வியாழன், 30 ஜூன், 2022

குடியரசு தேர்தல் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் ஆதரவு கோரினர்

தினமலர் : சென்னை: ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார் யஷ்வந்த் சின்ஹா. மேலும், திமுக கூட்டணி கட்சியினரிடமும் ஆதரவு கோரினார்.
வரும் ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்தலைவராக இருந்த சின்ஹா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக தனது கட்சிப்பதவியை ராஜினாமா செய்தார். ஜனாதிபதி வேட்பாளர்கள் தத்தமது கூட்டணி கட்சி தலைவர்களிடம் நேரில் சென்று ஆதரவு கோரி வருகின்றனர்
அந்த வகையில் சென்னை வந்துள்ள யஷ்வந்த் சின்ஹா, திமுக தலைமை அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கோரினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்றார். தொடர்ந்து, திமுக.,வின் கூட்டணி கட்சியிடமும் ஆதரவு கோரினார்.

கருத்துகள் இல்லை: