வியாழன், 30 ஜனவரி, 2020

அவுஸ்ரேலிய தேசிய கீதம் தமிழில் பாடுவதற்கு அரசு அனுமதி ... வீடியோ


.vanakkamlondon.com :தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமை ஏற்படுத்தும் விதமாக அவுஸ்ரேலிய நாட்டு தேசிய கீதம் தமிழில் மொழிபெயர்த்து பாடப்பட்டுள்ளது. இந்த கீதத்தை தமிழ் மக்கள் தமது நிகழ்ச்சிகளின்போது, பாடலாம் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலகமெங்கும் தமிழர்கள் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்கின்றனர். இலங்கையில் உள்நாட்டுப் போரின் காரணமாக புலம்பெயரை்ந்த தமிழர்கள் வாழாத நாடு இல்லை என்றே சொல்ல முடியும். இந்த நிலையில் கனடாவுக்கு அடுத்தபடியாக அதிக தமிழர்கள் அவுஸ்ரேலியாவில் வாழ்கின்றனர். இந்த நிலையில் அங்கு தமிழ் மக்கள் பல்வேறு பணிகளிலும் உயர்நிலை வகித்து வருகின்றனர். அந்நாட்டில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அந்நாட்டு தேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்த்து பாட அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

கருத்துகள் இல்லை: