சனி, 23 ஜனவரி, 2021

எங்க அம்மா ஸ்ரீலங்கன் அப்பா Indian Brahmin, father is from Maharashtra and my mother is a brahmin...

Image may contain: people sitting, text that says 'பிறருக்கு தீங்கின்றி நன்மை செய்யும் எவருக்கும் கடவுளோ, ,மதமோ, வழிகாட்டியோ தேவையில்லை. -பெரியார்'
சுமதி விஜயகுமார் : · நாம் எதுவாக நம்மை முன்னிறுத்தி கொள்கிறோமோ, அதை சார்ந்தே நம் மேலான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. கடந்த 4 வருடங்களாக மட்டுமே நான் ஒரு பகுத்தறிவுவாதியாக இருக்கிறேன். அதுவும் முழுதாக கூட இல்லை. ஒரு சில பழக்க வழக்கங்களை, பிறந்ததில் இருந்து கடைபிடித்து வருவதால், அது மூட நம்பிக்கை என்றாலும் அதில் இருந்து வெளிவருவத்தில் சிரமம் இருக்கிறது. அதிலும் ஒரு குடும்ப அமைப்பில் முதல் தலைமுறை பகுத்தறிவுவாதியாக இருக்கும் ஆண்களுக்கே கூட தன் வீட்டில் உள்ளவர்களிடம் பகுத்தறிவை பின்பற்றவைப்பது கடினம். பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். நான் நம்பிக்கையுடன் சாமி கும்பிட்டு வருடங்கள் ஆயிற்று. ஒரு விசேஷம் வந்தால் 'இதை செய்யவில்லையா அதை செய்யவில்லையா ' என்று கேட்டு என்னை எந்த நீர்பந்ததுக்கும் என் கணவர் ஆளாக்குவதில்லை. மிஞ்சி போனால் சாமி படங்களையும் விளக்கையும் சுத்தம் செய்வதோடு சரி. நான் பெரியாரியவாதி ( ஆரம்ப நிலை ) என்பதலே என்னிடம் மிக சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. ' நீ தான் பெரியாரிஸ்ட் ஆச்சே அப்புறம் என்ன உங்க வீட்ல சாமி படம் வச்சுருக்க' ' ஏன் கோவிலுக்கு போற' என்பன அனேகமாக அனைத்து பகுத்தறிவுவாதிகளும் சந்திக்கும் கேள்விகள்.
கடந்த நான்கு ஆண்டுகளில் கடவுள் இல்லை என்பன போன்ற நான் எழுதிய பதிவுகள் 0.1% தான் இருக்கும். மற்றவை அனைத்தும் மனிதம் சார்ந்துதான். பெரியாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது அந்த மனிதத்தை தான். அதனால் தான் இன்றும் என் பாட்டி என் நெற்றியில் திருநீர் வைத்தால் அதை அளிப்பதில்லை. அதை அணிவதினால் எப்படி எந்த பலனும் இல்லையோ, அதை அழிப்பதினாலும் எந்த பலனும் இல்லை, என் பாட்டியின் மனது புண்படுவதை தவிர.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அடுத்த கேள்வி 'அதென்ன பார்ப்பனர்களை மட்டுமே தாக்கிக் கொண்டிருப்பது'. இந்த கேள்வியை நான் அதிகம் எதிர்கொண்டதில்லை என்றாலும் பெரியார் என்றால் பார்ப்பன எதிர்ப்பு தான் பிரதானம் என்பது பலரின் கருத்து. அது ஓரளவிற்கு உண்மையும் கூட. நான் எப்படி பெரியாரியவாதி என்பதால் மேற்கொண்ட விமர்சனங்களை எதிக்கொள்கிறேனோ அது போல் பார்ப்பனர்களும் தங்களை பார்ப்பனார்களாக நிலைநிறுத்தி கொள்ளும் போது பார்ப்பன விமர்சனத்தை தவிர்க்க முடிவதில்லை.
உங்கள் நெருங்கிய நண்பர்களை தவிர மற்ற நண்பர்களில் எத்தனை பேரின் ஜாதி உங்களுக்கு தெரியும்? இப்போது அவர்களில் பார்ப்பனர்களை மட்டும் சுட்டிக்காட்ட சொன்னால், சுலபமாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் தங்கள் பார்ப்பனர் என்பதை எப்படியாவது நமக்கு உணர்த்தி விடுவார்கள். பள்ளியில் இருந்து இப்போது வரை. இப்போது என்றால் இந்தியாவை தாண்டியும்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 பேர் சம்மந்தமே இல்லாமல் தாங்கள் பார்ப்பன வம்சாவளி என்பதை நேரடியாக, நான் கேட்காத போதும் சொல்லிக் கொண்டவர்கள்.மூவரும் பெண்கள். ' எங்க அம்மா ஸ்ரீலங்கன், எங்க அப்பா Indian Brahmin' ' My father is from Maharashtra and my mother is a brahmin from Chennai'. இதில் ஒரு ஆஸ்திரேலியா ஆணும் (இந்திய வம்சாவளி அல்லாதவர் ) 'ஒருமுறை இந்தியா சென்ற போது ஒரு பெண்ணை காதலித்தேன். அவரின் பெற்றோர் எனக்கு திருமணம் செய்து கொடுக்க ஒத்துக்கொள்ளவில்லை ' என்றார். ' ஏன், நீங்கள் வெளிநாடவர் என்றா?' என்று கேட்டதற்கு ' No, they are brahmins' என்றார். அவரிடம் செட்டியார், நாயுடு, கவுண்டர் இவர்களை சந்தித்ததுண்டா என்று கேட்டால் குழம்பி போவார். ஏனென்றால் இவர்கள் யாரும் நாங்கள் இந்த ஜாதியை சார்ந்தவர்கள் என்று எந்த ஒரு வெளிநாடவரிடத்தும் சொல்வதில்லை.
வெளிநாடுகளிலேயே இப்படி என்றால் இந்தியாவில் கேட்கவே வேண்டாம். எந்த ஒரு முற்போற்கான பார்ப்பனருக்கும், தான் ஒரு பார்ப்பனர் என்பதில் எப்போதும் பெருமை உண்டு. கமலஹாசன் முதல் இரண்டாம் தலைமுறை ஆஸ்திரேலிய brahmins வரை.
இப்போதைய நிலையில் ' நான் ஒரு பார்ப்பனர்' என்று ஆஸ்திரேலியாவில் இல்லை தமிழ்நாட்டில் சொன்னால் கூட, மக்கள் ' இருந்துட்டு போ ' என்று சொல்வது பெரியாரியம் இல்லாமல் வேறு என்ன