திங்கள், 13 பிப்ரவரி, 2023

கொழும்பு விலங்கியல் பூங்காவில் 'விலங்கு காதல் வாரம் அறிவிப்பு

 hirunews.lk : இலங்கை கொழும்பு விலங்கியல் பூங்காவில் 'விலங்கு காதல் வாரம்' பிரகடனம்
தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் இன்று முதல் 'விலங்கு காதல் வாரம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக விலங்கியல் பூங்கா பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.
காதலர் தினத்தை முன்னிட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விலங்குகளுக்கு அன்பும் கருணையும் அளிக்கும் நோக்கில் இந்த வாரம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
குடும்பங்கள் மற்றும் தம்பதிகள், விலங்கியல் பூங்காவிற்குச் சென்று செல்ல பிராணிகளுடன் புகைப்படம் எடுக்கலாம்.
விலங்குகளுக்கு உணவளிக்கலாம் மற்றும் அவற்றுடன் நாட்களை செலவிடலாம்.


விலங்குகளுடன் புகைப்படம் எடுக்க தனி பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
வருடத்திற்கு பல தடவைகள் தெஹிவளை விலங்கியல் பூங்கா மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு இந்த வாரத்தில் விசேட அங்கத்துவ அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரேமகாந்த மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: