![]() |
hindutamil.in : தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலச்சினையில் ₹ குறியீட்டுக்கு பதிலாக ‘ரூ’ தமிழ் எழுத்து!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பான இலச்சினையில், தமிழ் எழுத்தான ‘ரூ’ இடம்பெற்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது.
குறிப்பாக, இந்திய ரூபாயை குறிக்கும் வகையில், தற்போது ₹ என்ற குறியீடே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் குறித்த இலச்சினையில் ‘ரூ’ என்ற தமிழ் எழுத்து இடம்பெற்றுள்ளது. ரூபாய் என்பதைக் குறிப்பிட ‘ரூ’ என்பது தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அண்மைக் காலமாக மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், மத்திய மாநில அரசுகள் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் இலச்சினையில் தமிழ் எழுத்தான ‘ரூ’ இடம்பெற்றுள்ளது, தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக