


அதன்
பிறகு தினமும் என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயப்படுத்தி
வந்தார். 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் என்னை இரும்புக் கம்பியால்
அடித்ததில் கை எலும்பு உடைந்துவிட்டது. அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில்
சிகிச்சைபெற்றுவிட்டு பின்னர் கேரள மாநிலம் சென்று சிகிச்சை
எடுத்துக்கொண்டேன். நான் சிகிச்சையில் இருக்கும்போது 2019-ம் ஆண்டு ஜனவரி
மாதம் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளது எனக்குத் தெரியவந்தது. எனவே,
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்" என்றார்.
இதுகுறித்து
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை
துணைச் செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய
துணைத்தலைவருமான ஷாஜின் காந்தியிடம் பேசினோம், ``முதல் திருமணம் ஆனதை
என்னிடம் நளினகுமாரி மறைத்துவிட்டார். நான் இரண்டாவது திருமணம் செய்ததாக
கூறுவது உண்மையில்லை. அவர் என்னை விட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்
சென்றுவிட்டார். இப்போது வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். இதை நான்
சட்டப்படி எதிர்கொள்வேன்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக