வியாழன், 4 மே, 2023

ஷேர் ஆட்டோ- அரசு பேருந்து நேருக்குநேர் மோதி விபத்து: 6 பேர் பலி

  சென்னையில் இருந்து இன்று பிற்பகல் புதுச்சேரி நோக்கி அரசு விரைவு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதேசமயம் கல்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி பயணிகளுடன் ஷேர் ஆட்டோ வந்துகொண்டிருந்தது.
மாமல்லபுரம் அருகே மணமை என்ற இடத்தில் வந்தபோது, அதிவேகத்தில் வந்த அரசு பேருந்து, ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ஆட்டோ முற்றிலும் சிதைந்தது. அதில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்  .maalaimalar

கருத்துகள் இல்லை: