ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் சகோதரி துலாஞ்சலியிடம் போலீஸ் விசாரணை

thinakkural.lk  : போராட்ட காலத்தில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யின் வீட்டுக்கு சிலர் தீ வைத்த சம்பவம் தெரிந்ததே
இது தொடர்பாக பலரும் விசாரணை வளையத்திற்குள் உள்ளனர்  ஏராளமான சி சி டி வி பதிவுகள் உள்ளதால் குற்றவாளிகள் நிச்சயம் பிடிப்படுவார்கள் என்று தெரிகிறது
மேலும் இது தொடர்பாக   எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி திருமதி துலங்கலி பிரேமதாசவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இவர் மறைந்த ஜனாதிபதி திரு ஆர் பிரேமதாசாவின் மகளாவர்.
பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அவர் அழைக்கப்பட்ட பின்னர், அவரது வாக்குமூலங்கள் சுமார் நான்கு மணி நேரம் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: