புதன், 24 ஆகஸ்ட், 2022

பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் ., வீட்டு மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூல்

latest tamil news

தினமலர் : தஞ்சாவூர்: தஞ்சாவூர், பேராவூரணி தி.மு.க., எம்.எல்.ஏ., வீட்டில் நடந்த மொய்விருந்து, காதணி விழாவில் 10 கோடி ரூபாய் அளவிற்கு மொய் பணம் வசூலான நிலையில், அப்பகுதியில் இவ்விவகாரம் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு,மாங்காடு,கீரமங்கலம், ஆலங்குடி வரை மொய் விருந்து தடப்புடலாக நுாறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில், வசதிக்கு ஏற்ப உணவு மொய் செய்வார்களுக்கு பரிமாறப்பட்டது. ஆனால் தற்போது மொய் விருந்து என்றால், கிடா வெட்டி கறிக்குழம்பு சமைத்து அசைவ விருந்து வைப்பது தான் முறையாக மாறி விட்டது.


மொய் விருந்து நடத்தியவர்கள் வசூலான பணத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வார்கள்.
பணத் தேவைக்காக யாரிடமும் வட்டிக்கு கடனாக பணம் வாங்காமல் இருக்கவும்,
கஷ்டத்தில் இருக்கும் உறவுகளுக்கு கை கொடுத்து உதவவும் தொடங்கப்பட்டது.
ஒரு நபர் மொய் பிடித்தால் அடுத்த ஐந்து ஆண்டுக்கு பிறகு தான் அடுத்த மொய் பிடிக்க வேண்டும்.
மொய் செலுத்தியவர் மொய் விருந்து விழா நடத்தும் போது, மொய் வாங்கியவர்கள் அவர்கள் எழுதிய பணத்தை விட கூடுதலாக சேர்த்து திரும்ப மொய் எழுதும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவும் வசதிப்படைத்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளவதாக ஒரு சர்ச்சையும் உண்டு.
இப்படி உள்ள சூழலில், பேராவூரணி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமார், பேரன் காதனி விழா,மொய் விருந்து விழாவில், 100 கிடா, 1,300 கிலோ கறி, கம கம மட்டன் குழம்பு, குடல் கூட்டு எனவும், அசைவம் சாப்பிடாதவர்களுக்கு தனியாக சைவ உணவும், 200க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுப்படுத்தப்பட்டனர்.
துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பு, பத்துக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. 40 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு மொய் பிடிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: