புதன், 14 டிசம்பர், 2022

காங்கோவில் நிலச்சரிவு- 120 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்

 மாலைமலர்  :  கின்ஷாசா: காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் கனமழையால் மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் வீடுகள் மற்றும் சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன.
சாலையில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது
குறித்து காங்கோ அரசு செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதனால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 4 நாட்களுக்கு மூடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.


பருவநிலை மாற்றம் காரணமாக காங்கோவின் கின்ஷாசா நகரம் அடிக்கடி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: