் வரவில்லை.
ஏனெனில் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு வாயில் வருவதை அப்படியே ரோ மெட்டீரியலாக வாந்தி எடுக்கிறீர்கள்!
ஆனால் பல யாழ் அரசியல்வாதிகளின் குறுநில இனவாதம் ஜாதிவாதம் மதவாதம் பிரதேசவாதம் என்பவை எத்தகையது என்று நாம் அறிவோம்!
இன்னும் உங்கள் வாக்காளர்களுக்கு உங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதை காப்பாற்றுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக