வியாழன், 4 மே, 2023

லண்டன் சிவன் கோவில் ஐயருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு!

 தேசம் நெட் - அருண்மொழி :  லண்டன் லூசியம் சிவன் கோவில் ஐயருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு ஏப்ரல் 28 வூல்விச் கிரவுன் கோட்டில் விசாரணைக்கு வந்துள்ளது.
இவ்வழக்கில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட சிசிரிவி பதிவு தெளிவானதாக இல்லாமல் இருந்ததால் சாட்சியங்களை பலப்படுத்தி வருவதற்காக இவ்வழக்கு இன்னுமொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது பற்றித் தேசம்நெற் க்குத் தெரியவருவதாவதுஇ லூசியம் சிவன் கோவில் மடப்பள்ளி ஐயர் இராமச்சந்திரசர்மா சிறிதரசர்மாஇ லூசியம் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் 273 பஸ்ஸில் தகாதமுறையில் நடந்துகொண்டார் என்ற அடிப்படையிலேயே வழக்கு நடைபெறுகின்றது. இவ்வழக்கு மீண்டும் மே நடுப்பகுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றது.
மடப்பள்ளி ஐயர் இராமச்சந்திர சர்மாஇ சில சமயங்களில் பூசைகளிலும் ஈடுபடுபவர்.


இவரின் குடும்பம் கொழும்பில் வசிக்கின்றனர். ஐம்பத்தி இரண்டு வயதான இவர் மூன்று குழந்தைகளின் தந்தை. இவர் சில வாரங்களுக்கு முன் பொலிஸாரல் கைது செய்யப்பட்டார்.

இக்கைது பற்றி தேசம்நெற்க்கு அறிய வருவதாவதுஇ ஏப்ரல் 30ம் திகதி இராமச்சந்திர சர்மா ஐயா லூசியம் நகரிலிருந்து ஹீத்தர் கிரீன் செல்லும் 273ம் இலக்க பஸ்ஸில் பயணித்துள்ளார். மாலை 2:45 மணியளவில் ஹீத்தர் கிரீன் பஸ் தரிப்பிடத்தில் இவர் பஸ்ஸில் இருந்து இறங்குகின்ற போது கைது செய்யப்பட்டார். அன்று மதியம் லூசியம் சிவன் கோவிலில் பணியில் இருக்க வேண்டியவர் கோயிலுக்கு வராததால் பலரும் அவரைத்தேடிக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் பொலிஸார் தொடர்புகொண்டு இராமச்சந்திர சர்மாவுடைய இருப்பிடத்தை தாங்கள் சோதணையிட வேண்டும் என்றும் அவர் பொறொம்ளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். அதன் பின்னர் லூசியம் சிவன் கோவிலுக்கு வந்த பொறொம்ளி பொலிஸார் ஆலயத்தில் இராமச்சந்திர சர்மா தங்கி இருந்த அறையைச் சோதனையிட்டு அவருடைய கடவுச்சீட்டு மற்றும் அவருடைய மற்றுமொரு தொலைபேசியையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இராமச்சந்திர சர்மாவை லூசியம் சிவன் கோவில் செயலாளர் டொக்டர் சிற்றம்பலம் ராஜசுந்தரம் பிணையில் எடுத்தார். ஆனால் அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பதை ஆலய நிர்வாகத்தில் உள்ள மூவர் மட்டுமே அறிந்திருந்தனர். ஏனையவர்களுக்கு அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற விபரம் தெரியப்படுத்தப்படவில்லை. சிலர் விபரம் கேட்ட போது ஆங்கிலத்தில் பதிலளிக்கத் தெரியாததால் அவர் கைது செய்யப்பட்டதாக தன்னிடம் தெரிவித்ததாக ஆலயத்தின் பக்தர் ச அருள் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

இராமச்சந்திர சர்மாவுடைய வழக்குத் தொடர்பாக டொக்டர் சிற்றம்பலம் ராஜசுந்தரத்துடன் தேசம்நெற் தொடர்புகொண்ட போது இது தனிப்பட்ட விவகாரம் என்றும் அது பற்றிப் வெளிப்படுத்த முடியாது என்றும் டொக்டர் ராஜசுந்தரம் தெரிவித்தார். ஒரு பாலியல் குற்றம் தொடர்பில் ஐயர் கைது செய்யப்பட்டிருப்பதும் அவர் தொடர்ந்தும் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதும் எவ்வாறு தனிப்பட்ட விடயமாகும் என்று கேட்டதற்கு அவர் தன் தொலைபேசியைத் துண்டித்துவிட்டார். டொக்டர் ராஜசுந்தரம் புறொம்பிளியில் ஜிபி யாக பணியாற்றிய போது 2002இல் இவருடைய மூன்று நோயாளிப் பெண்கள் இவர் தங்கள் உடல்பாகங்களை அவசியமின்றி பரிசோதித்ததாக ஏழு குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்திருந்தனர். ஆனால் இக்குற்றச்சாட்டுக்களில் இருந்து மெடிகல் கவுன்சில் இவரை விடுவித்திருந்தது.

ஏப்ரல் 28இல் வூல்விச் நீதிமன்றத்தில் இராமச்சந்திரனின் வழக்கு நடைபெற்ற போது அருள்தாஸ்இ கணேஸ்இ ராஜ் ஆகியோர் பார்வையாளர்களாக நீதிமன்றம் சென்றிருந்தனர். இம்மூவரும் தற்போதைய நிர்வாகக்குழுவினரால் நிர்வாகக்குழவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கும் விரைவில் உயர் நீதிமன்றுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. லூசியம் சிவன் கோவிலின் இந்த வழக்கு நடவடிக்கைகளுக்கே தற்போது பல்லாயிரம் பவுண்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. இச்செலவுகள் மேலும் அதிகரிக்க உள்ளது.

லூசியம் சிவன் கோவில் நிவாகம் பல்வேறு தற்போது பல்வேறு நெருக்கடிகளைச் அடுத்தடுத்து சந்தித்து வருகின்றது. இவை தொடர்பாக நிர்வாகக் குழவின் தலைவர் டொக்டர் கருணாகரன் உடன் அண்மையில் உரையாடிய போது அவர் தாங்கள் ஊடகங்களுக்கு பதிலளிப்பதில்லை என மொட்டையாகத் தெரிவித்து விட்டார். டொக்டர் கருணாகரன் வெறுமனே பெயரளவிலேயே தலைவராக உள்ளார். நிர்வாகக் குழவை டொக்டர் ராஜசுந்தரமே கையகப்படுத்தி வைத்துள்ளார்.

மேலும் நிர்வாகக் குழவில் தற்போதுள்ளவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவின் வயதை எட்டிவிட்டனர். அவர்கள் தங்கள் முதுமை காரணமாக செயற்பட முடியாதவர்களாக உள்ளனர் என மற்றுமொரு நிர்வாக உறுப்பினர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். அப்படியானால் ஏன் நீங்கள் நற்பணி மன்றம் மற்றும் மகளீர் அமைப்பு என்பவற்றை ஆலயத்தில் இயங்க அனுமதிக்கவில்லை என்று கேட்டதற்குஇ அவர்கள் ஆலய நிர்வாகத்தோடு இணைந்து செயற்படாமல் அவர்கள் தனித்து செயற்பட முற்படுவதாகத் தெரிவித்தார். அதில் என்ன தவறு? யார் செய்தாலும் ஆலயப் பணிகள் நடந்தால் சரி தானே என்று கேட்ட போது அந்நிர்வாக உறுப்பினர் எல்லாமே ஆலயத்தின் நிர்வாகத்தின் கீழேயே நடக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.

லூசியம் சிவன் கோவில் உள்ள இடம் என் சச்சிதானதன் மற்றும் சிலரினால் 1994இல் நீண்ட குத்தகைக்கு எடுக்கப்பட்டு இருந்தது. தற்போதும் கோயில் கட்டிடம் உள்ள பகுதி நீண்டகாலக்குத்தகையிலேயே உள்ளது. இக்குத்தகை இன்னும் சில ஆண்டுகளில் முடிவுக்கு வருகின்றது. ஆனால் ஆலயம் உள்ள நிலத்தை வாங்குவதற்கு முன்னரேயே ஆலயத்தை ஒரு மில்லயனுக்கு மேற்பட்ட செலவில் புனர்நிர்மாணம் செய்தனர். இனிமேல் இந்நிலத்தை என்ன விலைகொடுத்தும் வாங்க வேண்டிய கட்டாயத்தில் ஆலய நிர்வாகம் உள்ளது. கோவிட் பெரும் தொற்றுப் பரவலுக்குப் பின் ஆலயங்களின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சில மில்லியன் பெறுமதியான நிலத்தை வாங்குவதற்கு ஆலயம் வசதியுடையதாக உள்ளதா என்ற கேள்வியை தேசம்நெற் நிர்வாகத்தினரிடம் எழுப்பியது. ஆலயத்தை வாங்குவதற்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை அறுதியிட்டு குறிப்பிட விரும்பாத நிர்வாகக் குழவினர் தங்களால் ஆலயத்துக்கான நிலத்தை வாங்குவதற்கான நிதியைத் திரட்ட முடியும் என உறுதியளித்தனர். ஆலய நிர்வாகத்திற்கு அந்த நிலத்தை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாததால் நிலத்தின் பெறுமதியை மிக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறான சங்கடங்களுக்கு மத்தியில் லூசியம் சிவன் கோவிலில் பூசைகள் செய்து வந்த கோபி சர்மா ஐயா 2020 யூனில் ஆலயத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை தெரிந்ததே. இவர் சமூகவலைத் தளங்களில் தன்னுடைய பதிவுகளால் பலரை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லூசியம் சிவன் கோவில் உள்ளேயும் வெளியேயும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றது. இப்பிரச்சினைகள் நாளாந்த நிர்வாகப் பிரச்சினைகளில் இருந்து சட்ட நடவடிக்கைகள்இ பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள்இ நன்மதிப்பு இழப்புஇ நிதி நெருக்கடிகள் என இவை தொடர்கதையாகின்றது. மேலும் ஆலயத்தில் ஒரு சாரார் ஆலய நிர்வாகக்குழுவுக்கு எதிரான கடுமையான பிரச்சினைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆலயத்தில் நடைபெற்று வந்த தமிழ் பள்ளியை மறைமுகமாக மூடவும் ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக குற்றம்சாட்டி வருகின்றது. கோவிட் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழ் பள்ளிக்கூடத்தை மீள நடாத்த முற்பட்ட போது அதன் வாடகையை சடுதியாக அதிகரித்து பள்ளிக்கூடத்தை நடத்தவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இராமச்சந்திர சர்மாவின் வழக்கு மற்றும் ஏனைய நிர்வாகப் பிரச்சினைகள் தொடர்பாக லூசியம் சிவன் கோவில் நிர்வாகம் வெளிப்படையாகப் பதிலளிக்காமல் ஒளிந்துகொள்கின்றனர். நிர்வாகத்தினர் இது தொடர்பாக பதிலளிக்கும் பட்சத்தில் அவற்றை பிரசுரிக்க தேசம்நெற் முன்வரும்.

கருத்துகள் இல்லை: